சென்னை வர்த்தக மையத்தில் தேசிய அளவிலான சோப் மற்றும் டிடர்ஜெண்ட்  தொழில் கண்காட்சி !

சென்னை வர்த்தக மையத்தில் தேசிய அளவிலான சோப் மற்றும் டிடர்ஜெண்ட் தொழில் கண்காட்சி !

தேசிய அளவிலான சோப் மற்றும் டிடர்ஜெண்ட் குறித்து கருத்தரங்கம் மற்றும் தொழில் கண்காட்சி. டிசம்பர் 28 29 நந்தம்பாக்கம் , சென்னை வர்த்தக மையம் தமிழ்நாடு சிறுதொழில் சோப் மற்றும் டிடர்ஜென்ட் உற்பத்தியாளர்கள் சங்கம் 1964 - ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதாகும் . இதில் சுமார் 600 உறுப்பினர்கள் உள்ளனர் . தமிழகத்தில் சோப் மற்றும் டிடர்ஜென்ட் தொழில் வளர்ச்சிக்கும் , நவீன தொழில் நுட்பங்களை கண்டறிந்து தொழில் முனைவோர்களுக்கு எடுத்து கூறவும். இத்தொழிலில் ஏற்படும் பிரச்சனைகளை ஆராய்ந்து உரிய முறையில் அரசுக்கு எடுத்து கூறி தீர்வு காண்பதே இந்த சங்கத்தின் நோக்கமாகும். தற்போது சங்கத் தலைவராக இருக்கும் பவர் சோப் உரிமையாளர் கி.தனபால் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த போது கூறியதாவது. கடந்த 1995ம் ஆண்டு சங்கத்திற்கென சொந்த கட்டிடம் கட்டப்பட்டு சீரிய முறையில் அலுவலகம் இயங்கி வருகிறது . இந்த சங்கம் ஆரம்பிக்கப்பட்டு 55 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது . வருகின்ற 2019ம்…
Read More
ஆசுஸ் பிரத்தியேக ஸ்டோர் சென்னையில் அறிமுகம் !

ஆசுஸ் பிரத்தியேக ஸ்டோர் சென்னையில் அறிமுகம் !

தொழில்நுட்ப நிறுவனமான ஆசுஸ் இந்தியா தனது அதிநவீன புதிய ஸ்டோரை சென்னையில் தொடங்குவதாக அறிவித்தது. ஆசுஸ் இந்தியாவின் விநியோக மற்றும் வணிக மேலாளர் பியூஷ் சேத் மற்றும் ஸ்டோரின் உரிமையாளர் குஷால் பஜாஜ் ஆகியோர் ஆசுஸ் பிரத்தியேக கடையை திறந்து வைத்தனர். புதிய ஆசுஸ் பிரத்தியேக ஸ்டோரானது, பிராண்டின் முதன்மை தயாரிப்புகளான விவோபுக், ஜென்ப்புக், ஜென்புக்-ஃபிளிப், மற்றும் ரிப்பப்ளிக் ஆஃப் கேமெர்ஸ் (ஆர்.ஓ.ஜி) மடிக்கணினிகள் உள்ளிட்ட விரிவான எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கணினி வன்பொருள்களை வழங்குவதற்காக அமைக்கப்பட்டுள்ளது, பிராண்டின் புதிய ஆசுஸ் பிரத்தியேக ஸ்டோரானது டாட் காம், புதிய எண்- ஏஜி 63, பழைய எண்- ஏஜி 31, சாந்தி காலனி, மெயின் ரோடு, 4 வது அவென்யூ, அண்ணா நகர், சென்னை. என்ற இடத்தில அமைந்துள்ளது.இந்த ஸ்டோரின் துவக்கம் 2020 க்குள் 200 கடைகளைத் திறந்து பயனர்களுடன் அதன் கடைசி மைல் இணைப்பை வலுப்படுத்தும் ஆசுஸ் முயற்சியின் ஒரு பகுதியாக அமைத்துள்ளது.வலுவான…
Read More
இந்தியாவில் மீண்டும் சாம்சாங் டிவி !.

இந்தியாவில் மீண்டும் சாம்சாங் டிவி !.

சாம்சங் இந்தியா ஒரு வருடத்திற்குப் பிறகு தொலைக்காட்சி உற்பத்தியை இந்தியாவில் மீண்டும் ஆரம்பிக்கிறது. எல்இடி டிவிக்களை தயாரிக்கும் செல் பேனல் மீதான இறக்குமதி வரியை ரத்து இந்திய அரசு அண்மையில் ரத்து செய்தது. இதன் காரணமாக மீண்டும் உற்பத்தியை ஆரம்பிக்க சாம்சாங் இந்தியா திட்டமிட்டிருப்பதாக அந்த துறை சார்ந்தவர்கள் தெரிவிக்கிறார்கள். தென் கொரிய எலக்ட்ரானிக்ஸ் நிறுவனமான சாம்சாங் இந்தியா, உள்நாட்டு டிவி தயாரிப்பு ஒப்பந்த உற்பத்தியாளரான டிக்சன் டெக்னாலஜிஸுடன் 55 அங்குலங்கள் வரை திரை அளவுகளில் தொலைக்காட்சி பெட்டிகளை தயாரிப்பதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட உள்ளது.இவை இந்திய சந்தையில் 85% க்கும் அதிகமானவையாகும். இந்தியாவில் உள்ளூர் தொலைக்காட்சி உற்பத்தியை மேலும் விரிவுபடுத்துவதற்காக மற்ற ஒப்பந்த உற்பத்தியாளர்களுடள் ஒப்பந்தங்கள் செய்ய அந்த நிறுவனம் மதிப்பீடு செய்து வருகிறது. இந்தியாவின் மிகப்பெரிய தொலைக்காட்சி பிராண்டான சாம்சங், தொலைக்காட்சி தயாரிப்பதற்கான செல் பேனல்களுக்கு அரசாங்கம் வரிவிதித்தன் காரணமாக கடந்த ஆண்டு அக்டோபரில் சென்னை ஆலையை மூடியிருந்தது. இப்போது…
Read More
கோனே நிறுவனம் 450 கோடி முதலீட்டில் சென்னையில் தனது மின்தூக்கி உற்பத்தி தொழிற்சாலையை தொடங்கியுள்ளது!

கோனே நிறுவனம் 450 கோடி முதலீட்டில் சென்னையில் தனது மின்தூக்கி உற்பத்தி தொழிற்சாலையை தொடங்கியுள்ளது!

மின்தூக்கிகள் மற்றும் நகரும் படிக்கட்டுகள் தயாரிப்பில் உலகில் முன்னணியில் உள்ள, கோனே கார்பரேஷனின் முழு உரிமம் உள்ள துணை நிறுவனமான, ’கோனே எலிவேட்டர் இந்தியா நிறுவனம்’ தனது உலகத் தரத்திலான மின்தூக்கிகளுக்கான தொழிற்சாலையை சென்னைக்கு அருகே ஸ்ரீபெரும்புதூர் பிள்ளைப்பாக்கத்தில் உள்ள சிப்காட் தொழில் பூங்காவில் கட்டமைத்து, அதைத் திறந்து செயல்படுத்தத் தொடங்கியுள்ளது. இந்த அதிநவீன உற்பத்தித் தொழிற்சாலையை மேதகு தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஃபின்லாந்து நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹெச்.இ.பெக்காஹாவிஸ்டா, தமிழ்நாடு அரசின் தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், கோனே நிறுவனத்தின் தலைவர் ஆண்ட்டிஹெர்லின்,கோனே நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி ஹென்ரிக்எர்னூர்த்,கோனே கார்பொரேஷன் நிறுவனத்தின் ஆசிய பசிபிக் மற்றும் ஆஸ்திரேலியா செயல் துணைத்தலைவர் ஆக்செல்பெர்க்லிங், கோனே இந்தியா நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் அமித்கோஸ்ஸெயின் உள்ளிட்ட பலர் இந்தநிகழ்ச்சியில் பங்கேற்று முன்னிலை வகித்தனர். தேவைக்கு ஏற்ற அளவிலான உற்பத்தித்திறனுடன், 450 கோடி ரூபாய் முதலீட்டில்…
Read More
வாராக் கடன் சிக்கலில் வங்கிகள்..? கடனை கட்ட முடியாமல் தவிக்கும் மின்சார நிறுவனங்கள்?

வாராக் கடன் சிக்கலில் வங்கிகள்..? கடனை கட்ட முடியாமல் தவிக்கும் மின்சார நிறுவனங்கள்?

இந்தியாவில் ஆற்றல் சாரா மின்சார நிறுவனங்கள் கொடுக்க வேண்டிய கடன் தொகையினை ஒழுங்காக கொடுக்காததால், மீண்டும் இந்திய வங்கிகளில், வாராக் கடன் பிரச்னை தலை எடுக்கத் தொடங்கி இருக்கிறது.கடந்த நான்கு ஆண்டுகளில் இந்த ஆற்றல் சாரா மின்சார தயாரிப்பு நிறுவனத் துறைக்கு 3.22 பில்லியன் அமெரிக்க டாலர் அந்நிய நேரடி முதலீடுகளாக வந்திருக்கிறது. அதோடு வங்கிக் கடன்கள் மூலம், உள்நாட்டு முதலீடுகளும் செய்யப்பட்டிருக்கிறது.கடந்த ஐந்து ஆண்டுகளில் சுமாராக 40 ஜிகா வாட் மின்சாரத்தை தயாரிக்கக் கூடிய ஆற்றல் சாரா மின்சார தயாரிப்பு நிறுவனங்கள் தொடங்கப்பட்டு இருக்கின்றன. இந்த நிறுவனங்கள் பெரும்பாலும் 70% கடன் மூலமே தொடங்கப்பட்டு இருக்கின்றன. அதாவது 100 கோடி ரூபாய் முதல் போட்டு தொடங்க வேண்டிய தொழிலில் 70 கோடி ரூபாயை கடன் வாங்கி முதலீடு செய்து இருக்கிறார்கள். சரி இவ்வளவு கடன் வாங்கி தொடங்கிய கம்பெனி நன்றாக இயங்குகிறதா..? என்றால் பதில் நோ என்று தான் வருகிறது.…
Read More
ஆன்லைன் மளிகை வியாபாரம் ரூ.74,000 கோடிக்கு அதிகரிக்கும்.

ஆன்லைன் மளிகை வியாபாரம் ரூ.74,000 கோடிக்கு அதிகரிக்கும்.

ஆன்லைன் மளிகை வியாபாரம் வரும் 2023ம் ஆண்டில் 55 சதவிகிதம் அதிகரித்து 74,000 கோடி ரூபாயாக அதிகரிக்கும் என்று ஆய்வு நிறுவனமான ரெட்சீர் அறிக்கையில் கூறியுள்ளது.சர்வதேச அளவில் சில்லறை விற்பனை 10 சதவிகிதம் என்றும், இதில் ஒழுங்கமைக்கப்பட்ட சில்லறை விற்பனை 3.5 சதவிகிதம் ஆகும். இதே ஆன்லைன் மளிகை 0.2 சதவிகிதம் என்றும் கூறப்படுகிறது.எவ்வாறயினும் அனைத்து கண்களும் தற்போது ஆன்லைன் விற்பனையின் பக்கம் திரும்பியுள்ளது உண்மையே. இந்த நிலையில் இது குறித்து ரெட் சீர் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, 2023ம் ஆண்டில் ஒட்டுமொத்த சந்தையில் 1.2 சதவிகிதத்தை எட்டும் என்றும், இது 55 சதவிகித வளர்ச்சி கண்டு, 74,000 கோடி ரூபாயாக பெருகும் என்றும் கூறியுள்ளது. இந்த நிலையில் ஆன்லைன் விற்பனையை ஊக்கப்படுத்தவும், தங்களது விற்பனையை மேம்படுத்தவும் அமேசான், பிளிப்கார்ட், க்ரோஃபர்ஸ் மற்றும் பிக்பாஸ்கெட் உள்ளிட்ட நிறுவனங்கள் தங்களது திட்டங்களை வெளீயிட்டு வருகின்றன. இந்த நிறுவனங்களின் திட்டத்தில் பிக் பாஸ்கெட்…
Read More
பெட்ரோல் நிலையங்களின் எண்ணிக்கை இனி அதிகரிக்கும்..! மத்திய அரசின் அதிரடி முடிவு !!

பெட்ரோல் நிலையங்களின் எண்ணிக்கை இனி அதிகரிக்கும்..! மத்திய அரசின் அதிரடி முடிவு !!

பெட்ரோல், டீசல் சில்லறை விற்பனையை ஊக்குவிக்கும் வகையிலும், முதலீடுகளை அதிகரிக்கும் விதமாகவும் மத்திய அரசு கடந்த புதன்கிழமை ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் இனி எரிபொருள் சந்தையில் ஆயில் நிறுவனங்கள் தவிர புதியவர்களும் ஈடுபட இந்த அறிக்கை வழி வகுக்கும் என்றும், பெட்ரோல், டீசல் துறையில் வர்த்தகத்தில் ஈடுபட ஒரு நிறுவனம் 2,000 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட வேண்டும் என்று கட்டாயப்படுத்திய ஒரு விதியை ரத்து செய்துள்ளதாகவும் கூறியுள்ளது. இதன் மூலம் இனி எரிபொருள் சந்தையில் சில்லறை விற்பனை நிலையங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது. இனி ரூ.250 கோடி போதும் இனி புதிதாக அங்கீகாரம் பெற விரும்பும் நிறுவனங்கள் 250 கோடி ரூபாய் வைத்திருந்தால் போதும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதன் படி இனி அதானி, சவுதி அராம்கோ மற்றும் சூப்பர் மார்கெட்களில் கூட ஆட்டோமொபைல் எரிபொருள் விற்பனை செய்வதற்கான விற்பனை நிலையங்களைத் திறக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சில்லறை…
Read More
டிஜிட்டலுக்கு தனிநிறுவனம்! ‘ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்’ திட்டம் !!

டிஜிட்டலுக்கு தனிநிறுவனம்! ‘ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்’ திட்டம் !!

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்’ நிறுவனம், டிஜிட்டல் பிரிவில் எடுக்கப்படும் முன் முயற்சிகள் அனைத்தையும் ஒருங்கிணைக்கும் வகையில், அதற்கென தனியாக ஒரு துணை நிறுவனத்தை அமைக்க இருக்கிறது. செயலிகள் உட்பட அனைத்து விதமான டிஜிட்டல் முன் முயற்சிகளுக்கான, தனியான ஒரு துணை நிறுவனமாக இது செயல்படும்.இந்நிறுவனம், 1.08 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை கொண்ட நிறுவனமாக இருக்கும் வகையில், இதில் ரிலையன்ஸ் முதலீட்டை மேற்கொள்கிறது.இது குறித்து, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:இந்த புதிய நிறுவனத்தின் கட்டமைப்பு, உலகளவில் பெரும் தொழில்நுட்ப நிறுவனங்களால் ஒப்புக் கொள்ளப்பட்டதை போன்றதாக இருக்கும். இது, இந்தியாவில் மிகப்பெரிய டிஜிட்டல் சேவைகளுக்கான இயங்குதள நிறுவனத்தை உருவாக்கும்.இந்த புதிய நிறுவனம், உடல்நலம் மற்றும் கல்வி போன்ற துறைகளுக்கான தொழில்நுட்பம் குறித்த பணிகளை மேற்கொள்ள உள்ளது. அத்துடன் செயற்கை நுண்ணறிவு, பிளாக்செயின் மெய்நிகர் தொழில்நுட்பம் உள்ளிட்ட உயர் தொழில்நுட்ப பிரிவுகளிலும் ஈடுபடும்.மேலும், ‘மை ஜியோ, ஜியோ டிவி, ஜியோ சினிமா,…
Read More
மூன்று மாதங்களில் இந்தியாவில் 4.9 கோடி ஸ்மார்ட்போன்கள் விற்பனை !

மூன்று மாதங்களில் இந்தியாவில் 4.9 கோடி ஸ்மார்ட்போன்கள் விற்பனை !

க்ஷியோமி நிறுவனத்தின் சந்தைப் பங்கு 26 சதவீதமாக உயர்ந்துள்ளது.பீச்சர் போன்களின் விற்பனை 37 சதவீதம் சரிவைச் சந்தித்துள்ளது.ஜூலை - செப்டம்பர் காலாண்டில் இந்தியாவில் ஸ்மார்ட்போன் விற்பனை 10 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. ஸ்மார்ட்போன் இல்லாத ஆளே இல்லை என்ற அளவுக்கு நம் மக்களிடையே ஸ்மார்ட்போன்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல்வேறு சிறப்புச் சலுகைகளுடன் குறைந்த விலைக்கு விற்பனை செய்து ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் தங்களது விற்பனையை இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.இந்தியாவில் மிக வேகமாக வளரும் ஸ்மார்ட்போன் சந்தையில் சீனா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள் பல தங்களது தயாரிப்புகளை அறிமுகப்படுத்தி வாடிக்கையாளர்களை ஈர்த்து வருகின்றன. இதனால் உள்நாட்டு நிறுவனங்களுக்கும் சாம்சங், ஆப்பிள் உள்ளிட்ட பிரபல நிறுவனங்களுக்கும் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. ஸ்மார்ட்போன் விற்பனை குறித்த விவரங்களை கவுண்ட்டர் பாயிண்ட் ஆய்வு நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி, ஜூலை - செப்டம்பர் காலாண்டில் மொத்தம் 4.9 கோடி ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில்…
Read More
அடுத்த தலைமுறை நுகர்வோர் எலக்ட்ரானிக்ஸ் பிராண்டான Amstrad , தமிழ்நாட்டில் அறிமுகம்  !

அடுத்த தலைமுறை நுகர்வோர் எலக்ட்ரானிக்ஸ் பிராண்டான Amstrad , தமிழ்நாட்டில் அறிமுகம் !

அடுத்த தலைமுறை நுகர்வோர் எலக்ட்ரானிக்ஸ் பிராண்டான Amstrad , தமிழ்நாட்டில் அறிமுகமாகிறது ! முதல் ஆண்டிலேயே ரூ . 150 கோடி விற்பனை வருவாயை இலக்காக இது நிர்ணயித்திருக்கிறது ! ! ! சென்னை : இந்தியாவின் முதல் அடுத்த தலைமுறை நுகர்வோர் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் வீட்டு பயன்பாட்டு சாதனங்கள் பிராண்டான Amstrad , தமிழ்நாட்டில் அதன் தயாரிப்புகளை அறிமுகம் செய்திருக்கிறது . Amstrad , புனே நகரில் தலைமையகத்தைக் கொண்டுள்ள OVOTPvt . Ltd - க்கு சொந்தமான பிராண்டாகும் . மகிழ்ச்சியும் , உற்சாகமும் கரைபுரண்டோடும் சுப வேளையான தீபாவளி திருநாளையொட்டி தமிழ்நாட்டில் தனது பயணத்தை தொடங்கும் Amstrad , முதல் ஆண்டிலேயே ரூ . 150 கோடி விற்பனை வருவாயை அடைவதை இலக்காகக் கொண்டிருக்கிறது . கட்டுபடியாகக்கூடிய மிதமான விலைகளில் இந்திய நுகர்வோர்களுக்கு உயர் தரத்திலான அடுத்த தொழில்நுட்ப சாதனங்களை வழங்க வேண்டும் என்பதே Amstrad -…
Read More