26
Aug
இந்தியா முழுவதுமுள்ள தொழில்துறைகள் அனைத்தும் தற்போது மந்த நிலையை எதிர்கொண்டுள்ளன. வாகன தொழில்துறையில் மந்தநிலை தோன்றிய பின்னர், வேலைகளை இழக்க நேரிடும் என்று பலரும் அஞ்சுகின்றனர். பல்வேறு நிறுவனங்களும் தயாரிப்புகளை குறைத்துள்ளன. நுகர்வு பொருட்களின் துறையிலும் இப்போது மந்தநிலை உருவாகியுள்ளது. ஜிஎஸ்டி வரி விதிப்பில் இருந்து நிவாரணம் கிடைக்காவிட்டால், இந்த துறையும், பணியிடங்களை குறைப்பதை மேற்கொள்ள வேண்டியிருக்கும். இந்தியாவின் புகழ்பெற்ற பிஸ்கட் நிறுவனமான பார்லே-ஜி இது தொடர்பாக கவலை வெளியிட்டுள்ளது, இந்தியாவின் மிக பெரிய பிஸ்கட் நிறுவனமான பார்லே-ஜி 8,000 முதல் 10,000 வரை தொழிலாளர்களை குறைக்கலாம் என்று தெரிய வருகிறது, ஜிஎஸ்டி வரி அமலாகும் முன்னால் இருந்த வரி விதிப்பில் கிலோவுக்கு 100 ரூபாய் பிஸ்கட்டுகளுக்கு 12-14% வரியே இருந்தது. ஜிஎஸ்டி வரி விதிப்பு அமலாக்கப்பட்ட பின், கிலோவுக்கு 100 ரூபாய் விலையுடைய பிஸ்கட் 18% ஜிஎஸ்டி வரி பிரிவில் உள்ளது. குறைவான விலையுடைய பிஸ்கட்டுக்கு கலால் வரி இல்லாமல்,…
