சென்னையில் 24,000 சதுர அடியில்அமேசான்.இன் விநியோக நிலையம் !

அமேசான்.இன் தனது மிகப்பெரிய விநியோக நிலையத்தை தமிழகத்தில் தொடங்குவதாக  அறிவித்திருந்தது. சென்னையில் உள்ள புதிய நிலையம்அமேசானுக்கு அதன் கடைசி மைல் விநியோக வலையமைப்பை வலுப்படுத்தவும், நகரம் முழுவதும் விரைவான விநியோகங்களை உறுதி செய்யவும் உதவும். டெலிவரி நிலையங்கள்அமேசான் லாஜிஸ்டிக்ஸை திறனை நிரப்பவும், வாடிக்கையாளர் ஆர்டர்களின் வளர்ந்து வரும் அளவை ஆதரிக்க அமேசானின் விநியோக திறன்களுக்கு நெகிழ்வுத்தன்மையை வழங்கவும் உதவுகின்றன.நாமக்கல், திருச்செங்கோடு, சிவகாசி, கிருஷ்ணகிரி மற்றும் திருவள்ளூர் போன்ற தமிழ்நாட்டில் உள்ள ஊர்கள் மற்றும் நகரங்களில் தனது விநியோக வலையமைப்பை விரிவுபடுத்துவதாக அமேசான் நிறுவனம் மேலும் அறிவித்துள்ளது. இந்த விரிவாக்கத்தின் மூலம், அமேசான்.இன் 120 க்கும் மேற்பட்ட பிரபலமான மற்றும் விநியோக சேவை கூட்டாளர் நிலையங்களையும், மாநிலம் முழுவதும் 1400 க்கும் மேற்பட்ட ‘எனக்கு இடம் உள்ளது’ கூட்டாளர்களையும் கொண்டிருக்கும்.டெலிவரி நெட்வொர்க்கின் இந்த 2x வளர்ச்சியானது அமேசான் தமிழ்நாடு முழுவதும் சிறியநகரங்களுக்குள் மேலும் ஊடுருவி, மாநிலத்தின் 1200 க்கும் மேற்பட்ட பின் குறியீடுகளில் நேரடிவிநியோக இருப்பைக்…
Read More
டிஜிட்டல் பண பரிவர்த்தனை!இந்தியாவில் 80 ஆப்ஸ்கள் ! சீனாவுடன் போட்டி போட முடியவில்லை.!

டிஜிட்டல் பண பரிவர்த்தனை!இந்தியாவில் 80 ஆப்ஸ்கள் ! சீனாவுடன் போட்டி போட முடியவில்லை.!

இந்தியாவில் டிஜிட்டல் பண பரிவர்த்தனை மேற்கொள்ள 80 ஆப்ஸ்கள் இருந்தாலும் கூட, இரண்டே இரண்டு ஆப்ஸ்களை கொண்டுள்ள சீனாவுடன் போட்டி போட முடியவில்லை.கடந்த 2016ம் ஆண்டு மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு டிஜிட்டல் பண பரிவர்த்தனை அதிகரித்துள்ளது. ரொக்கப் பண பரிவர்த்தனையை முற்றிலும் போக்கும் வகையில், பொதுமக்களும், வர்த்தக நிறுவனங்களும் எளிதான  டிஜிட்டல் பரிவர்த்தனையை மேற்கொள்ள யுபிஐ வசதி கொண்டு வரப்பட்டது. இதன் அடிப்படையில், தற்போது இந்தியாவில் பேடிஎம், அமேசான், கூகுள் பே என 80க்கும் மேற்பட்ட டிஜிட்டல் பரிவர்த்தனை ஆப்ஸ்கள் செயல்படுகின்றன.இதுதவிர, பேஸ்புக், வாட்ஸ்அப் சமூக வலைதளத்திலும் டிஜிட்டல் பண பரிவர்த்தனை செய்யும் வசதி விரைவில் முழுமையாக கொண்டு வரப்பட உள்ளது. இவ்வளவு இருந்தும், டிஜிட்டல் பண பரிவர்த்தனையில் சீனாவுடன் இந்தியா போட்டி போட இன்னும் வெகு தூரத்திற்கு செல்ல வேண்டியிருக்கிறது. கடந்த 5 ஆண்டுகளில் சீனா டிஜிட்டல் பண பரிவர்த்தனையில் மாபெரும் வளர்ச்சி கண்டுள்ளது.  அங்கு இந்தியாவைப்…
Read More
கார்ட் ஸ்வைப்பிங் மெஷினில் பணம் செலுத்துகிறீர்களா? கவனமாக இருங்கள்

கார்ட் ஸ்வைப்பிங் மெஷினில் பணம் செலுத்துகிறீர்களா? கவனமாக இருங்கள்

உ.பி மாநிலத்தில் தில்லி அருகே உள்ள நொய்டா நகரில் கிரேட் இண்டியன் பேலஸ் ஷாப்பிங் மால் உள்ளது. இங்கு தினமும் பலர் வந்து செல்வர். இங்கு உள்ள பர்கர் கிங் உணவு விடுதியில் சுமித் என்ற சேல்ஸ் மேனேஜர் ஏடிஎம் பணத் திருட்டுல் ஈடுபட்டு கைதாகியுள்ளார். ஸ்கிம்மிங் என்ற பழைய முறையை கையாண்டு கிட்டத்தட்ட 500 கிரெடிட், டெபிட் கார்டுகளில் இருந்து ஐம்பது லட்சம் ரூபாய்வரை திருடியுள்ளது தெரியவந்துள்ளது. பொதுவாக ஸ்கிம்மிங் முறையில் கார் மெஷினில் இந்த மென்பொருள் பொருத்தப்படும். பணம் செலுத்த காட்டை உள்ளே நுழைத்ததும் கார்ட் தகவல்கள் அனைத்தையும் இது வாங்கிக்கொள்ளும். மேலும் கஸ்டமர் அழுத்தும் 4 டிஜிட் பின் நம்பரையும் கார்ட் மெஷினில் பொருத்தப்பட்டுள்ள கேமரா பதிவேற்றிக் கொள்ளும். இந்த தகவல்களைக் கொண்டு ஒரிஜினல் கார்ட் போலவே அச்சு அசலாக போலி கார்ட் தயாரிக்கப்படும். இதனைக் கொண்டு பல்வேறு மாநிலங்களுக்குச் சென்று ஏடிஎம்-ல் அவர்களது வங்கிக் கணக்கில்…
Read More
மனித உயிருடன் விளையாடும் ஆன்லைன்  மருந்து விற்பனை ?

மனித உயிருடன் விளையாடும் ஆன்லைன் மருந்து விற்பனை ?

ஸ்மார்ட்போன்களின் பெருக்கத்தால் எல்லாமே இணையவழி பரிவர்த்தனை என்றாகிவிட்டது. ஆனால், எந்தவித அனுமதியும் பெறாமல், பதிவும் செய்யாமல், கண்காணிப்புக்கும் உட்படாமல் ஒரு தொழிலை புரியலாம் என்ற அளவுக்கு இந்தியா உள்ளது. ஆம், இணையதளம் மூலமான மருந்துகள் வர்த்தகத்துக்கு இது நாள் வரை எந்த ஒரு நிறுவனமும் முறையான பதிவை செய்யவில்லை. ஆன்லைன் மருந்து வர்த்தகத்துக்கு (இ-பார்மசி) தடை விதிக்க வேண்டும் என்று கடந்த சில ஆண்டுகளாக மருந்து விற்பனையாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர். கடந்த மாதம் மிகப் பெரிய கடையடைப்பு போராட்டம் நடத்தி தங்களது எதிர்ப்பை அரசின் கவனத்துக்கும் கொண்டு வந்தனர். இதற்கெல்லாம் சற்றும் செவி சாய்க்காத அரசு, இணையதள மருந்து விற்பனைக்கு உரிய கட்டுப்பாடு விதிகளை ஜனவரி 31-ம் தேதிக்குள் வகுக்க வேண்டும் என்று டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகுதான் பிரச்சினையின் தீவிரத்தை உணர்ந்ததாகத் தெரிகிறது. அதுவரையில் நாடு முழுவதும் ஆன்லைன் மூலமான மருந்து விற்பனைக்கு தடை விதிப்பதாக நீதிமன்றம் அறிவித்தது. ஆனாலும்…
Read More
டெலிவரி வாகனங்களில் பிளிப்கார்ட் செய்யவிருக்கும் அதிரடி மாற்றம். !

டெலிவரி வாகனங்களில் பிளிப்கார்ட் செய்யவிருக்கும் அதிரடி மாற்றம். !

பிளிப்கார்ட் நிறுவனம் அதன் டெலிவரி வாகனங்களில் அதிரடி மாற்றத்தை மேற்கொள்ளவிருப்பதாக அறிவித்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம். இ-காமர்ஸ் எனப்படும் ஆன்லைன் ஷாப்பிங் வர்த்தகத்தில் முன்னணி நிறுவங்களாக பிளிப்கார்ட் மற்றும் அமேசான் ஆகிய இரு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இ-காமர்ஸில் பல்வேறு நிறுவனங்கள் இந்தியாவில் செயல்பட்டு வந்தாலும், இந்த இரு நிறுவனங்களே இந்தியாவின் பிரபலமான நிறுவனங்களாக இருக்கின்றன. இவை வாடிக்கையாளர்களுக்கு தேவையான அனைத்துப் பொருட்களையும், அவர்களின் வீட்டின் வாசலுக்கே கொண்டு சேர்க்கும் பணியைச் செய்து வருகின்றன. இந்நிலையில், பிளிப்கார்ட் நிறுவனம் மட்டும் அதன் டெலிவரி வாகனத்தில் அதிரடி மாற்றம் ஒன்றை மேற்கொள்ளவிருப்பதாக அறிவித்துள்ளது. அதன்படி, அந்நிறுவனம் பயன்படுத்தி வரும் டெலிவரி வாகனங்களில், 40 சதவிகிதம் மின்சார வாகனங்களைப் பயன்பாட்டுக் கொண்டு வரவிருப்பதாக அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கைகயை வருகின்ற 2020ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் நிறைவு செய்யவிருப்பதாக அது இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்தியாவில் அண்மைக் காலங்களாக, எரிபொருள் வாகனங்களுக்கு மாற்றாக…
Read More
ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு வரிச் சலுகை வரம்பு தளர்வு !

ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு வரிச் சலுகை வரம்பு தளர்வு !

ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கான வரிச் சலுகை வரம்பை மத்திய அரசு தளர்த்தியுள்ளது. அத்துடன் முதலீட்டு வரம்பை ரூ. 25 கோடியாக நிர்ணயித்துள்ளது. இதன் மூலம் ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் முதலீடு செய்வது அதிகரிக்கும். இது தொடர்பாக அரசு நேற்று வெளியிட்ட அறிவிப்பு ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு மிகப் பெரும் சலுகையாக அமைந்துள்ளது.இதற்கு முன்பு ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கான வரிச் சலுகை ரூ. 10 கோடியாக இருந்தது.ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் பெரும் முதலீடுகளுக்கு 1961-ம் ஆண்டைய வருமான வரிசட்டம் 56 (2) பிரிவின் கீழ் வரி விலக்கு அளிப்பதற்கான அறிவிக்கை விரைவில் வெளியாகும் என்று அரசு அதிகாரி தெரிவித்துள்ளார்.நிறுவனமாக பதிவு செய்யப்பட்டு செயல்பாட்டுக்கு வந்த நாளிலிருந்து 7 ஆண்டுகள் வரை ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு இத்தகைய வரிச் சலுகை கிடைக்கும் என முன்னர் இருந்த விதிமுறை தற்போது 10 ஆண்டுகள் வரை என மாற்றியமைக்கப்பட்டுள்ளது.அதேபோல ஸ்டார்ட் அப் நிறுவனமாக பதிவு செய்த நிறுவனத்தின்…
Read More
பிளிப்கார்ட் அமேசான்  நிறுவனங்களுக்கு ஆப்பு வைக்கும் அம்பானி !

பிளிப்கார்ட் அமேசான் நிறுவனங்களுக்கு ஆப்பு வைக்கும் அம்பானி !

கடந்த சில ஆண்டுகளாக ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களின் மூலம் பொருட்களை வாங்குவதில் உலகம் முழுவதிலும் உள்ள மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். கம்ப்யூட்டர், செல்போன் முதல் மளிகை பொருட்கள் வரை ஆன்லைனில் வீட்டில் இருந்தபடியே ஆர்டர் செய்வது எளிதாகவும், விலை குறைவாகவும், டோர் டெலிவரி செய்யப்படுவதுமே ஆன்லைன் ஆர்டர் குவிய காரணமாக உள்ளது. இந்தியாவில் அமேசான், பிளிப்கார்ட் ஆகிய நிறுவனங்கள் கோடிக்கணக்கில் நாள்தோறும் ஆன்லைனில் ஆர்டர்களை பெற்று பொருட்களை டெலிவரி செய்து வருகின்றன. அந்த வகையில் ரிலையன்ஸ் நிறுவனமும் தற்போது ஆன்லைன் வர்த்தகத்தில் இறங்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. ஏற்கனவே ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ அறிமுகமாகி தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு ஆப்பு வைத்தது. அதேபோல் ஜியோ பிரெளசர் அறிமுகமாகி கூகுள் குரோம், மொசில்லா பயர்பாக்ஸ் ஆகிய பிரெளசர்களுக்கு ஆப்பு வைத்தது. இந்த நிலையில் ஆன்லைன் வர்த்தகத்தில் இறங்கி அமேசான், பிளிப்கார்ட் நிறுவனங்களுக்கு ஆப்பு வைக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
Read More
உலகிலேயே முதன்முதலாக 5ஜி சேவையை தொடங்கியது சீன நிறுவனம்..!!!

உலகிலேயே முதன்முதலாக 5ஜி சேவையை தொடங்கியது சீன நிறுவனம்..!!!

தற்போது மின்னல் வேகத்தில் வளர்ந்து வரும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப 4ஜி தொடங்கி தற்போது 5ஜி என தனது எல்லையை பரப்பிக்கொண்டுவரும் இந்த சுழலில் இசட்.டி.இ. கார்ப்பரேஷன் மற்றும் சீனா யுனிகாம் நிறுவனங்கள் இணைந்து உலகின் முதல் 5ஜி வாய்ஸ் கால் மேற்கொண்டதாக அறிவித்துள்ளன. இதற்கு இசட்.டி.இ. உருவாக்கிய 5ஜி ப்ரோடோடைப் ஸ்மார்ட்போன் பயன்படுத்தப்பட்டது.ஷென்சென் 5ஜி சோதனை மையத்தில் உலகின் முதல் 5ஜி வாய்ஸ் கால் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளது.இந்த சோதனை முயற்சியில் வாய்ஸ் கால் மட்டுமின்றி வீசாட் க்ரூப் கால், ஆன்லைன் வீடியோ மற்றும் பிரவுசிங் உள்ளிட்டவையும் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. என்.எஸ்.ஏ. மோட் மூலம் கால் செய்யப்பட்ட வணிக ரீதியிலான முதல் சோதனை மையமாக சீனா யுனிகாம் நிறுவனத்தின் ஷென்சென் சோதனை மையம் இருக்கிறது. இந்த பகுதி முழுக்க நெட்வொர்க் உபகரணங்களை கட்டமைப்பது மற்றும் சிறப்பு சேவைகளை வழங்குவது, ரோமிங் மற்றும் இண்டர்கனெக்ஷன் உள்ளிட்டவற்றை பலகட்டங்களில்…
Read More
ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்  இனி அதிரடி சலுகைகள் தொடருமா?

ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் இனி அதிரடி சலுகைகள் தொடருமா?

இந்தியாவில் ஆன்லைன் வர்த்தக முறை பிரபலமாகி இருக்கிறது. இந்த வர்த்தகத்தில் வெளிநாட்டு நிறுவனங்களும் ஈடுபட மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதன் காரணமாக அமேசான் போன்ற பெரிய நிறுவனங்களும் இந்தியாவில் களம் இறங்கி வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகின்றன.அதே நேரத்தில் உள்நாட்டு ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களும் ஏராளமாக உள்ளன. ஆனால், உள்நாட்டு நிறுவனங்கள் போட்டி போட முடியாத அளவுக்கு வெளிநாட்டு நிறுவனங்கள் தந்திர நடவடிக்கைகளை மேற்கொள்கின்றன. அதாவது சில குறிப்பிட்ட பொருட்களை குறிப்பிட்ட ஆன்லைன் நிறுவனங்கள் மட்டுமே விற்கும் வகையில் ஏற்பாடுகளை செய்து கொள்கின்றன. எனவே அந்த நிறுவனத்தில் மட்டுமே குறிப்பிட்ட பொருள் கிடைக்கும் என்ற நிலை இருப்பதால் சில பொருட்களுக்கு இஷ்டத்துக்கு விலை வைக்கிறார்கள். மேலும் உற்பத்தி நிறுவனங்களையும் தங்களுக்கு மட்டுமே அந்த பொருளை தர வேண்டும் என்று நிர்ப்பந்திக்கிறார்கள்.இதுபோன்ற காரணங்களால் உள்ளூர் நிறுவனங்கள் செயல்பட முடியாமல் நஷ்டத்தை சந்திக்கும் நிலை உருவாகி இருக்கிறது. இதனால் ப்ளிப்கார்ட் மற்றும் அமேசான் வலைத்தளங்களுக்கு…
Read More
ஆன்லைனில் விற்கப்படும் ஐந்தில் ஒரு பொருள் போலியானது ?

ஆன்லைனில் விற்கப்படும் ஐந்தில் ஒரு பொருள் போலியானது ?

ஆன்லைன் விற்பனை தொடர்பாக லோக்கல் சர்க்கிள் என்ற இணையதளம் சுமார் 30 ஆயிரம் பேரிடம் நடத்திய ஆன் லைன் ஆய்வறிக்கை ஒன்றை வெளியிடப்பட்டுள்ளது. அதில் கடந்த 6 மாதங்களில், ஆன்லைன் மூலம் போலியான பொருள்கள் தங்களிடம் விற்கப்பட்டதாக 20 சதவீத வாடிக்கையாளர்கள் தெரிவித்துள்ளனர். எந்தெந்த ஆன்லைன் நிறுவனங்கள் அதிகளவில் போலி பொருட்களை விற்பனை செய்கின்றன என்ற கேள்விக்கு ஸ்னாப்டீல் என 37 சதவிகிதம் பேரும், பிளிப்கார்ட் என 22 சதவிகிதம் பேரும், பேடிஎம் மால் என 21 சதவிகிதம் பேரும் கூறியுள்ளனர். 20 சதவிகிதம் பேர் அமேசான் நிறுவனம் போலியான பொருட்களை விற்பதாக தெரிவித்துள்ளனர்.ஆனலைன் விற்பனையில் ஒவ்வொரு ஐந்து பொருட்களுக்கும் ஒன்று போலியாக உள்ளது என கூறப்படுகிறது இதில் அதிகமானவை ஒப்பனை மற்றும் வாசனை திரவியங்களுக்கான பொருட்கள் ஆகும். குறிப்பாக நறுமணம் மற்றும் ஒப்பனை பொருட்கள் 35 சதவீதம் போலியானவை என்றும் 22 சதவீதம் விளையாட்டுக்கு தேவையான பொருட்கள் என்றும், 5…
Read More