22
Jul
சென்னையில் 'மீல் மங்கி' எனும் நிறுவனத்தில் உணவு டெலிவரி செய்யும் ஊழியராக பணிபுரிந்து வருகிறார் ஓசிடி பிரச்சினை கொண்ட திருமேனி (அர்ஜூன் தாஸ்). மன அழுத்தம் நிறைந்த அவரது வாழ்க்கையில் பணக்கார வீட்டு பணிப்பெண் சுப்புலட்சுமியின் (துஷாரா விஜயன்) காதல் கிடைக்க, காட்சிகள் மாறுகிறது. அதுவரை இருந்த விரக்தியான மனநிலையிலிருந்து காதல் அவரை மீட்டெடுத்து சிரிக்க வைத்து அமைதிப்படுத்துகிறது. இப்படியான சூழலில் திடீரென ஒருநாள் சுப்புலட்சுமியின் முதலாளி இறந்து விட, அந்த கொலைப்பழி சுப்புலட்சுமி மற்றும் திருமேனியின் மீது விழுகிறது. இந்தக் கொலைப்பழியிலிருந்து இவரும் தப்பித்தார்களா? இல்லையா? இதைச்சுற்றி நடக்கும் அரசியல் என்ன? - இதுதான் படத்தின் திரைக்கதை. ‘அங்காடித் தெரு’ படத்தில் சுரண்டப்படும் ஏழைத் தொழிலாளர்களின் அவலநிலையையும், வலியையும் அழுத்தமாக பதிவு செய்திருந்த இயக்குநர் வசந்தபாலன் மீண்டும் அப்படியானதொரு கதையை தேர்வு செய்திருக்கிறார். இம்முறை உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்களின் கோர முகத்தையும், அதில் சிக்கித் தவிக்கும் இளைஞர்களின் நிலை,…
