விமர்சனம்

சத்திய சோதனை -விமர்சனம்

சத்திய சோதனை -விமர்சனம்

2017ம் ஆண்டு வெளியான ஒரு கிடாயின் கருணை மனு திரைப்படம் பலரது கவனத்தையும் ஈர்த்திருந்தது. இப்படத்தில் இயக்குநராக அறிமுகமான சுரேஷ் சங்கையா, தற்போது நீண்ட இடைவேளைக்குப் பிறகு ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார். பிரேம்ஜி நடிப்பில் அவர் இயக்கியுள்ள சத்திய சோதனை திரைப்படம் வரும் 21ம் தேதி வெளியாகிவுள்ளது. சங்குப்பட்டி என்ற கிராமத்தில் ஒரு கொலை நடக்கிறது. கொலை செய்த நபரை அவர் கை, கழுத்தில் பல சவரன் நகைகளோடு அவரை ஒரு காட்டில் வீசிவிட்டுச் சென்று விடுகின்றனர் கொலைகாரர்கள். அப்போது அந்த வழியே வந்த பிரேம்ஜி, அந்தப் பிணத்தின் மீது இருந்த அவரது வாட்ச், செல்போன் மற்றும் அரை பவுன் நகையை மட்டும் எடுத்துக்கொண்டு அங்கிருந்த டூ வீலரில்கிளம்புகிறார். வரும் வழியில் ஒரு வயதான பாட்டியை டூவீலரில் ஏற்றிக் கொணைடு சங்குப்பட்டி காவல் நிலையத்தில் வந்து எடுத்த பொருட்களை ஒப்படைக்கிறார்.ஆனால் பிரதீப் சொல்வதை நம்பாத போலீசார் அவரை கஸ்டடியில் எடுக்கிறார்கள்.அவரை போலீஸ்காரர்கள் பிடித்து…
Read More
இன்பினிட்டி – விமர்சனம்: !

இன்பினிட்டி – விமர்சனம்: !

மென்பனி புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சாய் கார்த்திக் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘இன்ஃபினிட்டி’. இந்த படத்தில் நட்டி நட்ராஜ், வித்யா பிரதீப், முனீஷ்காந்த், சார்லஸ் வினோத், வினோத் சாகர், ஜீவா ரவி என பலரும் நடித்துள்ளனர். சரவணன் ஸ்ரீ ஒளிப்பதிவு செய்துள்ள நிலையில் பாலசுப்ரமணியம் இசையமைத்துள்ளார். படத்தின் ஆரம்பத்தில் இளம்பெண் ஒருவர் எரித்து கொல்லப்படுகிறார். இதனிடையே பாரில் ஒருவர், எழுத்தாளர் ஒருவர் என இருவர் அடுத்தடுத்து கொல்லப்படுகின்றனர். இதனை விசாரிக்க சென்ற காவல்துறை அதிகாரியும் கொலை செய்யப்படுகிறார். இந்த வழக்கு சிபிஐ அதிகாரியாக உள்ள நட்டியிடம் விசாரணைக்கு வருகிறது. பல கட்ட விசாரணைக்குப் பின் எரித்து கொல்லப்பட்ட பெண்ணுக்கும், இந்த தொடர் கொலைக்கும் சம்பந்தம் உள்ளதை கண்டறிகிறார். ஒரு க்ரைம் த்ரில்லருக்கு, இன்ஃபினிட்டி மனநிலையுடன் ஒத்துப்போவதில்லை, அது நம்மைச் சுற்றியுள்ள இருண்ட உலகத்தைத் தழுவுவதற்குத் தடையாகிறது. முதல் 30 நிமிடங்களில் பல விஷயங்கள் திறக்கப்படுகின்றன, அது நன்றாக இருக்கிறது, ஆனால் அடுத்தடுத்த நிகழ்வுகள்…
Read More
நாயாடி – விமர்சனம் !

நாயாடி – விமர்சனம் !

ஆதர்ஷ் மதிகாந்தம் தயாரித்து இயக்கி நடித்துள்ள 'நாயாடி' படத்தின் ட்ரெய்லர் ரசிகர்களை கவர்ந்த நிலையில், படம் வெளியாகியிருக்குது. தமிழ்நாட்டை சேர்ந்த ஆதர்ஷ் மதிகாந்தம் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் மெட்ரோ ரயிலில் ஓட்டுநராக பணிபுரிந்து வந்துள்ளார். அதன்மூலம் தான் சம்பாதித்த பணத்தை சினிமாவில் முதலீடு செய்துள்ளார். அதன்படி, ‘நாயாடி’ என்ற படத்தை தயாரித்து, இயக்கி, ஹீரோ கேரக்டரிலும் நடித்துள்ளார். ஹீரோயினாக காதம்பரி, பிரபல யூடியூபர் பேபி  ஆகியோரும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். அருண் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். கேரளாவின் மிகவும் பிற்படுத்தப்பட்ட பழங்குடி இனத்தவரான நாயாடிகள் குறித்த வரலாறோடு இப்படம் தொடங்குகிறது. இதுவரை கேள்விப்படாத சமூகமாக இருக்கிறது.அடிமைகளாக இருந்த அம்மக்கள் மனிதர்களிடமிருந்தும் விலங்குகளிடமிருந்தும் தங்களை பாதுகாத்துக் கொள்ள பில்லி சூனியம் உள்ளிட்ட மாந்தீரிகங்களை கற்றுக்கொள்கின்றனர். இதனிடையே யூட்யூப் சேனல் நடத்தும் ஆதர்ஷ் மதிகாந்தம், காதம்பரி, பேபி உள்ளிட்ட 6 பேர் கொண்ட நண்பர்கள் குழு வாயாடி சமூகத்தைப் பற்றி வீடியோவாக எடுத்து வெளியிட வருகிறார்கள்.…
Read More
யாதும் ஊரே யாவரும் கேளிர் -விமர்சனம் !!

யாதும் ஊரே யாவரும் கேளிர் -விமர்சனம் !!

இலங்கை தமிழர் பிரச்சனைகளை பற்றி பேசும் தமிழ் நாட்டு அரசியல்வாதிகளில் பலர் வீராவேசமாக உணர்ச்சி பொங்க பேசுவார்கள். ஆனால் நம் ஊரில் முகாம்களில் உள்ள இலங்கை அகதிகள் பற்றி பேசமாட்டார்கள். அகதிகளுக்கு வாக்குரிமை இல்லாததே இதற்கு காரணம்.வாக்குரிமை மட்டும் இருந்தால் அரசியல்வாதிகள் கொண்டாடுவார்கள். ஒரு இலங்கை அகதியின் பார்வையில் சந்திக்கும் பிரச்சனையாக வந்துள்ளது யாதும் ஊரே யாவரும் கேளிர் திரைப்படம். இப்படத்தை வெங்கட கிருஷ்ணா ரோஹிந்த் இயக்கி உள்ளார். இலங்கையின் மோசமான போர் சூழலில் ஆதரவு அற்ற சிறுவன் புனிதனை பாதிரியார் ஒருவர் லண்டனில் உள்ள இசை பள்ளியில் சேர்த்து படிக்க வைக்க முயற்சிக்கிறார். செல்லும் வழியில் ராணுவத்தினர் பிடியில் மாட்டி சிறையில் அடைக்கப் படுகிறான். விடுதலை அடைந்து கள்ள தோணியில் கேரளா செல்கிறான்.அங்கே உள்ள இசை கருவிகள் செய்யும் கடையில் வேலை செய்கிறான். இந்நிலையில் லண்டன் இசைப்பள்ளியில் போட்டியில் ஆன் லைன் மூலமாக கலந்து கொள்கிறான்.எந்த ஒரு நாட்டின் குடியுரிமையும்…
Read More
ராகவா லாரன்ஸ், பிரியா பவானி ஷங்கர், சரத்குமார், பூர்ணிமா பாக்கியராஜ், நாசர், காளி வெங்கட் என பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர். 4 வருடங்களுக்கு பின் ராகவா லாரன்ஸ் நடிப்பில் இந்த திரைப்படம் வெளிவந்துள்ளது. இதனாலேயே இப்படத்தின் மீது மாபெரும் எதிர்பார்ப்பு இருந்தது. எதிர்பார்ப்பை ருத்ரன் படம் பூர்த்தி செய்ததா? பார்க்கலாம். தனது தாய் பூர்ணிமா பாக்கியராஜ், தந்தை நாசருடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார் ருத்ரன் {ராகவா லாரன்ஸ்}. குறிப்பாக தனது தாயின் மீது அளவுகடந்த பாசத்தை வைத்துள்ளார். இந்த சமயத்தில் கதாநாயகி பிரியா பவானி ஷங்கரை சந்திக்கும் ருத்ரன் காதலில் விழுகிறார்.கண்டதும் காதல்.நாயகிக்கு அப்பா அம்மா இல்லாததுனால இந்த காதல் திருமணம் வரை செல்லும் நேரத்தில், ருத்ரனின் தந்தைக்கு பிரச்சனை வருகிறது. தனது நண்பனை நம்பி 6 கோடி கடன் வாங்கினார் நாசர். ஆனால், அவர் நாசரை ஏமாற்றிவிட்டு 6 கோடி பணத்துடன் எஸ்கேப் ஆகிவிட்டார். கடன் கொடுக்க முடியாமல்…
Read More
அகிலன்– விமர்சனம் !

அகிலன்– விமர்சனம் !

கிங் ஆஃப் இந்தியன் ஓஷன் ஆக இருக்கும் ஹார்பரில் சாதாரண லேபரான அகிலனுக்குத் தெரியாமல் ஒரு அணுவும் அசையாது. அவனுக்கு சர்வதேச ஹார்பர் கேங்ஸ்டரான கபூரை சந்திக்க வேண்டும் என்பதே திட்டம். அதற்காக கொலை, இல்லீகல் பிஸினஸ் என எல்லாவற்றையும் செய்து கொடுக்கிறான். இறுதியாக ஒரு சைபர் கிரைம் ஸ்பெஷலிஸ்ட் ஒருவனையும் Human Traffic முறையில் கண்டெய்னரில் ஏற்றி தப்பி செல்ல வைக்கிறான். அதன் மூலம் அவன் நினைத்தபடி கிங் ஆஃப் இந்தியன் ஓஷன் என்ற பட்டத்தையும் கைப்பற்றுகிறான். அகிலனின் டபுள் ஆக்‌ஷன் இன்னொரு பக்கம் லோக்கல் ஹார்பரில் இருக்கும் யூனியன் பிரச்சினை முதல் தன்னுடன் இருந்தவர்களை ஓரங்கட்டுவது, அடங்கிப் போக செய்வது என பல அதிரடிகளை அரங்கேற்றுகிறான் அகிலன். இதற்கெல்லாம் போலீஸ் கேரக்டரில் வரும் மாதவியும் உதவி செய்கிறார்.பிரியா பவானி சங்கருக்கு ரெமான்ஸ் காட்சியும் இல்லை, படத்தில் பெரிதாக வேலையும் இல்லை. பெயருக்கு படத்தின் நாயகியாக வந்து போகிறார். அகிலன்…
Read More
செம்பி -விமர்சனம் !

செம்பி -விமர்சனம் !

கோவை சரளா கொடைக்கானல் மலை உச்சியில் உள்ள புலியூரில்  பழங்குடி இனத்தை சேர்ந்த பெண் வீரத்தாயி என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இவர் தன்னுடைய 10 வயதுள்ள பேத்தி செம்பியுடன் வாழ்ந்து வருகிறார். கொடைக்கானல் காட்டுப்பகுதிகளில் கிடைக்கும் தேனை விற்றுதான் வாழ்ந்து வருகின்றனர். ஒருநாள் கொடைக்கானலை சுற்றி பார்க்க வந்த 3 பேரால் வீரத்தாயின் பேத்தி பாலியல் வன்கொடுமை செய்யப்படுகிறாள். இதனால் உடைந்து போன பாட்டி வீரத்தாயி அந்த குற்றவாளிகளுக்கு எப்படி தண்டனை வாங்கி கொடுத்தார்? என்பதை யதார்த்தமாக பதிவு செய்திருக்கிறார் இயக்குநர் பிரபு சாலமன் . -- கோவை சரளாவை இப்படத்தில் முற்றிலும் தன்னுடைய உருவத்தை மாற்றி பழங்குடியின மக்களில் ஒருவராகவே தோன்றுகிறார். இவர் இதுவரை நடித்த கதாபாத்திரங்களில் இருந்தும் முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் இப்படத்தில் நடித்திருக்கிறார். சரளாவின் ஒரு சில காட்சிகள் எல்லோரையும் கலங்க வைப்பதாக இருக்கிறது. அதேபோல செம்பியாக நடித்த நிலாவும் தன்னுடைய நடிப்பினால் கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்துள்ளார்.எதிர்காலத்தில்…
Read More
காமெடியனாக திரையுலகிற்கு வந்து தற்போது படங்களில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகர் யோகி பாபு. ஷூ படத்தில் யோகி பாபு, திலீபன், ரெடின் கிங்சிலே, ஜார்ஜ் விஜய், விஜய் டிவி பாலா போன்றோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இவ்வளவு பேர் இருந்தாலும் குழந்தைகளை சுற்றியே இக்கதை நகர்கிறது. ஷூ வடிவில் டைம் மெஷின் ஒன்றை கண்டுபிடிக்கிறார் திலீபன், அதனை சோதனை செய்யும் போது எதிர்பாராத விதமாக போலீசில் மாட்டிக் கொள்கிறார். மறுபுறம் ஒரு கும்பல் குழந்தைகளை விலைக்கு வாங்கி அவர்களை விபச்சாரத்திற்கு உட்படுத்துகிறது, மறுபுறம் தாய் இல்லாத குழந்தை குடிகார அப்பாவிடம் இருந்து கஷ்டப்படுகிறது. இவர்கள் மூன்று பேரையும் அந்த ஷூ ஒரு கட்டத்தில் இணைக்கிறது, என்பதே இப்படத்தின் கதை. கல்யாண் இயக்கியுள்ள இப்படம் டெக்னிக்கலாக சிறப்பாக உள்ளது. படத்தில் உள்ள நடிகர்களைப் போலவே டெக்னீசியன்களும் சிறப்பாக இருக்க வேண்டும் என்று ஒவ்வொருவராக பார்த்து பார்த்து அமைத்துள்ளார். இசையமைப்பாளர் சாம்…
Read More
சில நேரங்களில் சில மனிதர்கள் -விமர்சனம்

சில நேரங்களில் சில மனிதர்கள் -விமர்சனம்

சில நேரங்களில் சில மனிதர்கள்., ஜெயகாந்தனின் புகழ்பெற்ற கதைகளுள் ஒன்று. இதே தலைப்பில் வெளியாகும் சினிமா ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’. ஜெயகாந்தனின் கதைக்கும் இந்த சினிமாவிற்கும் தலைப்பைத்தவிர வேறு எந்த சம்பந்தமும் இல்லை. நாசர், அசோக் செல்வன், மணிகண்டன், கே.எஸ்ரவிக்குமார், இளவரசு, பானுப்பிரியா, அபி ஹாசன், ரித்விகா, ரியா, பிரவீன் பாலா, அஞ்சு சூரியன் உள்ளிட்டோர் நடித்திருக்கும் இந்த சினிமாவை இயக்கியிருக்கிறார் விஷால் வெங்கட். மணிகண்டன் வசனம் எழுதியிருக்கும் இந்த சினிமா ஒரு குறிப்பிட்ட சம்பவத்துடன் தொடர்புடைய வெவ்வேறு வாழ்வியல் சூழல்களைக் கொண்ட மனிதர்களை ஒரு புள்ளியில் இணைக்க முயற்சி செய்கிறது. அசோக் செல்வனுக்கு திருமண ஏற்பாடுகள் நடக்கின்றன. அன்பான அப்பா நாசர் மீது எப்போதும் கோவத்தை காட்டும் அசோக் செல்வனுக்கு வாழ்க்கை மிகப்பெரிய இழப்பைத் தருகிறது. நடு இரவில் நடந்த ஒரு விபத்துடன் மணிகண்டன், அபிஹாசன், ரித்திவிகா தம்பதிகள் என பலரும் இணைக்கப்படுகிறார்கள். பிறகு அவரவர் மனதில் குறிப்பிட்ட…
Read More
‘கொம்பு வச்ச சிங்கம்டா’

‘கொம்பு வச்ச சிங்கம்டா’

சாதியில்லை, சாமியில்லை என்று சொல்லி ஊருக்குள் புரட்சி பேசும் ஆறு நண்பர்களுக்குள் பிரச்சினை வெடித்து அவர்கள் பிரிந்ததால் உருவானது தான் ‘கொம்பு வச்ச சிங்கம்டா’. படத்தலைப்புக்கும் படத்துக்கும் சம்பந்தமே இல்லை. கரூர் மாவட்டத்தில் உள்ள ஒரு பேரூராட்சியில் ஊரே கொண்டாடி, மரியாதை செய்யும் அளவுக்கு செல்வாக்குடன் இருக்கிறார் இயக்குனர் மகேந்திரன். இவரது ஒரே மகன் சசிகுமார் பெரியாரின் கொள்கையைப் பின்பற்றி சமத்துவம், சகோதரத்துவம் என்று ஊரைக் கொஞ்சம் கொஞ்சமாக மாற்ற நினைக்கிறார். இதனால் ஊருக்குள் இருக்கும் பல பேரின் பகையைச் சம்பாதிக்க நேர்கிறது. அந்த நேரத்தில் வரும் உள்ளாட்சித் தேர்தலில் இரு பெரும் கோஷ்டிகள் மோதுகின்றன. அதில் மாமனாருக்காக சசிகுமாரும் எதிர்க்கோஷ்டிக்கு 3 நண்பர்களுமாகப் பிரிந்து தேர்தல் வேலை செய்கிறார்கள்.அதில் எதிர்பாராதவிதமாக ஒரு கொலைச் சம்பவம் நிகழ்கிறது. இந்தக் கொலை வழக்கில் சசிகுமார், சூரி உள்ளிட்ட மூன்று பேர் கைதாகிறார்கள். நண்பர்களுக்குள் உருவான பிரச்சினை ஊர்ப் பிரச்சினையாகவும், சாதிப் பிரச்சினையாகவும் உருமாறுகிறது.…
Read More