மதுரை காவல்துறை ஆணையராக இருந்த போது காவல் துறை அதிகாரி டேவிட்சன் தேவாசீர்வாதம் போலி பாஸ்போர்ட் வழங்கியதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியிருந்தார். அதேபோல், இந்தியன் மக்கள் மன்ற தலைவர் வராகி என்பவரும் கடந்த மே மாதம் மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் சிபிஐ, தேசிய புலனாய்வு முகமை ஆகியவற்றிற்கு புகார் ஒன்றை அளித்தார்.
அந்த புகாரில் மதுரை மாநகர காவல்துறை ஆணையராக டேவிட்சன் தேவாசீர்வாதம் பதவி வகித்த போது வெளிநாட்டினருக்கு பாஸ்போர்ட் வழங்குவதில் முறைகேடு நடந்துள்ளது. டேவிட்சன் தேவாசீர்வாதம் பதவி வகித்த காலத்தில் போலி ஆவணங்கள் மூலம் நூற்றுக்கணக்கான போலி பாஸ்போர்ட்கள் வழங்கப்பட்டன என்றும் அவரது மனைவி நடத்தி வந்த டிராவல் ஏஜென்சி மூலமாக இந்த முறைகேடு நடந்துள்ளது” என்று கூறியிருந்தார்.
இதனிடையே, போலி பாஸ்போர்ட் மூலம் வெளிநாடு செல்ல முயன்றதாக கடந்த 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் இலங்கை நாட்டை சேர்ந்த முத்துராமன் மற்றும் பரமசிவம் ஆகியோரை குடியுரிமை அதிகாரிகள் கைது செய்தனர். போலி பாஸ்போர்ட் விவகாரம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில், மத்திய புலனாய்வு அமைப்பு இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து இருந்தது.
அதேபோல், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் நேரடியாக குற்றம் சாட்டியிருந்தார். அதோடு இது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என ஆளுநருக்கும் கடிதம் எழுதியிருப்பதாக கடந்த ஆண்டு ஜூலை மாதம் அளித்த பேட்டியில் அண்ணாமலை கூறியிருந்தார். இந்த நிலையில், தான், போலி பாஸ்போர்ட் புகாரில் ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் மீது அளிக்கப்பட்ட புகார் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது.
முன்னதாக நேற்று தமிழகத்தில் காவல்தறை உயர் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு இருந்தனர். இதில் உளவுத்துறை ஏடிஜிபியாக இருந்த டேவிட்சன் தேவாசீர்வாதம் காவல்துறை தலைமையக ஏடிஜிபியாக இடமாற்றம் செய்யப்பட்டு இருந்தார். இந்த நிலையில், மறுநாளே உள்துறை அமைச்சகத்தின் இந்த உத்தரவு வெளியாகி இருப்பது காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டேவிட்சன் தேவாசீர்வாதம் 1995- ஆம் ஆண்டு தமிழ்நாடு கேடர் ஐபிஎஸ் அதிகாரி ஆவார். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள முதலூர் என்ற கிராமத்தை சேர்ந்த டேவிட்சன் தேவாசீர்வாதம், எஸ்.பி, டிஐஜி, ஐஜி, உளவுத்துறை ஏடிஜிபி உள்ளிட்ட உயர் பொறுப்பில் இருந்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாணவி மரண விவகாரத்தில் நடந்த வன்முறைச் சம்பவங்களை எதிர்கட்சிகள் கடுமையாக விமர்சித்துவருகின்றன. தமிழ்நாடு உளவுத்துறையின் மீதும் புகார் எழுந்தது. வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலம்தான் வன்முறைச் சம்பவங்களுக்கு திட்டமிடப்பட்டதை கவனிக்கத் தவறியதாகவும் உளவுத்துறைமீது குற்றம்சாட்டப்பட்டது. இவ்வாறு உளவுத்துறைமீது விமர்சனங்கள் எழுந்த சூழலில்தான் உளவுத்துறையின் ஐ.ஜி-யாக இருந்த ஆசியம்மாள் மாற்றப்பட்டு, செந்தில்வேலன் ஐ.பி.எஸ் நியமிக்கப்பட்டிருக்கிறார். இவர், கடந்த ஒன்பது ஆண்டுகளுக்கும் மேலாக மத்திய அரசு உளவுத்துறையில் பணியாற்றிவிட்டு சமீபத்தில்தான் மீண்டும் தமிழ்நாட்டுப் பணிக்குத் திரும்பினார்.
ஐ.ஜி அந்தஸ்திலிருக்கும் செந்தில்வேலன், காத்திருப்புப் பட்டியலில் வைக்கப்பட்டிருந்தார். செந்தில்வேலனுக்கு முக்கியமான பதவி கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட சூழலில்தான் உளவுத்துறையின் ஐ.ஜி பணி வழங்கப்பட்டிருக்கிறது. மத்திய அரசிலும் உளவுத்துறை பணியிலிருந்ததால் செந்தில்வேலன், மாநில அரசின் உளவுத்துறை பணியிலும் சிறப்பாகச் செயல்படுவார் என்ற நம்பிக்கை அவர்மீது வைக்கப்பட்டிருக்கிறது.
செந்தில்வேலன் ஐ.பி.எஸ்-ஸின் சொந்த ஊர் மதுரை. இவரின் தந்தை தனியார் நிறுவனத்தில் மக்கள் தொடர்பு அதிகாரியாக வேலை பார்த்தார். செந்தில்வேலனுக்கு சிறு வயது முதல் காவல்துறையில் பணியாற்ற வேண்டும் என்ற லட்சியம் இருந்தது. ஆனால் அவரின் தந்தை, செந்தில்வேலனை டாக்டராக்க ஆசைப்பட்டார். அதனால் அப்பாவின் ஆசையை நிறைவேற்ற முதலில் செந்தில்வேலன் டாக்டரானார். அதன் பிறகு சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி ஐ.பி.எஸ் அதிகாரியானார். தமிழ்நாடு கேடர் ஐ.பி.எஸ் அதிகாரியான டாக்டர் செந்தில்வேலனுக்கு கமுதியில் ஏ.எஸ்.பி-யாக பணி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அங்கு சிறப்பாகப் பணியாற்றிய அவர், சிதம்பரத்துக்கு இடமாற்றப்பட்டார். அப்போது அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம், நடராஜர் கோயில் விவகாரம் ஆகியவற்றை சுமுகமாகக் கையாண்டார்.
இதையடுத்து தஞ்சாவூர், ராமநாதபுரம், சென்னை அடையாறு ஆகிய இடங்களில் பணியாற்றினார். சென்னை அடையாறு துணை கமிஷனராக செந்தில்வேலன் பணியாற்றியபோதுதான் பரமக்குடியில் இமானுவேல் சேகரன் பூஜையையொட்டி பாதுகாப்பு பணிக்காக செந்தில்வேலன் அங்கு அனுப்பப்பட்டார். அப்போது நடந்த கலவரச் சூழலையும் செந்தில்வேலன் சிறப்பாகக் கையாண்டார். இதையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறைக்கு அவர் மாற்றப்பட்டார். அதன் பிறகு மத்திய அரசு பணிக்காகச் சென்ற செந்தில்வேலன் மீண்டும் தமிழ்நாட்டுக்குத் திரும்பியிருக்கிறார். உளவுத்துறையில் நல்ல அனுபவம்கொண்ட செந்தில்வேலனுக்கு சில சவால்கள் காத்திருக்கின்றன. அதேநேரத்தில் தமிழ்நாடு அரசும் அவரிடம் சில அசைமென்ட்டுகளைக் கொடுத்திருக்கிறது.
உளவுத்துறை ஐ.ஜி பணி என்பது முக்கியமானது. தமிழ்நாட்டில் எந்த மூலையில் என்ன சம்பவம் நடந்தாலும் அதற்கான பின்னணிகளைக் கண்டறிந்து அரசுக்கு ரிப்போர்ட் கொடுப்பது, சட்டம்-ஒழுங்குப் பிரச்னை ஏற்படாமலிருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது, அரசியல் மூவ்மென்ட்டுகளை அரசின் கவனத்துக்குக் கொண்டு செல்வது போன்ற முக்கியமான பணிகளைச் செய்ய வேண்டும். இந்தப் பணிகளுக்குச் சரியான நபர் செந்தில்வேலன்தான் என மூத்த ஐ.பி.எஸ் அதிகாரிகள் சிலர் சிபாரிசு செய்திருக்கின்றனர். அதனடிப்படையில்தான் அவரின் பெயர் டிக் அடிக்கப்பட்டிருப்பதாக ஐ.பி.எஸ் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
உளவுத்துறை ஐ.ஜி. பதவியை பொறுத்தவரை, முதலமைச்சரோடு எந்நேரம் வேண்டுமானாலும் தொடர்பு கொண்டு பேசகூடிய ஒரு மிகப்பெரும் பதவியாக கருதப்படுகிறது.
இந்தப் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள செந்தில் வேலன் ஐ.பி.எஸ். பின்னணி பற்றி இங்கே பார்க்கலாம்.
தமிழக உளவுத்துறை ஐ.ஜி.செந்தில் வேலனுக்கு மதுரை தான் பூர்வீகம். சிறுவயதில் இருந்தே காவல்துறையில் உயரதிகாரியாக வர வேண்டும் என விரும்பிய செந்தில் வேலன், தனது தந்தையின் விருப்பத்திற்காக எம்.பி.பி.எஸ். படித்து மருத்துவர் ஆனார். டாக்டராகிய பிறகு கிளினிக் வைப்பார் அல்லது மருத்துவ மேற்படிப்பு படிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி ஐ.பி.எஸ். ஆனார். 2004-ஆம் ஆண்டு பேட்ஜை சேர்ந்த இவர் ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் ஏ.எஸ்.பி.யாக காவல்துறை பணியை தொடங்கினார்.
சாதிக் கலவரங்களை மிக சாதுர்யமாக கையாண்டு பிரச்சனைகளை தீர்ப்பதில் கெட்டிக்காரராக திகழ்ந்தார். அதைத் தொடர்ந்து கடலூர் மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்ட அவர் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டங்களை சுமூகமாக முடிவுக்கு கொண்டு வந்தார். பிறகு பதவி உயர்வு மூலம் தஞ்சை மாவட்ட எஸ்.பியாக நியமிக்கப்பட்ட செந்தில் வேலன், அந்த மாவட்டத்தில் ரவுடிகளின் ராஜ்யத்தை ஒழிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தார்.
இதனிடையே மீண்டும் ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்ட அவர் 2011-ஆம் ஆண்டு பரமக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் காரணம் ஊழல் தடுப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டார். அங்கேயும் அவர் சும்மா இருக்கவில்லை, மதுரை கிரானைட் வழக்கில் துரிதமாக செயல்பட்டு முறைகேடுகளை வெளிச்சம் போட்டுக்காட்டினார். அதைத் தொடர்ந்து மத்திய அரசு பணிக்கு சென்ற செந்தில்வேலன் ஐ.பி.எஸ். கடந்த 2018-ஆம் ஆண்டு டி.ஐ.ஜி.ஆக பதவி உயர்வு பெற்றார்.
2020-ஆம் ஆண்டு ஐ.ஜி.யாக பதவி உயர்வு பெற்ற செந்தில் வேலன் ஐ.பி.எஸ்., அண்மையில் தான் தமிழக காவல்துறைக்கு மீண்டும் திரும்பினார். அப்போதே இவருக்கு முக்கியப் பதவி கொடுக்கப்படலாம் என்ற பேச்சு எழுந்தது. இந்நிலையில் இப்போது தமிழக உளவுத்துறை ஐ.ஜி.ஆக நியமனம் செய்யப்பட்டுள்ளார். போலீஸ் அகாடமியில் பயிற்சி பெற்ற போதே மத்திய உளவுத்துறை விருதான பேட்டன் மற்றும் ரிவால்வர் விருதுகளை பெற்றவர் செந்தில்வேலன் ஐ.பி.எஸ். என்பது கூடுதல் தகவலாகும்