18
Nov
1070ம் ஆண்டில் பழங்காலத்தில் ஐந்தீவு பகுதி ஒன்று இருந்தது. பெருமாட்சி, ஆர்த்தி, முக்காடு, வெண்காடு, மண்டைக்காடு என இந்த தீவுகள் ஐந்து பகுதிகளாக பிரிந்து கிடக்கின்றன. ஒவ்வொரு தீவிலும் தனித்தனி குணம் கொண்ட ஆதிவாசிகள் வசிக்கின்றனர். பெருமாட்சி தீவில் கங்குவா ( சூர்யா) வம்சத்தைச் சேர்ந்த மக்கள் வசிக்கிறார்கள். ஆர்த்தி தீவில் உதிரன் (பாபி. தியோள்) வம்சத்தைச் சார்ந்த மக்கள் வசிக்கிறார்கள. இதே போல் ஒவ்வொரு தீவிலும் ஒவ்வொரு குழு வசிக்கிறது. போர்ச்சுக்கல் படை ஐந்தீவு பகுதியை கைப்பற்ற எண்ணி 25 ஆயிரம் சிப்பாய்களுடன் தீவை நெருங்குகிறது. அங்குள்ள உளவாளி உதிரன் துணை கொண்டு போரிட்டால் கங்குவா வசிக்கும் தீவை கைப்பற்றி விடலாம் என்று ஐடியா தர அதன்படி போர்ச்சுக்கல் படை உதிரனுக்கு தங்க காசுகள் கொடுத்து அவனை தன் பக்கம் வளைத்துப் போடுகிறது. இந்நிலையில் நடக்கும் போரில் கங்குவா உதிரனின் சகோதரர்களை கொல்கிறான். அத்துடன் உதிரன் மகனும் கொல்லப்படுகிறான். ஆவேசம்…
