சினிமா

நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள ‘சக்தி திருமகன்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமாகும் சாஃப்ட்வேர் இன்ஜினியர் திருப்தி ரவிந்தரா!

நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள ‘சக்தி திருமகன்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமாகும் சாஃப்ட்வேர் இன்ஜினியர் திருப்தி ரவிந்தரா!

'அருவி' மற்றும் 'வாழ்' படங்கள் புகழ் இயக்குநர் அருண் பிரபு இயக்கத்தில், விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள 'சக்தி திருமகன்' படம் மூலம் திறமையான இளம் கதாநாயகியாக கோலிவுட்டில் அறிமுகமாகிறார் மகாராஷ்டிரா துலேவைச் சேர்ந்த நடிகை திருப்தி ரவிந்தரா. இந்தப் படம் செப்டம்பர் 19, 2025 அன்று வெளியாகிறது. திரை வசீகரமும் திறமையும் கொண்ட கதாநாயகிகளை தமிழ் சினிமா சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கும். அந்த வகையில், கணினி அறிவியலில் பட்டம் பெற்ற முன்னாள் மென்பொருள் பொறியாளரான திருப்தி, ஐந்து வருடங்கள் மேடை நாடக அனுபவம் பெற்ற பிறகு நடிப்புத் துறைக்குள் நுழைந்திருக்கிறார்.  மேடை நடிப்பில் வலுவான அடித்தளம் பெற்றது மட்டுமல்லாது ஈஸ்டர்ன் மசாலா, லிசோல், ஜெப்டோ, ஐஇடிஎல் மற்றும் சைடஸ் உள்ளிட்ட பல தேசிய விளம்பரங்களில் பணிபுரிந்த அனுபவமும் பெற்றிருக்கிறார். 'சக்தி திருமகன்' படத்தில் பணிபுரிந்த அனுபவம் குறித்து அவர் பகிர்ந்து கொண்டதாவது, “நான் நன்கு நடிப்பு பயிற்சி எடுத்த…
Read More
கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின், திரைப்பட இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் தொழில் அதிபர் ஏ.எம். கோபாலன் ஆகியோருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியது வேல்ஸ் பல்கலைக்கழகம்!

கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின், திரைப்பட இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் தொழில் அதிபர் ஏ.எம். கோபாலன் ஆகியோருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியது வேல்ஸ் பல்கலைக்கழகம்!

பல்லாவரத்தில் அமைந்துள்ள வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் 16வது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக வளாகத்தில் இன்று நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக சட்டம் மற்றும் நீதித்துறை, நாடாளுமன்ற விவகாரத்துறை மத்திய அமைச்சர் திரு.அர்ஜுன் ராம் மேக்வால் கலந்துக்கொண்டு உரையாற்றினார் .அதில் அவர் ”இந்தியா 2047க் கனவை அடைய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் முக்கிய பங்கு வகிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். தொழில் புரட்சி 4.0 யுகத்தில் செயற்கை நுண்ணறிவு, மெஷின் லெர்னிங் போன்ற துறைகள் முன்னிலை வகிக்கின்றன எனக் குறிப்பிட்ட அவர், பட்டதாரிகள் சமூகப் பொறுப்பு, நிலைத்தன்மை ஆகியவற்றை வழிகாட்டுதலாகக் கொண்டு செயல்பட வேண்டும் என்றார். இந்தியா விரைவில் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக உருவாகும் என்றும், 5,000-க்கும் மேற்பட்ட பட்டதாரிகளை வாழ்த்தியும் அவர் உரையை நிறைவு செய்தார்”. இவ்விழாவில் மொத்தம் 4,992 மாணவர்கள் பட்டம் பெற்றனர். இதில் 3,631 இளநிலை பட்டதாரிகள், 1,155 முதுகலை, 2 எம்.பில் மற்றும் 204 முனைவர் பட்டதாரிகள்…
Read More
‘தணல்’ திரைப்படம் தற்போது திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது!

‘தணல்’ திரைப்படம் தற்போது திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது!

தவிர்க்க முடியாத காரணங்களால் தற்காலிகமாக வெளியீடு தள்ளிவைக்கப்பட்ட 'தணல்' திரைப்படம் தற்போது திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது! 'தணல்' படத்தின் ஆழமான உணர்வுகள், நடிகர்களின் திறமையான நடிப்பு மற்றும் வலுவான கதைசொல்லல் ஆகியவற்றிற்காகத் தொடர்ந்து ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடம் இருந்து நேர்மறையான பாராட்டுகள் கிடைத்து வருகிறது. இந்தப் பாராட்டுகள் மூலம் திரையரங்குகளில் 'தணல்' படம் பார்க்க வரும் பார்வையாளர்கள் எண்ணிக்கையும் திரையரங்குகளில் அதிகரித்துள்ளது. 'தணல்' குறித்து முன்னணி எக்ஸ்பிட்டர் பகிர்ந்து கொண்டதாவது, "'தணல்' படம் திரையிடப்பட்ட நாள் முதலே பார்வையாளர்கள் எண்ணிக்கை திரையரங்குகளில் அதிகமாகத் தொடங்கியது. விறுவிறுப்பாகவும் அதேசமயம் மனதைத் தொடும் கதையாகவும் இருப்பதாக படம் பார்த்த பார்வையாளர்கள் சொல்கின்றனர். கூட்டம் அதிகரித்து வருவதால் அதற்கேற்றார் போல கூடுதல் காட்சிகள் திரையிட திட்டமிட்டுள்ளோம்" என்றார். ரசிகர்களின் அன்புக்கும் ஆதரவுக்கும் படத்தின் தயாரிப்பாளர்கள் நன்றி தெரிவித்துள்ளனர். தயாரிப்பு அணியில் இருந்து செய்தி தொடர்பாளர் பேசியதாவது, "'தணல்' படத்திற்கு நிறைய அன்பு கிடைத்து வருவது…
Read More
குமார சம்பவம் — திரைப்பட விமர்சனம்!

குமார சம்பவம் — திரைப்பட விமர்சனம்!

பாலாஜி வேணுகோபால் இயக்கத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் குமரன் தியாகராஜன் நாயகனாக அறிமுகமாகி இருக்கும்  படம் 'குமார சம்பவம்' . குமரன் தங்கராஜன், துணை வேடங்களில் பாயல் ராதாகிருஷ்ண ஷெனாய், ஜி.எம். குமார், பால சரவணன், இளங்கோ குமரவேல், மற்றும் லிவிங்ஸ்டன் ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். ராஜாமணி படத்திற்கு இசையமைத்துள்ளார். வரும் செப்டம்பர் 12 ஆம் தேதி திரையரங்கில் வெளியாக இருக்கும் இப்படத்தின் விமர்சனத்தை இங்கு பார்க்கலாம் . இயக்குநராகும் லட்சியத்தில் பல தயாரிப்பாளர்களுக்கு கதை சொல்லி வருகிறார் நாயகன் குமரன். சின்ன வயதில் தனது தந்தையை இழக்கும் குமரன், தாத்தா , அம்மா , தங்கையுடன் வசித்து வருகிறார். அவரது வீட்டின் மேல்மாடியில் குடியிருந்து வருகிறார் சமூக செயற்பாட்டாளரான வரதராஜன் (இளங்கோ குமரவேல்). பல்வேறு சமூக பிரச்சனைகளுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்து தொடர்ந்து போராடி வருகிறார் வரதா. அதற்கான பின்விளைவுகளை நாயகன் குமரன் எதிர்கொள்கிறார். இதனால் போராட்டக்காரர்கள் மேல் குமரனுக்கு ஒரு…
Read More
“‘தணல்’ படத்தில் உணர்வுப்பூர்வமான கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி “- நடிகை லாவண்யா திரிபாதி!

“‘தணல்’ படத்தில் உணர்வுப்பூர்வமான கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி “- நடிகை லாவண்யா திரிபாதி!

தனது வசீகரத்தாலும் திறமையான நடிப்பாலும் தென்னிந்திய பார்வையாளர்களை வசீகரித்துள்ளார் நடிகை லாவண்யா திரிபாதி. பத்து வருடங்களுக்கும் மேலாக தனித்துவமான கதைகள் மற்றும் கதாநாயகி அல்லது முக்கிய கதாபாத்திரங்களையும் தேர்ந்தெடுத்து நடிப்பதிலும் தமிழ் மற்றும் தெலுங்கு மொழி ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனியிடம் பிடித்திருக்கிறார் லாவண்யா. செப்டம்பர் 12, 2025 அன்று திரையரங்குகளில் வெளியாகும் நடிகர் அதர்வாவின் 'தணல்' படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். சமீபத்தில் பத்திரிக்கையாளர்களுக்கென பிரத்யேகமாக திரையிடப்பட்டு பாரட்டுக்கள் பெற்ற 'தணல்' படக்காட்சியில் இவரது நடிப்பு பலரையும் ஈர்த்துள்ளது. படம் குறித்து லாவண்யா திரிபாதி பேசியதாவது, " ரசிகர்களும் பத்திரிக்கையாளர்களும் எனது நடிப்பைப் பாராட்டுவது மகிழ்ச்சியாக உள்ளது. படத்தின் முதல் பாதியில் ரொமாண்டிக் தருணங்களுடன் இயல்பாகவும் இரண்டாம் பாதியில் தீவிரமான எமோஷனல் தருணங்களுடனும் என் கதாபாத்திரம் அமைந்திருக்கும். வழக்கமான கதாநாயகி அல்லாது படத்தில் முக்கிய கதாபாத்திரம் கொடுத்த இயக்குநர் ரவீந்திர மாதவா சாருக்கு நன்றி. மிகவும் அர்ப்பணிப்பு கொண்ட நடிகர் அதர்வா…
Read More
‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ திரைப்படத்தை பிவிஆர் சினிமாஸ் செப்டம்பர் 19ம் தேதி தமிழகமெங்கும் வெளியிடுகிறது!

‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ திரைப்படத்தை பிவிஆர் சினிமாஸ் செப்டம்பர் 19ம் தேதி தமிழகமெங்கும் வெளியிடுகிறது!

ஏ ஆர் என்டர்டெயின்மென்ட் மற்றும் டிரைடென்ட் ஆர்ட்ஸ் தயாரிப்பில் 2022ம் ஆண்டு வெளியாகி பாராட்டுகளை குவித்த 'சில நேரங்களில் சில மனிதர்கள்' திரைப்படம் திரையரங்குகளில் மீண்டும் வெளியாகிறது 'சில நேரங்களில் சில மனிதர்கள்' திரைப்படத்தை பிவிஆர் சினிமாஸ் செப்டம்பர் 19ம் தேதி தமிழகமெங்கும் வெளியிடுகிறது ஏ ஆர் என்டர்டெயின்மென்ட் மற்றும் டிரைடென்ட் ஆர்ட்ஸ் தயாரிப்பில் கடந்த 2022ம் ஆண்டு ஜனவரி மாதம் வெளியாகி கொரோனா கட்டுப்பாடுகளுக்கு இடையேயும் ஊடகங்கள் மற்றும் ரசிகர்களின் பாராட்டுகளை குவித்த திரைப்படம் 'சில நேரங்களில் சில மனிதர்கள்'. விஷால் வெங்கட் இயக்கத்தில் அசோக் செல்வன், ரியா, மணிகண்டன், அபிஹாசன், அஞ்சு குரியன், பிரவீன் ராஜா, ரித்விகா, நாசர், கே எஸ் ரவிக்குமார், இளவரசு, பானுப்பிரியா மற்றும் அனுபமா குமார் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்த இப்படம் தற்போது திரையரங்க மறு வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது. முன்னணி திரைக் குழுமமான பிவிஆர் சினிமாஸ் 'சில நேரங்களில் சில மனிதர்கள்'…
Read More
‘கார்மேனி செல்வம்’ அக்டோபர் 17 அன்று தீபாவளிக்கு திரையரங்குகளில் வெளியாகிறது!

‘கார்மேனி செல்வம்’ அக்டோபர் 17 அன்று தீபாவளிக்கு திரையரங்குகளில் வெளியாகிறது!

பாத்வே புரொடக்ஷன்ஸ் பேனரில் அருண் ரங்கராஜூலு தயாரிப்பில் ராம் சக்ரி இயக்கத்தில் சமுத்திரக்கனி, கௌதம் வாசுதேவ் மேனன் நடிப்பில் வாழ்க்கைப் பயணத்தை கலகலப்பாக சொல்லும் குடும்பத் திரைப்படம் 'கார்மேனி செல்வம்' அக்டோபர் 17 அன்று தீபாவளிக்கு திரையரங்குகளில் வெளியாகிறது பாத்வே புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் அருண் ரங்கராஜூலு தயாரிக்கும் 'கார்மேனி செல்வம்' திரைப்படத்தின் டீசர் வெளியாகி கவனத்தை ஈர்த்துள்ளது. ராம் சக்ரி இயக்கும் இப்படத்தில் சமுத்திரக்கனி மற்றும் கௌதம் வாசுதேவ் மேனன் முதன்மை வேடங்களில் நடிக்கின்றனர். அக்டோபர் 17 அன்று தீபாவளிக்கு திரையரங்குகளில் வெளியாகும்  'கார்மேனி செல்வம்' திரைப்படத்தின் டீசர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை கூட்டுகிறது. "சாந்தீ... பணம்  சம்பாதிக்க எவ்ளோ வழி இருக்கு தெரியுமா?" எனும் சமுத்திரக்கனியின் குரலோடு தொடங்கும் டீசர் பின்னர் பலரது குரல்களோடு சம்பாதிப்பதற்கான பல்வேறு வழிகளை வெளிப்படுத்தி பணம் எப்படி வாழ்வின் வெற்றியை தீர்மானிக்கிறது என்று சுவைபட எடுத்துரைக்கிறது. சீரியஸான விஷயங்களை கூட சிம்பிளாகவும் சிரிப்பு…
Read More
திரைக்கதை எழுத்தாளர் & நடிகை சாந்தி பாலச்சந்திரனின் எழுத்து லோகா Chapter 1 – சந்திராவை வரலாற்றில் பதித்தது!

திரைக்கதை எழுத்தாளர் & நடிகை சாந்தி பாலச்சந்திரனின் எழுத்து லோகா Chapter 1 – சந்திராவை வரலாற்றில் பதித்தது!

உலகளாவிய வசூலில் அதிர்வலை ஏற்படுத்தி வரும் லோகா: Chapter 1 – சந்திரா, இந்திய திரையுலகின் மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனங்களையே ஆச்சரியத்தில் ஆழ்த்தும் வகையில், மலையாளத் திரையுலகிலிருந்து எழுந்து வந்த எதிர்பாராத சூப்பர் ஹிட் எனப் போற்றப்படுகிறது. துல்கர் சல்மானின் Wayfarer Films தயாரிப்பில், கல்யாணி பிரியதர்ஷன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தும், டொமினிக் அருண் இயக்கியுள்ள இப்படம் தற்போது பெருமையுடன் ₹200 கோடி கிளப்பில் இணைந்துள்ளது. மேலும், இந்த தொடரின் அடுத்த பாகங்கள் தயாரிப்பில் உள்ளன என துல்கர் அறிவித்திருப்பது சினிமா ரசிகர்களின் ஆர்வத்தை பலமடங்கு உயர்த்தியுள்ளது. மிகுந்த பாராட்டைப் பெற்ற நடிப்புகள், செழுமையான தயாரிப்பு மதிப்புகள், தொழில்நுட்பத் திறமைகள் ஆகியவை இதனை உயர்த்திக் கொண்டிருந்தாலும், இந்த படைப்பின் ஆழத்தை அதிகரித்த முக்கிய அம்சமாகும் – நடிகையுமான சாந்தி பாலச்சந்திரன் இணை எழுத்தாளராக பங்களித்திருப்பது. தமிழ் ரசிகர்கள் அவரை ஸ்வீட் காரம் காஃபி தொடரின் நிவி கதாபாத்திரம் மூலமாக அறிவார்கள். ஒரு…
Read More
“‘தணல்’ படத்தில் உணர்வுப்பூர்வமான கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி “- நடிகை லாவண்யா திரிபாதி!

“‘தணல்’ படத்தில் உணர்வுப்பூர்வமான கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி “- நடிகை லாவண்யா திரிபாதி!

தனது வசீகரத்தாலும் திறமையான நடிப்பாலும் தென்னிந்திய பார்வையாளர்களை வசீகரித்துள்ளார் நடிகை லாவண்யா திரிபாதி. பத்து வருடங்களுக்கும் மேலாக தனித்துவமான கதைகள் மற்றும் கதாநாயகி அல்லாது முக்கிய கதாபாத்திரங்களையும் தேர்ந்தெடுத்து நடிப்பதிலும் தமிழ் மற்றும் தெலுங்கு மொழி ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனியிடம் பிடித்திருக்கிறார் லாவண்யா. செப்டம்பர் 12, 2025 அன்று திரையரங்குகளில் வெளியாகும் நடிகர் அதர்வாவின் 'தணல்' படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். சமீபத்தில் பத்திரிக்கையாளர்களுக்கென பிரத்யேகமாக திரையிடப்பட்டு பாரட்டுகள் பெற்ற 'தணல்' படக்காட்சியில் இவரது நடிப்பு பலரையும் ஈர்த்துள்ளது. படம் குறித்து லாவண்யா திரிபாதி பேசியதாவது, " ரசிகர்களும் பத்திரிக்கையாளர்களும் எனது நடிப்பைப் பாராட்டுவது மகிழ்ச்சியாக உள்ளது. படத்தின் முதல் பாதியில் ரொமாண்டிக் தருணங்களுடன் இயல்பாகவும் இரண்டாம் பாதியில் தீவிரமான எமோஷனல் தருணங்களுடனும் என் கதாபாத்திரம் அமைந்திருக்கும். வழக்கமான கதாநாயகி அல்லாது படத்தில் முக்கிய கதாபாத்திரம் கொடுத்த இயக்குநர் ரவீந்திர மாதவா சாருக்கு நன்றி. மிகவும் அர்ப்பணிப்பு கொண்ட நடிகர் அதர்வா…
Read More
“என் சினிமா கேரியரில் தணல் படம்  எப்போது வெளியாகும் என நான் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறேன் என்கிறார்..நடிகர் அஸ்வின் காகுமனு!

“என் சினிமா கேரியரில் தணல் படம் எப்போது வெளியாகும் என நான் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறேன் என்கிறார்..நடிகர் அஸ்வின் காகுமனு!

நடிகர் அதர்வா முரளியின் 'தணல்' படத்தில் நடிகர் அஸ்வின் காகுமனு வில்லனாக நடித்திருப்பது கோலிவுட் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது. செப்டம்பர் 12, 2025 அன்று உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது 'தணல்' திரைப்படம். படம் வெளியாவதற்கு முன்பே பத்திரிகையாளர்களுக்கு என பிரத்யேகமாகத் திரையிடப்பட்ட ஷோவில் படம் பாராட்டுகளை குவித்தது. படத்தின் ஒவ்வொரு ஃபிரேமிலும் பவர்ஃபுல் நடிப்பில் மிரட்டிய அஸ்வின் நடிப்பும் பாராட்டுகள் பெறத் தவறவில்லை. படம் குறித்து நடிகர் அஸ்வின் காகுமனு பகிந்திருப்பதாவது, "என்னை இந்தக் கதாபாத்திரத்திற்குத் தேர்ந்தெடுத்த இயக்குநர் ரவீந்திர மாதவா சாருக்கே அனைத்து பாராட்டும் தகும்" என்றார்.இதுவரை மென்மையான, ரொமாண்டிக் ஹீரோ கதாபாத்திரத்தில் அஸ்வினை பார்த்த ரசிகர்களுக்கு 'தணல்' படத்தில் அவரது வில்லன் கதாபாத்திரம் நிச்சயம் ஆச்சரியமாக இருக்கும். தனது கதாபாத்திரம் பற்றி அஸ்வின் பேசியதாவது, "இயக்குநர் ரவீந்திர மாதவா படத்தின் கதையை என்னிடம் கூறியபோது வில்லனாக நடிக்கப் போகிறோம் என்றே தோன்றவில்லை. கதாநாயகனுக்கு இணையாக ஆண்டி-ஹீரோ கதாபாத்திரத்தில் நடிக்கிறோம்…
Read More