ஜிஎஸ்டி ரிட்டர்னை 6 மாதங்கள் தாக்கல் செய்யாவிட்டால் இ-வே பில் தயார் தடை ? மத்திய அரசு திட்டம் !

ஜிஎஸ்டி ரிட்டர்னை ஒருவர் தொடர்ந்து 6 மாதங்கள் தாக்கல் செய்யாவிட்டால், அவர் இ-வே பில் தயார் செய்வதில் இருந்து தடை செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.இதற்காக ஜிஎஸ்டிஎன் தனது வலைதளத்தில் புதிய அம்சத்தைச் சேர்க்கும் பணிகளைச் செய்து வருகிறது. இதன்படி 6 மாதங்களாக ஒருவர் ஜிஎஸ்டி ரிட்டன் தாக்கல் செய்யாவிட்டால், தானாகவே இ-வே பில் உருவாக்கத்தில் இருந்து அவர் தடை செய்யப்படுவார்.

1இது குறித்து ஜிஎஸ்டி வரி அதிகாரி ஒருவர் கூறுகையில், “ நாங்கள் உருவாக்கும் புதிய முறை மூலம் ஜிஎஸ்டி ரிட்டன் தாக்கல் செய்யத் தகுதியுடைய ஒருவர், தொடர்ந்து இரு சுற்றுகள்(இரு 3 மாதங்கள்) ஜிஎஸ்டி ரிட்டன் தாக்கல் செய்யாமல் இருந்தால், அவர்கள் குறிப்பிடப்பட்டு, அவர்கள் இ-வே பில் உருவாக்குவதில் இருந்து தடை செய்யப்படுவார்கள். இதன் மூலம், ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு செய்வதும் தடுக்கப்படும்” எனத் தெரிவித்தார்.நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான மாதங்களில் மட்டும் 3 ஆயிரத்து 626 ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் ரூ.15 278 கோடி வரி ஏய்ப்பு செய்யப்பட்டுள்ளது.

இ-வே பில் முறை என்பது கடந்த 2018-ம் ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி நடைமுறைக்கு வந்துள்ளது. இதன்படி ரூ.50 ஆயிரத்துக்கு மேல் மதிப்புப்புள்ள பொருட்களை ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்துக்கோ அல்லது மற்றொரு இடத்துக்கோ கொண்டு சென்றால் இ-வே பில் உருவாக்கிப் பதிவு செய்வது கட்டாயமாகும். ஜிஎஸ்டி ஆய்வாளர் சோதனையின் போது இ-வே பில் காட்டுவது அவசியமாகும்.மேலும் இ-வே பில் முறையையும், தேசிய நெடுஞ்சாலைத் துறையின் பாஸ்ட் டாக் முறையையும் இணைக்கவும் வருவாய் துறை முயற்சிகள் செய்து வருகிறது. இதன் மூலம் சுங்கச்சாலையை கடந்து செல்லும் சரக்கு வாகனங்களில் இ-வே பில் இருக்கிறதா என்பதை பாஸ்ட் டாக் மூலம் கண்டறிய முடியும்.

Related posts:

"என் சினிமா கேரியரில் தணல் படம் எப்போது வெளியாகும் என நான் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறேன் என்கிறார்..நடிகர் அஸ்வின் காகுமனு!

விஜய் சேதுபதி கதை சொல்லும் 'கடைசீல பிரியாணி'...

பம்பர்--விமர்சனம் !

சிடிசி குழுமத்திலிருந்து ரூ. 215 கோடி நிதியை திரட்டியிருக்கும் டாக்டர்.அகர்வால்ஸ் கண் மருத்துவமனைகள் குழுமம் .!

கவிஞர் திரு. முத்துலிங்கத்தின் பாராட்டு விழாவில் திரைப் பிரபலங்கள் திரளாக பங்கேற்பு

மின்மினி’ படத்தின் டிரெய்லர் ம்ற்றும் இசை வெளியீட்டு விழா!

நடிகர் ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள '13' படத்திற்கு டப்பிங் பேசி தொடங்கிவைத்தார்!

தமிழ் சினிமா வரலாற்றில் முதல் முறையாக டைம் லூப் அடிப்படையிலான திரைப்படமாக ஜாங்கோ தயாராகி வருகிறது !