20
Dec
மூடநம்பிக்கைகளுக்கும், மோசடிகளுக்கும் அறிவியல் வளர்ச்சியைப் பயன்படுத்துவது முன்னெப்போதும்விட மிக பிரம்மாண்டமாக விரிவடைந்தே வருகிறது. இதன் ஒரு பகுதியாகத்தான் அண்மைக்காலமாக வெளிநாட்டுப் பெண்களின் பெயரில் முகநூல் வழியாக நட்பினை உருவாக்கி பணம் மோசடி செய்யும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. முகநூலில் அதிக நேரம் செலவிடுவோர் இதில் சிக்கிக் கொள்கிறார்கள்.முன்பெல்லாம் ஆபாசமான படங்களும், உரையாடல்களும்தான் நம்மை மோசடிக்குள் சிக்க வைக்கும். இப்போதெல்லாம் அப்படியல்ல. நாகரிகமான பொருளாதார மோசடிகள் பெருகிவிட்டன. நடுத்தர வர்க்கத்தினரும் இதில் பரிதாபமாக வீழ்ந்துள்ளனர்.தொடக்கத்தில் முகநூலில் வெளிநாட்டுப் பெண் ஒருவர் நட்பு அழைப்பினை அனுப்புவார். வழக்கமாக நட்பு அழைப்பினை ஏற்கும்போது அவரது நட்பு பட்டியலில் நமக்குத் தெரிந்தவர்கள் யாரும் இருக்கிறார்களா எனப் பார்ப்போம். அவ்வாறாக ஓரிருவர் இருப்பர். உடனே அந்த அழைப்பை ஏற்றுக் கொண்டால் மிகச் சில நிமிடங்களில் மெசஞ்சரில் வருவார்கள். "தங்களது புரோபைல் பார்த்தேன், மிகவும் நம்பிக்கையானவராகத் தெரிகிறீர்கள், தங்களிடம் பேச வேண்டும், வாட்ஸ்ஆப் எண் இருக்கிறதா?' என்பார். வாட்ஸ்ஆப் எண் கொடுத்துவிட்டால்…
