முத்ரா திட்டத்தில் 11,000 கோடி வாராக்கடன்? ரிசர்வ் வங்கி எச்சரிக்கை ?

சிறு, குறு நிறுவனங்களின் வளர்ச்சிக்காகக் கொண்டுவரப்பட்ட முத்ரா கடன் திட்டத்தில் வழங்கப்பட்ட கடன்களீல் ரூ. 11,000 கோடி வாராக்கடனாகியிருப்பதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

2015 ஏப்ரலில் அறிமுகப்படுத்த பிரதான் மந்திரி முத்ரா யோஜனாதிட்டம் சிறு, குறு தொழில் முனைவோர்களின் முன்னேற்றத்துக்காகக் கடன் வழங்கும் திட்டமாகும். இந்தத் திட்டத்தில் ரூ. 50 ஆயிரம் முதல்- 10 லட்சம் வரை கடன் வழங்கப்படுகின்றன.

2017-18 ஆண்டறிக்கையில் குறிப்பிட்டபடி இந்தத் திட்டத்தின் கீழ் ரூ. 2.46 லட்சம் கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. இதில் 40 சதவீதம் பெண்களுக்குக் கடன் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட கடனில்இதுவரை ரூ. 11,000 கோடி வாராக்கடன் இருப்பது தெரியவந்துள்ளது. இதைக் குறிப்பிட்டுள்ள ரிசர்வ்வங்கி இந்தத் திட்டத்தின்கீழ் வழங்கப்பட்ட கடன்களை மேலாண்மை செய்வதில் மிகுந்தகவனம் அவசியம். இல்லையெனில் பெருமளவிலான கடன்கள் வாராக்கடன்களாக வாய்ப்புள்ளது என்று எச்சரித்துள்ளது.

Related posts:

'அசம்பாவிதம் நடந்தால் தான் அரசு விழிக்குமா ? சென்னை உயர் நீதிமன்றம் சாட்டையடி கேள்வி ?

துபாயை சேர்ந்த மென்பொருள் நிபுணர் வெங்கடேஷ் சங்கர் முன்னணி திரைப்பட பாடகர்களுடன் இணைந்து சென்னையில் நடத்தும் புதுமையான இசை நிகழ்ச்சி RRR (ரீல் ரியல் ர...

*இந்திய ரேசிங் ஜாம்பவான்கள் ஒன்றிணைந்த தருணம்!*

நடிகர் துல்கர் சல்மானின் 'காந்தா' படத்தில் இருந்து 'பனிமலரே...' முதல் பாடல் வெளியாகியுள்ளது!

விறுவிறுப்பான அரசியல் ஆக்ஷன் கதையான 'சக்தி திருமகன் ' திரைப்படம் தற்போது ஜியோ ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகிறது!

நடிகர் அஜித் குமாரின் ‘விடாமுயற்சி’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!