அரசியல்

தமிழக அரசியலில் ஒரே வாரத்தில் 3 டிவிஸ்ட்.. பரபரக்கும் களம் !

தமிழக அரசியலில் ஒரே வாரத்தில் 3 டிவிஸ்ட்.. பரபரக்கும் களம் !

எதிர்பார்க்கவில்லை.. உச்சகட்ட திருப்பம்.. தமிழக அரசியலில் ஒரே வாரத்தில் 3 டிவிஸ்ட்.. பரபரக்கும் களம் தமிழக அரசியலில் ஒரே வாரத்தில் அடுத்தடுத்து மூன்று திருப்பங்கள் ஏற்பட்டு உள்ளது. தேர்தல் நெருங்க நெருங்க தமிழக அரசியல் களம் மிகவும் பரபரப்பாக சென்று கொண்டு இருக்கிறது. சட்டசபை தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதம் கூட இல்லாத நிலையில் தமிழக அரசியல் களம் சூடாக சென்று கொண்டு இருக்கிறது. அதிலும் திமுக, அதிமுக இரண்டு கட்சிகளும் கிட்டத்தட்ட கூட்டணி பேச்சுவார்த்தைகளை முடித்துவிட்ட நிலையில் அடுத்து என்ன நடக்கும் என்று எதிர்பார்த்து எழுந்துள்ளது. இன்று திமுகவின் திருச்சி கூட்டம், அமித் ஷாவின் தமிழ்நாடு வருகை என்று தமிழக அரசியல் பரபரப்பாக காணப்படுகிறது. இப்படிப்பட்ட நிலையில் கடந்த ஒரு வாரத்தில் நடந்த 3 சம்பவங்கள் தேர்தல் நேரத்தில் முடிவையே மாற்றும் காரணிகளாகி உருவெடுத்துள்ளது. தமிழக அரசியலில் ஏற்பட்ட மிகப்பெரிய முதல் டிவிஸ்ட் என்றால் அது சசிகலாவின் அரசியல் விலகல்தான்.…
Read More
தமிழ்நாட்டில் தேசிய கட்சிகள் வெற்றி பெற முடியாமல் போவதற்கு என்ன காரணம்.

தமிழ்நாட்டில் தேசிய கட்சிகள் வெற்றி பெற முடியாமல் போவதற்கு என்ன காரணம்.

தமிழ்நாட்டில் தேசிய கட்சிகள் வெற்றி பெற முடியாமல் போவதற்கு என்ன காரணம். அகில இந்திய கட்சிகள் தமிழகத் தேர்தலில் தனித்துபோட்டியிட முடியாதபடி விளிம்பு நிலையில் வைத்திருக்கும் மாநிலம் ஒன்று இந்தியாவில் இருக்கும்னா அது தமிழ்நாடுதான். தமிழ்நாட்டின் அண்டை மாநிலங்களான ஆந்திர பிரதேசம், தெலங்கானாவில் கூட மாநிலக் கட்சிகள் உண்டு. ஆனால், அரசியல் என்பது அங்கெல்லாம் முற்றிலும் மாநில க் கட்சிகளின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடவில்லை. தனி நாடு கேட்டு ஆயுதப் போராட்டம் நடந்த காஷ்மீர், பஞ்சாப், அசாம் போன்றவற்றிலும் கூட மாநில கட்சிகளே முழுமையாக அரசியலைக் கட்டுப்படுத்தும் நிலை ஏற்படவில்லை. மக்கள் ஜனநாயக கட்சி, தேசிய மாநாட்டுக் கட்சி ஆகிய இரண்டு மாநிலக் கட்சிகள் ஜம்மு காஷ்மீரில் இரண்டு துருவங்களில் இருந்தாலும், பாஜக, காங்கிரஸ் ஆகிய தேசியக் கட்சிகள் இன்னும் அங்கு குறிப்பிடத்தகுந்த செல்வாக்கோடு இருந்து வருது. மாணவர் இயக்கத்தின் மூலம் உதயமான, தேசிய இன உரிமைகளை அடிப்படையாக கொண்ட அசாம் கண…
Read More
அமித்ஷா நெருக்கடி எதிரொலி- முதல் பட்டியலில் நிலக்கோட்டையைத் தக்கவைத்த எடப்பாடி

அமித்ஷா நெருக்கடி எதிரொலி- முதல் பட்டியலில் நிலக்கோட்டையைத் தக்கவைத்த எடப்பாடி

  தமிழக சட்டமன்றத் தேர்தல் வருகிற 6ஆம் தேதி நடைபெற இருப்பதால் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சியினர் கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு குறித்து ஆலோசனை செய்து வருகின்றனர். அதேவேளையில் இன்னும் ஒரு சில நாட்களில் வேட்பாளர் பட்டியலை அறிவிக்கவும் இருக்கிறார்கள். இந்த நிலையில், சட்டமன்றத் தேர்தலுக்கான முதல் வேட்பாளர் பட்டியலை, அதிமுக வெளியிட்டுள்ளது. அதில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி எடப்பாடியிலும், துணை முதல்வர் ஓ.பி.எஸ். போடியிலும் போட்டியிடுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் கட்ட வேட்பாளர் பட்டியலில், இவர்களுடன் 6 பேரை அறிவித்துள்ளது. அதில், நிலக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் அதிமுக சிட்டிங் எம்.எல்.ஏ.வான தேன்மொழி பெயரும் இடம்பெற்று இருப்பதைக் கண்டு அதிமுகவினர் உள்பட கூட்டணிக் கட்சியினரும் அதிர்ச்சி அடைந்துவிட்டனர் இது சம்பந்தமாக அதிமுக கூட்டணிக் கட்சியினர் சிலரிடம் கேட்டபோது, "இந்த நிலக் கோட்டை தொகுதி அதிமுகவுக்குச் சாதகமான தொகுதிதான். இருந்தாலும், முன்னாள் முதல்வர் ஜெ' இருந்தபோது கூட்டணிக் கட்சியான புதிய தமிழகம் கட்சிக்கு இத்தொகுதியை…
Read More
நீண்ட இழுபறிக்கு பின் அதிமுக கூட்டணியில் பாஜவுக்கு 20 சீட் ஒதுக்கீடு !

நீண்ட இழுபறிக்கு பின் அதிமுக கூட்டணியில் பாஜவுக்கு 20 சீட் ஒதுக்கீடு !

நீண்ட இழுபறிக்கு பின் அதிமுக கூட்டணியில் பாஜவுக்கு 20 சீட் ஒதுக்கீடு: சென்னையில் 5 தொகுதி உள்பட கேட்ட தொகுதிகள் கிடைத்தது: சென்னை: நீண்ட இழுபறிக்கு பின்னர் அதிமுக-பாஜகூட்டணி பேச்சு வார்த்தையில் நேற்று உடன்பாடு எட்டப்பட்டது. பாஜவுக்கு 20 சட்டமன்றத் தொகுதிகள் ஒதுக்கப்படுவதாக இரு தரப்பு தலைவர்களும் நள்ளிரவில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். கன்னியாகுமரியில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பாஜ போட்டியிடும் என்றும் உடன்படிக்கையில் கையெழுத்தாகியுள்ளது. தமிழக சட்டப்பேரவைக்கு ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. வேட்பு மனு தாக்கலுக்கு இன்னும் 6 நாட்களே உள்ளன. இதனால் அரசியல் கட்சிகள் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்கீடு செய்யும் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளன. அதிமுகவில் 60 சீட்டுகள் வேண்டும் என்று பாஜ முதலில் கூறியது. ஆனால் அதிமுக தரப்பில் 15 தொகுதிகள் தருவதாக கூறினர். அப்போதுதான் எதிர்பாராதவிதமாக அமமுகவை கூட்டணியில் சேர்க்க வேண்டும் என்று பாஜ தலைமை விரும்பியது. கடந்த மக்களவை தேர்தலின் போது…
Read More
சசிகலா அரசியலை விட்டு ஒதுங்குகிறாரா ? அல்லது நிரந்தரமா விலகுகிறாரா ?

சசிகலா அரசியலை விட்டு ஒதுங்குகிறாரா ? அல்லது நிரந்தரமா விலகுகிறாரா ?

சசிகலா அரசியலை விட்டு ஒதுங்குகிறாரா அல்லது நிரந்தரமா விலகுவாரா ? கடந்த 3ந்தேதி சசிகலா அரசியலை விட்டு ஒதுங்கி இருக்கப் போவதாக அறிக்கை வெளியிட்டார். நிரந்தரமா விலகலை? அப்போ ஒதுங்கிறது பதுங்குறதுக்குத்தான்.பதுங்கிறது பாயறதுக்குத்தான். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உற்ற தோழியாக இருந்து வந்த வந்தவர் சசிகலா. ஒரு சாதாரண வீட்டுப் பெண் என்ற நிலையிலிருந்து, தமிழகத்தின் சக்திவாய்ந்த இரும்புப் பெண்மணியின் தோழி மற்றும் அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் என்று வகித்த பொறுப்பு வரை, சசிகலாவின் வாழ்க்கைப் பயணம் நம்ப முடியாத பல திருப்பங்களை சந்தித்துள்ளது. 1984-ல் ஜெயலலிதாவுக்கு அறிமுகமான சசிகலா, மெள்ள மெள்ள அவரது நம்பிக்கையைப் பெற்றவராக வளர ஆரம்பித்தார். ஜெயலலிதா மாநிலங்களவை உறுப்பினராக இருந்த காலத்தில், அவரோடு டெல்லிக்கு செல்லும் அளவுக்கு நெருக்கமானார். அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பிறகு இந்த நெருக்கம் இன்னும் தீவிரமானது. 1988-லிருந்து ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்திலேயே நிரந்தரமாகத் தங்கிவிட்டார் சசிகலா.…
Read More
மீண்டும் மூன்றாவது அணி அமைக்கிறாரா வைகோ?

மீண்டும் மூன்றாவது அணி அமைக்கிறாரா வைகோ?

திமுக அணியில் கடும் நெருக்கடியில் மதிமுக : மீண்டும் மூன்றாவது அணி அமைக்கிறாரா வைகோ? திமுக தலைவர் மு.க. ஸ்டாலினைவிட பல மடங்கு திறமையும், கொள்கைத் தெளிவும் பல அரசியல் போராட்டக்களங்களைக் கண்டவருமான மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, திமுகவை நம்பியதால் இன்று கடும் நெருக்கடியில் இருக்கிறார் என்று கூறப்படுகிறது. திமுகவுடன் தொகுதி உடன்பாடு காண்பதற்காக நடைபெறும் பேச்சுக்களில் நான்கு தொகுதிகள் மட்டுமே தர முடியும் என்று திமுக அவமானப்படுத்துவதால், உள்ளுக்குள் கடும் எரிச்சலில் வைகோ இருப்பதாகக் கூறப்படுகிறது. கேட்கும் அளவு தொகுதிகள் தராவிட்டால் கூட்டணியில் இருந்து வெளியேறும் மனநிலையில் வைகோ இருப்பதாகவும் கூறப்படுகிறது. கடந்த 2006 சட்டமன்றத் தேர்தலில் 96 இடங்களை மட்டுமே வென்ற முன்னாள் முதல்வர் மு. கருணாநிதி பெரும்பான்மையே இல்லாத நிலையில் முழுமையாக 5 ஆண்டுகள் பதவியில் நீடித்தார். ஆனால், 180 இடங்களாவது வென்றால்தான் ஸ்டாலின் போன்ற தலைவர்களால் ஆட்சி செய்ய முடியும் என்று திமுகவுக்கு ஆலோசனை கூறும்…
Read More
அதிமுக கூட்டணியில் சசிகலாவை சேர்க்க வேண்டும் !

அதிமுக கூட்டணியில் சசிகலாவை சேர்க்க வேண்டும் !

சசிகலாவை கூட்டணியில் சேர்க்க அதிமுகவுக்கு திடீர் நிபந்தனை எடப்பாடி, ஓபிஎஸ்சிடம் அமித்ஷா கண்டிப்பு: தொகுதிகள் முடிவாகாததால் புதிய பரபரப்பு; அமமுகவை கழற்றிவிட திட்டம் அதிமுக கூட்டணியில் சசிகலாவை சேர்க்க வேண்டும் என்று அமித்ஷா, எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரிடம் வற்புறுத்தியதால் நள்ளிரவு வரை பேச்சுவார்த்தை நீடித்தது. எந்த உடன்பாடும் ஏற்படாததால் அமித்ஷா டெல்லி புறப்பட்டு சென்றார். அப்போது நான் சொல்வதை கேளுங்கள் என்று கூறி தலைவர்களை மிரட்டும் தொணியில் பேசியதாகவும், இதனால் இரு தலைவர்களும் ஆடிப்போய்விட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால், அதிமுக - பாஜ இடையே தொகுதி பங்கீட்டை இறுதி செய்வதில் இழுபறி நீடிக்கிறது. அதேநேரத்தில் அமமுகவை கழட்டி விடவும் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6ம்தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் வருகிற 12ம் தேதி தொடங்குகிறது. இதனால், அதிமுக தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டை இறுதி செய்யும் பணியை…
Read More
வன்னியர் உள்ஒதுக்கீடு தி.மு.கவுக்கு பாதிப்பா?

வன்னியர் உள்ஒதுக்கீடு தி.மு.கவுக்கு பாதிப்பா?

 வன்னியர்களுக்கு 10.5 சதவிகித உள்ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை சட்டமன்றத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று (பிப்ரவரி 26) தாக்கல் செய்தார். தென்மண்டலத்தில் அ.தி.மு.கவின் வாக்குவங்கி பாதிக்கப்படும் சூழலில், வடமாவட்டங்களில் முதல்வரின் அறிவிப்பை தாக்கத்தை ஏற்படுத்துமா? தமிழ்நாட்டில் வன்னியர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 20 சதவிகித தனி இடஒதுக்கீடு வழங்கக் கோரி, பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் சில வன்னிய சமுதாய அமைப்புகள் தொடர் போராட்டங்களை முன்னெடுத்தன. இதையொட்டி பா.ம.க இளைஞரணி செயலாளர் அன்புமணி ராமதாஸ் நேரடியாக தலைமை தாங்கி போராட்டத்தை நடத்தினார். இருப்பினும் அரசிடம் இருந்து எந்தத் தகவலும் வரவில்லை. இந்நிலையில், வன்னியர்களுக்கு 10.5 சதவிகித இடஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதாவை வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 26) சட்டமன்றத்தில் முதல்வர் தாக்கல் செய்தார். `சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்புக்கு சில மணித்துளிகளுக்கு முன்னால் இப்படியொரு அறிவிப்பு வெளியாகும்' என வன்னிய சமூக பிரதிநிதிகளே எதிர்பார்க்கவில்லை. எம்.பி.சி (வி) என்ற பிரிவின்கீழ் 10.5 சதவிகித…
Read More