நீரை மிச்சமாக்கும், ‘ஷவர்’!

இனி வரும் ஆண்டுகளில் உலகெங்கும் தண்ணீருக்கு தட்டுப்பாடு வரப் போகிறது. இருந்தாலும், குளியல் அறையில், ‘ஷவர்’ பொருத்துவது தொடர்கிறது.

ஷவர்களில் தண்ணீர் கூடுதலாக வீணாகும் என்பதால், அதில், 75 சதவீத நீரை மிச்சப்படுத்தவும், முழுமையான ஷவர் குளியல் அனுபவத்தைத் தரவும், சுவீடனைச் சேர்ந்த ‘ஆல்ட்டர்ட்’ ஆராய்ச்சி செய்துள்ளது.

இது உருவாக்கியுள்ள ஷவரின் அமைப்பில், நீர்த் திவலைகள் உடல் முழுவதையும் நனைக்கத் தேவையான அகலத்தில், குளிக்கும் அனுபவத்தைத் தரும் அழுத்தத்தில் நீரைத் தெளிக்கிறது. நீரை சூடேற்றும் வசதியும் இதனுள் இருப்பதால், குறைந்த மின் செலவில் அதிக நீர்த் திவலைகள் வந்து விழும்.

வரும் ஜூன் மாதம் அறிமுகமாகவிருக்கும் ஆல்ட்டர்ட் ஷவர் கருவியை, எந்த குளியலறை ஷவர் குழாயிலும் இணைக்க முடியும் என்பதால், சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் பாராட்டை அது பெற்றுள்ளது.

Related posts:

டிவி, போன் உட்பட பல சேவைகள் ! ரிலையன்ஸ் ஜியோ ஜிகாஃபைபர் அறிமுகம் ..!

மாற்றுத்திறனாளிகளின் பிரச்சனைகளை விவாதிக்க தென்னகரயில்வே குழுக்கள் !

மத்திய அரசின் விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் ? எந்தெந்த தொழில்களுக்கு அனுமதி ?

இந்தியர்கள் ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டிய மத்திய அரசின் 7 ஆப் பயன்பாடுகள்.!

5 ஆயிரம் வகை உணவுகளை சமைக்கக் கற்றுக் கொள்ளும் மோலி ரோபோ !

டயர் எக்ஸ்போ, கேரேஜ் எக்ஸ்போ கண்காட்சி சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற்றது !

நாடு முழுவதும் 3 லட்சம் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் !

வாரா கடன் பிரச்னையால் தவிக்கும் தனியார் நிதி நிறுவனங்கள் ?