சினிமா

துல்கர் சல்மான் நடிப்பில், வெங்கி அட்லூரி இயக்கத்தில், ’லக்கி பாஸ்கர்’ படத்தில் இருந்து ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்த முதல் பாடலான ‘ஸ்ரீமதி காரு’ வெளியாகியுள்ளது!

துல்கர் சல்மான் நடிப்பில், வெங்கி அட்லூரி இயக்கத்தில், ’லக்கி பாஸ்கர்’ படத்தில் இருந்து ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்த முதல் பாடலான ‘ஸ்ரீமதி காரு’ வெளியாகியுள்ளது!

    சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் தயாரிப்பில் 'மகாநடி’, ‘சீதா ராமன்’ போன்ற படங்களின் வெற்றிக்காக நடிகர் துல்கர் சல்மான் பான் இந்திய அளவில் ரசிகர்களைப் பெற்றுள்ளார். இப்பொழுது அவருடைய நடிப்பில் ‘லக்கி பாஸ்கர்’ படம் வெளியாக உள்ளது. பிளாக்பஸ்டர் இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கியிருக்கும் இந்த படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான சித்தாரா எண்டர்டெயின்மென்ட்ஸ் பிரமாண்டமாக தயாரித்துள்ளது. சமீபத்தில் வெளியான ’லக்கி பாஸ்கர்’ படத்தின் டீசரில் துல்கர் சல்மானின் வசீகரிக்கும் தோற்றம் மற்றும் கதைக்களம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இப்போது, படத்தில் இருந்து தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்த முதல் சிங்கிள் ’கொல்லாதே’ பாடலை இன்று (ஜூன் 19) படக்குழு வெளியிட்டுள்ளது. 'கொல்லாமல் கொல்லாதே கோவக்காரி... கண்ணாலே சொன்னேனே நூறு சாரி...’ எனத் தொடங்கும் இந்தப் பாடலை பாடகர்கள் ஆனந்த் அரவிந்தாக்ஷன் மற்றும் ஸ்வேதா மோகன் இருவரும் அழகாகப் பாடியுள்ளனர். பாடல் வசீகரிக்கும் வயலின்…
Read More
இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில், அதர்வா-நிமிஷா சஜயன் நடிக்கும் ‘டிஎன்ஏ’ படத்தின் டப்பிங் பணிகள் துவங்கியது!

இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில், அதர்வா-நிமிஷா சஜயன் நடிக்கும் ‘டிஎன்ஏ’ படத்தின் டப்பிங் பணிகள் துவங்கியது!

ஒலிம்பியா மூவிஸ் எஸ் அம்பேத்குமார் வழங்கும், இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில், அதர்வா-நிமிஷா சஜயன் நடிக்கும் 'டிஎன்ஏ' படத்தின் டப்பிங் பணிகள் துவங்கியது! ஒலிம்பியா மூவீஸ், மக்களை மகிழ்விக்கும் வகையிலான பல பொழுதுபோக்கு திரைப்படங்களை வெளியிட்டு வருகிறது. இது அனைத்து தரப்பு பார்வையாளர்களிடமிருந்தும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. 'டாடா' படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றியைத் தொடர்ந்து, எஸ். அம்பேத்குமார் தலைமையிலான இந்தத் தயாரிப்பு நிறுவனம் அடுத்தடுத்து பல படங்களை வெளியிட திட்டமிட்டு வருகிறது. அவற்றில் ஒன்றுதான் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில், அதர்வா முரளி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள மிகவும் எதிர்பார்க்கப்படும் படமான ‘டிஎன்ஏ’. இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், டப்பிங் பணிகளை படக்குழு தொடங்கியுள்ளது. தனித்துவமான திரைக்கதைகள் மற்றும் கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுப்பதற்கு பெயர் பெற்றவரான அதர்வா முரளியின் இந்தப் படமும் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதர்வா முரளி பாக்ஸ் ஆஃபிஸ் கதாநாயகனாகவும் தயாரிப்பாளர்களுக்கு பிடித்த நடிகராகவும் இருக்கிறார். நிமிஷா…
Read More
இப்போது த்ரில்லர் வகை படங்கள் தமிழில் அதிகமாக வந்து கொண்டிருக்கின்றன. விதார்த் நடிப்பில், ஷாஜி சலீம் இயக்கத் தில், ‘லாந்தர்’ என்ற திரில்லர் படம் வெளியாகி உள்ளது. கோவை மாநகரில் உதவி காவல் ஆணையராக இருக்கும் அரவிந்த் (விதார்த்) மிக நேர்மையான அதிகாரி. கோவை மாநகரில் ஒரு நாள் இரவில் கருப்பு ரெயின் கோட் போட்ட ஒரு சைக்கோ மனிதன் ஒரு ஆயுதத்தை பயன்படுத்தி கண்ணில் படுவோரை எல்லாம் அடித்து கொலை செய்து வருகிறான். இவனைப் பிடிக்கும் முயற்சியில் சில காவல் அதிகாரிகளும் படுகாயம் அடைகிறார்கள். ஒருவனை சந்தேகப்பட்டு விரட்டி செல்கிறது காவல் துறை. விரட்டிச் செல்லும்போது அந்த நபர் காவல் துறையினரின் வாகனம் மோதி இறந்து விடுகிறார். ஆனால், இவர் கொலைகாரன் இல்லை என்று தெரிய வருகிறது. பட்டுக்கோட்டையில் கொலைகாரனுக்கு ஒரு லீட் கிடைக்கிறது. இந்த லீடை வைத்து அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது காவல் துறை. அந்த கொலையாளியை பிடிக்க…
Read More
’மகாராஜா’ படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா!

’மகாராஜா’ படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா!

பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் 'தி ரூட்' கைக்கோத்து தயாரித்திருக்கும் திரைப்படம் ‘மகாராஜா’. நடிகர் விஜய்சேதுபதியின் ஐம்பதாவது படமாக வெளியாகி இருக்கும் இந்தப் படத்தை ‘குரங்கு பொம்மை’ புகழ் நித்திலன் சாமிநாதன் எழுதி இயக்கியுள்ளார். இப்படம் கடந்த ஜூன் 14, 2024 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. இதற்காக, நன்றி தெரிவிக்கும் விழா இன்று நடைபெற்றது. பேஷன் ஸ்டுடியோஸ் இணைத் தயாரிப்பாளர் கமல் நயன் பேசியதாவது, “எங்கள் நாயகனை இந்த ஐம்பதாவது படம் மூலம் அரியணை ஏற்றி மகாராஜாவாக அமர வைத்த அனைத்து ரசிகர்களுக்கும் நன்றி”. எஸ் பிக்சர்ஸ் ஸ்ரீனிவாசன், “எங்களுக்கும் பேஷன் ஸ்டுடியோஸூக்கும் நல்ல உறவு உள்ளது. கொரோனா சமயத்தில் பல படங்களை எடுத்து வைத்து நாங்கள் காத்திருந்தோம். கொரோனாவுக்குப் பிறகு ரசிகர்கள் திரையரங்குகளுக்கு வருவார்களா என்ற சந்தேகத்தில் பல படங்களை ஓடிடிக்கு கொடுத்து வந்தோம். ஆனால், பேஷன் ஸ்டுடியோஸூக்கு ‘மகாராஜா’…
Read More
‘ஹரா’ திரைப்படம் மூலம் ஆக்ஷன் ஹீரோவாக மாறி வசூலில் அதகளம் செய்யும் மோகன் !

‘ஹரா’ திரைப்படம் மூலம் ஆக்ஷன் ஹீரோவாக மாறி வசூலில் அதகளம் செய்யும் மோகன் !

விஜய் ஸ்ரீ ஜி இயக்கத்தில் கோயம்புத்தூர் எஸ் பி மோகன் ராஜ் தயாரிப்பில் எல்மா பிக்சர்ஸ் என் எத்தில்ராஜ் வெளியீட்டில் 'வெள்ளி விழா நாயகன்' மோகன் நடிப்பில் ஜூன் 7 அன்று உலகெங்கும் வெளியான 'ஹரா', திரையரங்குகளில் தொடர்ந்து வசூல் சாதனை படைத்து வருகிறது. திரைக்கு வந்து இரண்டு வாரங்களுக்கு பிறகும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் 'ஹரா', அனைத்து தரப்பு ரசிகர்களை குறிப்பாக பெண்கள் மற்றும் இளம் தலைமுறையினரை ஈர்த்து வருகிறது. இதன் மூலம் இன்றும் அவர் 'வெள்ளி விழா நாயகன்' தான் என்பதை மோகன் நிரூபித்துள்ளார். தொடக்கத்தில் தமிழகத்தில் 150-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியான 'ஹரா', ரசிகர்களின் வரவேற்பை தொடர்ந்து இன்னும் அதிகமான திரைகளில் திரையிடப்பட்டது. இது தவிர மலேசியா, ஐரோப்பா, லண்டன் மற்றும் இலங்கை உள்ளிட்ட பகுதிகளிலும் இத்திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. பதினான்கு வருடங்களுக்கு பிறகு அதிரடி ஆக்ஷன் வேடத்தில் நடிகர் மோகன் கொடுத்துள்ள ரீ-என்ட்ரியை ரசிகர்கள்…
Read More
ரயில் –  விமர்சனம்!

ரயில் – விமர்சனம்!

- இயக்குனர் பாஸ்கர் சக்தி இயக்கத்தில் குங்குமராஜ் முத்துசாமி, வைரமலா, ரமேஷ் வைத்யா என பலர் நடித்திருக்கும் திரைப்படம் ரயில். இப்படத்தினை தயாரிப்பாளர் எம் வெடியப்பன் தயாரிக்க, இசையமைப்பாளர் எஸ் ஜே ஜனனி இசையமைத்துள்ளார். .எலெக்ட்ரீஷியனும் குடிப்பழக்கமுமான முத்தையா, வடக்கில் இருந்து புலம் பெயர்ந்தவர்கள் தனது வேலையை எடுத்துக்கொள்வதால், தனது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக உணர்கிறார். அவரை திட்டிக்கிட்டே இருக்கும் அவரது மனைவியும், பதிலுக்கு அவர் வெறுக்கும் சுனில் என்ற பக்கத்து வீட்டுக்காரரும் அவருக்கு கிடைத்துள்ளனர். தணிக்கைக் குழுவால் நிராகரிக்கப்பட்ட "வடக்கன்" என்று முதலில் பெயரிடப்பட்ட படம் ரயில், என்று பெயர் மாறுகிறது. மதுரைக்கு அருகில் உள்ள ஒரு கிராமத்தில் முத்தையாவை (குங்குமராஜ்) பின்தொடர்கிறது கதை. ஆரம்பக் காட்சியே அவன் புதர்களுக்கு நடுவே கடந்து போனதைக் காட்டுகிறது, ஆனால் அவனது நண்பன் வரதன் (ரமேஷ் வைத்யா) வந்து அவனைத் தங்கள் அன்றாட குடிப்பழக்கத்திற்கு இழுக்கிறான். முத்தையாவின் மனைவி செல்லம்மா (வைரமாலா) ஒவ்வொரு நாளும்…
Read More
எலெக்ட்ரீஷியனும் குடிப்பழக்கமுமான முத்தையா, வடக்கில் இருந்து புலம் பெயர்ந்தவர்கள் தனது வேலையை எடுத்துக்கொள்வதால், தனது உலகம் நழுவுவதை உணர்கிறார். அவரை இகழ்ந்த ஒரு மனைவியும், பதிலுக்கு அவர் வெறுக்கும் சுனில் என்ற பக்கத்து வீட்டுக்காரரும் அவருக்கு கிடைத்துள்ளனர். ரெயிலின் மையமாக மூன்று வடிவங்களுக்கு இடையில் விளையாடும் இயக்கவியல் என்ன. ரயில் திரைப்பட விமர்சனம்: தணிக்கைக் குழுவால் நிராகரிக்கப்பட்ட "வடகன்" என்று முதலில் பெயரிடப்பட்ட ரயில், மதுரைக்கு அருகில் உள்ள ஒரு கிராமத்தில் முத்தையாவை (குங்குமராஜ்) பின்தொடர்கிறது. ஆரம்பக் காட்சியே அவன் புதர்களுக்கு நடுவே கடந்து போனதைக் காட்டுகிறது, ஆனால் கடிகார வேலைகளைப் போலவே, அவனது நண்பன் வரதன் (ரமேஷ் வைத்யா) வந்து அவனைத் தங்கள் அன்றாட குடிப்பழக்கத்திற்கு இழுக்கிறான். முத்தையாவின் மனைவி செல்லம்மா (வைரமாலா) ஒவ்வொரு நாளும் வீணாக வீட்டுக்கு வரும்போது அவனை மேலும் மேலும் வெறுக்கிறாள். இவர்களுக்கு பக்கத்து வீட்டுக்காரர் சுனில், மும்பையைச் சேர்ந்த ஒரு தொழிலாளி, அவர் நல்லவர்,…
Read More
4th edition of “Timeless Legacy” of Rotary Club of Madras launched CSR Donors honoured and thanked !

4th edition of “Timeless Legacy” of Rotary Club of Madras launched CSR Donors honoured and thanked !

4tn edition of “Timeless Legacy” of Rotary Club of Madras launched CSR Donors honoured and thanked At a well attended meeting of Rotarians, Corporate Honchos and Hon.Consuls, The 3rd Oldest Club in India, which is in its 95th year, today launched its 4th edition of its History Book titled The Timeless Legacy. The Chief Guest Mr Arun Ram, Resident Editor, Times of India did the honours. In his address Mr Arun Ram said, the book is a remarkable chronicle of the RCM’s journey over 9 decades in its endeavour to serve the community. He said the book brought out in…
Read More
”சிவபெருமானின் உத்தரவினால் தான் ‘கண்ணப்பா’ திரைப்படத்தை எடுத்தோம்” – டீசர் வெளியீட்டு விழாவில் டாக்டர் மோகன் பாபு பேச்சு. !

”சிவபெருமானின் உத்தரவினால் தான் ‘கண்ணப்பா’ திரைப்படத்தை எடுத்தோம்” – டீசர் வெளியீட்டு விழாவில் டாக்டர் மோகன் பாபு பேச்சு. !

”‘கண்ணப்பா’ காவியம் உருவாவதற்கு காரணம் சிவபெருமான் தான்” - டீசர் வெளியீட்டு விழாவில் டாக்டர்.மோகன் பாபு நெகிழ்ச்சி விஷ்ணு மஞ்சுவின் கனவுத் திட்டமான 'கண்ணப்பா' படத்தை ஏவிஏ என்டர்டெயின்மென்ட்ஸ் மற்றும் 24 பிரேம்ஸ் பேக்டரி நிறுவனங்கள் இணைந்து பிரமாண்டமாக தயாரித்து வருகிறது. இந்த படத்தை பிரபல நடிகரும், தயாரிப்பாளருமான டாக்டர்.மோகன் பாபு தயாரிக்க, முகேஷ் குமார் சிங் இயக்கியுள்ளார். தெலுங்கு திரையுலகின் முன்னணி இளம் நாயகனான விஷ்ணு மஞ்சு கண்ணப்பா கதாபாத்திரத்தில் நடிக்க, மோகன் லால், பிரபாஷ், அக்‌ஷய் குமார், சரத்குமார் உள்ளிட்ட இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடிக்கும் இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா இன்று (ஜூன் 14) பிரமாண்டமாக நடைபெற்றது. நிகழ்ச்சியில் டாக்டர்.மோகன் பாபு பேசுகையில், “’கண்ணப்பா’ எந்த தலைமுறையினருக்கும் புதியவர். மகா கவி துர்ஜதி இதை எப்படி பக்தி சிரத்தையுடன் எழுதினார்?, ஸ்ரீகாளஹஸ்தியின் முக்கியத்துவம் என்ன? என்பதை இந்த படத்தில் காட்டியுள்ளோம். மிகுந்த முயற்சியில் உருவாக்கப்பட்டிருக்கும்…
Read More
ரஜினிக்கு வில்லனாக நடிக்க வேண்டும் ! ‘ புஜ்ஜி ‘ திரைப்பட நடிகர் வரதராஜன் பழனிச்சாமி!!

ரஜினிக்கு வில்லனாக நடிக்க வேண்டும் ! ‘ புஜ்ஜி ‘ திரைப்பட நடிகர் வரதராஜன் பழனிச்சாமி!!

ரஜினிக்கு வில்லனாக நடிக்க வேண்டும் ! ' புஜ்ஜி ' திரைப்பட நடிகர் வரதராஜன் பழனிச்சாமி!! அண்மையில் வெளியான 'புஜ்ஜி அட் அனுப்பட்டி' திரைப்படம் ஆட்டுக்குட்டிக்கும் குழந்தைகளுக்குமான அன்பைச் சொன்ன படம். இப்படம் விமர்சன ரீதியாகப் பெரும் வரவேற்பைப் பெற்று ஊடகங்களால் பாராட்டப்பட்டது.படத்தைப் பாராட்டியதைப் போலவே அந்தப் படத்தில் கதை மையம் கொள்ளும் கசாப்புக் கடைக்காரர் ரஹீம் பாய் கதாபாத்திரத்தில் நடித்திருந்த நடிகர் வரதராஜன் பழனிச்சாமியையும் ஊடகங்கள் குறிப்பிட்டுப் பாராட்டியிருந்தன. படம் பார்த்தவர்கள் மத்தியில் கவனம் பெற்ற நடிகர் வரதராஜன் பழனிச்சாமி ரஜினிக்கு வில்லனாக நடிக்க வேண்டும் என்பது தனது கனவு, லட்சியம், நோக்கம் என்று மனம் திறந்து வெளிப்படுத்தி உள்ளார். அறிமுக நடிகரான அவர் தனது கலைப் பயணம் பற்றி கூறுகிறார். நடிப்பு என்பது எனது பால்ய காலத்தில் இருந்து உடன் வருகிற ஒன்று என்பேன். நான் பள்ளி நாடகங்களில் நடித்து நிறைய பரிசுகள் பெற்றுள்ளேன். தொடர்ந்து மேடை நாடக…
Read More