சினிமா

சாலா விமர்சனம்!

சாலா விமர்சனம்!

சாலா படத்தை எஸ்.டி.மணிபால் எழுதி இயக்கியுள்ளார். இவர், தொடரி, கும்கி 2 மற்றும் ஹாத்தி மேரி சாதி (மும்மொழித் திட்டம்) போன்ற படங்களில் பிரபு சாலமனிடம் இணை இயக்குநராகப் பணியாற்றியவர். இத்திரைப்படத்தில் அறிமுகமான தீரன் கதாநாயகனாக சாலமன் அக்கா சாலாவாக நடித்துள்ளார், மேலும் குணா என்ற பெரியவரின் நம்பிக்கைக்குரியவராக இருக்கிறார். அறிமுக நடிகையான ரேஷ்மா, 25 வயது சமூக ஆர்வலராகவும், மதுப்பழக்கத்தை கடுமையாக எதிர்க்கும் பள்ளி ஆசிரியையாகவும் புனிதாவாக கதாநாயகியாக நடிக்கிறார். அவரது நடிப்பு யதார்த்தமாக இருக்கிறது. வில்லனாக சார்லஸ் வினோத் மற்றும் ஸ்ரீநாத், அருள் தாஸ் மற்றும் சம்பத் ராம் ஆகியோர் நடித்துள்ளனர்.ரவீந்திரநாத் குரு இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார். புவன் படத்தொகுப்பு பணிகளை கவனிக்கிறார், வைர பாலன் கலை இயக்குநராக உள்ளார். படத்தை டி.ஜி. பீப்பிள் மீடியா ஃபேக்டரியின் விஸ்வ பிரசாத், விவேக் குச்சிபோட்லா இணைந்து தயாரித்து, ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் ஆர். ரவீந்திரன் தமிழ்நாடு திரையரங்குகளில் வெளியிடுகிறார்.இரண்டு ரவுடி…
Read More
சௌத் இண்டியன் சினி, டெலிவிஷன் ஆர்ட்டிஸ்ட்ஸ் அண்டு டப்பிங் ஆர்ட்டிஸ்ட்ஸ் சங்க அலுவலக கட்டிடம் திறப்பு விழா!

சௌத் இண்டியன் சினி, டெலிவிஷன் ஆர்ட்டிஸ்ட்ஸ் அண்டு டப்பிங் ஆர்ட்டிஸ்ட்ஸ் சங்க அலுவலக கட்டிடம் திறப்பு விழா!

சௌத் இண்டியன் சினி, டெலிவிஷன் ஆர்ட்டிஸ்ட்ஸ் அண்டு டப்பிங் ஆர்ட்டிஸ்ட்ஸ் சங்க அலுவலக கட்டிடம் திறப்பு விழா சௌத் இண்டியன் சினி, டெலிவிஷன் ஆர்ட்டிஸ்ட்ஸ் அண்டு டப்பிங் ஆர்ட்டிஸ்ட்ஸ் சங்க அலுவலக கட்டிடத்தை, இன்று ஆகஸ்ட் 21 (புதன்) 2024, தலைவர் டத்தோ திரு ராதாரவி அவர்கள் திறந்து வைத்தார். FEFSI தலைவர் உயர்திரு. R.K. செல்வமணி அவர்கள் தலைமையில், FEFSI பொதுசெயலாளர் உயர்திரு. B.N. சுவாமிநாதன், FEFSI பொருளாளர் உயர்திரு. செந்தில்குமார் மற்றும் அனைத்து சங்க நிர்வாகிகள் முன்னிலையில் திறப்பு விழா நடைபெற்றது.
Read More
மதிப்புமிக்க செப்டிமியஸ் விருது விழாவில் ‘மைதான்’ திரைப்படம் வெற்றி பெற்றுள்ளது!

மதிப்புமிக்க செப்டிமியஸ் விருது விழாவில் ‘மைதான்’ திரைப்படம் வெற்றி பெற்றுள்ளது!

உலகளாவிய சினிமாவில் மிகச் சிறந்தவர்களைக் கௌரவிப்பதற்காக புகழ்பெற்ற ஆம்ஸ்டர்டாமில் செப்டிமியஸ் விருதுகள் விழா நடைபெறும். 2024 ஆம் ஆண்டிற்கான வெற்றியாளர்களை தற்போது இது அறிவித்துள்ளது. இதில், 'மைதான்' திரைப்படம் மதிப்புமிக்க சிறந்த ஆசிய திரைப்பட விருதைப் பெற்றுள்ளது. ஆகஸ்ட் 20 ஆம் தேதி, புகழ்பெற்ற துஷின்ஸ்கி திரையரங்கில் செப்டிமியஸ் விருதுகள் மிகப்பெரிய அளவில் சினிமாவின் சிறப்பைக் கொண்டாடும் வகையில் நடைபெற்றது. பெரும்பாலும் 'ஐரோப்பாவின் ஆஸ்கார் விருதுகள்' என்று குறிப்பிடப்படும் இந்த நிகழ்வில் உலகின் தலைசிறந்த திரைப்பட இயக்குநர்கள் மற்றும் நடிகர்கள் திறமைகளை கௌரவிப்பதற்காக ஒன்றிணைகிறார்கள். இந்த ஆண்டு பாஃட்டா, எம்மி மற்றும் ஆஸ்கார் போன்ற மதிப்புமிக்க விருதுகளை வென்றவர்களான ஜென்னி பீவன், டேவிட் பர்ஃபிட், கெவின் வில்மோட் மற்றும் சர் கிறிஸ்டோபர் ஹாம்ப்டன் போன்றவர்கள் கலந்து கொண்டனர். 'மைதான்' திரைப்படம் அதன் அழுத்தமான கதை மற்றும் சிறந்த இயக்கத்திற்காக 2024 ஆம் ஆண்டின் சிறந்த ஆசிய திரைப்படமாக, செப்டிமியஸ் விருதுகளைப் பெற்றுள்ளது.…
Read More
‘கோட்’ பக்கா கமர்ஷியலான திரைப்படம் தான்-இயக்குநர் வெங்கட் பிரபு !

‘கோட்’ பக்கா கமர்ஷியலான திரைப்படம் தான்-இயக்குநர் வெங்கட் பிரபு !

தளபதி விஜய் நடிக்கும் 'கோட்' படத்தின் முன்னோட்டம் திரையிடல் & பத்திரிகையாளர் சந்திப்பு.ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் இருபத்தைந்தாவது படமாக தயாராகி, தளபதி விஜய் நடிப்பில் உருவாகி, ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் 'கோட்' திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் ஆகியோரின் தயாரிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்' ('கோட்') திரைப்படத்தில் தளபதி விஜய், பிரசாந்த், பிரபுதேவா, மோகன், ஜெயராம், அஜ்மல் அமீர், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, யோகி பாபு , வைபவ், பிரேம்ஜி அமரன், யுகேந்திரன், பார்வதி நாயர், விடிவி கணேஷ், அரவிந்த் ஆகாஷ், அஜய் ராஜ், கஞ்சா கருப்பு உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் கிரியேட்டிவ் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி மற்றும் அசோசியேட் கிரியேட்டிவ் தயாரிப்பாளர் ஐஸ்வர்யா கல்பாத்தி ஆவர். சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவு…
Read More
ஹாஷ்டேக் FDFS புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், இயக்குநர் திரவ் இயக்கத்தில் திரவ்-நிகிலா- விஜய்- விபிதா நடித்துள்ள படம் ’டோபமைன் @ 2.22’!

ஹாஷ்டேக் FDFS புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், இயக்குநர் திரவ் இயக்கத்தில் திரவ்-நிகிலா- விஜய்- விபிதா நடித்துள்ள படம் ’டோபமைன் @ 2.22’!

எளிமையான, புது சிந்தைனைகளுடன் வரும் கதைகளை சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்க திரை ஆர்வலர்கள் ஆர்வமாக உள்ளனர். அதுபோன்ற கதைகள் வரும்போது நிச்சயம் அது பெரும் வெற்றி பெரும் என்பதில் சந்தேகம் இல்லை. அதுபோன்ற பல கதைகள் இந்த ஆண்டு தமிழ் சினிமாவில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. திறமையான நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் ‘டோபமைன் @ 2.22' படத்தில் இணைந்துள்ளனர். திரவ் இந்தப் படத்தை இயக்கி அதில் முதன்மை கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். படம் பற்றி இயக்குநர், நடிகர் திரவ் பகிர்ந்துகொண்டதாவது, “’டோபமைன் @ 2.22’ படத்தின் கதை வெவ்வேறு பின்னணியைச் சேர்ந்த ஏழு பேரைச் சுற்றி வருகிறது. அவர்களின் வாழ்க்கை இன்னும் நடக்காத ஒரு கொலையால் இணைக்கப்படுகிறது. அந்த சமயத்தில் அவர்களின் உணர்வுகள் மற்றும் ஒரு விஷயத்திற்கு அடிமையாதல் பற்றிய கதையாக இது நகரும். 18-20 நாட்களில் முழுப் படப்பிடிப்பையும் சென்னையின் அனைத்துப் பகுதிகளிலும் படமாக்கி முடித்துள்ளோம். ‘குட்நைட்’,…
Read More
Ongo Launches Instant National Common Mobility Card ‘Ongo Ride’ at Chennai Metro Rail Corporation to Provide Enhanced Commuting Experience !

Ongo Launches Instant National Common Mobility Card ‘Ongo Ride’ at Chennai Metro Rail Corporation to Provide Enhanced Commuting Experience !

In an industry-first, Ongo has installed unique card dispensers with UPI feature to facilitate these ready-to-use ‘Ongo Ride’ cards at select CMRL metro stations. Ongo, the digital payments platform of AGS Transact Technologies (BSE: 543451 & NSE: AGSTRA), one of India’s leading integrated omnichannel payments providers, today announced the launch of ‘Ongo Ride’, an instant National Common Mobility Card (NCMC) at Chennai Metro Rail Corporation (CMRL). Ongo has installed unique card dispensers at 13 select Chennai metro stations to facilitate instant issuance of ready-to-use ‘Ongo Ride’ cards and provide commuters an enhanced travel experience. In due course, the company will look…
Read More
மெல்போர்னில் நடந்த இந்தியன் ஃபிலிம் பெஸ்டிவலில் இயக்குநர் நித்திலன் சாமிநாதன் ‘சிறந்த இயக்குந’ருக்கான விருதை வென்றிருக்கிறார்!

மெல்போர்னில் நடந்த இந்தியன் ஃபிலிம் பெஸ்டிவலில் இயக்குநர் நித்திலன் சாமிநாதன் ‘சிறந்த இயக்குந’ருக்கான விருதை வென்றிருக்கிறார்!

நடிகர் விஜய்சேதுபதி நடிப்பில் வெளியான 'மகாராஜா' படத்திற்காக, மெல்போர்னில் நடந்த இந்திய திரைப்பட விழாவில் (Indian Film Festival) இயக்குநர் நித்திலன் சாமிநாதன்,  ‘சிறந்த இயக்குநர்’ விருதை  வென்றுள்ளார். இந்த விஷயம், படக்குழுவினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்திய திரையுலகில் மதிப்பு மிக்க இயக்குநர்களான கரண் ஜோஹர் (ராக்கி அவுர் ராணி கி பிரேம் கஹானி), விது வினோத் சோப்ரா (12த் ஃபெயில்), இம்தியாஸ் அலி (அமர் சிங் சம்கிலா), கபீர் கான் (சந்து சாம்பியன்), ராஜ்குமார் ஹிரானி (டன்கி), மற்றும் ராகுல் சதாசிவன் (பிரமயுகம்) ஆகியோரின் படங்களும் இந்தப் போட்டியில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது. இந்த விருது குறித்து நன்றி தெரிவிக்கும் விதமாக நித்திலன் சாமிநாதன் பேசியிருப்பதாவது, "மகிழ்ச்சியில் எனக்குப் பேச வார்த்தைகள் வரவில்லை. எங்களின் 'மகாராஜா' திரைப்படம் சர்வதேச அங்கீகாரத்தைப் பெறுவதைப் பார்ப்பது எங்கள் படக்குழுவுக்கு நெகிழ்ச்சியான தருணம். இந்த அற்புதமான வாய்ப்பை வழங்கிய விஜய்சேதுபதி மற்றும் பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனத்தைச்…
Read More
நடிகர் அஜித்குமாரின் ’விடாமுயற்சி’ படத்தில் இருந்து திறமையான நடிகர் நிகிலின் கதாபாத்திர போஸ்டர் வெளியாகியுள்ளது!

நடிகர் அஜித்குமாரின் ’விடாமுயற்சி’ படத்தில் இருந்து திறமையான நடிகர் நிகிலின் கதாபாத்திர போஸ்டர் வெளியாகியுள்ளது!

நடிகர் அஜித்குமாரின் 'விடாமுயற்சி' திரைப்படத்தின் திறமையான நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழு மீது ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்பு வைத்துள்ளனர். படத்தில் நடித்துள்ள நடிகர்களின் கேரக்டர் போஸ்டர்களை படக்குழு ஒவ்வொன்றாக வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா புரொடக்ஷன்ஸ் படத்தில் நடித்துள்ள நடிகர் நிகிலின் கதாபாத்திரத்தை வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைந்துள்ளது. இயக்குநர் மகிழ்திருமேனி நிகில் பற்றி கூறும்போது, “திறமையான புதிய நடிகர்கள் கிடைப்பது ஒரு இயக்குநருக்கு மகிழ்ச்சியான விஷயம். அவர்களின் திறமையை மற்றவர்கள் பாராட்டும்படியான கதாபாத்திரத்தில் பெரிய திரையில் கொண்டு வருவது எங்களுக்கும் பெருமையான தருணம்தான். ’விடாமுயற்சி’ படத்தில் இளம் திறமையான நடிகர்கள் பலர் பணிபுரிந்துள்ளனர். நிகில் தனது வாய்ப்பை இந்தப் படத்தில் சரியாகப் பயன்படுத்தியுள்ளார். நிகிலை இந்தப் படத்தில் அறிமுகப்படுத்தியதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன். இந்தக் கதாபாத்திரத்திற்காக தனது ஆன்மாவைக் கொடுத்து நடித்துள்ள நிகிலுடைய நடிப்பு நிச்சயம் பாராட்டப்படும். நான் முன்பே குறிப்பிட்டது போல், நடிகர்களை தேர்வு…
Read More
‘அந்தகன்’ பட வெற்றிக்கான நன்றி தெரிவிக்கும் விழா.!

‘அந்தகன்’ பட வெற்றிக்கான நன்றி தெரிவிக்கும் விழா.!

ஸ்டார் மூவிஸ் சார்பில் சாந்தி தியாகராஜன் தயாரிப்பில், நடிகரும், இயக்குநருமான தியாகராஜன் இயக்கத்தில், 'டாப் ஸ்டார்' பிரசாந்த் நடிப்பில் ஆகஸ்ட் ஒன்பதாம் தேதி வெளியான 'அந்தகன்' திரைப்படம் - வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது. இதற்காக ஊடகத்தினருக்கும், ரசிகர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் விழா ஒன்றினை படக்குழுவினர் ஒருங்கிணைத்திருந்தார்கள். இந்த நிகழ்வு சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. இதில் இயக்குநர் தியாகராஜன், இயக்குநரும், நடிகருமான கே. எஸ். ரவிக்குமார், 'டாப் ஸ்டார்' பிரசாந்த், நடிகைகள் சிம்ரன், வனிதா விஜயகுமார், பிரியா ஆனந்த், செம்மலர் அன்னம், நடிகர் பெசன்ட் ரவி, கலை இயக்குநர் செந்தில் ராகவன், சண்டை பயிற்சி இயக்குநர் ராம்குமார், இயக்குநர் பிரவீண் காந்த் ஆகியோர் கலந்து கொண்டனர்.‌ இயக்குநர் பிரவீண் காந்த் பேசுகையில், '''அந்தகன்' படத்தின் வெற்றிக்கு அப்படத்தின் 'கரிஸ்மா' தான் காரணம். தியாகராஜன் சார் தன்னுடைய மகனுக்காக இந்த படத்தை உருவாக்கியிருக்கிறார். தன்…
Read More
தளபதி விஜய்யின் ‘கோட்’ திரைப்படத்தின் டிரைலர் ஆகஸ்ட் 17 அன்று வெளியாகிறது, புதிய போஸ்டர் வெளியிட்ட படக்குழுவினர். !

தளபதி விஜய்யின் ‘கோட்’ திரைப்படத்தின் டிரைலர் ஆகஸ்ட் 17 அன்று வெளியாகிறது, புதிய போஸ்டர் வெளியிட்ட படக்குழுவினர். !

ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் தளபதி விஜய்யின் 'கோட்' திரைப்பட டிரைலர் ஆகஸ்ட் 17 அன்று வெளியாகும் என்று இன்று (ஆகஸ்ட் 15) அறிவித்துள்ள படக்குழுவினர், சுதந்திர தினத்தை முன்னிட்டு புதிய போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டுள்ளனர். ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெனட் நிறுவனத்தின் 25வது படைப்பாக கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ் மற்றும் கல்பாத்தி எஸ் சுரேஷ் ஆகியோரின் பிரம்மாண்ட தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த பான்-இந்தியா திரைப்படம் நாடு முழுவதும் பலத்தை எதிர்பார்ப்புகளை ஏற்கனவே ஏற்படுத்தி உள்ளது. திரைப்படம் குறித்து பேசிய ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெனட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அர்ச்சனா கல்பாத்தி, "ரசிகர்களுக்கு ஒரு மிகப்பெரிய திரை விருந்து காத்திருக்கிறது. தளபதி விஜய் மற்றும் வெங்கட் பிரபுவின் கூட்டணி அற்புதங்களை செய்து மாயாஜாலத்தை நிகழ்த்தியுள்ளது. இதன் ஒரு சிறு பகுதியான டிரைலர் வரும் சனிக்கிழமை அன்று வெளியாகிறது," என்று கூறினார். இரட்டை வேடங்களில் தளபதி விஜய் தோன்றும்…
Read More