20
Sep
சிறுவயதில் தாய் தந்தையால் அனாதையாக விடப்படும் அண்ணன் தங்கை இருவரையும் அரவணைத்து வளர்க்கிறார் கோழிப்பண்ணை வைத்திருக்கும் யோகி பாபு. அண்ணன் ஏகன் தங்கை சத்திய தேவி மீது உயிரையே வைத்திருக்கிறார். அவருக்காக எதையும் செய்ய துணிகிறார். தங்கையும் அதே போல் அண்ணன் மீது பாசத்தை பொழிகிறார். ஒரு கட்டத்தில் சத்தியதேவி ஒருவரை காதலிக்க அதை அறிந்து ஏகன் கோபப்பட்டு காதலனை வெட்ட அரிவாளுடன் துரத்துகிறார். அதன் பிறகு நடப்பது என்ன என்பது கிளைமாக்ஸ். ஒரு வரியில் இந்த கதையை கேட்பதற்கு அண்ணன் தங்கை பாசம் என்று தோன்றும் ஆனால் அதையும் தாண்டி வாழ்க்கையின் அர்த்தத்தை காட்சிக்கு காட்சி போதித்திருக்கிறார் இயக்குனர் சீனு ராமசாமி. புதுமுக ஹீரோவாக நடித்திருக்கும் ஏகன் அண்ணன் கதாபாத் திரத்தில் யார் சாயலும் இல்லாமல் நடித்து எதார்த்த அண்ணனாக மனதைக் கவர்கிறார். அதற்கு அவரது நிறமும் ஒரு பிளஸ் பாயிண்டாக அமைகிறது. கருப்பா இருக்கிறவன் பாசக்காரன் அதேசமயம் கோபக்காரன்…
