31
Aug
பெங்களூருவில் கேரளத்தைச் சேர்ந்த சன்னி, நைஜில், வேணு என்ற மூன்று இளைஞர்கள் ஒரே வீட்டில் வசிக்கிறார்கள். சன்னி (நஸ்லென்) காதல் தோல்வியைச் சந்தித்து அதிலிருந்து மீண்டு கொண்டிருக்கும் நேரத்தில் அவருடைய எதிர் வீட்டிற்குப் புதுவரவாக வருகிறார் சந்திரா (கல்யாணி ப்ரியதர்ஷன்). சந்திராவால் ஈர்க்கப்பட்டு, அவரைப் பின் தொடரவும் செய்கிறார் சன்னி. அதே நேரத்தில் சந்திராவிடம் சில அமானுஷ்ய விஷயங்கள் தெரிவதையும் கவனிக்கிறார். அந்த சமயத்தில், மனிதர்களை கடத்தி அவர்களது உடல் உறுப்புகளை திருடும் கும்பலால் பெங்களூரில் பரபரப்பு ஏற்படுகிறது. அந்த கும்பலுடன் தொடர்புடைய போலீஸ் இன்ஸ்பெக்டரான சாண்டியுடன், கல்யாணி பிரியர்தர்ஷன் மோத வேண்டிய சூழல் ஏற்படுகிறது. இதனால், கல்யாணி பிரியர்தர்ஷன் அதீத சக்திகள் கொண்ட பெண் மட்டும் அல்ல, அதற்கும் மேல...என்கிற உண்மை தெரிய வருகிறது. அவர் யார் ? அவரைப் பற்றிய உண்மை தெரிந்த பிறகு என்ன நடந்தது ? என்பதை நம் புராணக் கதைகள் கதாபாத்திரத்தை சூப்பர் ஹீரோவாக…
