சினிமா

*மார்க் ஸ்டுடியோ இந்தியா பிரைவேட் லிமிடெட் தயாரித்த ’லைஃப் இன் லூம்’ ஆவணப்படத்திற்கு 72 ஆவது தேசிய திரைப்பட விருது விழாவில் சிறந்த ஒளிப்பதிவிற்கான விருது அறிவிப்பு!*

*மார்க் ஸ்டுடியோ இந்தியா பிரைவேட் லிமிடெட் தயாரித்த ’லைஃப் இன் லூம்’ ஆவணப்படத்திற்கு 72 ஆவது தேசிய திரைப்பட விருது விழாவில் சிறந்த ஒளிப்பதிவிற்கான விருது அறிவிப்பு!*

சென்னையை தலைமையிடமாகக் கொண்டு கடந்த 15 ஆண்டுகளாக திரைப்படத் தயாரிப்பு மற்றும் ஊடகத் துறையில் சிறப்பாக செயல்பட்டு வரும் மார்க் ஸ்டுடியோ இந்தியா பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில் உருவான ‘லைஃப் இன் லூம் மூலம்’ ஆவணப்படத்திற்கு 72 ஆவது தேசிய திரைப்பட விருதில் ’நான் ஃபீச்சர் ஃபிலிம்’ (Non-Feature Film) பிரிவில்  சிறந்த ஒளிப்பதிவிற்கான தேசிய விருது  வென்று சாதனை படைத்துள்ளது. ஆவணப்படத்தின் இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான எட்மண்ட் ரான்சன் அவர்களின் சிறப்பான ஒளிப்பதிவிற்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. இப்படத்தை பிரான்சிஸ் மார்கஸ் தயாரித்துள்ளார். திரைப்படத் தயாரிப்பு, கேமரா மற்றும் திரைப்பட உபகரணங்களை வாடகைக்கு விடுதல், போஸ்ட் புரொடக்ஷன், ஸ்டுடியோ வசதிகள் மற்றும் தொழில்நுட்ப சேவைகள் என எண்டர்டெயின்மெண்ட் துறையில் நம்பிக்கைக்குரிய நிறுவனமாக கடந்த 15 ஆண்டுகளாக மார்க் ஸ்டுடியோ இந்தியா பிரைவேட் லிமிடெட் திகழ்கிறது. தயாரிப்பாளர் பிரான்சிஸ் மார்கஸ் தலைமையில், ’ஓயீ’ என்ற திரைப்படம் மற்றும் தேசிய விருது பெற்ற ’லைஃப்…
Read More
பாரதத்திலிருந்து உலகை நோக்கிய பயணத்தை தொடங்கிய நமித் மல்ஹோத்ராவின் ‘ராமாயணம்’!

பாரதத்திலிருந்து உலகை நோக்கிய பயணத்தை தொடங்கிய நமித் மல்ஹோத்ராவின் ‘ராமாயணம்’!

உலகளாவிய டிரெய்லர் வெளியீட்டிற்கு முன்னதாக, புது டெல்லியில் நடைபெற்ற பிரத்யேக நிகழ்வில் ‘ராமாயணம்’ திரைப்படத்தின் முதல் அறிமுகம்1*இந்தியாவின் மிகப்பெரிய கலாச்சார பாரம்பரியத்தை உலக அரங்கில் பகிர்ந்து கொள்ளும் முக்கியமான தருணம்.ராமாயணம் என்பது இதிகாச நூல் மட்டுமல்ல! நமது திருவிழாக்கள், வாழ்க்கை நெறிகள் மற்றும் தலைமுறை தலைமுறையாகக் கடத்தப்படும் கதைகளின் அங்கமாக இருந்து வருகிறது. இந்தியா மற்றும் உலகெங்கும் வாழும் இந்தியர்களின் அன்றாட வாழ்விலும் அது பிரதிபலிக்கிறது. இப்போது, அந்தப் பயணம் புதிய அத்தியாயத்தை தொடங்கியுள்ளது. ஜூலை 24 ஆம் தேதி உலகம் முழுவதும் டிரெய்லர் வெளியாகவுள்ளது. ஆனால், அதற்கு முன்னதாகவே, ‘ராமாயணம்’ திரைப்படத்தின் பிரத்யேக முதல் அறிமுக நிகழ்ச்சி டெல்லியில் நடைபெற்றது. ‘ராமாயணம் – பாரதத்திலிருந்து உலகம் வரை’ என்பதை உணர்த்தும் வகையில், இந்த நிகழ்வு ‘பிரதம் சங்கல்ப்’ எனும் பெயரில் நடைபெற்றது. இந்திய பாரம்பரியத்தில் ‘சங்கல்ப்’ என்பது மகத்தான முயற்சியைத் தொடங்குவதற்கு முன் மனப்பூர்வமாக மேற்கொள்ளப்படும் உறுதிமொழியாகும். அதேபோல், இந்தியாவின்…
Read More
ஆர். மாதவனின் ‘ஜி.டி.என்.’ திரைப்படம் IMDb-ன் மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்திய திரைப்படங்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது!

ஆர். மாதவனின் ‘ஜி.டி.என்.’ திரைப்படம் IMDb-ன் மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்திய திரைப்படங்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது!

ஆகஸ்ட் 7 ஆம் தேதி வெளியாக இருக்கும், இந்தியாவின் தலைசிறந்த கண்டுபிடிப்பாளரான ஜி.டி. நாயுடுவின் வாழ்க்கையை மையமாகக் கொண்ட இந்த வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படம் IMDb-ன் ரியல் டைம் தரவரிசையில் 11.1% மதிப்பெண் பெற்றுள்ளது!* நடிகர் ஆர். மாதவனின் ‘ஜி.டி.என்.’ திரைப்படம் அறிவிக்கப்பட்டதில் இருந்தே இந்தியா முழுவதும் உள்ள ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் தலைசிறந்த கண்டுபிடிப்பாளரும் தொழில்துறை முன்னோடியுமான ஜி.டி. நாயுடுவின் வாழ்க்கை மற்றும் சாதனைகளை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது இந்தத் திரைப்படம். ‘ராக்கெட்ரி’ படத்தின் தயாரிப்பாளர்களிடமிருந்து உருவாகும் இந்த திரைப்படத்தை கிருஷ்ணகுமார் ராமகுமார் எழுதி இயக்கியுள்ளார். வர்கீஸ் மூலன், விஜய் மூலன், சரிதா மாதவன் மற்றும் ஆர். மாதவன் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். இந்த திரைப்படத்தில் ஆர். மாதவனுடன் இணைந்து சத்யராஜ், ஜெயராம், பிரியாமணி, துஷாரா விஜயன், வினய் ராய், தம்பி ராமையா, நந்தலால், டிஜே அருணாசலம், ஷீலா, கருணாகரன், முரளிதரன், அதிதி பாலன், மோகன் ராமன்,…
Read More
’அருள்வான்’– திரைப்பட விமர்சனம்!

’அருள்வான்’– திரைப்பட விமர்சனம்!

எவ்வளவு பெரிய மலையில் ஆதி குடிகளாக இருந்தாலும் கல்வி அறிவு இல்லையென்றால் எளிதில் ஒரு கைநாட்டு வைக்கச் சொல்லி ஏமாற்றிவிட முடியும் என்பதில் தொடங்கி கல்வியின் முக்கியத்துவத்தையும் குறிப்பாக பெண் கல்வியின் முக்கியத்துவத்தையும் சொல்லியிருக்கும் விதமே படத்தை பாராட்ட வைக்கிறதுதொலைதூர மலை கிராமத்தைச் சேர்ந்த சிறுமி கிருத்திகா படிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார். ஆனால், அவரது வாழ்க்கை சூழல், அடிப்படை வசதிகள் இல்லாத இருப்பிடம் ஆகியவை அவரது கல்வி கனவுக்கு தடையாக இருக்கிறது. எப்படியாவது படித்தாக வேண்டும் என்பதில் ஈடுபாடு காட்டுவதோடு, தனது மலை கிராம பிள்ளைகளும் கல்வி கற்க வேண்டும் என்ற அவரது லட்சியப் பயணத்தில் மாவட்ட ஆட்சியரான அருள்நிதி இணைகிறார். அவரது முயற்சியினால் மலைவாழ் சிறுமியின் கல்வி கனவு நிறைவேறியதா? இல்லையா ? என்பதை சமூக அக்கறையோடு சொல்வதே ‘அருள்வான்’. மலைவாழ் மக்களின் மேம்பாட்டிற்காக உழைக்கும் ஒரு நேர்மையான மாவட்ட ஆட்சியர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அருள்நிதி, தனது முதிர்ச்சியான…
Read More
நடிகர் வைபவ் நடிப்பில் இருக்கை நுனியில் அமர வைக்கும் பரபர மர்டர் மிஸ்ட்ரி கதையாக உருவாகியுள்ள ‘மாறுவேஷம்’ திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது!

நடிகர் வைபவ் நடிப்பில் இருக்கை நுனியில் அமர வைக்கும் பரபர மர்டர் மிஸ்ட்ரி கதையாக உருவாகியுள்ள ‘மாறுவேஷம்’ திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது!

மர்மம் நிறைந்த மர்டர் மிஸ்ட்ரி ஜானர் கதைகளுக்கு உலகளவில் ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. சஸ்பென்ஸ், பரபரப்பு, மறைக்கப்பட்ட உண்மைகள் மற்றும் கணிக்க முடியாத திருப்பங்களுடன் பார்வையாளர்களை இந்த கதைக்களங்கள் கவர்கின்றன. இந்த வரிசையில், மர்டர் மிஸ்ட்ரி த்ரில்லரான 'மாறுவேஷம்' திரைப்படமும் இணைந்துள்ளது. ஒனிரோமான்சி பிக்சர்ஸ் பேனரின் கீழ், மங்கி மேன் கம்பெனியுடன் இணைந்து விஜய் ஆனந்த் மற்றும் நடிகர் வைபவ் தயாரித்துள்ள இந்தப் படத்தை ஸ்ரீனி எழுதி இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டரை படக்குழு அதிகாரப்பூர்வமாக இன்று (ஜூலை 14, 2026) வெளியிட்டுள்ளது. விறுவிறுப்பான திருப்பங்கள், உணர்வுப்பூர்வமான தருணங்கள் மற்றும் இருக்கையின் நுனிக்கே வரவழைக்கும் பரபரப்பான தருணங்கள் நிறைந்த குடும்பத்துடன் பார்க்கக்கூடிய துப்பறியும் திரில்லர் கதையாக உருவாகியுள்ளது. சவால் நிறைந்த வழக்குகளை தீர்ப்பதில் ஆர்வம் கொண்ட காவல்துறை அதிகாரியான திலக் என்ற கதாபாத்திரத்தில் வைபவ் நடித்துள்ளார். ஆனால், அவரது திறமைக்கு சவால் விடும் வகையிலான வழக்குகள் எதுவும் தனக்குக்…
Read More
இந்தியாவின் முதல் ஏ.ஐ. ஒருங்கிணைந்த செங்குத்து பல்கலைக்கழகமான வேல்ஸ் திருவான்மியூர் வளாகத்தை ஸ்ரீதர் வேம்பு திறந்து வைத்தார்!

இந்தியாவின் முதல் ஏ.ஐ. ஒருங்கிணைந்த செங்குத்து பல்கலைக்கழகமான வேல்ஸ் திருவான்மியூர் வளாகத்தை ஸ்ரீதர் வேம்பு திறந்து வைத்தார்!

வேல்ஸ் பல்கலைக்கழகம், திருவான்மியூரில் இந்தியாவின் முதல் செயற்கை நுண்ணறிவு (AI) ஒருங்கிணைந்த செங்குத்து பல்கலைக்கழக வளாகத்தை திறந்து வைத்து, உயர்கல்வித் துறையில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. இவ்வளாகத்தை Zoho நிறுவனத்தின் இணை நிறுவுநரும் தலைமை விஞ்ஞானியுமான பத்மஸ்ரீ ஸ்ரீதர் வேம்பு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு திறந்து வைத்தார். இந்நிகழ்வில் ஐக்கிய அரபு அமீரகத்தின் கூட்டாட்சி தேசிய கவுன்சில் உறுப்பினரும், எமிரேட்ஸ் ஏர்லைன் ஃபவுண்டேஷன் இயக்குநர் குழு உறுப்பினருமான மேதகு அஹ்மத் மீர் ஹாஷிம் அஹ்மத் கூரி கவுரவ விருந்தினராக கலந்து கொண்டார். மேலும், துபாயைச் சேர்ந்த Economic Group Holdings LLC நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் திரு. எம். எப். ராவூஃப் அலியும் சிறப்பு விருந்தினராக நிகழ்ச்சியில் பங்கேற்றார். விழாவிற்கு வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் நிறுவனர்-வேந்தர் டாக்டர் ஐசரி கே. கணேஷ் தலைமை தாங்கினார். வேல்ஸ் கல்வி நிறுவனங்களின் துணைத் தலைவர் டாக்டர் ப்ரீத்தா கணேஷ் முன்னிலை வகித்தார். சென்னையின் தகவல்…
Read More
“என்ன விலை’ திரைப்படத்தில் வழக்கறிஞர் கதாபாத்திரத்தை அணுகிய விதத்தை நீதிமன்றத்திற்கு நேரில் சென்ற அனுபவம் முழுமையாக மாற்றியது” – நடிகை நிமிஷா சஜயன்!

“என்ன விலை’ திரைப்படத்தில் வழக்கறிஞர் கதாபாத்திரத்தை அணுகிய விதத்தை நீதிமன்றத்திற்கு நேரில் சென்ற அனுபவம் முழுமையாக மாற்றியது” – நடிகை நிமிஷா சஜயன்!

                                                                         இந்திய திரையுலகின் திறமையான நடிகைகளில் ஒருவராக தன்னை தொடர்ந்து நிரூபித்து வருபவர் நிமிஷா சஜயன். வித்தியாசமான, உணர்வுப்பூர்வமான கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களின் பாராட்டுகளையும் பெற்றுள்ளார். வழக்கமான கதாபாத்திரங்களுக்குள் தன்னைச் சுருக்கிக் கொள்ளாமல், யதார்த்தமான வாழ்க்கையை பிரதிபலிக்கும் கதைகளில் நடித்து, ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் உயிர் கொடுத்தார். மலையாளம் மற்றும் தமிழ் திரையுலகில் தனித்துவமான நடிகையாக தனக்கென ஒரு இடம் பிடித்துள்ளார். அந்த வரிசையில், சஜீவ் பழூரின் கதை மற்றும் இயக்கத்தில் உருவாகியுள்ள 'என்ன விலை' திரைப்படத்தில் நிமிஷா சஜயன் வழக்கறிஞராக நடித்துள்ளார். குறிப்பாக நீதிமன்ற காட்சிகளிலும், வசன…
Read More
தறிகெட்டு போய்க் கொண்டிருக்கும் யூ டியுபர்ஸ் உலகம்!

தறிகெட்டு போய்க் கொண்டிருக்கும் யூ டியுபர்ஸ் உலகம்!

இது யூ டியூப் யுகமாக இருக்கிறது. யாரையாவது வம்புக்கு இழுப்பது, அபத்தமான கேள்விகளைக் கேட்பது, மரண வீடுகளில் மைக் பிடிப்பது என ஊடக அறத்திற்குப் புறம்பாக வேலை செய்கிறார்கள் அல்லது செய்ய ஏவிவிடப்படுகின்றனர். தங்கள் இருப்பை தக்க வைத்துக் கொள்ளத் துடிக்கும் பிரபலங்களின் பலவீனம் இவர்களுக்கு மூலதனமாகிறது; நன்மைகளும், தீமைகளும் கலந்து பெருகி வரும் இந்த ‘யூடியூபர்ஸ்’ ஊடக உலகு குறித்த ஒரு அலசல்; சென்னைச் சாலைகளிலோ, பரபரப்பான பொது இடத்திலோ இன்று நாம் அடிக்கடி காணும் ஒரு காட்சி, கையில் ஒரு மைக்கும், தோளிலோ அல்லது கைகளிலோ கனத்த கேமராக்களுடனும் அலைபாயும் கண்கள் கொண்ட இளைஞர் கூட்டம். அவர்களின் முகங்களில் தெரிவது ஊடக உலகிற்குள் நுழைந்து விட்ட பெருமிதம் மட்டுமல்ல; மாறாக, இன்றைய ஓட்டத்தை எப்படியாவது கடந்து விட வேண்டும் என்கிற எளிய மனிதர்களின் பசி கலந்த பதற்றமும் கூட. இன்றைய தமிழகத்தின் மிக முக்கியமான ஒரு சமூக-பொருளாதாரக் காயத்தின்…
Read More
*ஹர்ஷ் மற்றும் சந்தனா தம்பதியினரின் திருமண வரவேற்பு நிகழ்வை கோலாகலமாக நடத்திய லால்வானி குடும்பம்!

*ஹர்ஷ் மற்றும் சந்தனா தம்பதியினரின் திருமண வரவேற்பு நிகழ்வை கோலாகலமாக நடத்திய லால்வானி குடும்பம்!

லால்வானி குடும்பம் சார்பில் சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள ஆர்.கே. கன்வென்ஷன் சென்டரில் திங்கள்கிழமை ஹர்ஷ் மற்றும் சந்தனா ஆகியோரின் பிரம்மாண்டமான திருமண வரவேற்பு நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வில் தமிழ்த் திரைப்படத்துறை, தொழில், சட்டத் துறை என பல்வேறு துறைகளைச சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். இந்த வரவேற்பு விழாவை பிரகாஷ் சந்த் லால்வானி, சஞ்சய் லால்வானி, பிரவீன் லால்வானி, சுஷில் லால்வானி மற்றும் அவர்களது குடும்பத்தினர் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர். விழாவில் கலந்து கொண்ட விருந்தினர்களை அன்புடன் வரவேற்று, இனிய விருந்தோம்பலுடன் உபசரித்தனர். நிகழ்வில் சிறப்பு விருந்தினராக நாடாளுமன்ற உறுப்பினர் கோபிநாத் கலந்து கொண்டு, மணமக்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்தார். தமிழ் திரையுலகில் இருந்து, நடிகர்கள் ஜெயம் ரவி, பாபி சிம்ஹா, சதீஷ், ஸ்ரீகாந்த், கருணாஸ் மற்றும் கென் கருணாஸ் ஆகியோர் வரவேற்பு விழாவில் பங்கேற்று, மணமக்களை வாழ்த்தினர். மேலும்,…
Read More
Yamaha’s Performance EV Aerox E launched in India at Rs 2.81 lakh!!!

Yamaha’s Performance EV Aerox E launched in India at Rs 2.81 lakh!!!

Developed in India for premium urban mobility, the Aerox E delivers 117-km certified range and 95.5 km/h performance; sales beginning in select cities via Blue Square Showrooms.Reinforcing its commitment to sustainable mobility and building on the momentum of its expanding EV portfolio, India Yamaha Motor (IYM) Pvt. Ltd. today announced the price and availability of the Aerox E, its high-performance electric scooter developed in India for premium urban mobility. Offered in Bluish White Cocktail, the Aerox E will be available at Yamaha Blue Square Showrooms in select cities at a price of Rs 2.81 lakh (Ex-showroom, Delhi). The Aerox E…
Read More