அரசியல்

பாமகவுக்கு குறைந்த தொகுதிகள் ஏன்..?

பாமகவுக்கு குறைந்த தொகுதிகள் ஏன்..?

பாமகவுக்கு குறைந்த தொகுதிகள் ஏன்..? 35 அல்லது நாற்பது தொகுதிகள் என்றெல்லாம் பேசப்பட்ட பாமகவுக்கு 23 தொகுதியில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது! ஜெயலலிதாவிடமே 27 தொகுதிகள் வாங்கிய கட்சி பாமக. திமுகவிடம் 31 தொகுதிகள் பெற்ற கட்சி பாமக! ஆனால், தற்போது வெறும் 23 தொகுதிகளில் அது திருப்திபட வேண்டிய காரணம் என்ன..? மாற்றம்,முன்னேற்றம் அன்புமணி என்று தமிழக முதல்வராக முன்னிறுத்தப்பட்ட கட்சி தற்போது அதிமுக கூட்டணியில் சுமார் பத்து சதவிகித இடத்தை பவ்வியமாக வாங்கிக் கொண்டது எப்படி? 23 தொகுதிகளை பெற்றுக் கொண்டு வெளியே வந்த அன்புமணியிடம் ஒரு பத்திரிகையாளர் மாற்றம், முன்னேற்றம், அன்புமணி இப்போதும் உள்ளதா..? என்ற போது, அவரால் பதில் பேச முடியவில்லை. காரணம், பாமக குறித்த துல்லியமான சர்வே ஒன்றை ஆர்.எஸ்.எஸ் எடுத்து பாஜக தலைமைக்கு தந்ததாம்! அதன்படி கடந்த பத்து ஆண்டுகளில் பாமகவின் வாக்கு வங்கி படிப்படியாக குறைந்து வந்துள்ளதும், வன்னிய மக்களிடையே அந்த கட்சிக்கு…
Read More
கிரண் பேடி நீக்கம் ஏன்?

கிரண் பேடி நீக்கம் ஏன்?

புதுச்சேரி துணைநிலை கவர்னர் கிரண் பேடி திடீரென நீக்கப்பட்ட விவகாரம், டில்லி அரசியல் வட்டாரங்களில் அதிகமாக அலசப்படுகிறது. ஒரு கவர்னரை மாற்றும் போது, அதுபற்றிய தகவல், அவருக்கு முதலில் தெரிவிக்கப்படுவது வழக்கம். ஆனால் கிரண் பேடி விவகாரம், மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. 'டிவி' பார்த்து தான், அவர் அந்த விஷயத்தை தெரிந்து கொண்டாராம்.புதுச்சேரியின், பா.ஜ., பார்வையாளர்களாக நியமிக்கப்பட்ட இரண்டு தலைவர்கள், சமீபத்தில் அங்கு வந்து, அரசியல் நிலவரம் குறித்து ஆராய்ந்தனர். 'கிரண் பேடியை வைத்து தான் காங்., பிரசாரம் செய்ய உள்ளது' என, கட்சி மேலிடத்திடம், இந்த குழு அறிக்கை அளித்தது. மற்றொரு பக்கம், சமீபத்தில், பா.ஜ.,வில் சேர்ந்த நமச்சிவாயம் உட்பட பலரும், 'நாராயணசாமியின் பிரசாரம், கிரண் பேடியை வைத்துதான் இருக்கும்' என, கட்சி மேலிடத்திடம் கூறினர். இதையடுத்து, பா.ஜ., வின் வெற்றி, கிரண் பேடியால் பாதிக்கக் கூடாது என்பதால், அவரை நீக்க, உள்துறை அமைச்சகத்தில் இருந்து உத்தரவு வெளியானது.இதையெல்லாம் மீறி,…
Read More
தென் மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகளுக்கான முக்கியத்துவம் தற்போது வழங்கப்படுவதில்லை ?

தென் மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகளுக்கான முக்கியத்துவம் தற்போது வழங்கப்படுவதில்லை ?

முன்னாள் முதல்வர்கள் மு.கருணாநிதி , ஜெ.ஜெயலலிதா ஆகியோரின் மறைவுக்குப் பிறகு , தென் மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகளுக்கான முக்கியத்துவம் தற்போது வழங்கப்படுவதில்லை என அந்தந்தக் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர் . தமிழக அரசியல் களத்தைப் பொருத்தவரை , அனைத்து அரசியல் கட்சிகளும் தென் மாவட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கத் தவறுவதில்லை . குறிப்பாக , கட்சி தொடங்கினாலும் , மாநாடு நடத்தினாலும் தென் மாவட்டத் தலைநகரங்களான திருச்சி , மதுரை அல்லது திருநெல்வேலி போன்ற இடங்களைத் தேர்வு செய்வதை அரசியல் கட்சிகள் வழக்கமாகக் கொண்டிருந்தன . திருநெல்வேலியில் 1998 - இல் நடைபெற்ற அதிமுக வெள்ளி விழா மாநாடு , திருச்சியில் 2006 இல் நடைபெற்ற திமுக மாநில மாநாடு ஆகியவை , அந்தந்தக் கட்சிகளுக்கு முறையே மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டப்பேரவைத் தேர்தல்களில் வெற்றி பெறுவதற்கு திருப்புமுனையை ஏற்படுத்திக் கொடுத்தன . அதேபோல் , விருதுநகரில் 2004 - இல்…
Read More
கொங்கு மண்டலத்தை பங்கு போடும் அமைச்சர்கள்: யாருக்கு எந்த தொகுதி?

கொங்கு மண்டலத்தை பங்கு போடும் அமைச்சர்கள்: யாருக்கு எந்த தொகுதி?

தேர்தல் தொடங்கிவிட்டால் தனக்கும் தனக்கு வேண்டியவர்களுக்கும் இந்த தொகுதி வேண்டும் அந்த தொகுதி வேண்டும் என மாவட்ட செயலாளர்கள், மூத்த நிர்வாகிகள் காய் நகர்த்துவார்கள். அந்த வகையில் அதிமுகவில் கொங்கு மண்டலத்தில் அதிலும் குறிப்பாக திருப்பூருக்குள் நடக்கும் மல்லுக்கட்டு குறித்து பார்க்கலாம்.அதிமுகவுக்கு கடந்த இரு சட்டமன்றத் தேர்தல்களில் வெற்றியை அள்ளிக் கொடுத்ததில் கொங்கு மண்டலத்துக்கு முக்கிய பங்கு உள்ளது. அதனால்தான் ஜெயலலிதா இந்த மண்டலத்தைச் சேர்ந்தவர்களுக்கு அமைச்சர் பதவிகளை வாரிக் கொடுத்தார். அதன் விளைவாகவே அந்த மண்டலத்தைச் சேர்ந்த எடப்பாடி பழனிசாமி தற்போது முதல்வராக பதவி வகிக்கிறார். இந்நிலையில் வரும் சட்டமன்றத் தேர்தலிலும் கொங்கு மண்டலம் தமக்கு கை கொடுக்கும் என அதிமுக சீனியர் நிர்வாகிகள், அமைச்சர்கள் கணக்கு போட்டுவருகின்றனர். கொங்கு மண்டலத்தில் சேலம் மாவட்டத்தில் உள்ள தொகுதிகளில் யாரை நிறுத்துவது என்பது முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் முடிவைப் பொறுத்து அமையும். ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை அமைச்சர் செங்கோட்டையன் எடுக்கும் முடிவுக்கு…
Read More
அதிமுகவில் சசிகலா ? திமுகவில் மு.க.அழகிரி ?

அதிமுகவில் சசிகலா ? திமுகவில் மு.க.அழகிரி ?

அதிமுகவில் சசிகலாவை 100 சதவீதம் சேர்க்க மாட்டோம் என்று முதல்வர் எடப்பாடி கே . பழனிசாமி அறிவித்து , தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டு வருகிறார் . மு.க.அழகிரியைத் திரும்பக் கட்சியில் சேர்த்துக் கொள்வது குறித்து திமுக தலைவர் எதுவுமே தெரியாததுபோல மனம் சாதிக்கிறார் . அரசியல் பாதை எவ்வளவு கரடு முரடானது என்பதற்கு இவை நல்ல எடுத்துக்காட்டுகள் . பெங்களூருவில் இருந்து சென்னை தியாகராய நகர் வரையில் சசிகலாவுக்கு தொண்டர்கள் அளித்த மக் வரவேற்பு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது . இதேபோன்ற பயணத்தையும் , வரவேற்பையும் தமிழக அரசியல் ஏற்கெனவே பார்த்திருக்கிறது . அலைக்கற்றை வழக்கில் கனிமொழி சிறையில் இருந்து  திரும்பியபோது சென்னை விமான நிலையத்தில் இருந்து சிஐடி காலனி வரை வரவேற்பு வின கொடுக்கப்பட்டது . விமான நிலையத்துக்கே கருணாநிதி நேராகச் சென்று கனிமொழியை வரவேற்று அழைத்து வந்தார் . முதல் அதிமுகவில் ஏற்பட்டுள்ள வேதியியல் மாற்றங்களில் மிகுந்த மகிழ்ச்சியோடு இருப்பவராக…
Read More
திமுக கூட்டணியில் காங்கிரஸ் நீடிக்குமா ? அல்லது கமல்ஹாசன் தலைமையில் மூன்றாவது அணி அமைக்குமா?

திமுக கூட்டணியில் காங்கிரஸ் நீடிக்குமா ? அல்லது கமல்ஹாசன் தலைமையில் மூன்றாவது அணி அமைக்குமா?

தமிழக அரசியல் களம் அதிவேகமாகச் சூடு பிடிக்கிறது . இப்போது எல்லோருடைய கவனமும் காங்கிரஸ் மீதுதான் குவிந்திருக்கிறது . புதுச்சேரியில் ஏற்பட்டிருக்கும் அரசியல் திருப்பம் , தமிழ்நாடு காங்கிரஸை நிலைகுலைய வைத்திருக்கிறது . -30 தொகுதியிலும் வெற்றி பெற்று புதுவையில் திமுக தலைமையில் ஆட்சி அமையும் " என்று புதுச்சேரி மாநில திமுக பொறுப்பாளர் ஜெகத்ரட்சகன் எம்.பி. பேசியிருப்பது , காங்கிரஸ்காரர்களைக் கொந்தளிக்கச் செய்திருக்கிறது . 25 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததுபோல புதுவையில் மீண்டும் திமுக தலைமையில் கூட்டணி ஆட்சி அமையும் . இதை யாராலும் தடுக்க முடியாது " என்று அந்தக் கூட்டத்தில் ஜெகத்ரட்சகன் பேசியதும் , சொர்க்க பூமியான புதுவையைப் பார்க்கும்போது எனக்கு வயிறு எரிகிறது . புதுவையில் பல ஆலைகள் மூடிக் கிடக்கின்றன . அதனால் பல குடும்பங்கள் நடுத்தெருவில் நிற்கின்றன . இங்குள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பில்லை . புதுவை மாநில வளர்ச்சிக்கு இதுவரை என்ன திட்டங்கள்…
Read More
சட்டப்பேரவை தேர்தலில் தனித்து போட்டி…! 105 தொகுதிகள் டார்கெட்..! பாமகவின் புதிய வியூகம்..!

சட்டப்பேரவை தேர்தலில் தனித்து போட்டி…! 105 தொகுதிகள் டார்கெட்..! பாமகவின் புதிய வியூகம்..!

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டு கோரிக்கையை தூக்கிப் பிடித்துவரும் நிலையில் கடந்த இரு வாரங்களாக இது குறித்து பேசாமல் இருப்பதன் பின்னணியில் உள்ள தகவல்களைப் பார்க்கலாம். கடந்த இரு வாரங்களாக இந்த விவகாரம் குறித்து ராமதாஸ் அமைதி காத்து வருகிறார். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏதும் எட்டப்பட்டுள்ளதா, அல்லது அணி மாறத் தயாராகிறார்களா என்ற ரீதியில் கேள்விகள் எழும்பிய நிலையில் இது குறித்து பாமக, அதிமுக தரப்பில் விசாரித்தால் சட்டமன்ற இடைக்கால கூட்டத்தொடர் முடியும் வரை காத்திருக்க கூறுகிறார்கள்.இந்த கூட்டத்தொடரில் தமிழக அரசு இந்த விவாகரம் தொடர்பான அறிவிப்பை வெளியிடும். அதை டாக்டர் ராமதாஸ் எதிர்பார்த்து காத்துள்ளார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி ராமதாஸை மகிழ்விக்கும் பொருட்டு அறிவிப்பை வெளியிட்டாலும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் உள்ள நூறுக்கும் மேற்பட்ட சமூக மக்களின் எதிர்ப்பை பெற வேண்டியிருக்கும் என கருதுகின்றனர் அரசியல் விமர்சகர்கள். திமுகவுடனான கூட்டணி பேச்சுவார்த்தையும் சொல்லிக் கொள்ளும்படி சாதகமாக…
Read More
சசிகலாவை சேர்ப்பதில் என்ன தவறு? கேள்வி எழுப்பிய தலைவர்கள்? சத்தியம் வாங்கிய எடப்பாடி

சசிகலாவை சேர்ப்பதில் என்ன தவறு? கேள்வி எழுப்பிய தலைவர்கள்? சத்தியம் வாங்கிய எடப்பாடி

சசிகலாவை சேர்ப்பதில் என்ன தவறு? கேள்வி எழுப்பிய தலைவர்கள்? சத்தியம் வாங்கிய எடப்பாடி சென்னைக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடி மேடையில் எடப்பாடி பழனிசாமிக்கு கை கொடுப்பார், அவரை கட்டியணைப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. அதற்கு நேர்மாறாக அவர் ஓ.பி.எஸ்.ஸின் கையையும், இ.பி.எஸ்.ஸின் கையையும் ஒரே நேரத்தில் பிடித்துத் தூக்கினார். இதனால் எடப்பாடி அதிர்ந்து போனார். இருவரும் சமம் என பிரதமரே பொதுமேடையில் அனைவருக்கும் முன்பாக உறுதிப் படுத்தினார். இதை டி.வி.க்கள் நேரலை ஒளிபரப்பு செய்து கொண்டிருந்தனர். நான்தான் முதலமைச்சர் வேட்பாளர் எனத் தமிழ்நாடு முழுவதும் எடப்பாடி சுற்றித் திரிந்து பிரச்சாரம் செய்துவருகிறார். இந்நிலையில் எடப்பாடிக்கு சமமாக பன்னீரின் கையையும் சேர்த்து பிரதமர் மோடி உயர்த்தியதால் உற்சாகமான பன்னீர், பிரதமர் கையை உயர்த்திய போது இரட்டை இலையைக் காண்பித்தவாறு நின்றார். எடப்பாடி எந்த ரியாக்ஷனும் காட்டவில்லை. பிரதமரின் இந்தச் செயலுக்கு ஒரு பின்னணி காரணம் இருக்கிறது என்கிறார்கள் அ.தி.மு.க.வை சேர்ந்தவர்கள். காலை 11.00…
Read More
திமுக கூட்டணி யாருக்கு எத்தனை சீட் ?

திமுக கூட்டணி யாருக்கு எத்தனை சீட் ?

திமுக சார்பில் கடந்த சில வாரங்களாகவே கூட்டணிக் கட்சித் தலைவர்களை ஸ்டாலினுக்கு நெருக்கமானவர்கள் சந்தித்திருக்கிறார்கள். ”உங்களுக்கு இத்தனை சீட்டுதான், தலைவர் சொல்லச் சொன்னார்” என்று அந்த நபர் கூட்டணிக் கட்சித் தலைவர்களின் முன்னே நின்று சொல்லும்போதே அந்தத் தலைவர்களுக்கு அதிர்ச்சி ஆகிவிட்டது. காரணம் அவர் சொன்ன சீட்டுகளின் எண்ணிக்கை அவ்வளவு குறைவாக இருந்தது. உதாரணமாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனை சந்தித்த ஸ்டாலினுக்கு நெருக்கமான பிரமுகர், “உங்களுக்கு வரும் தேர்தலில் இரு சீட்டுகள்தான்” என்று சொன்னதையும் அதைக் கேட்டு திருமா அதிர்ந்ததையும் குறிப்பிட்டிருந்தோம். அதுபோல மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் தாங்கள் போட்டியிட விரும்பும் 21 தொகுதிகளுக்கான பட்டியலை ஏற்கனவே திமுக தலைமையிடம் கொடுத்திருந்தார்கள். அதன் அடிப்படையில் திமுகவின் திருவண்ணாமலை மாவட்டச் செயலாளரும், ஸ்டாலினுக்கு நெருக்கமானவருமான எ.வ.வேலு மார்க்சிஸ்ட் கட்சி மாநில நிர்வாகிகளோடு பேச்சு நடத்தியிருக்கிறார். அவர் முதலில் 3 என்றுதான் ஆரம்பித்திருக்கிறார். இந்த எண்ணிக்கையெல்லாம் நாங்கள் எங்கள் மாநிலக்…
Read More
என்ன நடக்கிறது தென்மண்டல அ.தி.மு.கவில்?

என்ன நடக்கிறது தென்மண்டல அ.தி.மு.கவில்?

தமிழக சட்டமன்ற தேர்தலில் தென்மாவட்டங்களில் அ.தி.மு.கவுக்கு பெரும் சரிவு ஏற்படலாம் என்றரீதியிலான சர்வே முடிவு ஒன்று அ.தி.மு.க தலைமையிடம் அளிக்கப்பட்டுள்ளது. சசிகலா வருகை, அ.ம.மு.க தனித்துப் போட்டி போன்றவை பிரதான காரணங்களாக முன்வைக்கப்படுகின்றன. என்ன நடக்கிறது தென்மண்டல அ.தி.மு.கவில்? பெங்களூருவில் இருந்து தமிழகம் திரும்பிய சசிகலா, சென்னை தியாகராய நகரில் உள்ள இளவரசியின் மகள் வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். கொரோனா தொற்றில் இருந்து அவர் முழுமையாக குணமடைந்துவிட்டாலும் 7 நாள்கள் தனிமைப்படுத்திக் கொண்டார். இதன் காரணமாக தன்னைச் சந்திக்க விரும்பிய கட்சி நிர்வாகிகளுக்கும் அவர் அனுமதி கொடுக்கவில்லை. தி.நகரில் அவர் தங்கியுள்ள வீட்டுக்கு இரண்டு நாள்களுக்கு ஒருமுறை தினகரன் சென்று சந்தித்துப் பேசி வருகிறார். நாளிதழ்களைப் படிப்பது, தொலைக்காட்சிகளில் செய்திகளைக் கவனிப்பது என மிகுந்த மௌனத்தை சசிகலா கடைப்பிடித்து வருகிறார். அவரது ஒவ்வொரு நகர்வையும் ஆளும்கட்சி உன்னிப்பாகக் கவனித்து வருகிறது. `கொங்கு மண்டலத்திலும் வட மாவட்டங்களிலும் ஓரளவுக்கு தொகுதிகளைக் கைப்பற்றலாம் என்றாலும்,…
Read More