நடமாடும் ரயில் மருத்துவமனை !

உலகின் மிகபெரிய ரயில்வே என அழைக்கபடும் இந்திய ரயில்வே கொரோனா காரணமாக சேவையினை நிறுத்தியது நமக்கு தெரியும், அதைவிட மகா முக்கிய காரியம் ஒன்றை செய்கின்றது.ரயில் பெட்டிகளை கொரோனா மருத்துவ பெட்டிகளாக மாற்றுகின்றது, ஒரு பெட்டிக்கு 16 பேர் தங்கலாம், 20 ஆயிரம் பெட்டிகள் தயார்.ஆக இந்தியாவில் 3.2 லட்சம் பேர் ரயிலிலே சிகிச்சை பெறலாம்

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் இது நடமாடும் மருத்துவமனை, டெல்லி முதல் கன்னியாகுமரி வரை எங்கே கொரோனா அதிகமென்றாலும் இந்த ரயில் செல்லும், நோயாளிகளை ஏற்றி,
நோயாளியினை தேடி மருத்துவமனையே செல்லும் ஏற்பாடு இது, அட்டகாசமான உத்தி, கொரோனா காலத்தில் மிக சரியான ஏற்பாடு.3.2 லட்சம் பேர் வரை ரயிலிலே எங்களால் சமாளிக்க முடியும் என இந்தியா சொல்லியிருப்பதை கண்டு உலகம் கைதட்டி வரவேற்கின்றது.உலகுக்கே வழிகாட்டுகின்றது என மகிழ்ந்து சொல்கின்றது சர்வதேச ஊடகங்கள்.உலகின் மிகபெரிய ரயில்வேயினை, மிகபெரும் மக்கள் தொகை கொண்ட இத்தேசத்துக்கு எப்படி பயன்படுத்த வேண்டுமோ அப்படி பயன்படுத்துகின்றார் மோடி.