12
Oct
ஒவ்வொரு கூட்டத்திற்கு வித்தியாசமான விருந்தினர்களை அறிமுகப்படுத்தி அசத்தும் சென்னை திநகர் நகைச்சுவை மன்றத்தின் நிறுவனர் டாக்டர் சேகர்தான் இந்த முறையும் இவரை கூட்டத்தில் அறிமுகம் செய்துவைத்தார்.கையில் மைக்கை பிடித்தவர் அடுத்த முப்பது நிமிடத்திற்கு கூட்டத்தினரை விழுந்து விழுந்து சிரிக்க வைத்தார்.நடிகர் விஜய் முதல் வைகோ வரையிலான பலரது குரல்களில் பேசி அசத்தினார், கண்களை மூடிக்கொண்டு கேட்டால் சம்பந்தப்பட்டவர்களே பேசுவது போல அச்சு அசலாக இருந்தது ஆனால் அத்தனை குரல்களிலும் நகைச்சுவை கலந்து இருந்ததால் வெடிச்சிரிப்பை வரவழைத்தது.கிங்காங் படத்தை தியேட்டரில் பார்த்தவர்களுக்கு தெரியும், அதிகம் திகில் ஊட்டியது கிளைமாக்ஸ் காட்சியில் ‛கிங்காங்' என்ற மனிதகுரங்கு எழுப்பிய சப்தங்கள்தான் என்பது.அந்த சப்தங்கள் அனைத்தையும் ஒரே ஒரு மைக்கை வைத்துக்கொண்டு இவர் உருவாக்கிகாட்டி பார்வையாளர்களை மிரட்டிவிட்டார். இது போல பல்வேறு நிகழ்ச்சிகள், அவருக்கு கொடுக்கப்பட்ட முப்பது நிமிடங்களும் முப்பது வினாடிகளாக பறந்தது.மனதார அவரை பாராட்டி பேசியபோதுதான் ஒரு மனிதருக்குள் இவ்வளவு திறமையா? என வியக்கவும் வைத்தார்.அவர்தான்…
