06
Oct
சமையல் காஸ் பற்றிய கவலை, பெண்களுக்கு இனி வேண்டாம். ஞாயிற்றுக்கிழமைகளிலும், 'காஸ் சிலிண்டர் டெலிவரி' உண்டு. இது பண்டிகை காலம் என்பதால், வாடிக்கையாளர்கள் வசதிக்காக, எண்ணெய் நிறுவனங்கள், இந்த சிறப்பு ஏற்பாட்டை செய்துள்ளன. தமிழகத்தில், 'இந்தியன் ஆயில்' நிறுவனத்திற்கு, 1.34 கோடி, 'பாரத் பெட்ரோலியம்' நிறுவனத்திற்கு, 60 லட்சம், 'ஹிந்துஸ்தான் பெட்ரோலியம்' நிறுவனத்திற்கு, 40 லட்சம் என, வீட்டு காஸ் சிலிண்டர் வாடிக்கையாளர்கள் உள்ளனர். மேற்கண்ட நிறுவனங்கள் சார்பில், சிலிண்டர்களை, வீடுகளுக்கு டெலிவரி செய்ய, 1,600 காஸ் ஏஜென்சிகள் உள்ளன. எண்ணெய் நிறுவனங்களின் இணையதளம், கட்டணமில்லா தொலைபேசி எண், மொபைல் போன் செயலி, குறுந்தகவல் வாயிலாக, சிலிண்டர் முன்பதிவு செய்யலாம். பின், ஏஜென்சி ஊழியர்கள், வீடுகளுக்கு வந்து, சிலிண்டர்களை டெலிவரி செய்கின்றனர். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால், காஸ் ஏஜென்சிகள் செயல்படுவதில்லை. இதனால், ஒரு சிலிண்டர் இணைப்பு மட்டும் பெற்றுள்ளவர்களின் வீடுகளில், ஞாயிற்றுக் கிழமை சிலிண்டர் தீர்ந்து விட்டால், சமைக்க முடியாமல் சிரமப்படுகின்றனர்.…
