16
Oct
ஆக்கிரமிக்கப்பட்ட நிலம் மற்றும் அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டடத்தில் இருந்து, அண்ணாநகர் டவர் கிளப் வெளியேற்றப்பட வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை, அண்ணா நகரில், 'டவர் கிளப்' உள்ளது. மாநகராட்சியின் இடம் மற்றும் கட்டடம் என, ௩௩ ஆயிரத்து, 255 சதுர அடி, டவர் கிளப் வசம் உள்ளதால், அதில் இருந்து வெளியேறும்படி, மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை, சென்னை சிவில் நீதிமன்றமும் உறுதி செய்தது.இதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், அண்ணாநகர் டவர் கிளப் நிர்வாகம், மனு தாக்கல் செய்தது. மாநகராட்சி தரப்பில், பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.அதில், 'குத்தகைக்கு விடப்பட்ட இடம், தங்கள் வசம் இருப்பதாக, டவர் கிளப் கூறியிருப்பது பொய்யானது.டவர் கிளப்பின் தென் மேற்கு மூலையில் உள்ள கலையரங்க கட்டடம் தான், மூன்று ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விடப்பட்டு இருந்தது; 32 ஆயிரம் சதுர அடி இடம், குத்தகைக்கு விடப்படவில்லை. நீதிமன்றத்தில், பொய்யான மனு…
