19
Oct
2020 ஆம் ஆண்டுக்குள் வசதியற்ற 1,00,000 மூத்த குடிமக்களுக்கு ஆதரவுகரம் நீட்டுவதற்காக தங்களது வருடாந்திர நிதி திரட்டல் நிகழ்ச்சியை ஃபிரண்ட் என்டர்ஸ் ஃபவுண்டேஷன் நடத்தியது• சங்கீத கலாநிதி . அருணா சாய்ராம் , பல பக்கவாத்தியக் கலைஞர்களுடன் இணைந்து வழங்கிய இசை கச்சேரி இதன் மைய நிகழ்வாக இடம்பெற்றது. சென்னையை அடித்தளமாக கொண்டு இயங்கி வருகின்ற , லாபநோக்கற்ற சேவை நிறுவனமான ஃபிரண்ட் என்டர்ஸ் ஃபவுண்டேஷன் , அதன் முதலாவது வருடாந்திர நிதிதிரட்டல் நிகழ்வை மைத்ரி என்ற பெயரிலான தங்களது அமைப்பின் வழியாக மிகச்சிறப்பாக நடத்தியது . மூத்த குடிமக்களுக்கான ஆதரவுக் கரமாக செயல்படும் மைத்ரி , வயது வந்த முதியவர்கள் வாழ்க்கையை நடத்துவதில் எதிர்கொள்கின்ற கடும் சிரமங்களையும் , சவால்களையும் எளிதாக்குவதற்காக தொடங்கப்பட்டதாகும் . சென்னையிலுள்ள மியூசிக் அகாடமி வளாகத்தில் சங்கீத கலாநிதி அருணா சாய்ராம் அவர்களின் அற்புதமான இசைக் கச்சேரியின் வழியாக இந்த மாலை நேர நிகழ்வானது ,…
