16
Oct
கொத்தடிமை தொழில்முறை ஒழிப்புசட்டம் வெளிவந்து 44 ஆண்டுகள் ஆனபின்பும் இந்தக் கொடுமை இன்னமும் நம்நாட்டில் தொடர்வது வேதனைக்குரிய ஒன்றாகும் . 2016ஆம் ஆண்டு இந்திய பாராளுமன்றத்தில் மத்திய தொழில்துறை அமைச்சர் 2030 ம் ஆண்டுக்குள் ஒரு கோடியே 84 லட்சம் கொத்தடிமைகளை விடுவித்து மறுவாழ்வு அளிக்க போவதாக அறிவித்துள்ளார்.ஒரு மனிதன் கடனுக்காக அல்லது வேறு கடமைகளுக்காக குறைந்தபட்ச கூலி பெறாமலோ சுதந்திரமாக எங்கும் செல்வதற்கான உரிமையை இழந்தோ தனது வேலையை தானே தேர்ந்தெடுக்கும் உரிமையை இழந்தோ வேலை செய்ய கட்டாயப்படுத்தப்பட்டால் அவன் கொத்தடிமை தொழிலாளி என கொத்தடிமை முறை ஒழிப்புசட்டம்பிரிவு இரண்டு குறிப்பிடுகிறது . இன்டர்நேஷனல் ஜஸ்டிஸ் மிஷன் அரசுடன் இணைந்து செயலாற்றும் ஒரு சர்வதேச தொண்டு நிறுவன மாகும் . கொத்தடிமை தொழில்முறை ஒழிப்பில் தமிழக அரசு ஒரு முதன்மை மாநிலமாக செயல்பட்டு வருகிறது . கொத்தடிமை முறை ஒழிப்பிற்காக மாநில அளவில் தனி அலுவலர் , மாநில செயல்திட்டம்…
