செய்திகள்

A wonderful serenity has taken possession of my entire soul, like these sweet mornings of spring which I enjoy with my whole heart.

அண்ணாநகர் டவர் கிளப் வெளியேற சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு !

அண்ணாநகர் டவர் கிளப் வெளியேற சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு !

ஆக்கிரமிக்கப்பட்ட நிலம் மற்றும் அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டடத்தில் இருந்து, அண்ணாநகர் டவர் கிளப் வெளியேற்றப்பட வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை, அண்ணா நகரில், 'டவர் கிளப்' உள்ளது. மாநகராட்சியின் இடம் மற்றும் கட்டடம் என, ௩௩ ஆயிரத்து, 255 சதுர அடி, டவர் கிளப் வசம் உள்ளதால், அதில் இருந்து வெளியேறும்படி, மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை, சென்னை சிவில் நீதிமன்றமும் உறுதி செய்தது.இதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், அண்ணாநகர் டவர் கிளப் நிர்வாகம், மனு தாக்கல் செய்தது. மாநகராட்சி தரப்பில், பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.அதில், 'குத்தகைக்கு விடப்பட்ட இடம், தங்கள் வசம் இருப்பதாக, டவர் கிளப் கூறியிருப்பது பொய்யானது.டவர் கிளப்பின் தென் மேற்கு மூலையில் உள்ள கலையரங்க கட்டடம் தான், மூன்று ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விடப்பட்டு இருந்தது; 32 ஆயிரம் சதுர அடி இடம், குத்தகைக்கு விடப்படவில்லை. நீதிமன்றத்தில், பொய்யான மனு…
Read More
சிலிண்டர் டெலிவரி செய்ய டிப்ஸ் ? சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி ?

சிலிண்டர் டெலிவரி செய்ய டிப்ஸ் ? சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி ?

வீடுகள் மற்றும் கடைகளில் சிலிண்டர் டெலிவரி செய்யும் போது டிப்ஸ் வசூலிக்கப்படுவதைத் தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. சிலிண்டரை நேரடியாகவோ அல்லது இணையதளத்தின் மூலமாகவோ பதிவு செய்கின்றனர். சென்னை அண்ணனூரைச் சேர்ந்த மருத்துவர் லோகரங்கன் உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார், அவரது மனுவில், “வீட்டு உபயோகத்துக்கான சமையல் எரிவாயு சிலிண்டருக்கான கட்டணத்துடன், அதை விநியோகிப்பதற்கான கட்டணமும் சேர்த்து ரசீதில் குறிப்பிடப்படும் நிலையில், சிலிண்டர்களை வீடுகளுக்கு டெலிவரி செய்யும் நபர்கள், அடுக்குமாடிக் குடியிருப்புகளில் தளங்களுக்கு ஏற்ப, 20 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை கூடுதல் கட்டணம் வலுக்கட்டாயமாக வசூலிக்கின்றனர். நாடு முழுவதும் 23 கோடி வீடுகளுக்கு சமையல் எரிவாயு இணைப்புகள் உள்ளன. டெலிவரிக்கு என கூடுதல் கட்டணம் என்ற பெயரில் கோடிக்கணக்கில் பணம் வசூலிக்கப்படுகிறது. சிலிண்டர் டெலிவரி செய்யும் நபர்கள் கூடுதல் பணம் வசூலிப்பது குறித்து ஆயிரக்கணக்கானவர்கள் சிலிண்டர் நிறுவனங்களுக்குப் புகார்கள் தெரிவித்தும்,…
Read More
ஆபரண கைவினைத்திறனுக்காக வெண்கலப்பதக்கம் வென்ற சஞ்சய் பிராமானிக் – ஐ  கௌரவித்த உம்மிடி பங்காரு ஜுவல்லர்ஸ் !

ஆபரண கைவினைத்திறனுக்காக வெண்கலப்பதக்கம் வென்ற சஞ்சய் பிராமானிக் – ஐ கௌரவித்த உம்மிடி பங்காரு ஜுவல்லர்ஸ் !

தென்னிந்தியாவின் முன்னணி ஜுவல்லரி பிராண்டான உம்மிடி பங்காரு ஜுவல்லர்ஸ் , ரஷ்யாவில் நடைபெற்ற 45வது வேர்ல்டு ஸ்கில்ஸ் கஸான் 2019 நிகழ்வில் இந்தியாவின் பிரதிநிதியாக பங்கேற்று ஆபரண வடிவமைப்பு மற்றும் தயாரிப்பில் வெண்கலப் பதக்கம் வென்ற சஞ்சய் பிரமானிக் - ஐ பாராட்டி கௌரவித்திருக்கிறது . இந்த இளம் சாதனையாளரை பாராட்டுவதற்காக நடைபெற்ற நிகழ்வில் அமரேந்திரன் உம்மிடி அவர்களோடு ஜெம் & ஜுவல்லரி ஸ்கில் கவுன்சில் ஆஃப் இந்தியாவின் செயல் இயக்குனரும் , தலைமைச் செயல் அலுவலருமான ராஜிவ் கார்க் பங்கேற்றார் . இந்திய குழுவானது , உலகின் மிகப்பெரிய சர்வதேச தொழில்முறைத்திறன் போட்டி நிகழ்வான இதில் , நான்கு பதக்கங்களையும் மற்றும் 15 நேர்த்தி நிலைக்கான மெடல்களையும் வென்றிருக்கிறது . ரஷ்யாவின் இந்த ஆண்டு நடைபெற்ற இந்த சர்வதேச திறன் சவால் போட்டியில் பங்கேற்ற 63 நாடுகளில் , இந்தியா 13 - வது இடத்தைப் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது .…
Read More
இந்தியாவின் பார்வையற்ற முதல் பெண் ஐ.பி.எஸ். அதிகாரி பிரஞ்சால் பட்டீல்!

இந்தியாவின் பார்வையற்ற முதல் பெண் ஐ.பி.எஸ். அதிகாரி பிரஞ்சால் பட்டீல்!

மஹாராஷ்டிரா மாநிலம் உல்ஹாஸ் நகரை சேர்ந்தவர் பிராஞ்சால் பட்டீல்(31). இவர் தனது ஆறாவது வயதில் பார்வை குறைப்பாட்டால் பாதிக்கப்பட்டார். சிறு வயது முதலே கல்வியின் மீது தீரா தாகம் கொண்ட பிராஞ்ஜல் பாட்டில் டெல்லியில் உள்ள ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் சர்வதேச உறவு கள் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றார். அதன் பின்னர் யுபிஎஸ்சி தேர்வுகளில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். விடா முயற்சியால் 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சிவில் சர்வீஸ் தேர்வில் தனது முதல் முயற்சிலேயே 773 வது இடத்தை பிடித்தார். இதன் மூலம் அவருக்கு இந்திய ரயில்வே துறையில் பணி கிடைத்தது. எனினும் இவருக்கு பார்வை குறைபாடு இருந்ததால் அந்தப் பணி ரத்து செய்யப்பட்டது. இருப்பினும் மனம் தளராத பிராஞ்ஜல் பாட்டில் மீண்டும் 2017ஆம் ஆண்டு சிவில் சர்வீஸ் தேர்வை எழுதினார். இந்தத் தேர்வில் அவர் 124 வது இடத்தைப் பிடித்தார். இதன்மூலம் இந்திய ஆட்சிப் பணி…
Read More
420 குரல்களில் பேசும் மிமிக்ரி செந்தில் !

420 குரல்களில் பேசும் மிமிக்ரி செந்தில் !

ஒவ்வொரு கூட்டத்திற்கு வித்தியாசமான விருந்தினர்களை அறிமுகப்படுத்தி அசத்தும் சென்னை திநகர் நகைச்சுவை மன்றத்தின் நிறுவனர் டாக்டர் சேகர்தான் இந்த முறையும் இவரை கூட்டத்தில் அறிமுகம் செய்துவைத்தார்.கையில் மைக்கை பிடித்தவர் அடுத்த முப்பது நிமிடத்திற்கு கூட்டத்தினரை விழுந்து விழுந்து சிரிக்க வைத்தார்.நடிகர் விஜய் முதல் வைகோ வரையிலான பலரது குரல்களில் பேசி அசத்தினார், கண்களை மூடிக்கொண்டு கேட்டால் சம்பந்தப்பட்டவர்களே பேசுவது போல அச்சு அசலாக இருந்தது ஆனால் அத்தனை குரல்களிலும் நகைச்சுவை கலந்து இருந்ததால் வெடிச்சிரிப்பை வரவழைத்தது.கிங்காங் படத்தை தியேட்டரில் பார்த்தவர்களுக்கு தெரியும், அதிகம் திகில் ஊட்டியது கிளைமாக்ஸ் காட்சியில் ‛கிங்காங்' என்ற மனிதகுரங்கு எழுப்பிய சப்தங்கள்தான் என்பது.அந்த சப்தங்கள் அனைத்தையும் ஒரே ஒரு மைக்கை வைத்துக்கொண்டு இவர் உருவாக்கிகாட்டி பார்வையாளர்களை மிரட்டிவிட்டார். இது போல பல்வேறு நிகழ்ச்சிகள், அவருக்கு கொடுக்கப்பட்ட முப்பது நிமிடங்களும் முப்பது வினாடிகளாக பறந்தது.மனதார அவரை பாராட்டி பேசியபோதுதான் ஒரு மனிதருக்குள் இவ்வளவு திறமையா? என வியக்கவும் வைத்தார்.அவர்தான்…
Read More
அமேசான்,பிளிப்கார்ட் ஆறு நாட்களில் ரூ. 19,000 கோடி சம்பாதித்துள்ளது!.

அமேசான்,பிளிப்கார்ட் ஆறு நாட்களில் ரூ. 19,000 கோடி சம்பாதித்துள்ளது!.

ஆன்லைன் வணிக நிறுவனங்களான அமேசான் (Amazon) மற்றும் பிளிப்கார்ட் (Flipkart) நடத்திய பண்டிகை கால ஆன்லைன் சிறப்பு விற்பனையில் பல கோடிகளை சம்பாதித்துள்ளது. செப்டம்பர் 29 முதல் அக்டோபர் 4 வரை ஆறு நாட்களில் மொத்தம் மூன்று பில்லியன் டாலர் (சுமார் ரூ. 19,000 கோடி) விற்பனை மூலம் பெற்றுள்ளது. செவ்வாயன்று வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில் இதுக்குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் தீபாவளி வரை பண்டிகை காலம் என்பதால் அமேசான் மற்றும் பிளிப்கார்ட்டின் ஆன்லைன் விற்பனை ஆறு பில்லியன் டாலர்கள் (சுமார் ரூ.39,000 கோடி) வரை செல்லக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரெட்ஸீர் கன்சல்டிங்கின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி அனில் குமார் கூறுகையில், "சவாலான பொருளாதார சூழ்நிலை இருந்தபோதிலும், பண்டிகை காலத்தின் முதல் சுற்றில் 3 பில்லியன் டாலர் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது, இது ஆன்லைன் ஷாப்பிங்கை நோக்கிய நுகர்வோர்கள் வருவதைக் காட்டுகிறது எனக் கூறியுள்ளார்.
Read More
வீடுகளில் சோல்மேட்  சூரிய மின் பலகைகள் !

வீடுகளில் சோல்மேட் சூரிய மின் பலகைகள் !

வீடுகளில் சூரிய மின் பலகைகளை நிறுவும் ஆர்வம் அதிகரித்து வருகிறது. ஆனால், அதை நிறுவ குறைந்தது இரண்டு பணியாளர்கள் வரவேண்டி இருக்கிறது.தவிர, வாடகை வீட்டில், அடுக்கு மாடிகளில் குடியிருப்போருக்கு வசதியாக, சூரிய மின் பலகைகள் வடிவமைக்கப்படுவதில்லை. இந்தக் குறைகளை போக்கும் விதத்தில் வந்திருக்கிறது 'சோல்மேட்' (Solmate). ஜெர்மனியைச் சேர்ந்த ஈ.ஈ.டி., தயாரித்துள்ள சோல்மேட்டை, எவரும் தங்கள் வீட்டில் காலியிடம் அல்லது பால்கனியில் ஸ்டாண்ட் போட்டு நிறுத்தி வைத்துவிடலாம். அதிலிருந்து வரும் மின்சாரத்தை சிறிய ஒயர் மூலம் சோல்மேட் மின்கலனில் சேகரித்து வைத்துக்கொள்ளாம். சோல்மேட் மின்கலனிலிருந்து ஒரு இணைப்பை நேரடியாக வீட்டின் பிளக்கில் செருகி வைத்தால் போதும். சூரிய மின்சாரத்தில் வீட்டுக் கருவிகளை இயக்கலாம்.சோல்மேட் சூரிய மின்பலகை எடை குறைவானது என்பதாலும், எளிய ஸ்டாண்ட்டைப் போட்டு நிறுவிடலாம் என்பதாலும், நடுத்தர குடும்பங்களில் சோல்மேட்டுக்கு நிச்சயம் இடம் கிடைக்கும். Advertisement
Read More

தமிழகத்தின் ஆளுநராக தமிழிசை வந்திருக்க வேண்டும் ? சரத்குமார் ஆதங்கம் !

தமிழிசை சவுந்தரராஜன் தமிழகத்துக்கு ஆளுநராக வந்திருந்தால் இன்னும் பெருமையாக இருந்திருக்கும் என சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள நாரத கான சபாவில் அகில இந்திய தமிழ் சான்றோர் பேரவை சார்பில் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. அதில் சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன், நாடார் சங்கத் தலைவர் கரிக்கோல்ராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். விழாவில் பேசிய சரத்குமார், தமிழிசை சவுந்தரராஜன் ஒரு கடின உழைப்பாளி என்றும், அவருடைய உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரம் தான் ஆளுநர் பதவி எனவும் தெரிவித்தார். தமிழிசையின் உழைப்பு தெலுங்கானா மாநிலத்தை வளர்ச்சியடைய செய்யும் என்ற நம்பிக்கை தமக்கு உள்ளதாகவும், தமிழிசை சவுந்தரராஜன் தமிழகத்துக்கு ஆளுநராக வந்திருந்தால் இன்னும் பெருமையாக இருந்திருக்கும் எனவும் கூறினார்.சரத்குமாரை தொடர்ந்து பேசிய அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், தமிழிசை சவுந்தரராஜனுக்கு வரலாற்று…
Read More
மேகேதாட்டு அணை; மத்திய அரசு அனுமதி கூடாது! வைகோ வலியுறுத்தல்

மேகேதாட்டு அணை; மத்திய அரசு அனுமதி கூடாது! வைகோ வலியுறுத்தல்

காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டுவில் தடுப்பு அணை கட்டி முடிக்க வேண்டும் என்பதில் கர்நாடக மாநிலம் முனைப்பாக இருக்கின்றது. கர்நாடக அரசின் சார்பில் அதன் நிர்வாக நிறுவனம் மத்தியச் சுற்றுச்சூழல் அமைச்சகத்திற்கு அனுப்பி உள்ள கடிதத்தில், “காவிரியின் குறுக்கே அணை கட்டுவதற்கு தமிழகத்தின் கருத்தையோ, அனுமதியையோ பெற வேண்டிய தேவை இல்லை” என்று கூறப்பட்டுள்ளது. காவிரிநீர் பங்கீடு தொடர்பான 1892 ஆம்ஆண்டில் மைசூர் மாகாணத்திற்கும்-சென்னை மாகாணத்திற்கும் இடையே உருவான ஒப்பந்தம், 1924 இல் போடப்பட்ட ஒப்பந்தம் ஆகிய இரண்டுமே, காவிரியின் குறுக்கே அணை கட்டுவது குறித்து திட்டவட்டமான விதிமுறைகளை வகுத்து இருக்கின்றன. 1892 ஒப்பந்தத்தின்படி மைசூர் மாகாணத்தின் முதன்மையான ஆறுகள் என்று ஒரு அட்டவணை உருவாக்கப்பட்டு, அந்த 'ஏ' அட்டவணையில் காவிரி, துங்கபத்ரா, ஹகரி அல்லது வேதவதி, பெண்ணாறு அல்லது வடபினாகினி, சித்திராவதி உள்ளிட்ட 15 ஆறுகள் சேர்க்கப்பட்டன.சென்னை மாகாண அரசின் ஒப்புதல் இல்லாமல் மைசூர் அரசு மேற்கண்ட 'ஏ' அட்டவணை…
Read More
ஞாயிற்று கிழமையும் சமையல் கேஸ் சிலிண்டர் டெலிவரி உண்டு.!

ஞாயிற்று கிழமையும் சமையல் கேஸ் சிலிண்டர் டெலிவரி உண்டு.!

சமையல் காஸ் பற்றிய கவலை, பெண்களுக்கு இனி வேண்டாம். ஞாயிற்றுக்கிழமைகளிலும், 'காஸ் சிலிண்டர் டெலிவரி' உண்டு. இது பண்டிகை காலம் என்பதால், வாடிக்கையாளர்கள் வசதிக்காக, எண்ணெய் நிறுவனங்கள், இந்த சிறப்பு ஏற்பாட்டை செய்துள்ளன. தமிழகத்தில், 'இந்தியன் ஆயில்' நிறுவனத்திற்கு, 1.34 கோடி, 'பாரத் பெட்ரோலியம்' நிறுவனத்திற்கு, 60 லட்சம், 'ஹிந்துஸ்தான் பெட்ரோலியம்' நிறுவனத்திற்கு, 40 லட்சம் என, வீட்டு காஸ் சிலிண்டர் வாடிக்கையாளர்கள் உள்ளனர். மேற்கண்ட நிறுவனங்கள் சார்பில், சிலிண்டர்களை, வீடுகளுக்கு டெலிவரி செய்ய, 1,600 காஸ் ஏஜென்சிகள் உள்ளன. எண்ணெய் நிறுவனங்களின் இணையதளம், கட்டணமில்லா தொலைபேசி எண், மொபைல் போன் செயலி, குறுந்தகவல் வாயிலாக, சிலிண்டர் முன்பதிவு செய்யலாம். பின், ஏஜென்சி ஊழியர்கள், வீடுகளுக்கு வந்து, சிலிண்டர்களை டெலிவரி செய்கின்றனர். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால், காஸ் ஏஜென்சிகள் செயல்படுவதில்லை. இதனால், ஒரு சிலிண்டர் இணைப்பு மட்டும் பெற்றுள்ளவர்களின் வீடுகளில், ஞாயிற்றுக் கிழமை சிலிண்டர் தீர்ந்து விட்டால், சமைக்க முடியாமல் சிரமப்படுகின்றனர்.…
Read More