செய்திகள்

A wonderful serenity has taken possession of my entire soul, like these sweet mornings of spring which I enjoy with my whole heart.

விரைவில் விற்கப்படும் Air India பங்குகள் ?

விரைவில் விற்கப்படும் Air India பங்குகள் ?

Air India-வின் 100% பங்குகளை விற்க அடுத்த மாதம் ஆரம்ப ஏலங்களுக்கு அழைப்பு விடுக்க மோடி தலைமையிலான மத்திய அரசு முடிவு செய்துள்ளது!இதுகுறித்து தலைமை வட்டாரங்கள் தெரிவிக்கையில்., Air India பங்குகளை வாங்குவதற்கு சில நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருவதாகவும். சுமார் 58 ஆயிரம் கோடி ரூபாய் கடனில் சிக்கி தவிக்கும் Air India நிறுவனத்தை வாங்குவதற்கு பல நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்நிலையில் ஏலத்திற்கான, ஏல ஆவணங்கள் இறுதி செய்யப்படுவதாக வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன. இந்த மாத இறுதியில் அல்லது அடுத்த மாதத்திற்குள் ஏலம் விடப்படலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. e-tendering தொழில்நுட்பம் மூலம் ஏலம் விடப்படலாம் எனவும் கூறப்படுகிறது. இயக்குநர்கள் குழு அக்டோபர் 22 அன்று கூட்டப்பட உள்ள நிலையில், முன்னதாக நகர இயக்குநர் குழுவின் கூட்டத்திற்கு முன் நகராட்சி விமான போக்குவரத்து செயலாளர் பிரதீப் சிங் கரோலா மறுஆய்வுக் கூட்டத்தை மேற்கொண்டார். இதனிடையே Air India…
Read More
இடைத்தேர்தல் அமைதியாக நடைபெற்றது ! தலைமை தேர்தல் அதிகாரி !

இடைத்தேர்தல் அமைதியாக நடைபெற்றது ! தலைமை தேர்தல் அதிகாரி !

இடைத்தேர்தல் அமைதியாக நடைபெற்று முடிந்துள்ளது என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார். விக்கிரவாண்டி, நாங்குநேரி மற்றும் புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதிகளில் இடைத்தேர்தல் வாக்குப் பதிவு இன்று நடைபெற்றது .விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்றது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்றது. வாக்குப் பதிவு நிறைவு பெற்ற நிலையில் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், இடைத்தேர்தல் அமைதியாக நடைபெற்று முடிந்துள்ளது. நாங்குநேரி தொகுதியில் 66.10% வாக்குகளும், விக்கிரவாண்டி - 84.36% வாக்குகளும் பதிவாகியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
Read More
ஜான்சன் அண்டு ஜான்சன் பேபி பவுடரில், புற்றுநோயை உருவாக்கும் ஆஸ்பெஸ்டாஸ் !

ஜான்சன் அண்டு ஜான்சன் பேபி பவுடரில், புற்றுநோயை உருவாக்கும் ஆஸ்பெஸ்டாஸ் !

ஜான்சன் அண்டு ஜான்சன் பேபி பவுடரில், புற்றுநோயை உருவாக்கும் ஆஸ்பெஸ்டாஸ் கலந்திருப்பதை அமெரிக்க அரசு கண்டுபிடித்ததை அடுத்து, 33 ஆயிரம் பவுடர் டின்களை அந்நிறுவனம் திரும்ப பெற்றுள்ளது!! அமெரிக்க நிறுவனமான ஜான்சன் அண்ட் ஜான்சன் உலகம் முழுவதும் குழந்தைகளை பராமரிப்பதற்கான பொருட்களை விற்பனை செய்து வருகின்றது. 130 ஆண்டுகள் பழமையான, அமெரிக்க நிறுவனமான ஜான்சன் அண்டு ஜான்சன், அதன் பல்வேறு தயாரிப்புகள் தொடர்பாக ஏராளமான வழக்குகளை எதிர்கொண்டு வருகிறது. அதன் பேபி பவுடர் உள்ளிட்ட டால்கம் தயாரிப்புகளால் புற்றுநோய் ஏற்பட்டதாக 15 ஆயிரத்திற்கும் அதிகமான வழக்குகளை நுகர்வோர் தொடர்ந்துள்ளனர். இந்நிலையில், ஜான்சன் அண்டு ஜான்சன் பேபி பவுடரில், புற்றுநோயை உருவாக்கக்கூடிய ஆஸ்பெஸ்டாஸ் கலப்பு இருப்பதை, அமெரிக்க மத்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு கண்டறிந்துள்ளது. ஆன்லைன் மூலம் வாங்கப்பட்ட பவுடர் டின்னில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரியை ஆய்வு செய்ததில் இது கண்டறியப்பட்டுள்ளது. ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட ஒரு தொகுப்பில் ஆஸ்பெஸ்டாஸ் கலப்பு இருந்ததை…
Read More
பேட்டரியை விட 30 மடங்கு அதிகம் சேமிக்கும்  மின்கருவி ! லண்டன் விஞ்ஞானிகள் சாதனை !!

பேட்டரியை விட 30 மடங்கு அதிகம் சேமிக்கும் மின்கருவி ! லண்டன் விஞ்ஞானிகள் சாதனை !!

லண்டனில் உள்ள ராணி மேரி பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் பாலிமர் பிலிம்கள் மூலம் புதிய டைஎெலக்ட்ரிக் கெபாசிடர் கருவி ஒன்றை உருவாக்கி உள்ளனர். இதில் பாலிமர் பிலிம்கள், டை எெலக்ட்ரிக் கெபாசிடரை சுற்றி பல அடுக்குகளாக சுற்றப்பட்டு அழுத்தப்பட்டுள்ளன. தற்போது, சந்தையில் கிடைக்கும் டை எலக்ட்ரிக் கெபாசிடரை விட, பாலிபர் பிலிம்கள் சுற்றப்பட்ட டை எெலக்ட்ரிக் கெபாசிடர் 30 மடங்கு அதிகமாக மின்சாரம் சேமிக்கிறது. பேக்கரிகளில் பப்ஸ் தயாரிக்க, மாவு, பல அடுக்குகளாக மடிக்கப்பட்டு அழுத்தப்படும். அதைப் பார்த்து பாலிமர் பிலிம்களை பல அடுக்குகளாக, டைஎலக்ட்ரிக் கெபாசிடர் சுற்றி, அதிக சேமிப்பு திறனுள்ள கருவியை உருவாக்கும் ஐடியா கிடைத்ததாக ராணி மேரி மைய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்த ஆய்வு கட்டுரை ‘நேச்சர் கம்யூனிகேஷன்ஸ்’ என்ற இதழில் வெளியாகியுள்ளது. சூரிய மின்சக்தி, மற்றும் காற்றாலை மின்சக்தி போன்ற புதுப்பிக்கத்தக்க எரிசக்திகளை, குறைந்த செலவில் சேமிக்க இந்த புதிய கண்டுபிடிப்பு வழிவகுத்துள்ளது. T
Read More
என்னை கிண்டல் செய்தவர்களுக்கு ஆளுநராக பதிலடி கொடுக்கிறேன் !ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்பேச்சு!

என்னை கிண்டல் செய்தவர்களுக்கு ஆளுநராக பதிலடி கொடுக்கிறேன் !ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்பேச்சு!

என்னை கிண்டல் செய்தவர்களுக்கு ஆளுநராக மேடையில் நின்று பதிலடி கொடுக்கிறேன் என்று தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார். கோவை மாவட்டம் சரவணம்பட்டியில் உள்ள பி.பி.ஜி. கல்வி நிறுவனங்களின் நிறுவனர் தின விழா நடைபெற்றது. குழுமத் தலைவர் டாக்டர் எல்.பி.தங்கவேலு வரவேற்றார். மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி, தேசிய கயறு வாரியத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், கே.எம்.சி.ஹெச். மருத்துவக் குழுமத் தலைவர் டாக்டர் நல்லா ஜி.பழனிசாமி, பி.பி.ஜி. குழும அறங்காவலர் அக்சய் தங்கவேலு, தாளாளர் சாந்தி தங்கவேலு உள்ளிட்டோர் பேசினர்.சிறப்பு விருந்தினராக தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பங்கேற்று, கல்வி, கலை, விளையாட்டுகளில் சிறந்த மாணவ, மாணவிகளுக்குப் பரிசுகளும், பல்துறை சாதனையாளர்கள், டாக்டர்களுக்கு விருதுகளும் வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது: தெலங்கானா ஆளுநராக பொறுப்பேற்றாலும், தமிழ் மண்ணுக்கு நன்றியுடையவளாக இருப்பேன். இரு மாநிலங்களுக்கிடையே பாலமாக செயல்படுவேன். மேதகு ஆளுநர் என்று அழைக்கப்படுவதைக் காட்டிலும், சகோதரி என்று அழைக்கப்படுவதையே விரும்புகிறேன். கோவையுடன் எனக்கு நெருங்கிய…
Read More
வசதியற்ற 1,00,000 மூத்த குடிமக்களுக்கு ஆதரவுகரம் ! ஃபிரண்ட் என்டர்ஸ் ஃபவுண்டேஷனின் நிதி திரட்டல் நிகழ்ச்சி !

வசதியற்ற 1,00,000 மூத்த குடிமக்களுக்கு ஆதரவுகரம் ! ஃபிரண்ட் என்டர்ஸ் ஃபவுண்டேஷனின் நிதி திரட்டல் நிகழ்ச்சி !

2020 ஆம் ஆண்டுக்குள் வசதியற்ற 1,00,000 மூத்த குடிமக்களுக்கு ஆதரவுகரம் நீட்டுவதற்காக தங்களது வருடாந்திர நிதி திரட்டல் நிகழ்ச்சியை ஃபிரண்ட் என்டர்ஸ் ஃபவுண்டேஷன் நடத்தியது• சங்கீத கலாநிதி . அருணா சாய்ராம் , பல பக்கவாத்தியக் கலைஞர்களுடன் இணைந்து வழங்கிய இசை கச்சேரி இதன் மைய நிகழ்வாக இடம்பெற்றது. சென்னையை அடித்தளமாக கொண்டு இயங்கி வருகின்ற , லாபநோக்கற்ற சேவை நிறுவனமான ஃபிரண்ட் என்டர்ஸ் ஃபவுண்டேஷன் , அதன் முதலாவது வருடாந்திர நிதிதிரட்டல் நிகழ்வை மைத்ரி என்ற பெயரிலான தங்களது அமைப்பின் வழியாக மிகச்சிறப்பாக நடத்தியது . மூத்த குடிமக்களுக்கான ஆதரவுக் கரமாக செயல்படும் மைத்ரி , வயது வந்த முதியவர்கள் வாழ்க்கையை நடத்துவதில் எதிர்கொள்கின்ற கடும் சிரமங்களையும் , சவால்களையும் எளிதாக்குவதற்காக தொடங்கப்பட்டதாகும் . சென்னையிலுள்ள மியூசிக் அகாடமி வளாகத்தில் சங்கீத கலாநிதி அருணா சாய்ராம் அவர்களின் அற்புதமான இசைக் கச்சேரியின் வழியாக இந்த மாலை நேர நிகழ்வானது ,…
Read More
இந்தியாவில் டைசன் நிறுவனத்தின் நான்காவது கிளை சென்னையில் ஆரம்பம் !

இந்தியாவில் டைசன் நிறுவனத்தின் நான்காவது கிளை சென்னையில் ஆரம்பம் !

இந்தியாவில் டைசன் நிறுவனத்தின் நான்காவது கிளை சென்னையில் தொடங்கப்பட்டுள்ளது . முதல் முறையாக சென்னைக்கு வந்திருக்கும் டைசன் டெமோ ஸ்டோரில் , டைசன் தயாரிப்புகளை வாடிக்கையாளர்கள் சோதனை செய்யலாம் . சென்னை அண்ணாநகர் வி ஆர் மாலில் டைசன் ஸ்டோர் அமைக்கப்பட்டுள்ளது . டைசன் தொழில்நுட்பம் குறித்த முக்கிய தகவல்கள் டைசன் VII " கார்டு ப்ரீ வேக்கம் : டைசன் V111 - கார்டு ப்ரீ வேக்கம் தயாரிப்பு பணிகள் கடந்த பத்து ஆண்டுகளாக நடைபெற்று வெற்றி கண்டுள்ளது . உங்களது இல்லங்களை சுத்தம் செய்யும் இந்த வேக்கம் , டைசனின் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளில் முக்கியமானது . டைசனின் பா மோட்டார் . 125 , 000rpm அளவில் சுழலும் தன்மை கொண்டது . முந்தைய வேக்கம் ப்ராடக்ட் டைசன் சைக்லோன் V10 - வேக்கமைவிட டைசன் VII " கார்டுயரி வேக்கம், 40 % அதிக பவர் கொண்டது…
Read More
பிரதமர் மோடிக்கு உச்சகட்ட பாதுகாப்பு வசதிகளுடன் புதிய விமானம்.!

பிரதமர் மோடிக்கு உச்சகட்ட பாதுகாப்பு வசதிகளுடன் புதிய விமானம்.!

பிரதமர் மோடியின் பயன்பாட்டிற்காக 2 புதிய அதிநவீன விமானங்கள் வாங்கப்படவுள்ளன. இதன் மதிப்பு மற்றும் மிரட்டலான பாதுகாப்பு வசதிகள் குறித்த விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம். உலகின் சக்தி வாய்ந்த தலைவர்களில் ஒருவராக இந்திய பிரதமர் மோடி உருவெடுத்துள்ளார். இதனால் அவருக்கு உச்சகட்ட பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. பிரதமர் மோடி பயன்படுத்தும் கார் மற்றும் விமானங்களில் அதிநவீன பாதுகாப்பு வசதிகள் இடம்பெற்றுள்ளன. தற்போதைய நிலையில் ஏர் இந்தியாவின் பி747 (B747) விமானங்களில்தான் பிரதமர் மோடி பறந்து வருகிறார். பிரதமர் நரேந்திர மோடி மட்டுமல்லாது, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு ஆகியோரும் கூட பி747 விமானங்களைதான் பயன்படுத்தி வருகின்றனர். இந்தியாவின் மிக முக்கியமான நபர்கள் பயணிக்கும் இந்த பி747 விமானங்களை ஏர் இந்தியாவின் பைலட்கள்தான் இயக்கி வருகின்றனர். ஏஐஇஎஸ்எல் எனப்படும் ஏர் இந்தியா இன்ஜினியரிங் சர்வீஸ் லிமிடெட் (AIESL - Air India Engineering…
Read More
தங்க சேமிப்பு பத்திரங்களுக்கு ஜி.எஸ்.டி., கிடையாது.!

தங்க சேமிப்பு பத்திரங்களுக்கு ஜி.எஸ்.டி., கிடையாது.!

முதலீடு நோக்கில் தங்கம் கவனத்தை ஈர்த்து வரும் நிலையில், தங்க முதலீட்டிற்கான சிறந்த வழிகளில் ஒன்றாக இருக்கும்,அரசு வெளியிடும் தங்க சேமிப்பு பத்திரங்கள் மூலம் கிடைக்கும் வரிச்சலுகைகள்:தங்க சேமிப்பு பத்திரம், 8 ஆண்டு காலம் முதிர்வு கொண்டது. முதிர்வு காலம் வரை வைத்து இருந்தால், மூலதன ஆதாய வரி கிடையாது. முதிர்வு தொகைக்கு வரி கிடையாது.தங்க சேமிப்பு பத்திரங்கள் மீது கிடைக்கும் வருமான வரிச்சலுகை, தங்க ஈ.டி.எப்., மற்றும் தங்க மியூச்சுவல் பண்ட்களில் கிடையாது.தங்க நகைகள் மீது, 3 சதவீத ஜி.எஸ்.டி., விதிக்கப்படுகிறது. தங்க சேமிப்பு பத்திரங்களுக்கு ஜி.எஸ்.டி., கிடையாது. மேலும் செய்கூலி, சேதாரம் போன்ற செலவுகளும் இல்லை.தங்க சேமிப்பு பத்திர முதலீட்டிற்கு ஆண்டுக்கு, 2.5 சதவீத வட்டி அளிக்கப்படுகிறது. இதற்கு டி.டீ.எஸ்., பிடித்தம் செய்யப்படுவதில்லை. வட்டி வருமானம், ஒருவரது வருமானத்தில் சேர்த்துக்கொள்ளப்படும். வேறு தங்க முதலீடுகள் எதுவும் வருமானம் அளிப்பதில்லை. தங்க சேமிப்பு பத்திரங்களில் இருந்து, 5 ஆண்டுக்கு பின்…
Read More
‘பிளிப்கார்ட்’ உணவுப் பொருட்கள் சில்லரை விற்பனையிலும் ஈடுபட உள்ளது.!

‘பிளிப்கார்ட்’ உணவுப் பொருட்கள் சில்லரை விற்பனையிலும் ஈடுபட உள்ளது.!

மின்னணு வர்த்தக நிறுவனமான, ‘பிளிப்கார்ட்’ உணவுப் பொருட்கள் சில்லரை விற்பனையிலும் ஈடுபட உள்ளது. இதற்காக, தனியாக புதிய நிறுவனம் ஒன்றை பதிவு செய்துள்ளது.இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் அல்லது தயாரிக்கப்படும் உணவுப் பொருட்களின் சில்லரை விற்பனைக்காக, ‘பிளிப்கார்ட் பார்மர்மார்ட்’ எனும் தனி நிறுவனம் ஒன்றை, துவக்கி பதிவு செய்துள்ளது பிளிப்கார்ட் நிறுவனம்.இந்த புதிய நிறுவனம், தனியாக உணவுப் பொருட்கள் சில்லரை விற்பனைக்கான உரிமம் கோரி விண்ணப்பிக்க தயாராகி வருகிறது. இந்த சில்லரை விலை விற்பனை, ‘ஆன்லைன்’ மூலமாகவும், ‘ஸ்டோர்’கள் மூலமாகவும் செய்யப்படும் என தெரிகிறது.இந்த நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட பங்கு மூலதனம், 1,845 கோடி ரூபாய் என, நிறுவன பதிவாளர் அலுவலகத்துக்கான விண்ணப்பத்தில் குறிப்பிடப் பட்டு உள்ளது.கடந்த மாதம், சிங்கப்பூரில் நடைபெற்ற பிளிப்கார்ட் நிறுவனத்தின் நிர்வாகக் குழு கூட்டத்தில், இந்த புதிய நிறுவனத்தை துவக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.இந்நிறுவனம், இந்தியாவில் தயாரிக்கப்படும் அல்லது உற்பத்தி செய்யப்படும் உணவுப் பொருட்களை மட்டுமே விற்பனை செய்ய உள்ளதாக தெரிகிறது.…
Read More