செய்திகள்

A wonderful serenity has taken possession of my entire soul, like these sweet mornings of spring which I enjoy with my whole heart.

குறைந்த விலையில் சூரிய சக்தி மின்சாரம்!

குறைந்த விலையில் சூரிய சக்தி மின்சாரம்!

ஏப்., 1, 2018ல், சூரிய சக்தி உற்பத்தி திட்டத்திற்கான விலையை மேலும் குறைத்து, புதிய அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது. 1 -- 10 கிலோ வாட் வரை தயாரிக்கும், யூனிட் அமைக்க, 1 கிலோ வாட்டுக்கு, 60 ஆயிரம் என்ற விகிதத்தில் நிர்ணயித்துள்ளது; இதில், 30 சதவீதம் மானியமாக தரப்படும்.அதேபோல், 11- 100 கிலோ வாட் வரை உற்பத்தி செய்யும் புராஜெக்டுக்கு, 1 கிலோ வாட்டுக்கு, 55 ஆயிரம் ரூபாய் என, நிர்ணயம் செய்துள்ளது. இதற்கும், 30 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது. அரசு மானியம் தருவதுடன், மூன்றாண்டு வரை அந்த புராஜெக்டை பராமரிப்பதும், ஒப்பந்ததாரர்களின் பொறுப்பு என, குறிப்பிட்டுள்ளது. சூரிய சக்தி உற்பத்திக்கு பயன்படும் இன்வெர்ட்டர், பேட்டரி களுக்கு ஐந்தாண்டுகள் வரை உத்தரவாதம் உள்ளது.வீடுகள், அப்பார்ட்மென்டுகள், கூட்டுறவு சங்கங்கள், கிளப்புகள், அறக்கட்டளைகளும், இந்த மானியத்தை பெறலாம். வியாபார நிறுவனங்களுக்கும், தொழிற்சாலைகளுக்கும் மானியம் கிடையாது; ஆனால் அவர்கள், வருமான வரி கட்டும் போது,…
Read More
சென்னையை ஜனநெரிசலிலிருந்து விடுவிக்கும் பணி இப்போது மிக மிக முக்கியம். !

சென்னையை ஜனநெரிசலிலிருந்து விடுவிக்கும் பணி இப்போது மிக மிக முக்கியம். !

இந்தியாவிலேயே கரோனா தொற்று வேகமாகப் பரவும் நகரங்களில் ஒன்றாக சென்னை உருவெடுத்திருப்பது ஒட்டுமொத்தத் தமிழர்களையும் கவலைக்குள் தள்ளியிருக்கிறது. நகரமயமாக்கலை வரித்துக்கொண்ட தமிழ்நாடு, அந்த நகரமயமாக்கலை அதிகாரப் பரவலாக்கலின் வழி மேற்கொண்டிருந்தால், அழகிய சென்னை இவ்வளவு ஜனநெரிசலும் சூழல் கேடும் மிக்க நகரமாக உருமாற்றப்பட்டிருப்பதைத் தவிர்த்திருக்கலாம். சாதாரண நாட்களில் இத்தகு விமர்சனங்களைப் பொருட்படுத்தாத ஆட்சியாளர்கள் இக்கட்டான காலங்களில் சென்னையை மேலும் ஆழ்ந்த சங்கடத்துக்கு ஆளாக்கிவிடுகிறார்கள். போகட்டும், சென்னையை ஜனநெரிசலிலிருந்து விடுவிக்கும் பணி இப்போது மிக மிக முக்கியம். ஜனநெருக்கடி மிக்க நகரங்கள் கரோனாவுக்கு மிக அதிகமான விலையைக் கொடுக்கின்றன. ஜனநெரிசல் மிக்க சென்னை நீர்ப் பிரச்சினையையும் எதிர்கொள்வது என்பது இங்கு நாம் எதிர்கொள்ளும் கூடுதல் சிக்கல். கரோனா போன்ற ஒரு தொற்றுநோய்க் காலகட்டத்தில் சுத்தத்தில் மக்கள் காட்டும் அக்கறை இயல்பாக நகரத்தின் தண்ணீர்ப் பயன்பாட்டை அதிகமாக்கும். கரோனாவைத் தவிர்க்கும் செயல்முறைகளில் முக்கியமானதாக அரசால் வலியுறுத்தப்படும் அடிக்கடி சோப்பு போட்டுக் கை கழுவும் முறையை…
Read More
உஷார்! இன்சூரன்ஸ் பணத்தை கோவிந்தா போடும் நிறுவனங்கள்; எளிதாக பணத்தை பெறுவதற்கான வழிமுறை இதோ..!

உஷார்! இன்சூரன்ஸ் பணத்தை கோவிந்தா போடும் நிறுவனங்கள்; எளிதாக பணத்தை பெறுவதற்கான வழிமுறை இதோ..!

டிரைவிங் என்பது நமக்கு மகிழ்ச்சியையும் சந்தோஷத்தையும் தருவது தான். ஆனால் இந்த பயணத்தின் போது விபத்து என்பது எதிர்பார்க்காத ஒன்று. ஒருவர் வாகனத்தில் செல்லும் போது விபத்து நடக்காமல் இருக்கும் என யாராலும் உறுதியாளிக்க முடியாது. விபத்து என்பது நீங்கள் போய் ஒருவர் மீது மோதுவது மட்டும் அல்ல உங்கள் கார் மீது மற்றவர் வந்து மோதுவது, நீங்கள் நிறுத்தி சென்ற கார் மீது வேறு ஒரு வாகனம் வந்து மோதுவது. ஏன் நிறுத்தி சென்ற வாகனம் மீது மரம் விழுந்து சேதமாவது. மழை வெள்ள நீரில் உங்கள் வாகனம் முழ்குவது என எல்லாமே விபத்துதான். இந்த விபத்துக்களால் ஏற்படும் நஷ்டத்தை ஒரளவிற்கு சமாளிக்கவும், உங்கள் வாகனத்தால் பிறருக்கு ஏற்படும் நஷ்டத்தை ஈடு செய்யவும் இந்த இன்சூரன்ஸை கட்டாயமாிக்கியுள்ளது. இந்த இன்ஸ்சுரன்ஸை பலர் எடுத்தும் அதை முறையாக கிளைம் செய்யதால் அவர்களுக்கு அதற்கான பலன் கிடைப்பதில்லை. இந்த செய்தியில் இன்சூரன்ஸின் கிளம்ப்…
Read More
வீடு இருக்கு ஆள் இல்லை! கவலையில் House Owners!! சென்னையில் வாடகை குறைந்தது!!!

வீடு இருக்கு ஆள் இல்லை! கவலையில் House Owners!! சென்னையில் வாடகை குறைந்தது!!!

கொரோனா ஊரடங்கால் வேலைவாய்ப்பை இழந்தவர்கள், சென்னையில் இருந்து வாடகை வீடுகளை காலி பண்ணிட்டு சொந்த ஊர்களுக்கு போய்ட்டாங்க., வீட்டு வாடகையை மட்டுமே நம்பியிருந்த கட்டட உரிமையாளர்கள் தவிப்புக்குள்ளாகி உள்ளனர். வீடுகள் இருந்தும், வாடகைக்கு ஆள் கிடைக்காமல் காத்திருக்கும் ஹவுஸ் ஓனர்களின் கவலை குறித்து தான் இந்த பதிவுல பார்க்கப் போகிறோம். சென்னையில் நல்ல தண்ணீர் வசதி, தடையில்லா மின்சார வசதி, கடை மற்றும் மருத்துவ வசதியுடன் முக்கியமான பகுதிகளில் நல்ல வீடு ஒன்று வாடகைக்கு கிடைப்பது குதிரைக் கொம்பாக இருந்து வந்தது. தற்போது கொரோனாவால் எல்லாமே தலைகீழாக மாறி விட்டது. கொரோனா அச்சம் காரணமாக லட்சக்கணக்கான வடமாநில தொழிலாளர்கள் இடம் பெயர்ந்துள்ள நிலையில், வெளி மாவட்டங்களில் இருந்து சென்னையில் தங்கி பணியாற்றிய ஏராளமான தொழிலாளர்களும் வேலை வாய்ப்பில்லாமல், தங்களுடைய சொந்த மாவட்டங்களுக்கு திரும்பியுள்ளனர். கடந்த மூன்று மாதங்களில் மட்டும் திடீரென லட்சம் பேர் இடம் பெயர்ந்ததால், சென்னையில் பல வீடுகள் காலியாகி…
Read More
பெந்தகோஸ்தே சபைகளின் யேசு வியாபாரம் ?

பெந்தகோஸ்தே சபைகளின் யேசு வியாபாரம் ?

21 ம் நூற்றாண்டின் மிகப்பெரும் அச்சுறுத்தல்களில் ஒன்று நூற்றுக்கணக்கான பெந்தகோஸ்தே சபைகள் மூலமாக கோடிக்கணக்கான கோடி டாலர்கள் இறைக்கப்பட்டு இந்தியா போன்ற நாடுகளில் செய்யப்படும் யேசு வியாபாரம் தான். பெரு நகரங்களில் தொடங்கி இந்தியாவின் பட்டி தொட்டியெல்லாம் ஆசிர்வாத பெருவிழா, எழுப்புதல் விழா, சுவிசேஷ பெருவிழா என பலவிதமான பெயர்களில் அரங்கேறிவரும் அராஜகத்தை தட்டி கேட்க யாருமே துணிந்ததில்லை துணியப் போவதும் இல்லை. கருத்து சுதந்திரம் குறித்து பேசும் எந்த ஊடகவியலாளரோ, படைப்பு சுதந்திரம் குறித்து பேசும் எந்த சினிமா இயக்குனரோ, இந்த மாபெரும் அராஜகம் குறித்து வாயைத் திறப்பதே இல்லை. ஆனால் சமீபத்தில் வெளியான ஒரே ஒரு திரைப்படம் அந்த குறையை தீர்த்து விட்டது. அதுதான் TRANCE என்னும் மலையாள திரைப்படம். துரதிஷ்டவசமாக கொரானா பிரச்சனையால் இந்த படம் குறித்து இன்னும் பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. அச்சு அசல் ஒரு சுவிசேஷக் கூட்டத்தின் பின்னணியில் என்ன நடந்து கொண்டிருக்கிறதோ, அதை…
Read More
லஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி ?

லஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி ?

லஞ்ச ஒழிப்பு துறை அமைப்பானது, முற்றிலும், சென்னையில் தலைமைச்செயலகத்தில் இயங்கி வரும் CHIEF SECRETARY அந்தஸ்த்தில் உள்ள VIGILANCE COMMISSIONER- அவர்களின் கட்டுப்பாட்டிலும், சென்னை ஆலந்தூரில் உள்ள DGP அல்லது ADDL.DGP அந்தஸ்த்தில் உள்ள,ஒரு மூத்த IPS அதிகாரியின் தலைமையில் இயங்கிவரும்,DVAC என்றழைக்கப்படும் Directorate of Vigilance and Anti-Corruption என்ற இயக்குநரகத்தின் கட்டுப்பாட்டிலும் மட்டும்தான் செயல்படுகின்றனர். லஞ்ச ஒழிப்புச்சட்டம்-என்று அழைக்கப்படும் PREVENTION OF CORRUPTION ACT 1988- பிரிவு-2 பிரகாரம், அரசுப்பணியில் உள்ள அரசு ஊழியர்கள் மட்டுமின்றி, மக்களால் பொதுப்பணிக்கென தேர்ந்தெடுக்கப்படும், பஞ்சாயத்துப் போர்டு தலைவர், வார்டு உறுப்பினர்கள், நகரம், மாவட்டம் மற்றும் முனிசிபல் கவுன்சிலர்கள், சேர்மேன் மற்றும் அரசு நிர்வாகத்தில் உள்ள அனைத்து மக்கள் பிரதிநிதிகளும்- PUBLIC SERVANTS என்ற வரையரறைக்கு, உட்பட்டவர்கள்தான். லஞ்சத்தில் பலவகைகள் உண்டு. அவை கள்ளச்சாரயம், சூதாட்டங்கள், ப்ராத்தல் ஹவுஸ்கள், கலப்படங்கள், கட்டப்பஞ்சாயத்துக்கள், இன்னும் பல. எப்படி புகார் அளிப்பது ? லஞ்சம்கொடுத்தால்தான் வாயையே…
Read More
பிணங்களுடனும், பிணங்களுக்கு நடுவிலும் அகோரிகள் ஏன்  உடலுறவு வைத்துக் கொள்கிறார்கள் தெரியுமா?

பிணங்களுடனும், பிணங்களுக்கு நடுவிலும் அகோரிகள் ஏன் உடலுறவு வைத்துக் கொள்கிறார்கள் தெரியுமா?

உலகத்தில் அனைத்து மதத்தினரும் தங்கள் கடவுள்களை வழிபட தனித்துவமான வழிகளை பின்பற்றுகின்றனர். இந்தியாவை பொறுத்தவரை பல்வேறு விதமான வழிபாட்டு முறைகள் இருந்தாலும் அகோரிகளின் கடவுள் வழிபாட்டு முறை என்பது பல மர்மங்களும், ரகசியங்களும் நிறைந்ததாக உள்ளது. அகோரிகளின் வழிபாட்டு முறைகள் சாதாரண மக்களுக்கு பயத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. இறந்த உடல்களை சாப்பிடுவது, மண்டை ஓடுகள் மற்றும் எலும்புகளை அணிகலன்களாக அணிந்து கொள்வது, இறந்த உடல்களுடன் உடலுறவு வைத்துக்கொள்வது என இவர்களின் வழிபாட்டு முறைகள் ஒவ்வொன்றிற்கும் பின்னால் இவர்களுக்கென்று தனிக்காரணம் உள்ளது. இந்த பதிவில் அகோரிகளைப் பற்றிய சில வினோதமான தகவல்களை பார்க்கலாம். பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும் அகோரிகள் சிவனை வழிபடுவார்கள் அகோரிகள் சிவபெருமானையும், அவரது பெண் உருவமான காலி மற்றும் மரணத்தின் கடவுளை வணங்குபவர்கள். மற்ற சாதுக்களைப் போல் அல்லாமல் இவர்கள் தாங்கள் வணங்கும் தெய்வத்தை இறைச்சி, மது மற்றும் உடலுறவு மூலம் திருப்திப்படுத்தலாம் என்று…
Read More
இந்திய ராணுவத்தைப் பற்றித் தெரிந்துகொள்ளுங்கள்.!

இந்திய ராணுவத்தைப் பற்றித் தெரிந்துகொள்ளுங்கள்.!

நீங்கள் நினைப்பதுபோல் இந்திய நாட்டின் ராணுவப் பணி பிறநாட்டின் ராணுவத்தினரைப் போன்று எளிதானதல்ல.இந்திய ராணுவத்தைப் பற்றி. தெரிந்துகொள்ளுங்கள். உலகின் வலிமையான ராணுவங்களான.அமெரிக்கா சீனா, ரஷ்யாவே அஞ்சும் சீதோஷ்ண நிலையும்,போரினால் ஏற்பட்ட சேதத்தை விட இயற்கை. சீதோஷ்ண மாறுபாடுகளால் ஏற்பட்ட வீரர்களின் உயிரிழப்புகள் தான் அதிகம்.கரணம் தப்பினால் மரணம்.என்ற நிலையில்...உலகின் மிகப் பெரிய மலைச் சிகரங்களின் மேல் உள்ள போர்க்களத்தையும் . அதற்கான பயிற்சியையும் கொண்ட. திறமையான பலம் வாய்ந்த உலகின் மிகப்பெரிய ராணுவம் நமது இந்திய ராணுவம்தான். ... ஐ.நா.சபையே....பல போர்களில் இந்திய ராணுவத்தின் உதவியை நாடியுள்ளன.. நம் இந்திய ராணுவம் முன்னிலையில் நின்று ஐ.நா. படைகள் வெற்றி பெற உதவியிருக்கிறது.. இந்திய ராணுவம்... தெரிந்துகொள்ளுங்கள். . அந்நிய சக்திகளின் காசுக்காக. பதவி வெறிக்காக. இங்குள்ள அரசியல்வாதிகள் பிரிவினைவாதிகள், கம்யூனிச நக்சல்கள், தீவிரவாதிகளின் உதவியுடன் செய்யும். தீவிர விஷமமான பிரச்சாரத்தால் மக்களில் சிலர் ராணுவ வேலையை எண்ணற்ற வேலைகளில்....அதுவும் ஒரு சாதாரண…
Read More

வடநாட்டு தொழிலாளர் தமிழ்நாட்டில் பெருக காரணம் என்ன?

கொரனா வந்து 3 மாதங்களாகிவிட்டது...... அந்த நோய் பற்றிய அன்றாடச் செய்திகள் அனைத்தும்....... பழைய செய்திகளாகிவிட்டது.. மக்களுக்கும் பழகிவிட்டது......இந்தியாவில் டிசம்பருக்குள் பெரியளவில் உயிரிழப்புகள் ஏற்படலாம் என்று செய்திகள்....... இப்போது வட இந்தியர்கள் பற்றிய விவாதம் நமக்குள் ஓடிக்கொண்டிருக்கிறது... பான்பராக் வாயர்கள், படிக்காத அறிவுகெட்டவர்கள்.. அங்கே ஓட்டு போட்டுவிட்டு இங்கே பானிபூரி விற்க வந்துவிடுகிறார்கள்,....... மதவெறியர்கள் என்றெல்லாம் பல பதிவுகளை காண முடிகிறது... இன்று அவர்கள் செய்த.... பங்கேற்ற தொழில்கள்..... வேலைகள்..... ஸ்தம்பித்து நிற்கின்றன அல்லது போதிய வேலையாட்கள் இன்றி ஆள்பற்றாக்குறையுடன் நடக்கிறது...... அவை ஒருபக்கம் இருக்கட்டும்...... முதலில் நம்மை பற்றிய சுயபரிசோதனையில் இருந்து தொடங்குவோம்... கடந்த 5-10 ஆண்டுகளாக தமிழகத்தில் மிக சிக்கலான சூழ்நிலை நிலவுகிறது... இதை நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு நேரத்தில் அனுபவித்திருப்போம்...ஒரு பக்கம் வேலை இல்லை என்று திண்டாட்டம்.. இன்னொரு பக்கம் வேலைக்கு சரியான ஆள் கிடைக்கவில்லை என்று திண்டாட்டம்... எந்த படிப்பு படித்தவனுக்கும் நல்ல வேலை கிடைக்கவில்லை…
Read More
கொரோனாவுக்கு பிறகு இந்தியாவில்  திருமணங்கள் இனி எப்படி நடக்கும் தெரியுமா?

கொரோனாவுக்கு பிறகு இந்தியாவில் திருமணங்கள் இனி எப்படி நடக்கும் தெரியுமா?

இந்த கொரோனா நமக்கு உடல் ரீதியான பாதிப்பையும் மட்டுமல்ல நிதி நிலையிலும் நிறைய நெருக்கடியை கொடுத்துச் சென்று உள்ளது. கடந்த ஆண்டைப் போன்று தற்போது யாரும் கோலகலமாக திருமணங்கள் செய்வதில்லை, திருமண கூட்டங்கள், திருமண பயணங்கள் குறைந்துள்ளது என்றே கூறலாம். இந்த விளைவால் நம் எதிர்காலம் எப்படி இருக்கப் போகிறது. ஆடம்பர திருமணங்கள் காணாமல் போக வாய்ப்புள்ளதா வாங்க தெரிஞ்சுக்கலாம். நம் ஊரைப் பொறுத்த வரை திருமணம் என்றாலே படு சிறப்பாக கொண்டாட வேண்டிய விஷயமாக மக்கள் பார்க்கின்றனர். பணக்காரர்கள் முதல் நடுத்தர வர்க்கம் வரை திருமணத்திற்காக அந்தஸ்துக்காக செலவு செய்வது அதிகமாகி வருகிறது. திருமணம் என்றவுடன் மாளிகை மாதிரி மண்டபத்தில் இருந்து, பயணம் செய்ய விமான டிக்கெட்டுகள், இரவு விருந்து என்று பணத்தை தண்ணியாக செலவழித்து வருகிறார்கள். சில பேருக்கு தங்களுடைய கனவு இடங்களில் வைத்து திருமணம் செய்யும் ஆசை கூட இருக்கிறது. இவ்வளவு செலவுகள் ஏற்பாடுகள் எல்லாம் செய்யப்பட்டாலும்…
Read More