செய்திகள்

A wonderful serenity has taken possession of my entire soul, like these sweet mornings of spring which I enjoy with my whole heart.

லஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி ?

லஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி ?

லஞ்ச ஒழிப்பு துறை அமைப்பானது, முற்றிலும், சென்னையில் தலைமைச்செயலகத்தில் இயங்கி வரும் CHIEF SECRETARY அந்தஸ்த்தில் உள்ள VIGILANCE COMMISSIONER- அவர்களின் கட்டுப்பாட்டிலும், சென்னை ஆலந்தூரில் உள்ள DGP அல்லது ADDL.DGP அந்தஸ்த்தில் உள்ள,ஒரு மூத்த IPS அதிகாரியின் தலைமையில் இயங்கிவரும்,DVAC என்றழைக்கப்படும் Directorate of Vigilance and Anti-Corruption என்ற இயக்குநரகத்தின் கட்டுப்பாட்டிலும் மட்டும்தான் செயல்படுகின்றனர். லஞ்ச ஒழிப்புச்சட்டம்-என்று அழைக்கப்படும் PREVENTION OF CORRUPTION ACT 1988- பிரிவு-2 பிரகாரம், அரசுப்பணியில் உள்ள அரசு ஊழியர்கள் மட்டுமின்றி, மக்களால் பொதுப்பணிக்கென தேர்ந்தெடுக்கப்படும், பஞ்சாயத்துப் போர்டு தலைவர், வார்டு உறுப்பினர்கள், நகரம், மாவட்டம் மற்றும் முனிசிபல் கவுன்சிலர்கள், சேர்மேன் மற்றும் அரசு நிர்வாகத்தில் உள்ள அனைத்து மக்கள் பிரதிநிதிகளும்- PUBLIC SERVANTS என்ற வரையரறைக்கு, உட்பட்டவர்கள்தான். லஞ்சத்தில் பலவகைகள் உண்டு. அவை கள்ளச்சாரயம், சூதாட்டங்கள், ப்ராத்தல் ஹவுஸ்கள், கலப்படங்கள், கட்டப்பஞ்சாயத்துக்கள், இன்னும் பல. எப்படி புகார் அளிப்பது ? லஞ்சம்கொடுத்தால்தான் வாயையே…
Read More
பிணங்களுடனும், பிணங்களுக்கு நடுவிலும் அகோரிகள் ஏன்  உடலுறவு வைத்துக் கொள்கிறார்கள் தெரியுமா?

பிணங்களுடனும், பிணங்களுக்கு நடுவிலும் அகோரிகள் ஏன் உடலுறவு வைத்துக் கொள்கிறார்கள் தெரியுமா?

உலகத்தில் அனைத்து மதத்தினரும் தங்கள் கடவுள்களை வழிபட தனித்துவமான வழிகளை பின்பற்றுகின்றனர். இந்தியாவை பொறுத்தவரை பல்வேறு விதமான வழிபாட்டு முறைகள் இருந்தாலும் அகோரிகளின் கடவுள் வழிபாட்டு முறை என்பது பல மர்மங்களும், ரகசியங்களும் நிறைந்ததாக உள்ளது. அகோரிகளின் வழிபாட்டு முறைகள் சாதாரண மக்களுக்கு பயத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. இறந்த உடல்களை சாப்பிடுவது, மண்டை ஓடுகள் மற்றும் எலும்புகளை அணிகலன்களாக அணிந்து கொள்வது, இறந்த உடல்களுடன் உடலுறவு வைத்துக்கொள்வது என இவர்களின் வழிபாட்டு முறைகள் ஒவ்வொன்றிற்கும் பின்னால் இவர்களுக்கென்று தனிக்காரணம் உள்ளது. இந்த பதிவில் அகோரிகளைப் பற்றிய சில வினோதமான தகவல்களை பார்க்கலாம். பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும் அகோரிகள் சிவனை வழிபடுவார்கள் அகோரிகள் சிவபெருமானையும், அவரது பெண் உருவமான காலி மற்றும் மரணத்தின் கடவுளை வணங்குபவர்கள். மற்ற சாதுக்களைப் போல் அல்லாமல் இவர்கள் தாங்கள் வணங்கும் தெய்வத்தை இறைச்சி, மது மற்றும் உடலுறவு மூலம் திருப்திப்படுத்தலாம் என்று…
Read More
இந்திய ராணுவத்தைப் பற்றித் தெரிந்துகொள்ளுங்கள்.!

இந்திய ராணுவத்தைப் பற்றித் தெரிந்துகொள்ளுங்கள்.!

நீங்கள் நினைப்பதுபோல் இந்திய நாட்டின் ராணுவப் பணி பிறநாட்டின் ராணுவத்தினரைப் போன்று எளிதானதல்ல.இந்திய ராணுவத்தைப் பற்றி. தெரிந்துகொள்ளுங்கள். உலகின் வலிமையான ராணுவங்களான.அமெரிக்கா சீனா, ரஷ்யாவே அஞ்சும் சீதோஷ்ண நிலையும்,போரினால் ஏற்பட்ட சேதத்தை விட இயற்கை. சீதோஷ்ண மாறுபாடுகளால் ஏற்பட்ட வீரர்களின் உயிரிழப்புகள் தான் அதிகம்.கரணம் தப்பினால் மரணம்.என்ற நிலையில்...உலகின் மிகப் பெரிய மலைச் சிகரங்களின் மேல் உள்ள போர்க்களத்தையும் . அதற்கான பயிற்சியையும் கொண்ட. திறமையான பலம் வாய்ந்த உலகின் மிகப்பெரிய ராணுவம் நமது இந்திய ராணுவம்தான். ... ஐ.நா.சபையே....பல போர்களில் இந்திய ராணுவத்தின் உதவியை நாடியுள்ளன.. நம் இந்திய ராணுவம் முன்னிலையில் நின்று ஐ.நா. படைகள் வெற்றி பெற உதவியிருக்கிறது.. இந்திய ராணுவம்... தெரிந்துகொள்ளுங்கள். . அந்நிய சக்திகளின் காசுக்காக. பதவி வெறிக்காக. இங்குள்ள அரசியல்வாதிகள் பிரிவினைவாதிகள், கம்யூனிச நக்சல்கள், தீவிரவாதிகளின் உதவியுடன் செய்யும். தீவிர விஷமமான பிரச்சாரத்தால் மக்களில் சிலர் ராணுவ வேலையை எண்ணற்ற வேலைகளில்....அதுவும் ஒரு சாதாரண…
Read More

வடநாட்டு தொழிலாளர் தமிழ்நாட்டில் பெருக காரணம் என்ன?

கொரனா வந்து 3 மாதங்களாகிவிட்டது...... அந்த நோய் பற்றிய அன்றாடச் செய்திகள் அனைத்தும்....... பழைய செய்திகளாகிவிட்டது.. மக்களுக்கும் பழகிவிட்டது......இந்தியாவில் டிசம்பருக்குள் பெரியளவில் உயிரிழப்புகள் ஏற்படலாம் என்று செய்திகள்....... இப்போது வட இந்தியர்கள் பற்றிய விவாதம் நமக்குள் ஓடிக்கொண்டிருக்கிறது... பான்பராக் வாயர்கள், படிக்காத அறிவுகெட்டவர்கள்.. அங்கே ஓட்டு போட்டுவிட்டு இங்கே பானிபூரி விற்க வந்துவிடுகிறார்கள்,....... மதவெறியர்கள் என்றெல்லாம் பல பதிவுகளை காண முடிகிறது... இன்று அவர்கள் செய்த.... பங்கேற்ற தொழில்கள்..... வேலைகள்..... ஸ்தம்பித்து நிற்கின்றன அல்லது போதிய வேலையாட்கள் இன்றி ஆள்பற்றாக்குறையுடன் நடக்கிறது...... அவை ஒருபக்கம் இருக்கட்டும்...... முதலில் நம்மை பற்றிய சுயபரிசோதனையில் இருந்து தொடங்குவோம்... கடந்த 5-10 ஆண்டுகளாக தமிழகத்தில் மிக சிக்கலான சூழ்நிலை நிலவுகிறது... இதை நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு நேரத்தில் அனுபவித்திருப்போம்...ஒரு பக்கம் வேலை இல்லை என்று திண்டாட்டம்.. இன்னொரு பக்கம் வேலைக்கு சரியான ஆள் கிடைக்கவில்லை என்று திண்டாட்டம்... எந்த படிப்பு படித்தவனுக்கும் நல்ல வேலை கிடைக்கவில்லை…
Read More
கொரோனாவுக்கு பிறகு இந்தியாவில்  திருமணங்கள் இனி எப்படி நடக்கும் தெரியுமா?

கொரோனாவுக்கு பிறகு இந்தியாவில் திருமணங்கள் இனி எப்படி நடக்கும் தெரியுமா?

இந்த கொரோனா நமக்கு உடல் ரீதியான பாதிப்பையும் மட்டுமல்ல நிதி நிலையிலும் நிறைய நெருக்கடியை கொடுத்துச் சென்று உள்ளது. கடந்த ஆண்டைப் போன்று தற்போது யாரும் கோலகலமாக திருமணங்கள் செய்வதில்லை, திருமண கூட்டங்கள், திருமண பயணங்கள் குறைந்துள்ளது என்றே கூறலாம். இந்த விளைவால் நம் எதிர்காலம் எப்படி இருக்கப் போகிறது. ஆடம்பர திருமணங்கள் காணாமல் போக வாய்ப்புள்ளதா வாங்க தெரிஞ்சுக்கலாம். நம் ஊரைப் பொறுத்த வரை திருமணம் என்றாலே படு சிறப்பாக கொண்டாட வேண்டிய விஷயமாக மக்கள் பார்க்கின்றனர். பணக்காரர்கள் முதல் நடுத்தர வர்க்கம் வரை திருமணத்திற்காக அந்தஸ்துக்காக செலவு செய்வது அதிகமாகி வருகிறது. திருமணம் என்றவுடன் மாளிகை மாதிரி மண்டபத்தில் இருந்து, பயணம் செய்ய விமான டிக்கெட்டுகள், இரவு விருந்து என்று பணத்தை தண்ணியாக செலவழித்து வருகிறார்கள். சில பேருக்கு தங்களுடைய கனவு இடங்களில் வைத்து திருமணம் செய்யும் ஆசை கூட இருக்கிறது. இவ்வளவு செலவுகள் ஏற்பாடுகள் எல்லாம் செய்யப்பட்டாலும்…
Read More
இந்திய தொழிலாளர் நலச் சட்டங்கள் ? மாற்றுவது நன்மை பயக்குமா?

இந்திய தொழிலாளர் நலச் சட்டங்கள் ? மாற்றுவது நன்மை பயக்குமா?

1948 ஆம் ஆண்டு வருட குறைந்தப் பட்ச ஊதியச் சட்டம் ஒரு திருப்பு முனைச் சட்டமாகும். இச்சட்டம், தொழிலாளர்களுக்கு குறைந்த பட்சம் ஊதியம் வழங்குவதை உறுதி செய்கிறது. இந்திய பொருளாதாரம் கொரோனா பொது முடக்க நிலையோடு போராடி வருவதால், ஆயிரக்கணக்கான நிறுவனங்களும், தொழிலாளர்களும் எதிர்காலம் நிச்சயமற்ற தன்மையில் உள்ளன. இதனை சமாளிக்கும் வகையில், சில மாநில அரசுகள் தொழிலாளர் நலச் சட்டங்களில் குறிப்பிடத்தக்க மாற்றங்களைச் செய்ய தொடங்கியுள்ளன. உத்திர பிரேதேசம்,மத்திய பிரேதேசம் குஜராத் ஆகிய மூன்று பாஜக ஆளும் மாநிலங்கள் தொழிலாளர் நலச்சட்டங்களில் சில முக்கிய திருத்தங்களை அறிவித்தது. அதிலும், குறிப்பாக அதிக மக்கள்தொகை கொண்ட உத்திரபிரேதேசம், அனைத்து தொழிலாளர் நலச் சட்டங்களும் அடுத்த மூன்று வருடங்களுக்கு தற்காலிகமாக அமல்படுத்தப்படாது என்று வெளிப்படையாக அறிவித்தது. இது ஒருபுறம் இருக்க, காங்கிரஸ் (ராஜஸ்தான்/பஞ்சாப்) மற்றும் பிஜேடி (ஒரிசா) ஆட்சி செய்யும் மாநிலங்களும் தொழிலாளர் சட்டங்களில் சிறு திருத்தங்களை அறிவித்தன. அந்தந்த மாநிலங்களில் பொருளாதார…
Read More
உலக வரலாற்றில் முதல் ஊரடங்கு ! மருத்துவ வரலாறு !!

உலக வரலாற்றில் முதல் ஊரடங்கு ! மருத்துவ வரலாறு !!

கோவிட்-19-க்கு தடுப்பூசியோ சிகிச்சை மருந்தோ இல்லாத நிலையில் தனிமைப்படுத்துதல், தனிமைக் கண்காணிப்பு மட்டுமே இந்தப் பெருந்தொற்றுக்குத் தீர்வாக முன்வைக்கப்படுகிறது. இது நமக்கு வேண்டுமானால் புதிதாக இருக்கலாம், ஆனால் முந்தைய நூற்றாண்டுகளில் அதிகம் நடைமுறைப்படுத்தப்பட்ட ஒரு தீர்வாகவே இது இருந்திருக்கிறது. ஐரோப்பிய நாடான இத்தாலியில் கலை, இலக்கியத்தில் மறுமலர்ச்சி ஏற்பட்ட காலம் 17ஆம் நூற்றாண்டு. அப்போதுதான் கறுப்பு மரணம் எனும் பிளேக் நோய் பரவல், இத்தாலியில் அதிகரித்தது. உலக அளவில் கொள்ளைநோய்கள், பொது சுகாதாரப் பாதுகாப்பு என்றவுடன் பலருக்கும் முதலில் நினைவுக்கு வருவது பிளேக்தான். வரலாற்றில் பிளேக் தொற்றுநோயால் இறந்தவர்களின் எண்ணிக்கையே இதுவரை அதிகம். இந்தப் பின்னணியில் முதன்முறையாக ஒரு மருத்துவ நெருக்கடி நிலைக்கு ஊரடங்கு தீர்வாக முன்வைக்கப்பட்டது. இது தொடர்பாக லண்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஜான் ஹெண்டர்சன், 'Florence under Siege, Surviving Plague in an Early modern city' என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார். மறுமலர்ச்சிக் காலம், நவீன…
Read More
தங்கத்தில் முதலீடு செய்வது லாபமா நஷ்டமா?

தங்கத்தில் முதலீடு செய்வது லாபமா நஷ்டமா?

இந்த கொரோனா நெருக்கடி காலத்தில் தங்கத்தில் முதலீடு செய்து லாபம் ஈட்டுவது எப்படி? கடந்த ஓராண்­டாக சிறப்­பாக செயல்­பட்டு வரும் திட்­டங்­களில், தங்க ஈ.டி.எப்., திட்­ட­மும் ஒன்­றா­கும். கடந்த ஆண்டு, ஆகஸ்ட் மாதத்­தி­லி­ருந்து இது­வரை இந்த திட்­டத்­தில், 2,414 கோடி ரூபாய் அள­வுக்கு முத­லீ­டு­கள் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளன.மியூச்­சு­வல் பண்டு நிறு­வ­னங்­க­ளின் கூட்­ட­மைப்­பான, ’ஆம்பி’ வெளி­யிட்­டுள்ள தக­வல்­க­ளின் படி, இத்­திட்­டத்­தில் ஏப்­ரல் மாதத்­தில், 731 கோடி ரூபாய் முத­லீடு செய்­யப்­பட்­டுள்­ளது. இதுவே, இதற்கு முந்­தைய மார்ச் மாதத்­தில், 195 கோடி ரூபாய் இந்த திட்டத்­தி­லி­ருந்து வெளியே­றி­யுள்­ளது.இது குறித்து, மியூச்­சு­வல் பண்டு நிறு­வன அதி­காரி ஒரு­வர் கூறி­ய­தா­வது: கடந்த, 2011ம் ஆண்­டி­லி­ருந்தே இந்த திட்­டம் சிறப்­பாக செயல்­பட்டு வரு­கிறது. மிக­வும் பாது­காப்­பான இந்த திட்­டத்­தில், கடந்த ஏப்­ரல் மாதத்­தில் கொரோனா பாதிப்­பு­க­ளை­யும் மீறி அதிக முத­லீ­டு­கள் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளன. இதற்கு முக்­கிய கார­ணம், பிற நிதி சந்­தை­கள் மற்­றும் திட்­டங்­களில் கடு­மை­யான ஏற்ற தாழ்­வு­கள் காணப்­பட்­டது. இந்­நி­லை­யில்,…
Read More
இந்தியாவுக்கு ஐ.நா.சபை பாராட்டு !

இந்தியாவுக்கு ஐ.நா.சபை பாராட்டு !

கொரோனா சிகிச்சைக்காக வெளிநாடுகளுக்கு மருந்து அனுப்பியதற்காக இந்தியாவுக்கு ஐ.நா. பொதுச் செயலாளர் அண்டோனியோ குட்டரஸ் பாராட்டு தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் நோய்க்கு சிகிச்சை அளிப்பதற்கான மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் விஞ்ஞானிகளும் மும்முரமாக ஈடுபட்டு உள்ளனர்.மலேரியா காய்ச்சலை குணப்படுத்த உதவும் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகள் கொரோனா நோயாளிகளை குணப்படுத்த உதவுவதாக கண்டறியப்பட்டது. இந்த மாத்திரைகள் இந்தியாவில் அதிக அளவில் தயாரிக்கப் படுகின்றன.இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவத் தொடங்கியதால், இந்த மாத்திரைகளை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு தடை விதித்தது.இதற்கிடையே, கொரோனாவை கட்டுப்படுத்த ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரைகளை தங்களுக்கு வழங்கவேண்டும் என அமெரிக்கா, நேபாளம், இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகள் இந்தியாவை கேட்டுக்கொண்டன. இதனால் ஹைட்ராக்சி குளோரோகுயின் ஏற்றுமதிக்கு இருந்து வந்த தடையை மத்திய அரசு நீக்கியது. இந்த மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் அந்த மாத்திரைகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகின்றன. மனித குலத்துக்கு அச்சுறுத்தலாக விளங்கும்…
Read More
கரோனா பரவலைக் கட்டுப்படுத்த இந்தியாவுக்கு அமெரிக்கா நிதியுதவி !

கரோனா பரவலைக் கட்டுப்படுத்த இந்தியாவுக்கு அமெரிக்கா நிதியுதவி !

உலகத்தை ஆட்டிப்படைத்து வரும் கரோனா வைரஸ் இந்தியாவுக்கு அமெரிக்கா 5.9 மில்லியன் டாலர்கள், அதாவது ரூ. 45 கோடியே 14 லட்சத்து 9 ஆயிரம் சுகாதார நிதியுதவி வழங்கியுள்ளது. வைரஸ் பரவல் தடுப்பு,பாதிக்கப்பட்டவர்க்ளுக்கு சிகிச்சை, அத்தியாவசிய பொதுச் சுகாதார செய்திகளைப் பரப்புதல், கரோனா நோயாளிகளைத் தடம் காணுதல் மற்றும் கண்காணிப்பு ஆகியவற்றுக்காக இந்தத் தொகை பயன்படுத்தப்பட்டுள்ளது.மொத்தமாக 2.8 பில்லியன் டாலர்கள் கரோனா உதவித்தொகையின் ஒரு பகுதியாகும் இது, இதில் 1.4 பில்லியன் டாலர்கள் தொகையை இந்தியாவுக்கு மருத்துவ உதவியாக அமெரிக்கா 20 ஆண்டுகளாக அளித்து வரும் தொகையில் உள்ளடங்கியதாகும் என்று அமெரிக்கா அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது. அமெரிக்க அரசுத்துறை மற்றும் அமெரிக்க பன்னாடு வளர்ச்சி முகமை தற்போது 508 மில்லியன் அமெரிக்க டாலர்களை உதவியாக மருத்துவம், மனிதார்த்த மற்றும் பொருளதார மேம்பாட்டுக்காக ஒதுக்கியுள்ளது. இது தவிர அரசு சாரா சமூக நல அமைப்புகளுக்கு உலகம் முழுதும் கோவிட்-19-ஐ எதிர்த்துப் போராட நிதியுதவி…
Read More