21
Jun
உலகத்தில் அனைத்து மதத்தினரும் தங்கள் கடவுள்களை வழிபட தனித்துவமான வழிகளை பின்பற்றுகின்றனர். இந்தியாவை பொறுத்தவரை பல்வேறு விதமான வழிபாட்டு முறைகள் இருந்தாலும் அகோரிகளின் கடவுள் வழிபாட்டு முறை என்பது பல மர்மங்களும், ரகசியங்களும் நிறைந்ததாக உள்ளது. அகோரிகளின் வழிபாட்டு முறைகள் சாதாரண மக்களுக்கு பயத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. இறந்த உடல்களை சாப்பிடுவது, மண்டை ஓடுகள் மற்றும் எலும்புகளை அணிகலன்களாக அணிந்து கொள்வது, இறந்த உடல்களுடன் உடலுறவு வைத்துக்கொள்வது என இவர்களின் வழிபாட்டு முறைகள் ஒவ்வொன்றிற்கும் பின்னால் இவர்களுக்கென்று தனிக்காரணம் உள்ளது. இந்த பதிவில் அகோரிகளைப் பற்றிய சில வினோதமான தகவல்களை பார்க்கலாம். பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும் அகோரிகள் சிவனை வழிபடுவார்கள் அகோரிகள் சிவபெருமானையும், அவரது பெண் உருவமான காலி மற்றும் மரணத்தின் கடவுளை வணங்குபவர்கள். மற்ற சாதுக்களைப் போல் அல்லாமல் இவர்கள் தாங்கள் வணங்கும் தெய்வத்தை இறைச்சி, மது மற்றும் உடலுறவு மூலம் திருப்திப்படுத்தலாம் என்று…
