செய்திகள்

A wonderful serenity has taken possession of my entire soul, like these sweet mornings of spring which I enjoy with my whole heart.

10 நிமிடத்தில் சார்ஜ் ஆகும் பேட்டரி! டொயோட்டா உருவாக்குகிறது !!

10 நிமிடத்தில் சார்ஜ் ஆகும் பேட்டரி! டொயோட்டா உருவாக்குகிறது !!

ஜப்பானைச் சேர்ந்த டொயோட்டா மோட்டார் நிறுவனம் ஸ்திரமான பேட்டரியை உருவாக்குவதில் ஈடுபட்டுள்ளது. இது பேட்டரியில் ஓடும் வாகன உற்பத்தி நிறுவனங்களிடையே மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பேட்டரியை ஒரு முறை சார்ஜ் செய்தால் 500 கி.மீ. தூரம் வரை பயணிக்க முடியும். அத்துடன் இதை சார்ஜ் செய்ய 10 நிமிடம் போதுமானது என்று டொயோட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது. தற்போது ஆட்டோமொபைல் நிறுவனங்கள் பேட்டரியில் ஓடும் வாகனங்களுக்காக லித்தியம் அயன் பேட்டரியை பயன்படுத்துகின்றன. இதில் நிலவும் பாதக அம்சங்களை ஆராய்ந்து குறைகளை போக்கும் வகையில் புதிய பேட்டரி உருவாக்கத்தில் டொயோட்டா தீவிரமாக ஈடுபட்டுள்ளது. குறுகிய தூரம் பயணிப்பதற்கு, விரைவாக சார்ஜ் ஆகும் வகையில் புதிய பேட்டரியை இந்நிறுவனம் வடிவமைத்து வருகிறது. இந்நிறுவனத்தின் ஸ்திரமான பேட்டரி விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.முதலில் மாதிரி வடிவத்தை அடுத்த ஆண்டு இந்நிறுவனம் வெளியிடும். இந்த பேட்டரியானது வழக்கமான லித்தியம் அயன் பேட்டரியை விட சிறப்பாக செயல்பட கூடியதாக இருக்கும்.…
Read More
ஆதார் அடிப்படையில் உடனடி இ-பான் கார்டு பெறுவது எப்படி ?

ஆதார் அடிப்படையில் உடனடி இ-பான் கார்டு பெறுவது எப்படி ?

2020-ம் ஆண்டு நிறைவடைய உள்ள நிலையில், நடப்பு ஆண்டில் பொது மக்களுக்காக அரசாங்கம் எடுத்த பல நடவடிக்கைகள் குறித்து மத்திய நிதி அமைச்சகம் அறிக்கை வெளியிட்டது. இதில் கொரோனா வைரஸ் தாக்குதலை அடுத்து மக்களின் வீடுகளுக்கு கிடைக்கப்பெற்ற பல முக்கியமான ஆவணங்களை நிதி அமைச்சகம் தனது ட்விட்டர் பக்கத்தில் பட்டியலிட்டுள்ளது. மேலும் நடப்பு ஆண்டு முடிவுக்கு வருவதால், அமைச்சகங்களால் மேற்கொள்ளப்பட்ட முன்னேற்றங்களுடன் முக்கிய முயற்சிகள் மற்றும் அறிவிப்புகள் குறித்து நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவின் மூலம் பார்க்கலாம் என்று நிதி அமைச்சகம் தனது ட்வீட்டர் பதிவில தெரிவித்துள்ளது. இதில் பான் பெறுவதற்கான செயல்முறையை இன்னும் எளிமையாக்குவதற்கு, குறிப்பாக கொரோனா பாதிப்பு காலத்தில், உடனடி பான் வசதி அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்படி மே 28, 2020 அன்று, ஆதார் எண் அடிப்படையிலான இ-கேஒய்சியைப் பயன்படுத்தும் உடனடி நிரந்தர கணக்கு எண் (பான்) வசதியை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தினார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.…
Read More
பத்திரிகைகளின் பி.டி.எப்.களை அனுப்புவோர் மீது நடவடிக்கை ?

பத்திரிகைகளின் பி.டி.எப்.களை அனுப்புவோர் மீது நடவடிக்கை ?

பெரும்பாலானோருடைய காலை நேரம், நாளிதழ்களுடன்தான் துவங்கும். காலத்துக்கு ஏற்ப, நாளிதழ்களிலும் மாற்றங்கள் ஏற்பட்டு உள்ளன. இ - பேப்பர், ஆன்லைன் மூலமாக பத்திரிகைகளை, செய்திகளை பார்க்கும் வசதி, வாசகர்களுக்கு வழங்கப்படுகிறது.அனைத்து மொழிப் பத்திரிகைகளும், இந்த மாற்றங்களை செய்து, உடனடி செய்திகளை வழங்கி வருகின்றன.இந்நிலையில், பி.டி.எப்., எனப்படும் கையடக்க ஆவண முறையில், பத்திரிகைகள் உலா வருகின்றன. அதாவது, பத்திரிகைகளை, 'போட்டோ' எடுத்து அல்லது பக்கத்தை அப்படியே, 'டவுன்லோடு' செய்து, பகிர்ந்து கொள்வதாகும்.இந்த சட்ட விரோத பகிர்வு, சமூக வலை தளங்களில் நடந்து வருகிறது. 'கொரோனா' வைரஸ் பரவல் காலத்தில், இவ்வாறு பத்திரிகைகளின் பி.டி.எப்., பகிர்ந்து கொள்வது அதிகரித்தது. பத்திரிகைகளை வாங்குவதால், வைரஸ் தொற்றி விடுமோ என்ற அச்சத்தில் மக்கள் இருந்தனர்.'பத்திரிகைகளால் வைரஸ் பரவாது; அனைத்து நிலைகளிலும் தகுந்த பாதுகாப்புடன்தான், பத்திரிகைகள் வீடுகளை சென்றடைய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது' என, பத்திரிகை நிறுவனங்கள் தெரிவித்தன. அதற்காகவே, பத்திரிகைகளை அச்சடிக்கும் இயந்திரத்தில் வைத்தே துாய்மைப்படுத்தி, 'பேக்'…
Read More
புகைப்பட வாக்காளர் அடையாள அட்டை மின்னணு வடிவத்தில் மாற்றம் !

புகைப்பட வாக்காளர் அடையாள அட்டை மின்னணு வடிவத்தில் மாற்றம் !

தேர்தல் ஆணையம் (EC) புகைப்பட வாக்காளர் அடையாள அட்டையை மின்னணு வடிவத்தில் மாற்ற ஆர்வமாக உள்ளது. அதாவது, விமான பயணத்தின் போது, காகிதம் அல்லாமல் அனைத்து கோப்புகளையும் மிண்ணனு மூலம் காண்பிக்கும்  இ- போர்டிங் பாஸ் போன்ற ஒரு முறையை தேர்தல் ஆணையம் செயல்படுத்த விரும்புகிறது. தேர்தலின்போது வாக்குச்சாவடியில் வாக்காளர்களை அடையாளம் காண வேண்டியது கட்டாயமாகும். புகைப்பட வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட்ட வாக்காளர்கள் புகைப்பட வாக்காளர்கள் அடையாள அட்டை மூலம் அடையாளம் காணப்படுவார்கள். எனவே, வாக்காளார்கள் தங்கள் அடையாள அட்டையை வாக்குச்சாவடிக்கு கொண்டு செல்வது முக்கியமாகும். புகைப்பட வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள், ஆதார், டிரைவிங் லைசன்ஸ் போன்ற  மாற்று புகைப்பட அடையாள ஆவணத்தைக் காட்டலாம். டிஜிட்டல் வாக்காளர் அடையாள அட்டையை எப்படி பெறுவது?  இந்த வசதியைப் பெற, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான விண்ணப்ப படிவத்தில் வழங்கப்பட்ட செல்பேசி எண் (அ) மின்னஞ்சல் முகவரியை வாக்காளார் பதிவு அதிகாரியிடம்…
Read More
குறைந்த விலையில் சூரிய சக்தி மின்சாரம்!

குறைந்த விலையில் சூரிய சக்தி மின்சாரம்!

ஏப்., 1, 2018ல், சூரிய சக்தி உற்பத்தி திட்டத்திற்கான விலையை மேலும் குறைத்து, புதிய அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது. 1 -- 10 கிலோ வாட் வரை தயாரிக்கும், யூனிட் அமைக்க, 1 கிலோ வாட்டுக்கு, 60 ஆயிரம் என்ற விகிதத்தில் நிர்ணயித்துள்ளது; இதில், 30 சதவீதம் மானியமாக தரப்படும்.அதேபோல், 11- 100 கிலோ வாட் வரை உற்பத்தி செய்யும் புராஜெக்டுக்கு, 1 கிலோ வாட்டுக்கு, 55 ஆயிரம் ரூபாய் என, நிர்ணயம் செய்துள்ளது. இதற்கும், 30 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது. அரசு மானியம் தருவதுடன், மூன்றாண்டு வரை அந்த புராஜெக்டை பராமரிப்பதும், ஒப்பந்ததாரர்களின் பொறுப்பு என, குறிப்பிட்டுள்ளது. சூரிய சக்தி உற்பத்திக்கு பயன்படும் இன்வெர்ட்டர், பேட்டரி களுக்கு ஐந்தாண்டுகள் வரை உத்தரவாதம் உள்ளது.வீடுகள், அப்பார்ட்மென்டுகள், கூட்டுறவு சங்கங்கள், கிளப்புகள், அறக்கட்டளைகளும், இந்த மானியத்தை பெறலாம். வியாபார நிறுவனங்களுக்கும், தொழிற்சாலைகளுக்கும் மானியம் கிடையாது; ஆனால் அவர்கள், வருமான வரி கட்டும் போது,…
Read More
சென்னையை ஜனநெரிசலிலிருந்து விடுவிக்கும் பணி இப்போது மிக மிக முக்கியம். !

சென்னையை ஜனநெரிசலிலிருந்து விடுவிக்கும் பணி இப்போது மிக மிக முக்கியம். !

இந்தியாவிலேயே கரோனா தொற்று வேகமாகப் பரவும் நகரங்களில் ஒன்றாக சென்னை உருவெடுத்திருப்பது ஒட்டுமொத்தத் தமிழர்களையும் கவலைக்குள் தள்ளியிருக்கிறது. நகரமயமாக்கலை வரித்துக்கொண்ட தமிழ்நாடு, அந்த நகரமயமாக்கலை அதிகாரப் பரவலாக்கலின் வழி மேற்கொண்டிருந்தால், அழகிய சென்னை இவ்வளவு ஜனநெரிசலும் சூழல் கேடும் மிக்க நகரமாக உருமாற்றப்பட்டிருப்பதைத் தவிர்த்திருக்கலாம். சாதாரண நாட்களில் இத்தகு விமர்சனங்களைப் பொருட்படுத்தாத ஆட்சியாளர்கள் இக்கட்டான காலங்களில் சென்னையை மேலும் ஆழ்ந்த சங்கடத்துக்கு ஆளாக்கிவிடுகிறார்கள். போகட்டும், சென்னையை ஜனநெரிசலிலிருந்து விடுவிக்கும் பணி இப்போது மிக மிக முக்கியம். ஜனநெருக்கடி மிக்க நகரங்கள் கரோனாவுக்கு மிக அதிகமான விலையைக் கொடுக்கின்றன. ஜனநெரிசல் மிக்க சென்னை நீர்ப் பிரச்சினையையும் எதிர்கொள்வது என்பது இங்கு நாம் எதிர்கொள்ளும் கூடுதல் சிக்கல். கரோனா போன்ற ஒரு தொற்றுநோய்க் காலகட்டத்தில் சுத்தத்தில் மக்கள் காட்டும் அக்கறை இயல்பாக நகரத்தின் தண்ணீர்ப் பயன்பாட்டை அதிகமாக்கும். கரோனாவைத் தவிர்க்கும் செயல்முறைகளில் முக்கியமானதாக அரசால் வலியுறுத்தப்படும் அடிக்கடி சோப்பு போட்டுக் கை கழுவும் முறையை…
Read More
உஷார்! இன்சூரன்ஸ் பணத்தை கோவிந்தா போடும் நிறுவனங்கள்; எளிதாக பணத்தை பெறுவதற்கான வழிமுறை இதோ..!

உஷார்! இன்சூரன்ஸ் பணத்தை கோவிந்தா போடும் நிறுவனங்கள்; எளிதாக பணத்தை பெறுவதற்கான வழிமுறை இதோ..!

டிரைவிங் என்பது நமக்கு மகிழ்ச்சியையும் சந்தோஷத்தையும் தருவது தான். ஆனால் இந்த பயணத்தின் போது விபத்து என்பது எதிர்பார்க்காத ஒன்று. ஒருவர் வாகனத்தில் செல்லும் போது விபத்து நடக்காமல் இருக்கும் என யாராலும் உறுதியாளிக்க முடியாது. விபத்து என்பது நீங்கள் போய் ஒருவர் மீது மோதுவது மட்டும் அல்ல உங்கள் கார் மீது மற்றவர் வந்து மோதுவது, நீங்கள் நிறுத்தி சென்ற கார் மீது வேறு ஒரு வாகனம் வந்து மோதுவது. ஏன் நிறுத்தி சென்ற வாகனம் மீது மரம் விழுந்து சேதமாவது. மழை வெள்ள நீரில் உங்கள் வாகனம் முழ்குவது என எல்லாமே விபத்துதான். இந்த விபத்துக்களால் ஏற்படும் நஷ்டத்தை ஒரளவிற்கு சமாளிக்கவும், உங்கள் வாகனத்தால் பிறருக்கு ஏற்படும் நஷ்டத்தை ஈடு செய்யவும் இந்த இன்சூரன்ஸை கட்டாயமாிக்கியுள்ளது. இந்த இன்ஸ்சுரன்ஸை பலர் எடுத்தும் அதை முறையாக கிளைம் செய்யதால் அவர்களுக்கு அதற்கான பலன் கிடைப்பதில்லை. இந்த செய்தியில் இன்சூரன்ஸின் கிளம்ப்…
Read More
வீடு இருக்கு ஆள் இல்லை! கவலையில் House Owners!! சென்னையில் வாடகை குறைந்தது!!!

வீடு இருக்கு ஆள் இல்லை! கவலையில் House Owners!! சென்னையில் வாடகை குறைந்தது!!!

கொரோனா ஊரடங்கால் வேலைவாய்ப்பை இழந்தவர்கள், சென்னையில் இருந்து வாடகை வீடுகளை காலி பண்ணிட்டு சொந்த ஊர்களுக்கு போய்ட்டாங்க., வீட்டு வாடகையை மட்டுமே நம்பியிருந்த கட்டட உரிமையாளர்கள் தவிப்புக்குள்ளாகி உள்ளனர். வீடுகள் இருந்தும், வாடகைக்கு ஆள் கிடைக்காமல் காத்திருக்கும் ஹவுஸ் ஓனர்களின் கவலை குறித்து தான் இந்த பதிவுல பார்க்கப் போகிறோம். சென்னையில் நல்ல தண்ணீர் வசதி, தடையில்லா மின்சார வசதி, கடை மற்றும் மருத்துவ வசதியுடன் முக்கியமான பகுதிகளில் நல்ல வீடு ஒன்று வாடகைக்கு கிடைப்பது குதிரைக் கொம்பாக இருந்து வந்தது. தற்போது கொரோனாவால் எல்லாமே தலைகீழாக மாறி விட்டது. கொரோனா அச்சம் காரணமாக லட்சக்கணக்கான வடமாநில தொழிலாளர்கள் இடம் பெயர்ந்துள்ள நிலையில், வெளி மாவட்டங்களில் இருந்து சென்னையில் தங்கி பணியாற்றிய ஏராளமான தொழிலாளர்களும் வேலை வாய்ப்பில்லாமல், தங்களுடைய சொந்த மாவட்டங்களுக்கு திரும்பியுள்ளனர். கடந்த மூன்று மாதங்களில் மட்டும் திடீரென லட்சம் பேர் இடம் பெயர்ந்ததால், சென்னையில் பல வீடுகள் காலியாகி…
Read More
பெந்தகோஸ்தே சபைகளின் யேசு வியாபாரம் ?

பெந்தகோஸ்தே சபைகளின் யேசு வியாபாரம் ?

21 ம் நூற்றாண்டின் மிகப்பெரும் அச்சுறுத்தல்களில் ஒன்று நூற்றுக்கணக்கான பெந்தகோஸ்தே சபைகள் மூலமாக கோடிக்கணக்கான கோடி டாலர்கள் இறைக்கப்பட்டு இந்தியா போன்ற நாடுகளில் செய்யப்படும் யேசு வியாபாரம் தான். பெரு நகரங்களில் தொடங்கி இந்தியாவின் பட்டி தொட்டியெல்லாம் ஆசிர்வாத பெருவிழா, எழுப்புதல் விழா, சுவிசேஷ பெருவிழா என பலவிதமான பெயர்களில் அரங்கேறிவரும் அராஜகத்தை தட்டி கேட்க யாருமே துணிந்ததில்லை துணியப் போவதும் இல்லை. கருத்து சுதந்திரம் குறித்து பேசும் எந்த ஊடகவியலாளரோ, படைப்பு சுதந்திரம் குறித்து பேசும் எந்த சினிமா இயக்குனரோ, இந்த மாபெரும் அராஜகம் குறித்து வாயைத் திறப்பதே இல்லை. ஆனால் சமீபத்தில் வெளியான ஒரே ஒரு திரைப்படம் அந்த குறையை தீர்த்து விட்டது. அதுதான் TRANCE என்னும் மலையாள திரைப்படம். துரதிஷ்டவசமாக கொரானா பிரச்சனையால் இந்த படம் குறித்து இன்னும் பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. அச்சு அசல் ஒரு சுவிசேஷக் கூட்டத்தின் பின்னணியில் என்ன நடந்து கொண்டிருக்கிறதோ, அதை…
Read More
லஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி ?

லஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி ?

லஞ்ச ஒழிப்பு துறை அமைப்பானது, முற்றிலும், சென்னையில் தலைமைச்செயலகத்தில் இயங்கி வரும் CHIEF SECRETARY அந்தஸ்த்தில் உள்ள VIGILANCE COMMISSIONER- அவர்களின் கட்டுப்பாட்டிலும், சென்னை ஆலந்தூரில் உள்ள DGP அல்லது ADDL.DGP அந்தஸ்த்தில் உள்ள,ஒரு மூத்த IPS அதிகாரியின் தலைமையில் இயங்கிவரும்,DVAC என்றழைக்கப்படும் Directorate of Vigilance and Anti-Corruption என்ற இயக்குநரகத்தின் கட்டுப்பாட்டிலும் மட்டும்தான் செயல்படுகின்றனர். லஞ்ச ஒழிப்புச்சட்டம்-என்று அழைக்கப்படும் PREVENTION OF CORRUPTION ACT 1988- பிரிவு-2 பிரகாரம், அரசுப்பணியில் உள்ள அரசு ஊழியர்கள் மட்டுமின்றி, மக்களால் பொதுப்பணிக்கென தேர்ந்தெடுக்கப்படும், பஞ்சாயத்துப் போர்டு தலைவர், வார்டு உறுப்பினர்கள், நகரம், மாவட்டம் மற்றும் முனிசிபல் கவுன்சிலர்கள், சேர்மேன் மற்றும் அரசு நிர்வாகத்தில் உள்ள அனைத்து மக்கள் பிரதிநிதிகளும்- PUBLIC SERVANTS என்ற வரையரறைக்கு, உட்பட்டவர்கள்தான். லஞ்சத்தில் பலவகைகள் உண்டு. அவை கள்ளச்சாரயம், சூதாட்டங்கள், ப்ராத்தல் ஹவுஸ்கள், கலப்படங்கள், கட்டப்பஞ்சாயத்துக்கள், இன்னும் பல. எப்படி புகார் அளிப்பது ? லஞ்சம்கொடுத்தால்தான் வாயையே…
Read More