செய்திகள்

A wonderful serenity has taken possession of my entire soul, like these sweet mornings of spring which I enjoy with my whole heart.

மத்திய அரசின் விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் ? எந்தெந்த தொழில்களுக்கு அனுமதி ?

மத்திய அரசின் விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் ? எந்தெந்த தொழில்களுக்கு அனுமதி ?

இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு மே 3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், ஊரடங்கு தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதில் உள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:- * ஏப்ரல் 20ஆம் தேதி முதல் அனைத்துவிதமான விவசாயப் பணிகளையும் மேற்கொள்ள அனுமதி. * கொள்முதல் நிலையங்கள் செயல்பட தடையில்லை. * மீன்பிடித் தொழில் மற்றும் மீன் விற்பனைக்கு அனுமதி. * தேயிலை, காஃபி, ரப்பர் உற்பத்திப் பணிகளை 50 சதவீத ஊழியர்களுடன் மேற்கொள்ளலாம். * பால் உற்பத்தி மற்றும் விநியோகம் வழக்கம் போல நடைபெறலாம். * ரிசர்வ் வங்கியின் விதிமுறைகள்படி வங்கிகள், ஏ.டி.எம்-கள் செயல்படும். * கல்வி நிறுவனங்கள் ஆன்-லைன் மூலம் வகுப்புகளை நடத்தலாம். * அத்தியாவசியப் பொருள் உற்பத்தி நிறுவனங்கள் இயங்க தடை இல்லை. * ஏப்ரல் 20ஆம் தேதி முதல் 100 நாள் வேலை திட்டத்திற்கு அனுமதி. * 100 நாள் வேலை திட்டத்தின்போது சமூக இடைவெளியை…
Read More
பஜாஜ் மற்றும் கேடிஎம் கூட்டணியில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம் !

பஜாஜ் மற்றும் கேடிஎம் கூட்டணியில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம் !

எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை உருவாக்க பஜாஜ் ஆட்டோ மற்றும் கேடிஎம் நிறுவனங்கள் கூட்டணி அமைத்து இருக்கின்றன.பஜாஜ் ஆட்டோ மற்றும் கேடிஎம் நிறுவனங்கள் இணைந்து எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இரு நிறுவனங்கள் கூட்டணியில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மட்டுமின்றி, மோபெட்களும் மோட்டாரைஸ்டு சைக்கிள்களும் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன.தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களின் படி புதிய வாகனங்கள் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படும் என கூறப்படுகிறது. உற்பத்தி பணிகள் பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் சக்கன் ஆலையில் 2022 ஆம் ஆண்டு வாக்கில் துவங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் உள்நாட்டு விற்பனை மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட இருப்பதாக கூறப்படுகிறது. பவர்டு டு வீலர் சிட்டம் பைரெர் மொபிலிட்டி குழுமம் மற்றும் பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தால் துவங்கப்பட்டன. இந்த திட்டத்தின் கீழ் 3 முதல் 10 கிலோவாட் வரையிலான திறன் கொண்ட எலெக்ட்ரிக் வாகனங்களை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளன. பஜாஜ்…
Read More
ஊடரங்கிற்கு பிறகு தொழில் நிறுவனங்கள் முழுவீச்சில் செயல்பட மத்திய அரசு நடவடிக்கை: நிதின் கட்கரி உறுதி

ஊடரங்கிற்கு பிறகு தொழில் நிறுவனங்கள் முழுவீச்சில் செயல்பட மத்திய அரசு நடவடிக்கை: நிதின் கட்கரி உறுதி

கரோனா காரணமாக அமலில் உள்ள ஊரடங்கு விலக்கிக் கொள்ளப்பட்ட பிறகு தொழில்களை மீண்டும் முழுவீச்சில் தொடங்குவதற்கு மத்திய அரசு முழு ஆதரவு அளிக்கும் என்று தொழில்துறை நிறுவனங்களுக்கு கட்காரி உறுதி அளித்துள்ளார். மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை மற்றும் சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கான மத்திய அமைச்சர் நிதின் கட்காரி, இந்தியத் தொழில் வணிகக் கூட்டமைப்பு பிரதிநிதிகளுடன் காணொலி காட்சி வாயிலாக பங்கேற்று பேசினார். அப்போது அரசு மேற்கொண்டுள்ள பல்வேறு நிதி சார்ந்த முடிவுகள் குறித்து தெரிவித்தார்.குறித்த கால கடன்கள் மற்றும் தொழிலைத் தொடர்ந்து நடத்துவதற்கான பணி மூலதனக் கடன்கள் ஆகியவற்றை மறுசீரமைப்பதற்கு இந்திய ரிசர்வ் வங்கி அனுமதியளித்துள்ளது என்றும் கட்காரி தெரிவித்தார். சிறு, குறு, நடுத்தரத்தொழில்கள் பற்றி பேசிய கட்காரி, அவர்களின் சிரமங்கள் குறித்தும், நாட்டின் பொருளாதாரத்திற்கு அவர்கள் எவ்வளவு முக்கியம் என்பதையும் அரசு அறியும் என்றும் கூறினார். அரசு மற்றும் வங்கித் துறையுடன் இணைந்து,…
Read More
சீனாவை விட்டு வெளியேறும் பெரிய நிறுவனங்கள்! ஜப்பான் நிவாரண நிதி !!

சீனாவை விட்டு வெளியேறும் பெரிய நிறுவனங்கள்! ஜப்பான் நிவாரண நிதி !!

கொரோனா' பிரச்னையால் உலகமே துவண்டு போய் கவிழ்ந்து கிடக்கிறது. நித்தம் நித்தம் ஒரு பொருளாதார பிரச்னை உருவாகி கொண்டிருக்க, இப்போது, சீனாவுக்கு எதிராகவே சில விஷயங்கள் நடக்க ஆரம்பித்து விட்டன. 'கொரோனா' பிரச்னையால், உலகப் பொருளாதாரம் சிக்கலில் மாட்டியிருக்கிறது. நியூயார்க், மும்பை, பெய்ஜிங் உட்பட பல்வேறு பங்கு சந்தைகள், கடும் வீழ்ச்சியை சந்தித்தன. ஆனால், இதை சாதகமாக பயன்படுத்தி, சீனாவின் பல முன்னணி நிறுவனங்கள், உலகம் முழுவதும் உள்ள மற்ற நாட்டு நிறுவனங்களின் பங்குகளை அதிகம் வாங்கி குவித்தன. இதனால், அந்த நிறுவனங்கள், சீனாவின் கட்டுப்பாட்டுக்குள் செல்லும் நிலை ஏற்பட்டது. இது, அமெரிக்காவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், சீனாவுக்கு எதிராக சில காய்களை நகர்த்த துவங்கியிருக்கிறது ஜப்பான். உலகின் மிகப்பெரிய உற்பத்தி நாடாக சீனா விளங்குகிறது. உலகின் அதிகமான உணவு பொருட்களை அதுதான் உற்பத்தி செய்கிறது. ஆனால், இந்த ஆண்டு, சீனா 'கொரோனா' வைரஸ்களை ஏற்றுமதி செய்து விட்டது என்று உலக…
Read More
வளர்ச்சிப் பாதையில் தமிழக மின் வாரியம்! 3 ஆண்டுகளில் 2,788 மெகாவாட் உற்பத்தி !!

வளர்ச்சிப் பாதையில் தமிழக மின் வாரியம்! 3 ஆண்டுகளில் 2,788 மெகாவாட் உற்பத்தி !!

தமிழக மின்வாரியம் வளர்ச்சிப்பாதையில், பயணித்து வருகிறது. கடந்த முன்று ஆண்டுகளில், பல்வேறு திட்டங்களால், 2,788 மெகாவாட் மின் உற்பத்தி அதிகரிக்கப்பட்டுள்ளது.தமிழக மின்வாரியம், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் மற்றும் தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகம் என, மறு சீரமைக்கப்பட்டு, நுகர்வோருக்கு மின் சேவை வழங்கி வருகிறது. மாநிலத்தில், மொத்தம், மூன்று கோடியே மூன்று லட்சம் மின் நுகர்வோர் உள்ளனர். மாநில மின் தேவையை பூர்த்தி செய்ய, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், 18 ஆயிரத்து 500 மெகாவாட் மின் நிறுவு திறனை பெற்றுள்ளது. இது தவிர, மரபு சாரா எரிசக்தி ஆதாரங்களான காற்றாலை, சூரிய சக்தி, தாவரக்கழிவு மற்றும் இணை மின் உற்பத்தி திட்டங்கள் வாயிலாக, 13 ஆயிரத்து 395 மெகாவாட் மின் நிறுவுத் திறன் பெற்றுள்ளது. இந்த மின் பகிர்மான கட்டமைப்பு, 1,770 துணை மின்நிலையங்கள், 3.23 லட்சம் பகிர்மான மின்மாற்றிகள், 34 ஆயிரத்து…
Read More
உலக சுகாதார நிறுவனத்துக்கான நிதி ! முடக்கினார் டொனால்ட் டிரம்ப் !

உலக சுகாதார நிறுவனத்துக்கான நிதி ! முடக்கினார் டொனால்ட் டிரம்ப் !

கொரோனா வைரஸ் விவகாரத்தில் அடுத்த அதிரடியாக உலக சுகாதார நிறுவனத்துக்கான (WHO) நிதியை முடக்குவதாக அறிவித்துள்ளார் அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப்.சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகையே பேரழிவுக்குள்ளாக்கி வருகிறது. கொரோனா வைரஸால் மிக மோசமான அழிவுகளை சந்தித்து உள்ளது அமெரிக்கா.இந்த நிலையில் ஐ.நா.வின் உலக சுகாதார அமைப்பு நிறுவனம் மீது அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறார். சீனாவுடன் கை கோர்த்துக் கொண்டு உலக சுகாதார நிறுவனம் செயல்படுகிறது எனவும் சீறி இருந்தார் டிரம்ப். மேலும் அந்த அமைப்புக்கான நிதியை நிறுத்தப் போவதாகவும் டிரம்ப் எச்சரித்திருந்தார். இதற்கும் உலக சுகாதார நிறுவனம் பதிலடி கொடுத்திருந்தது.இந்த நிலையில் உலக சுகாதார நிறுவனத்துக்கான நிதியை நிறுத்தி வைப்பதாக டிரம்ப் அதிரடியாக அறிவித்திருக்கிறார். கொரோனா வைரஸ் விவகாரத்தில் உலக சுகாதார நிறுவனம் தனது கடமையை செய்ய தவறிவிட்டது என்றும் டிரம்ப் குற்றம்சாட்டியுள்ளார். அமெரிக்காவில் கொரோனா மிக உக்கிரம் - உயிரிழந்தோர்…
Read More
பத்திரிகைகள் குரலை ஒடுக்க முடியாது ! உச்ச நீதிமன்றம் !!

பத்திரிகைகள் குரலை ஒடுக்க முடியாது ! உச்ச நீதிமன்றம் !!

டில்லியில், கடந்த மாதம், தப்லிக் ஜமாத் கூட்டத்தில் பங்கேற்ற பலர் கொரோனா பாதிப்பிற்கு ஆளாகியது குறித்து பத்திரிகைகள் செய்தி வெளியிட்டன. இது தொடர்பாக, ஜமாத் உலேமா ஹிந்த் என்ற அமைப்பு, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. அந்த மனுவில், பத்திரிகைகளில் ஒரு பிரிவினர், கொரோனா பரவலுக்கு, தப்லிக் ஜமாத் கூட்டம் தான் காரணம் என்பது போல, பொய் செய்திகளை வெளியிட்டு, சமூகத்தில் வெறுப்புணர்வை பரப்புகின்றன. இது, ஒட்டுமொத்த முஸ்லிம் மக்கள் மீதான குற்றச்சாட்டாக பார்க்கப்படுகிறது. எனவே, இது தொடர்பான செய்திகளை வெளியிட, பத்திரிகைகளுக்கு தடை விதிக்க வேண்டும் என, கூறப்பட்டிருந்தது. இந்த மனுவை, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, எஸ்.ஏ.,பாப்டே தலைமையிலான அமர்வு, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக விசாரித்தது. அப்போது அமர்வு பிறப்பித்த உத்தரவு: பத்திரிகைகளின் குரலை நாங்கள் ஒடுக்க மாட்டோம். அதனால், இடைக்கால தடை விதிக்க முடியாது. இந்த வழக்கில், இந்திய பிரஸ் கவுன்சிலை சேர்க்குமாறு, மனுதாரர் விண்ணப்பிக்கலாம்.…
Read More
ஜன்தன் வங்கி கணக்கு வங்கிகளில் குவிந்த மக்கள் கூட்டம் !

ஜன்தன் வங்கி கணக்கு வங்கிகளில் குவிந்த மக்கள் கூட்டம் !

நாடு முழுதும், ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. அவசிய தேவை இல்லாமல், வாடிக்கையாளர்கள் நேரில் வர வேண்டாம் என, வங்கிகள் அறிவுறுத்தி உள்ளன.இந்த நிலையில், ஜன்தன் கணக்குகளில் வரவு வைக்கப்பட்ட, மத்திய அரசின் உதவித் தொகையையும், முதியோர் உதவித் தொகையையும் எடுக்க, வங்கிகளில், நேற்று கூட்டம் அலைமோதியது.வங்கி அதிகாரிகள் கூறியதாவது:ஜன்தன் கணக்குகளில் வரவு வைக்கப்பட்ட, மத்திய அரசின் உதவித் தொகையை பெற, வாடிக்கையாளர்கள், அதிக அளவில் வந்தனர்.இதேபோல, முதியோர் உதவித் தொகை பெற, முதியோர்கள், நேற்று அதிகளவில் வந்தனர். இதுதவிர, தொடர்ந்து, மூன்று நாட்கள் வங்கி விடுமுறை விடப்பட்டதும், வாடிக்கையாளர்கள் கூட்டம், அதிகளவில் வந்ததற்கு, ஒரு காரணம். இவ்வாறு, அவர்கள் கூறினர். காலாவதியான கணக்குஉயர் பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின் துவங்கிய, ஜன்தன் வங்கிக் கணக்குகளை, வாடிக்கையாளர்கள் முறையாக பராமரிக்கவில்லை.இதனால், பெரும்பாலானோர் கணக்குகள், காலாவதியாக விட்டன. அந்த கணக்கை மீண்டும் செயல்படுத்த, கணக்கில் குறைந்த தொகையை செலுத்த வேண்டும். இதற்கு, வாடிக்கையாளர்களின்,…
Read More
தன்னார்வலர்கள் உணவு வழங்க தடையில்லை ! முதல்வர் பல்டி !!

தன்னார்வலர்கள் உணவு வழங்க தடையில்லை ! முதல்வர் பல்டி !!

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், சுனாமி, பெரு வெள்ளம், ஒகி புயல், வர்தா புயல் போன்ற பேரிடர் காலங்களில் பொது மக்களின் வீடுகள், தினசரி உபயோகப் பொருட்கள், வாழ்வாதாரம் போன்றவை இழந்து நின்ற சோதனையான காலகட்டத்தில் தன்னார்வலர்கள் மற்றும் அமைப்புகள் செய்த பணிகள் மகத்தானது. அதை தமிழ்நாடு அரசு மனமுவந்து பாராட்டியதே தவிர, நிவாரணம் வழங்க எந்த ஒரு கட்டுப்பாடும் விதிக்கவில்லை. அப்போதைய சூழ்நிலையில், பொது மக்கள் கூடுவதற்கு எந்த ஒரு தடை உத்தரவும் கிடையாது. ஆனால் தற்போது, இந்த பேரிடர், கொடிய வைரஸ் தொற்றினால் ஏற்பட்டுள்ளது. இதன் விளைவுகளை எல்லோரும் அறிவோம். இந்தத் தொற்று யாரிடம் உள்ளது, அது எப்போது, யாருக்கு யார் மூலம் பரவும் என தெரியாதநிலையில், நோய்த் தொற்றினை தவிர்க்க வேண்டும் என்ற ஒரே நல்ல எண்ணத்தில் தான், கூட்டம் கூடுவதைத் தவிர்க்கவும், இயல்பான நகர்வுகளுக்கும், தற்போது 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தச்…
Read More
ஊரடங்கின்போது வழக்கில் சிக்கியவர்கள் தடையில்லா சான்று பெறுவதில் சிக்கல் ?

ஊரடங்கின்போது வழக்கில் சிக்கியவர்கள் தடையில்லா சான்று பெறுவதில் சிக்கல் ?

ஊரடங்கின்போது வழக்கில் சிக்கியயோர் தடையில்லா சான்று பெறுவதில் சிக்கல் ஏற்படும் என்பதால் எதிர்காலத்தை நினைத்து இளைஞர்கள் தேவையின்றி வெளியில் வருவதைத் தவிர்க்க வேண்டும் என காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க, ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த ஊரடங்கை அமல்படுத்துவதில் மதுரையில் போலீஸார் இரவு, பகல் பாராமல் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.சாலைகள் வெறிச்சோடியதால் இளைஞர்கள் பலர் ஜாலியாக சுற்றுகின்றனர். வேறு வழியின்றி அத்தியவாசியப் பொருட் கள் வாங்குவோர் தவிர, தேவையின்றி வாகனங்களில் சுற்றும் இளைஞர்கள் மீது பொது ஊடரங்கை மீறுதல் (சட்டப் பிரிவு 188), கொள்ளை நோயைப் பரப்புதல் வகையில் கவனக்குறைவுடன் நடப்பது (ச-பி 269), நோயைப் பரப்பும் நோக்கில் அலட்சியம் செய்தல் (ச-பி 270) பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கின்றனர். இந்நிலையில் தென்மண்டலத்தில் மதுரை புறநகர், திண்டுக்கல், தேனி, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, நெல்லை புறநகர், நாகர்கோவில், தென்காசி மாவட்டங்களில் நேற்று…
Read More