செய்திகள்

A wonderful serenity has taken possession of my entire soul, like these sweet mornings of spring which I enjoy with my whole heart.

வங்க கடலில் வருகிறது காற்றாலை மின் உற்பத்தி மையம் !

வங்க கடலில் வருகிறது காற்றாலை மின் உற்பத்தி மையம் !

தமிழ்நாட்டில் கடலில் காற்றாலை மின் உற்பத்தி மையங்களை அமைக்கும் முடிவை அரசு எடுத்துள்ளது. இதற்காக டென்மார்க் நாட்டுடன் தமிழ்நாடு அரசு ஒப்பந்தம் போட உள்ளது. இந்தியாவிற்கான டென்மார்க் தூதுவர் ஃபெரிடி ஸ்வான் உடன் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின்  சந்திப்பு நடத்தினார். அமைச்சர்கள் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், தங்கம் தென்னரசு ஆகியோரும் இந்த சந்திப்பில் உடன் இருந்தனர்.  தமிழ்நாட்டை ஒட்டி இருக்கும் வங்கக்கடல் பகுதியில் மிகப்பெரிய காற்றாலை மின்சார திட்டத்தை கொண்டு வரும் வகையில் இந்த சந்திப்பு நடந்தது. இந்த ஆலோசனையின் முடிவில் கடலில் காற்றாலை அமைப்பதற்கான இடமும் தேர்வு செய்யப்பட்டுள்ளதாம்.  தமிழ்நாட்டில் கடலில் காற்றாலை வைத்து அதன் மூலம் மின்சாரம் தயாரிக்கும் திட்டத்திற்கு அரசு டென்மார்க்கை அணுக முக்கிய காரணம் இருக்கிறது. உலகிலேயே சொந்த நாட்டு மின்சார உற்பத்தியில் காற்றாலை மூலம் அதிக மின்சாரம் உற்பத்தி செய்யும் நாடு டென்மார்க்தான். 1970ல் இருந்து டென்மார்க் காற்றாலை உற்பத்தியில் நம்பர் 1 நாடாக…
Read More
உற்பத்தி செய்யாத மின்சாரத்துக்கு மாதம் 180 கோடி செலவு!

உற்பத்தி செய்யாத மின்சாரத்துக்கு மாதம் 180 கோடி செலவு!

கிடப்பில் போடப்பட்ட இராமநாதபுரம் உப்பூர் அனல் மின்நிலையம் உற்பத்தி செய்யாத மின்சாரத்துக்கு மாதம் 180 கோடி செலவு! ! திமுக ஆட்சிக்கு வரும் போதெல்லாம், புதிய மின் திட்டங்கள் வடிவமைக்கப்பட்டு, திட்டங்கள் தீட்டி முறையாக நிதி ஒதுக்கீடு செய்வதும், அடுத்து வருகின்ற அதிமுக ஆட்சியில் அத்திட்டங்கள் முடிவுக்கு கொண்டு வருவதும் கடந்த காலத்தில் நாம் கண்ணால் கண்ட சம்பவங்கள். 2006 - 2011 திமுக ஆட்சியில், அப்போதைய முதல்வர் கலைஞர் அவர்கள் கொண்டு வந்த திட்டங்கள் மூலம், 2011 - 2016 ஆட்சிப் பொறுப்பிலிருந்த அதிமுக ஆட்சியில், அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அவர்கள் மின்தடை பிரச்சினையின்றி சமாளித்து வந்தார். 2016 சட்டப்பேரவைத் தேர்தல் தொடங்கும் முன்னர், 24.02.2016 இல் உலக தொழில் முனைவோர் மாநாடு என்ற ஒன்றை மிகப்பெரிய விளம்பரத்துடன் நடத்திய நிகழ்வு முடிவுற்ற மூன்றாம் நாள் 27.02.2016 அன்று, இராமநாதபுரம் மாவட்டம் உப்பூரில் 995.16 ஏக்கர் பரப்பில் ரூ.12 ஆயிரத்து…
Read More
டாஸ்மாக் அரசாங்காத்தின் ஒரு மிகப் பெரிய வறுமை உண்டாக்கும் திட்டமாகும்

டாஸ்மாக் அரசாங்காத்தின் ஒரு மிகப் பெரிய வறுமை உண்டாக்கும் திட்டமாகும்

இந்தியாவில் தமிழ்நாட்டிலும், குஜராத் மாநிலத்திலும் மது விலக்கு அமலில் இருந்தது. தமிழ்நாட்டின் அண்டை மாநிலங்களான ஆந்திரா, பாண்டிச்சேரி, கர்நாடகம் உள்பட பக்கத்து மாநிலங்களில் மது விலக்கு அமலில் இல்லாமல் இருந்தது. புதிதாக மது விலக்கை அமல் படுத்தும் மாநிலங்களுக்கு மானியம் வழங்கப்படும் என்று அன்றைய மத்திய அரசு அறிவித்தது. ”எங்களுக்கும் மானியம் வழங்குங்கள்” என்று, அன்றைக்கு தமிழக முதல்வராக இருந்த கருணாநிதிஅவர்கள் கேட்டாரு. ”ஏற்கனவே மது விலக்கை அமுல் படுத்தி வரும் மாநிலங்களுக்கு மானியம் கிடையாது” என்று மத்திய அரசு கூறிவிட்டது. ஏற்கனவே மது விலக்கை அமல் படுத்தும் மாநிலங்களுக்கு இப்படி தண்டனை அளிப்பதா? எங்களுக்கும் மானியம் கொடுங்கள் என்று கருணாநிதிஅவர்கள் மீண்டும் கேட்டும், அவருடைய கோரிக்கை ஏற்கப்படவில்லை. இதனால் மது விலக்கை ரத்து செய்துவிட்டு, பிறகு (மத்திய அரசு மானியம் கிடைக்கும்போது) மீண்டும் அமலுக்குக் கொண்டுவர முடிவு செய்தார் . மதுவிலக்கை ரத்துசெய்ய கருணாநிதிஅவர்கள் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் ராஜாஜி அவர்களுக்கு கிடைத்தது.​…
Read More
ஸ்மார்ட்போன் மார்க்கெட்டை தகர்த்தெரிய வரும் Samsung Galaxy F62!

ஸ்மார்ட்போன் மார்க்கெட்டை தகர்த்தெரிய வரும் Samsung Galaxy F62!

இன்றைய Gen Z மக்களின் வாழ்க்கை முறை டிஜிட்டல் யுகத்தால் பிணைக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற வாழ்க்கை முறையில் தொழில்நுட்பத்தை மிகவும் நம்புகிறார்கள். அதனைப் பயன்படுத்திக்கொண்டு தங்கள் வாழ்க்கையையும் நன்றாக அமைத்துக்கொள்கிறார்கள். எத்தனை பேர் ஸ்மார்ட்போனில் டிஜிட்டல் முறையில் தங்களை வேலையைச் செய்கிறார்கள். இவர்களில் பெரும்பாலானோர் தங்கள் வாழ்க்கையை சமூக ஊடங்களுடன் இணைத்துக்கொண்டுள்ளனர். இந்த தலைமுறை வேகம் மற்றும் நல்ல தொழில்நுட்பத்தை நாடுகிறது. மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டுள்ள Samsung #FullOnSpeedy வாழ்க்கைக்கான புதிய Galaxy F62 ஸ்மார்ட்போனை கொண்டு வந்துள்ளது. Samsung எப்போதுமே ஒரு புதுமையான பயணத்திற்கு உறுதியளிக்கிறது. Galaxy F62 மொபைல் இந்த பயணத்தில் மறக்கமுடியாத மற்றொரு மைல்கல். ஃபிளாக்‌ஷிப் 7nm Exynos 9825 பிராசசரை மிட்-ரேச் ஸ்மார்ட்போனான Samsung Galaxy F62 மொபைலில் அறிமுகப்படுத்துவது மற்றொரு மிகப்பெரிய அம்சமாகும். இதிலுள்ள 7000mAh பேட்டரி இந்த இன்பத்தை இரட்டிப்பாகும் என்றது உறுதிஇந்த ஸ்மார்ட்போனின் விற்பனை பிப்ரவரி 22 முதல் தொடங்குகிறது. Samsung Galaxy…
Read More
மின்சார கட்டணத்தில் நூதனமான முறையில் மோசடி?

மின்சார கட்டணத்தில் நூதனமான முறையில் மோசடி?

தமிழ்நாட்டில் வீட்டு உபயோகத்திற்கான மின்சார கட்டணம் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை கணக்கெடுக்கப்பட்டு வசூல் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, முதல் 100 யூனிட்டுகள் இலவசம் அதற்கு மேல் பயன்படுத்தினால் அதற்கான கட்டணம் டெலஸ்கோபிக் டாரிஃப் என்ற முறையில் கணக்கிடப்படுகிறது. அதாவது, ஒருவர் 200 யூனிட்டுகள் பயன்படுத்தினால், முதல் 100 யூனிட்டுகள் இலவசம் அதற்கு மேல் உள்ள 101-200 யூனிட்டுகளுக்கு ஒரு யூனிட்டின் விலை ரூ.1.5 என்ற வீதத்தில் ரூ.150 அத்துடன் நிலையான கட்டணம் ரூ.20 சேர்த்து மொத்தமாக ரூ.170 வசூல் செய்யப்பட்டு வருகிறது. அதுவே, ஒருவர் 510 யூனிட்டுகள் உபயோகித்தால், முதல் 100 யுனிட்டுகள் இலவசம் அதற்கு மேல் 101-200 யூனிட்டுகளுக்கு ஒரு யூனிட்டின் விலை ரூ.1.5க்கு பதிலாக ரூ.3.50ஆக அதிகரிக்கும். அப்படிப்பார்த்தால் 101-200 யூனிட்டுகளுக்கு ரூ.350 என்று கணக்கில் கொள்ளப்படும். 201-500 யூனிட்டுகளுக்கு ஒரு யூனிட்டின் விலை ரூ.4.60 என்ற வீதத்தில் ரூ.1,380, 500-510 யூனிட்டுகளுக்கு ஒரு யூனிட்டின் விலை ரூ.6.60 என்ற வீதத்தில்…
Read More
5 ஆயிரம் வகை உணவுகளை  சமைக்கக் கற்றுக் கொள்ளும் மோலி ரோபோ !

5 ஆயிரம் வகை உணவுகளை சமைக்கக் கற்றுக் கொள்ளும் மோலி ரோபோ !

இதுவரை நமக்கு அறிமுகமான சமையல் செய்யும் ரோபோக்கள் எல்லாம் வெறும் உதவியாளர் ரகங்கள் தான். அதிகபட்சம், மது காக்டெயில்கள், காபி, தேனீர் பானங்களை கலந்து தரும் அளவுக்குதான் அவற்றுக்கு அறிவு உண்டு. ஆனால், பிரிட்டனை சேர்ந்த, 'மோலி' என்ற ரோபோ வித்தியாசமானது.ஆறு ஆண்டுகளுக்கு முன், உணவகங்களுக்கான ரோபோவாக மோலியை உருவாக்கி வருவதாக அதன் படைப்பாளிகள் அறிவித்தனர். தற்போது, ஒரு குடும்பத்திற்கு தேவையான சமையல்களை செய்யும் திறனுடன், வீடுகளுக்கு செல்ல மோலி தயாராகியிருப்பதாக, 'மோலி ரோபோடிக்ஸ்' நிறுவனம் அறிவித்துள்ளது. மோலிக்காகவே மாடுலர் சமையல் அறை உருவாக்கப்படும். அந்த சமையலறையின் உத்தரத்தில் மோலியின் ஆக்டோபஸ் போன்ற ரோபோ கரங்கள் பொருத்தப்படும். அந்தக் கரங்கள் இடமும், வலமுமாக வேகமாக நகருவதோடு, நாலா பக்கமும் லாவகமாக அசையும் திறன் கொண்டவை. மோலியின் செயற்கை நுண்ணறிவு மூளை, கேமரா வழியேயும், அதன் விரல்களில் உள்ள உணரிகள் வழியாகவும் உணர்ந்து, உரிய இடத்தில் வைத்துள்ள பாத்திரங்கள், கரண்டிகள், உணவுப் பொருட்களை…
Read More
தலைமை அதிகாரிகளை உருவாக்கும் தொழிற்சாலை இந்துஸ்தான் யுனிலீவர் !

தலைமை அதிகாரிகளை உருவாக்கும் தொழிற்சாலை இந்துஸ்தான் யுனிலீவர் !

இந்துஸ்தான் யுனிலீவரின் சுதீர் சீதாபதி நிர்வாக இயக்குனர், தான் யுனிலீவர் நிறுவனத்தில் கற்றுக்கொண்ட நிர்வாக பாடங்கள் பற்றி எழுதியுள்ள புத்தகம் CEO FACTORY.இந்த புத்தகத்தில் இந்துஸ்தான் யுனிலீவர் நிறுவனத்தின் வரலாறு, மார்க்கெட்டிங் விளம்பரத்துறை, விற்பனை பொருள்கள், செலவு மேலாண்மை , மனிதவளம், நிறுவனத்தின் மதிப்புகள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு போன்ற பல்வேறு செயல்பாடுகளைப் பற்றிய விவரங்களைக் காணலாம். இந்திய கார்ப்பரேட் சந்தைக்கு இந்துஸ்தான் யுனிலீவர் வழங்கியது போல் அதிகமான தலைமை நிர்வாக அதிகாரிகளை வேறு எந்த நிறுவனமும் கொடுக்கவில்லை. அதனால்தான் இந்த புத்தகத்திற்கு தலைமை அதிகாரிகளை உருவாக்கும் தொழிற்சாலை CEO FACTORY என பெயர் வைத்திருக்கிறார். இந்துஸ்தான் யுனிலீவரின் வெற்றிக்கான மந்திரங்களை புத்தகம் எங்கும் காணலாம். பொதுவாக விளம்பரம் என்பது சந்தைப்படுத்தலின் கவர்ச்சியான பகுதியாகும். விளம்பரம் என்பது வணிக மேலாண்மையில் ஒரு பகுதி. வாடிக்கையாளர்களுடன் சிறந்த முறையில் தொடர்பு கொள்வதற்கான ஒரு சாதனம். இந்நிறுவனம் ஆண்டொன்றுக்கு சுமார் 3,500 கோடி ரூபாய்களை விளம்பரத்தில் செலவழிக்கிறது. யூனி லீவரின் மொத்த செலவினங்களில் 15…
Read More
எஸ்பிஐ ஜெனரல் இன்சூரன்ஸ் தமிழ்நாடு கிராம வங்கியுடன் கார்ப்பரேட் ஏஜென்சி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது

எஸ்பிஐ ஜெனரல் இன்சூரன்ஸ் தமிழ்நாடு கிராம வங்கியுடன் கார்ப்பரேட் ஏஜென்சி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது

இந்தியாவின் முன்னணி பொதுகாப்பீட்டு நிறுவனங்களில் ஒன்றான எஸ்பிஐ ஜெனரல் இன்சூரன்ஸ் முன்னணி பிராந்திய கிராமப்புற வங்கிகளில் ஒன்றான தமிழ்நாடு கிராமவங்கியுடன் எஸ்பிஐ ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் சில்லறை தயரிப்புகளை அதன் விரிவான நெட்வொர்க் மூலம் .தமிழ்நாடு முழுவதும் விநியோகத்திற்காக- கார்ப்பரேட் ஏஜென்சி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது இந்த தருணத்தில் பேசிய  பி.சி.காண்ட்பால், எம்.டி மற்றும் சி.இ.ஓ, எஸ்பிஐ ஜெனரல் இன்சூரன்ஸ் கூறியது" பிராந்தியத்தில் எங்கள் தயாரிப்புகள் மற்றும் வாடிக்கையாளர்களின் விநியோகத்தை மேலும் வலுப்படுத்துவதற்கான எங்கள் பயணத்தில் தமிழக கிராமவங்கியுடனான எங்கள் கூட்டணி ஒரு முக்கியமான மைல்கல்லாகும். சமூகத்தின் அனைத்துப்பிரிவுகளிலும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு எங்கள் தயாரிப்புகளை இன்னும் பரவலாகக் கிடைக்கச் செய்வதற்கான எங்கள் நிலையான முயற்சி ஆகும். இந்த கூட்டணி மூலம் தமிழ்நாட்டில் காப்பீடுகள் மேலும் அதிகரிக்கும் என்று நங்கள் நம்புகிறோம். ” அவர்மேலும்கூறுகையில், "இந்த கூட்டு நகர்ப்புறங்களில் ஊடுருவலை மேம்படுத்துவதற்கு மட்டுமல்லாமல் அடுக்கு II  மற்றும் அடுக்கு III நகரங்களுக்கும் உதவும், மேலும்…
Read More
இனி வேலை தேடி நீங்கள் அலைய தேவையில்லை. !

இனி வேலை தேடி நீங்கள் அலைய தேவையில்லை. !

  வேலைவாய்ப்பை தேடி அலையும் பட்டதாரி இளைஞர்களுக்கு மத்திய அரசு ஓர் நற்செய்தியை அறிவித்துள்ளது. நீங்கள் இருக்கும் இடத்திற்கு அருகாமையில் உள்ள தலைமைத் தபால் நிலையங்களில், உங்கள் விவரங்களை பதிவுசெய்தால் போதும். தனியார் நிறுவனங்களிலிருந்து, உங்கள் தகுதிக்கேற்ற வேலைவாய்ப்புகள் உங்கள் வீடுதேடி வரும். இன்றைய போட்டி நிறைந்த காலக்கட்டத்தில், அரசுத் துறைகளில் வேலை பெறுவது என்பது பெரும்பாலான இளைஞர்களுக்கு கனவாகி விட்டது. அப்படியே கிடைத்தாலும், தகுதிக்கு ஏற்ற வேலை கிடைப்பதில்லை. அதற்கான வாய்ப்புகளும் குறைவாகவே இருக்கின்றன. இந்நிலையில், இளைஞர்களின் திறமைகளுக்கு ஏற்ப தனியார் நிறுவனங்கள் நல்ல ஊதியத்தை வழங்க முன்வந்துள்ளன. இதனால் வேலைதேடும் இளைஞர்கள் தனியார் நிறுவனங்களுக்கு அதிகமாக விண்ணப்பிக்க தொடங்கி விட்டனர். ஆனால், எந்த நிறுவனத்தில் காலிப்பணியிடங்கள் இருக்கிறது என்ற தகவல்கள் அவர்களுக்குத் தெரிவதில்லை. அதனால், அவர்கள் வேலைவாய்ப்பை நழுவவிட வேண்டியுள்ளது. இனி அந்தக் கவலை தேவையில்லை. #நேஷ்னல்கேரியர்சர்வீஸ் : ✅ வேலை இல்லா இளைஞர்களுக்காக, மத்திய அரசு 'நேஷ்னல்…
Read More
வாழ்க்கை வாழ்வதற்கே! தட்டிக் கழிக்க அல்ல !!

வாழ்க்கை வாழ்வதற்கே! தட்டிக் கழிக்க அல்ல !!

35 வயதை கடந்தும் திருமணம் ஆகாமல் ஒவ்வொரு ஊரிலும் குறைந்தது 50க்கும் மேற்பட்ட ஆண்மகன்கள் உள்ளார்கள் !... 30 வயதை கடந்தும் திருமணம் ஆகாமல் ஒவ்வொரு ஊரிலும் குறைந்தது 20க்கும் மேற்பட்ட பெண்களும் உள்ளனர். இதற்கு சொத்து மதிப்பே காரணம். அதாவது மாப்பிள்ளைக்கு அடிப்படை சொத்து, விவசாய தோட்டம் 5 அல்லது 10 ஏக்கருக்கு மேல் இருக்க வேண்டும். அவரே Post graduate degree முடித்து, சென்னை, பெங்களூர் IT கம்பெனியில் வேலையில் இருக்க வேண்டும் அல்லது வெளிநாட்டில் வேலையில் இருக்க வேண்டும். குறைந்தது 40,000க்கும் மேல் சம்பளம் வாங்க வேண்டும். பல இளைஞர்கள் படித்த படிப்பிற்கு ஏற்ற தகுதியான வேலை கிடைக்காததால், சுய தொழில் செய்து வருகின்றனர்.சுய தொழில் செய்யும் ஆண்களை திருமணம் செய்து கொள்ள பெண்கள் விரும்புவது இல்லை.பெண் வீட்டாரும் விரும்புவது இல்லை.வீட்டுக்கு ஒரே பையனா இருந்தால் ரொம்ப நல்லா இருக்கும் !!. அப்புறம் இதெல்லாம் இருந்தால் தோற்றத்தில்…
Read More