04
Jun
சென்னை அண்ணாசாலை ராணி சீதை மண்டபத்தில் ஸ்ரீதேவி நாட்டிய கலாலயம் சார்பில் செல்வி நேஹா உட்பட 4 மாணவிகளின் பரதநாட்டியம் அரங்கேற்றம் இன்று நடந்தது. வின்சென்ட் ஜோசப் –அருணா தம்பதியரின் மகள் நேஹா ஆவார். இவர் சென்னை முகப்பேர் நாராயண ஒலிம்பியாட் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வருகிறார். அவர் தனது 5 வயது முதல் தனது குரு ஸ்ரீமதி, ஜெயலட்சுமி ஆகியோர்களிடம் இருந்து முறைப்படி பரதநாட்டியம் பயின்று வந்தார். இவர் திருச்சூர் கே.ஆர். சுரேந்திரன், பயிற்சி பெற்று வருகிறார். நேஹா சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில், முகப்பேர் சந்தான ஸ்ரீனிவாஸ் பெருமாள் கோயில், தென்காசி விஸ்வநாதர் கோயில் போன்ற பிரசத்தி பெற்ற கோயில்களில் அவர் இசை நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். பரதநாட்டியம் மட்டுமின்றி, பூப்பந்து, யோகா மற்றும் கவிதை ஆகியவற்றிலும் அவருக்கு மிகுந்த ஆர்வம் கொண்டவர். இவரது பரதநாட்டியம் நிகழ்ச்சி முதலில் நடராஜ பூஜையுடன் தொடங்கியது. நேஹா தனது குரு மற்றும்…
