07
Jul
தமிழக அரசுக்கு சொந்தமான தமிழ்நாடு மின்பகிர்மான கழகத்தின் மோசமான நிர்வாகத்தால் ரூ11,679 கோடி நட்டம் ஏற்பட்டுள்ளதாக மத்திய கணக்குத் தணிக்கை துறையின் (சி.ஏ.ஜி) அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தனியார் மின் உற்பத்தியாளர்களிடம் இருந்து வசூலிக்கப்பட வேண்டிய ரூ280.37 கோடியை தமிழ்நாடு மின்பகிர்மான கழகம் பல ஆண்டுகாலமாக வசூலிக்கவில்லை என்றும் குற்றம்சாட்டியுள்ளது சி.ஏ.ஜி. அறிக்கை. தமிழகத்தில் தி.மு.க, அ.தி.மு.க. இரண்டு கட்சிகளுமே தங்களது ஆட்சிக் காலம்தான் பொற்காலம் என பேசிவருகின்றன. ஆனால் இந்த 2 கட்சிகளின் ஆட்சி காலங்களிலும் நிர்வாகம் எவ்வளவு மோசமாக இருந்திருக்கிறது என்பதை மத்திய தணிக்கைத் துறையான சி.ஏ.ஜியின் அறிக்கை அம்பலப்படுத்தியுள்ளது. 2009 முதல் 2014-ம் ஆண்டு வரையிலான (இதில் தி.மு.க, அ.தி.மு.க. 2 கட்சிகளின் ஆட்சிக் காலமும் அடங்கும்) தமிழக அரசின் செயல்பாடுகள் குறித்த மத்திய தணிக்கை துறை அறிக்கை சட்டசபையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. அதில் கூறப்பட்டுள்ள முக்கிய குற்றச்சாட்டுகள் விவரம்: தமிழகத்தில் மின் பற்றாக்குறை குறித்து…
