ஆரோக்யம்

உயிருக்கே உலை வைக்கும் எலும்புப் புற்றுநோய் ?

உடலின் உள் உறுப்புகளைத் தாக்கி உயிருக்கே உலை வைக்கும் சில கட்டிகள் நமது உடலின் இரும்பு என்று அழைக்கப்படும் எலும்புகளைக் கூட விட்டு வைப்பதில்லை. கட்டிகள் என்பது உடலின் எந்த பகுதியையும் தாக்கலாம். உடலின் உள் உறுப்புகளைத் தாக்கி உயிருக்கே உலை வைக்கும் சில கட்டிகள் நமது உடலின் இரும்பு என்று அழைக்கப்படும் எலும்புகளைக் கூட விட்டு வைப்பதில்லை. நமது உடலிலுள்ள செல்கள் எல்லாம் வளர்சிதை மாற்றத்தில் தான் இயங்கிக் கொண்டு வருகின்றன.இந்த செல்களின் கட்டமைப்பில் அளவுக்கு அதிகமான, அசுர வேகத்தில் பல்கி பெருகும் செல்கள் தான் கட்டிகள் எனப்படும். இது உடலின் ஒரு பகுதியில் தோன்றி மற்ற பகுதிக்கு பரவும் தன்மை புற்று நோய் கட்டிகளுக்குஉண்டு. புற்றுநோயை முதலிலேயே கண்டறிந்து விட்டால் கட்டுப்படுத்த கூடியது என்பது ஆறுதலான விசயம். எலும்புக் கட்டிகளில் உள்ள இருவகைகளைப் பார்ப்போம். 1) பரவும் தன்மை கொண்டது. 2) பரவாத தன்மை கொண்டது.என 2 வகைகள் உள்ளன.…
Read More
கொசுவை விரட்டும் இயற்கை மருந்து!

கொசுவை விரட்டும் இயற்கை மருந்து!

கொசுக்களை விரட்ட துாவப்படும் மருந்துகள் மனிதர்களுக்கும், பிற விலங்குகளுக்கும் நச்சுத் தன்மை ஏற்படுகிறது. அண்மையில், கொசுவை மட்டும் கொல்லும் ஒரு மருந்தை, விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். மனிதர்களுக்கு மலேரியாவை தொற்ற வைக்கும் அனாபிலஸ் கொசுக்கள் மீது பிளாஸ்மோடியம் என்ற ஒட்டுண்ணிகள் குடியேறு கின்றன. இவை தான் மலேரியாவை மனிதருள் உண்டாக்குகின்றன. அனாபிலஸ் கொசுக்களை கொல்லும் ஒரு பாக்டீரியாவை, 30 ஆண்டுகளுக்கு முன் விஞ்ஞானிகள் கண்டறிந்தாலும், அது எப்படி அனாபிலஸ் கொசுவை கொல்கிறது என்பது பிடிபடாமல் இருந்தது. தற்போது, அந்த பாக்டீரியா உற்பத்தி செய்யும், 'பி.என்.பி.,1' நரம்பியல் நச்சு தான் கொசுவை கொல்கிறது என்பதை, அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சர்ஜீத் கில்லின் குழுவினர் கண்டறிந்துள்ளனர். பி.என்.பி.,1 என்ற புரதத்தை வைத்து சோதித்தபோது, அது விலங்குகளுக்கு எந்த தீங்கையும் செய்யவில்லை.எனவே, இதை அடிப்படையாக வைத்து கொசுவிரட்டியை உருவாக்கினால், மலேரியா அதிகம் உள்ள நாடுகளில், கொசுக்களை ஒழிக்க முடியும். வேதியல் நச்சுக்களை போல அல்லாமல், புரதத்தின்…
Read More
வேர்க்கடலையில் தயாரிக்கப்படும் எண்ணெய் நல்ல கொழுப்பா…?

வேர்க்கடலையில் தயாரிக்கப்படும் எண்ணெய் நல்ல கொழுப்பா…?

வேர்க்கடலையில் கொழுப்புச் சத்து இருக்கிறது. ஆனால் அது நல்ல கொழுப்பு. உடம்புக்குத் தேவையான கொழுப்பு மற்றும் புரதச் சத்து அதிகமாக உள்ளது. வேர்க்கடலை சாப்பிட்டால் அதில் இருந்து உடம்பில் சேரும் சர்க்கரையின் அளவு மிக மிகக் குறைவு. எனவே சர்க்கரை வியாதிக்காரர்கள் வேர்க்கடலையை எந்தவிதப் பயமுமின்றித் தாராளமாகச் சாப்பிடலாம். மேலும் வேர்க்கடலையில் உள்ள மெக்னீசியத்திற்கு இன்சுலினைச் சுரக்கும் ஹார்மோன்களைத் துரிதப்படுத்தும் தன்மையும் உள்ளது. வேர்க்கடலையில் வைட்டமின் ஏ, நீரில் கரையக் கூடிய வைட்டமின் பி3 போன்றவை அதிகமாக உள்ளன. இந்த வைட்டமின்கள் கர்ப்பிணிகளுக்கு மிகவும் அவசியமானது. இந்தச் சத்துப் பொருட்கள் குறைந்தால் பிறக்கும் குழந்தை நரம்புக் கோளாறுகளுடன் பிறக்க வாய்ப்புள்ளது. வேர்க்கடலையில் நைட்ரிக் அமிலம் உள்ளது. வேர்க்கடலையைச் சாப்பிடுவதன் மூலம் உடம்பில் உற்பத்தியாகும் நைட்ரேட் ரத்தக் குழாய்களை விரிவடையச் செய்கிறது. s. இதனால் ரத்தம் சீராக இருப்பதோடு, ரத்த அழுத்தம் குறையும். வேர்க்கடலை சாப்பிட்டால் அதிலுள்ள உயிர் வேதிப் பொருள்கள் இப்படித்…
Read More
சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் பாகற்காய் !

சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் பாகற்காய் !

ரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்கும் தன்மை கொண்டது பாகற்காய். இந்தியாவில் மட்டுமல்ல, சீனாவிலும்கூட நீரிழிவு நோயாளிகள் அதிகம் தேடும் காய் பாகற்காய்தான்.ரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்கும் தன்மை கொண்டது பாகற்காய் என நிறைய மருத்துவ சான்றுகள் வெளிவந்துவிட்டன. இந்தியாவில் மட்டுமல்ல, சீனாவிலும்கூட நீரிழிவு நோயாளிகள் அதிகம் தேடும் காய் பாகற்காய்தான். அதில் உள்ள சரண்டின், மொமார்டின் போன்ற தாவர நுண்கூறுகள்தான் இந்த மருத்துவ செயல்பாட்டுக்கு காரணம் என்று சான்றளித்துள்ளனர். அதே நேரத்தில், நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துதல் என்பது வெறும் ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துதல் மட்டும் என்று புரிந்துகொள்ளக்கூடாது. உடனடியாக ரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்கும் ஒரு பொருள், நீரிழிவு நோய்க்கான முழுமையான மருந்தல்ல. பாகற்காய் ரத்த கொழுப்பு வகையை குறைப்பதிலும், செல் அழிவை கட்டுப்படுத்தும் ஆன்ட்டி ஆக்ஸிடண்டையும் கொண்டிருப்பது தனிச்சிறப்பு. பாகற்காய் சாப்பிடுவதால் நீங்கள் சாப்பிடும் பிற நவீன மருந்துகளின் செயல்பாட்டில் எந்த பாதிப்பும் ஏற்படாது. அதே நேரம் பல…
Read More
மருந்து விற்பனையில் முறைகேடு…? அமெரிக்காவில் 40 மில்லியன் டாலர் அபராதம் பெற்ற ரான்பாக்ஸி!!

மருந்து விற்பனையில் முறைகேடு…? அமெரிக்காவில் 40 மில்லியன் டாலர் அபராதம் பெற்ற ரான்பாக்ஸி!!

இந்தியாவில் மருந்து உற்பத்தியில் முன்னோடியாக இருந்த ரான்பாக்ஸி நிறுவனம், ஏழை மக்களுக்கான மருத்துவ சேவை அளிக்கும் அமெரிக்க அரசின் டெக்சாஸ் மெடிக்எய்டு திட்டத்தில் செய்த முறைகேடுகள் மீதான வழக்கிற்கு 39.75 மில்லியன் டாலர் நஷ்டஈடாக கொடுக்க ஒப்புக்கொண்டது. வழக்கு டெக்சாஸ் மெடிக்எய்டு திட்டத்திற்கு அளிக்கும் மருந்துகளின் விலை நிர்ணயத்தில் சில முறைகேடுகள் செய்ததை தொடர்ந்து அமெரிக்கா அரசு வழக்கு தொடர்ந்தது. இந்தியாவில் செய்வது போல் அமெரிக்காவில் சித்து வேளைகளை எல்லாம் ஏமாற்றி விடலாம் என்று நினைத்த ரான்பாக்ஸி நிறுவனத்திற்கு அமெரிக்கா அரசு ஆப்பு வைத்தது. பணம் செலுத்துதல் இதற்கான பணத்தை ரான்பாக்ஸி 2015ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள் தவணை முறையில் செலுத்துவதாக அனுமதி பெற்றுள்ளது. முறைக்கேடு மேலும் மெடிக்எய்டு அளித்த மருந்துகளில் முறைகேடு இருப்பாதால், இதற்கான பணம் அல்லது மருந்து பொருட்களை நிறுவனம் வழங்க வேண்டும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த வழக்கின் தீர்ப்பு மூலம் அமெரிக்கவில் இந்நிறுவனத்தின் வர்த்தகம்…
Read More
முட்டை சாப்பிடுவது, நம் உடல்நலனுக்கு நல்லதா கெட்டதா ?

முட்டை சாப்பிடுவது, நம் உடல்நலனுக்கு நல்லதா கெட்டதா ?

முட்டை சாப்பிடுவது, நம் உடல்நலனுக்கு நல்லதா கெட்டதா என்று பல ஆண்டுகளாக வல்லுநர்கள் விவாதித்து வருகின்றனர்.இதற்கு பதில், நீங்கள் ஒரு வாரத்திற்கு எத்தனை முட்டைகள் எடுத்துக் கொள்கிறீர்கள் என்பதை பொறுத்தது. JAMA மருத்துவ சஞ்சிகையில் வெளியிடப்பட்ட புதிய மருத்துவ ஆய்வு இதனை கண்டுபிடித்துள்ளது.ஒரு நாளைக்கு இரண்டு முட்டைகள் சாப்பிடுவது, இதய நோய் மற்றும் முன்கூட்டியே மரணத்தை ஏற்படுத்தும் வாய்ப்புகளை உருவாக்கும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.இதற்கு காரணம் முட்டையின் மஞ்சள் கருவில் இருக்கும் அதிகளவிலான கொழுப்பு. பெரிய முட்டை ஒன்றில் சுமார் 185 மில்லிகிராம் கொழுப்பு இருக்கும் என அமெரிக்காவின் விவசாயத்துறை கூறுகிறது. நாள் ஒன்றுக்கு 300 மில்லிகிராம் கொழுப்பை உட்கொள்ளலாம் என்று உலக சுகாதார அமைப்பு பரிந்துரைக்கிறது. 17 ஆண்டுகளில் 30,000 பேர் பங்கேற்ற ஆறு ஆய்வுகள் செய்யப்பட்டன.நாள் ஒன்றுக்கு 300 மில்லிகிராம் எடுத்துக் கொள்வது, இதய நோய்க்கான அபாயத்தை 17 சதவீதம் அளவிற்கும், முன்கூட்டியே மரணம் ஏற்படுவதை 18 சதவீதம்…
Read More
வேலைக்கு செல்லும் பெண்ணா நீங்கள்? அப்ப கண்டிப்பாக இதை கடைபிடிக்க வேண்டும் !!

வேலைக்கு செல்லும் பெண்ணா நீங்கள்? அப்ப கண்டிப்பாக இதை கடைபிடிக்க வேண்டும் !!

வேலைக்கு செல்லும் பெண்கள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள்.இன்று அனைத்து துறைகளிலும் ஆண்களுக்கு சமமாக பெண்களும் வேலை செய்து வருகின்றனர். வேலைக்கு செல்லும் பெண்கள் கால்களில் சக்கரங்களைக் கட்டிக்கொண்டு அவசர அவசரமாக வேலைக்கு செல்கின்றனர். வீட்டிலிருக்கும் பெண்களுக்கு தனது குடும்பத்தை கவனிப்பதிலேயே அவர்களதுநேரம் செலவாகி விடுகிறது.இப்படிப்பட்ட சூழ்நிலைகளில், பெண்கள் தங்களது உடலின் ஆரோக்கியத்தைக் கூட கருத்தில் கொல்லாது தனது குடும்பத்திற்காக எப்போதும் வேலை வேலை என சென்ற வண்ணம் உள்ளார்.பெண்களே ! உங்களது உடல் ஆரோக்கியம் சரியாக இருந்தால் தான், நீங்கள் உங்கள் உடம்பத்தை கவனிக்க முடியும். எவ்வளவு ஏழைகள் இருந்தாலும் பெண்கள் தங்களது உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். வீட்டிலிரும் பெண்களானாலும், வேலைக்கு செல்லும் பெண்களானாலும் கீழ்கண்ட விதிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். நமது உடலில் நாம் செய்யும் வேலைகளை செய்யத்தக்க ஆற்றல் அதிகமாக தேவை. ஒருவருக்கு சராசரியாக ஒரு நாளைக்கு 2000 கலோரிகள் தேவை. இந்த கலோரி…
Read More
தள்ளுவண்டி கடைகளுக்கு அனுமதி ? மத்திய அரசு முடிவு !

தள்ளுவண்டி கடைகளுக்கு அனுமதி ? மத்திய அரசு முடிவு !

தள்ளுவண்டி கடைகளுக்கு அனுமதி வழங்குவது தொடர்பாக மத்திய அரசு முடிவு செய்ய உள்ளது.நாட்டின் பல பகுதிகளிலும் தெருவோர தள்ளு வண்டி கடைகள், நடமாடும் கடைகள் உள்ளன. இவை தற்போது அந்தந்த மாநில அரசுகள், நகராட்சி, மாநகராட்சிகளால் சில இடங்களில் முறைப்படுத்தப்பட்டுள்ளன.இந்நிலையில், நடமாடும் கடைகளுக்கான பணிமனை டெல்லியில் சமீபத்தில் நடந்தது. இதை தொடர்ந்து வீட்டு வசதி மற்றும் ஊரக விவகார அமைச்சக செயலாளர் துர்கா சங்கர் மிஸ்ரா கூறியதாவது: தெருக்களில் தள்ளுவண்டி போன்ற நடமாடும் கடைகள் வைத்துள்ளவர்களுக்கு நிதியுதவி வழங்குவது, சட்டரீதியான அனுமதி தொடர்பாக பரிசீலனை செய்யப்பட்டது. தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. இதுவரை, நாடு முழுவதும் 2,430 தெருக்களில் உள்ள சுமார் 18 லட்சம் சாலையோர வியாபாரிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களை தெருவோர வியாபாரிகள் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுளளது. இதுதவிர, 2,344 தெருவோர வியாபாரிகள் கமிட்டி அமைக்கப்பட்டு, 9 லட்சம் பேருக்கு அடையாள அட்டை விநியோகம்…
Read More
அதிகமாக தூங்கினால் வரும் பிரச்சினைகள் !

அதிகமாக தூங்கினால் வரும் பிரச்சினைகள் !

வழக்கத்துக்கு மாறாக அதிக நேரம் தூங்குவது உங்களுக்கு தலைவலி மற்றும் மைக்ராய்ன்களை தூண்டும். இதற்கு காரணம் நரம்பிய கடத்திகளில் ஏற்படும் செரோடினின் அளவின் மாறுபாடு அதிகரிப்பது ஆகும். அதிக நேரம் தூங்குவது உங்களின் காலை நேர பணிகள் முழுவதையும் முடக்கும். முதுகு வலி ஏற்பட செய்யும். உங்களுக்கு முதுகு வலி அதிகமாக இருந்தால் அதற்கு காரணம் நீங்கள் அதிக நேரம் தூங்குவதாகத்தான் இருக்கும். நீண்ட நேரம் ஒரே நிலையில் படுத்திருப்பது உங்கள் தசைகளில் விறைப்பு மற்றும் வலியை கூட்டுகின்றது . முதுகு வலி உள்ளவர்களை மருத்துவர்கள் 7 மணி நேரத்திற்கு மேல் தூங்க வேண்டாம் என்று அறிவுறுத்துகிறார்கள். ஆகவே அதிக நேரம் தூங்குவதை தவிர்க்க வேண்டும்.
Read More
ஆன்டிபயாடிக் மருந்துகள் அதிகமாகுது! – உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை!

ஆன்டிபயாடிக் மருந்துகள் அதிகமாகுது! – உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை!

ஜலதோசம், காய்சல், இருமல், மேல்வலி என்று பலத் தரப்பட்ட சின்ன உபாதைகளுக்கெல்லாம் ஆன்டிபயாடிக்கை அநாவசியமாகப் பயன்படுத்துவதால் முடி கொட்டுதல், வயிற்றுப்போக்கு, கால் நகம் பாதிக்கப்படுதல், சரும பாதிப்பு என உடலில் எந்த உறுப்பு வேண்டுமானாலும் பாதிக்கப் படலாம். சிலருக்கு இழுப்பு நோய் வரலாம். இதயத்துடிப்பு சீராக இல்லாமல் போகலாம். சிலருக்கு சிறுநீரகத்தில் பாதிப்பு வரலாம். இது அவரவர் எடுத்துக்கொள்கிற ஆன்டிபயாட்டிக் ரகத்தைப் பொறுத்தது. உண்மையில் ஆன்டிபயாட்டிக்கில் 20%தான் மனிதர்கள் பயன்படுத்துவதற்கு ஏற்ற வகையில் உள்ளது. மீதியுள்ள 80% ஆடு, மாடு, கோழி போன்ற கால்நடைகளுக்கே உணவாக தரப்படுகிறது. இவ்வாறு செய்வதால் நிறைய இறைச்சி, கூடுதலான பால், அதிக முட்டை கிடைக்கிறது. இந்த ஆன்டிபயாட்டிக் தண்ணீரில் கலந்து வரும். அதில் உருவாகிற கிருமிகள் நம்மை வந்தடையும் என்றெல்லாம் ஏற்கெனவே ஆதாரப்பூர்வமான தகவல் வெளிவந்த நிலையில் ஆன்டிபயாடிக் மருந்துகளை அதிகமாக பயன்படுத்தினால் நுண்கிருமிகள் மருந்துக்கு கட்டுப் படாமல் போகும் நிலை உலக அளவில் மிகப்…
Read More