ஆரோக்யம்

டெங்கு காய்ச்சலை தடுக்கும் வழிமுறைகள்..?

டெங்கு காய்ச்சலை தடுக்கும் வழிமுறைகள்..?

டெங்கு காய்ச்சலுக்கு குறிப்பிட்ட மருத்துவ முறைகள் இல்லாததால் நோய்களை வரும் முன் தடுப்பதே எளிய வழி. டெங்கு காய்ச்சலை தடுக்கும் வழிமுறைகளை அறிந்து கொள்ளலாம்.டெங்கு காய்ச்சல் தற்போது தமிழகத்தில் மிக வேகமாக பரவி வருகிறது. பலர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். டெங்கு காய்ச்சல் டெங்கு வைரஸ்களால் உருவாகிறது. டெங்கு காய்ச்சல் வைரஸ்கள் நான்கு வகைகளை உடையது. டென்வி-1, டென்வி-2, டென்வி-3 மற்றும் டென்வி-4 வகை வைரஸ்கள் மனிதனை தாக்கி டெங்கு காய்ச்சலை உருவாக்கும். இந்த வைரஸ் கிருமிகள் ஏடிஸ் வகை கொசுக்கள் பலவற்றினால் பரப்பப்படும். குறிப்பாக ஏடிஸ் ஈஸிப்டி வகை கொசுக்களால் பரவுகிறது. இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டவர்களில் 80 சதவீதம் பேருக்கு நோய் அறிகுறிகள் இல்லாமல் சாதாரண காய்ச்சலுடன் இருக்கும். நோய் அறிகுறிகள் தோன்றுவதற்கு சராசரியாக 3 முதல் 14 நாட்கள் பிடிக்கும். ஆனால், பெரும்பாலும் 4 முதல் 7 நாட்களுக்குள் நோய் அறிகுறிகள் தோன்றும். குழந்தைகளுக்கு சாதாரணமாக தோன்றும்…
Read More
கண் பார்வை பற்றி தெரியாத  உண்மைகள்!

கண் பார்வை பற்றி தெரியாத உண்மைகள்!

டெக்னாலஜி வளர்ந்த நிலையில் மொபைல் போன்களில் பலவிதமான கேமராக்களின் வளர்ச்சி அதிகரித்து உள்ளது. எவ்வளவு மெகா பிக்சல் கொண்ட கேமராக்கள் வந்தாலும் மனித கண்களுக்கு சமமான விஷுவல் அது கொடுக்காது மனிதக் கண் ஆனது வெறும் ஒரு இன்ச் அளவு கொண்டது.மேலும் நமது கண்கள் மூலம் ஒரு கோடிக்கும் மேலான நிறங்களைப் பிரித்தறியலாம். நமது கண்களின் மொத்த பார்வைத்திறனை மெகா பிக்சல்(MP) அளவிற்கு கணக்கெடுத்தால் 576 மெகாபிக்சல் ஆகும். இரவில் அதிக நேரம் மொபைல் போன் உபயோகிப்பதால் மெலடோனின் என்னும் திரவம் கண்களில் சுரப்பது நிறுத்தப்படும் இதனால் தூக்கமின்மை கோளாறு ஏற்படும் வாய்ப்பு உள்ளது மேலும் ஸ்லீப்பிங் டிப்ரஷன் எனும் நோய்க்கு ஆளாகலாம். நமது கண்களை ஒரு நிமிடத்திற்கு ஏறத்தாள சுமார் 17 முறை சிமிட்டுகிறோம் நாம் பொதுவாக நமது கண்களை ஏன் சிமிட்டுகிறோம் என்று நினைத்துப் பார்த்ததுண்டா? கண்களில் உள்ள அழுக்குகள் தூசிகள் வெளியேற்றுவதற்காகவே கண் தன்னிச்சையாக சிமிட்ட படுகிறது.…
Read More
பாலில் ஒரு பூகம்பம் ! பூச்சிக்கொல்லி தீவனத்தால் புற்றுநோய் வரும் !!

பாலில் ஒரு பூகம்பம் ! பூச்சிக்கொல்லி தீவனத்தால் புற்றுநோய் வரும் !!

தாய்ப்பால் இன்றி கூட குழந்தைகள் வளர்ந்திருக்கலாம். ஆனால் பசும்பாலை ருசிக்காமல் எவரும் குழந்தை பருவத்தை கடந்திருக்க முடியாது. பிறப்பு தொட்டு இறப்பு வரை பாலும், பால் பொருட்களும் நம் முக்கிய உணவுகளாக தொடர்கின்றன. அமுதாய் கிடைத்த இப்பால் சில நேரங்களில் ஆபத்தை தரும் என்றால், அது எத்தனை அதிர்ச்சி. அப்படியொரு பூகம்பத்தை கிளப்பி இருக்கிறது அக்.18 ல் வெளியான மத்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் ஆய்வறிக்கை. 2018 மே முதல் டிசம்பர் வரை அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் 50 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் வசிக்கும் 1,103 நகரங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. கால்நடை வளர்ப்போர், பால்காரர், விற்பனையாளர், நிறுவனங்களின் பால் மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. நாடு முழுவதும் 6,432 மாதிரிகள் எடுக்கப்பட்டன.பகுப்பாய்வு கூடத்தில் சோதனைக்கு உட்படுத்தி, பாலின் தரத்தை அறிய அதில் உள்ள கொழுப்பு உள்ளிட்ட 13 வகை பொருட்களின் அளவு கணக்கிடப்பட்டது. அதில் அனுமதிக்கக்கூடியஅளவை விட சில…
Read More
நீரிழிவைக் கட்டுப்படுத்தும் இன்சுலின் சுரக்க  வெந்தயம் போதும்.!

நீரிழிவைக் கட்டுப்படுத்தும் இன்சுலின் சுரக்க வெந்தயம் போதும்.!

நீரிழிவைக் கட்டுப்படுத்தி இன்சுலின் சுரப்பைக் கூட்ட இது ஒண்ணு போதும்... கட்டுப்படுத்த முடியாத நீரிழிவு, தொடரும் இன்சுலின் ஊசி இதிலிருந்து தப்பிக்க வழியே இல்லையா என்கிறீர்களா? இருக்கவே இருக்கு இன்சுலின் சுரப்பை அதிகரிக்க இயற்கை தந்த அற்புத கொடை வெந்தயம் ஊறவைத்த நீரை குடித்தபிறகு வெந்தயத்தின் கசப்பை பிடிக்காதவர்கள் முளைகட்டி சாப்பிடுங்கள்.இன்சுலின் சுரப்பு அதிகமாக இருந்தால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறையும். நீரிழிவு கட்டுக்குள் வரும்.இன்சுலின் ஊசியுடன் போராடுபவர்கள் வெந்தயத்தையும் எடுத்தால் இன்சுலின் சுரப்பு அபரிமிதமாக அதிகரிக்கும்.நீக்கமற நிறைந்திருக்கும் நீரிழிவு நோயை முற்றிலும் குணப்படுத்தமுடியாது என்பது எவ்வளவு உண்மையோ அவ்வளவு உண்மை நீரிழிவை இயற்கையாக கட்டுப்படுத்தம் முடியும் என்பதும். சாப்பிடும் உணவு பொருள்கள் உடலில் இருக்கும் திசுக்களுக்கு ஆற்றலைத் தரும் வகையில் சர்க்கரையாய் மாற்றப் பட்டு இரத்தத்தில் கலக்கிறது. இந்த சர்க்கரையை அனைத்து திசுக்களுக்கும் கொண்டு செல்லும் பணியை கணையத்தில் சுரக்கப்படும் இன்சுலின் என்னும் ஹார்மோன் செய்கிறது.இந்த இன்சுலின் போதிய அளவு…
Read More
கோவைக்காய்  நீரிழிவு நோயாளிகளின்  சத்துக்கள் வெளியேறாமல் தடுக்கிறது.!

கோவைக்காய் நீரிழிவு நோயாளிகளின் சத்துக்கள் வெளியேறாமல் தடுக்கிறது.!

கோவைக்காயில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. இதைத்தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு உடல் சோர்வு நீங்கி, நீண்டநேரம் செயலாற்றும் திறன் ஏற்படுகிறது. தண்ணீர் அதிகம் அருந்தாமல் இருப்பது, உப்பு தன்மை அதிகமான நீரை, நீண்டநேரம் சிறுநீரை அடக்கி வைப்பது, மது பழக்கம் போன்ற காரணங்களால் சிறுநீரக கற்கள் உருவாகும். வாரத்தில் இருமுறை கோவைக்காய் பொரியல், கூட்டு போன்றவற்றை செய்து சாப்பிட்டு வந்தால் செரிமான கோளாறுகள்,மலச்சிக்கல் பிரச்னை தீரும். உடல் எடை அதிகரிப்பது ஒரு கவலைக்குரிய பிரச்னை ஆகும். உணவு கட்டுப்பாட்டுடன் உடற்பயிற்சி செய்து உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள், உடலுக்குத் தேவையான பல சத்துக்கள் கொண்ட, கொழுப்பை கரைக்கக்கூடிய கோவைக்காய் பதார்த்தங்களை உணவுகளில் அதிகம் சேர்த்து சாப்பிட்டு வருவது உடல் எடையை குறைக்கும் முயற்சியில் நல்ல பலன் அளிக்கும்.சர்க்கரை வியாதி ஒரு மனிதனின் பரம்பரை காரணமாகவும் மற்றும் அவனது தவறான உணவு பழக்கங்களாலும் ஏற்படும். சர்க்கரை வியாதி உள்ளவர்கள் அடிக்கடி கோவைக்காய் சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில்…
Read More
வர்மக்கலை  மருத்துவத்தின் மகத்துவம்..! வர்மக்கலை ஆசான் பாமோ வெங்கடேசன் !

வர்மக்கலை மருத்துவத்தின் மகத்துவம்..! வர்மக்கலை ஆசான் பாமோ வெங்கடேசன் !

நம்மில் பலரும் பல வகையான நோய்களுக்காக பல மருத்துவரை சந்தித்துகொண்டுதான் இருக்கிறோம், ஆனாலும் நோய் மட்டும் குணமான பாடில்லை.. முதலில் நோய் என்றால் என்ன? நெருப்பு, நிலம், காற்று, நீர், ஆகாயம் ஆகிய பஞ்சபூதங்களின் கூட்டுக்கலைவையே நம் உடல் ஆகும், இதில் ஏதாவது ஒரு பூதத்தின் சக்தி குறையும் போது நம் உடல் நோயுறும்.உதாரணமாக நீர் சக்தி குறையும் போது, சிறுநீரக கல், ஹார்மோன், மூட்டுவலி, முதுகுத்தண்டு பிரச்சனை, பாத எரிச்சல் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது.நோய் என்பது இரு காரணங்களால் ஏற்படலாம்.பரு உடலில் ஏற்படும் நோய்.பிராண உடலில் ஏற்படும் சக்தி குறைவால் ஏற்படும் நோய். வர்மக்கலை தத்துவப்படி நமக்கு பரு உடல் மற்றும் பிராண உடல் ஆகிய இரு உடல் உள்ளது, பிராண உடலில் ஏற்படும் சக்தி குறைபாடானது நம் பரு உடலில் நோயாக பிரதிபலிக்கிறது. மற்றும்,உணவுமுறை மாற்றத்தால் பரு உடலில் நோய் ஏற்பட்டு அது பிராண உடலில் சக்தி குறைவை…
Read More
அதிக இனிப்பு கொண்ட பானங்கள் விளம்பரம் செய்ய தடை ?

அதிக இனிப்பு கொண்ட பானங்கள் விளம்பரம் செய்ய தடை ?

உலக அளவில் 42 கோடி மக்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கை இன்னும் 20 வருடத்தில் 63 கோடியாக உயரும் என சர்வதேச நீரிழிவு சம்மேளனம் கூறியுள்ளது. சிங்கப்பூரில் மட்டுமே 13.7 சதவீதம் பேர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதை தொடர்ந்து சிங்கப்பூர் அரசு அதிரடி நடவடிக்கை எடுத்து உள்ளது. அதாவது அதிக இனிப்பு கொண்ட பானங்களை விளம்பரங்கள், பத்திரிகை, இணையதளம், வானொலி மற்றும் டிவி போன்றவைகளில் விளம்பரம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. அதிக இனிப்பு கொண்ட பானங்களின் விளம்பரங்களால் மக்கள் கவரப்பட்டு அதை சாப்பிடுகின்றார்கள்.இதை தவிர்க்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக , சிங்கப்பூர் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.மேலும் விரைவில் அதிக இனிப்பு கொண்ட பானங்களுக்கு கூடுதல் வரி அல்லது தடை விதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
Read More
அப்பல்லோ கேன்சர் மையம் சார்பாக ரோஸ் தின கொண்டாட்டம்.!

அப்பல்லோ கேன்சர் மையம் சார்பாக ரோஸ் தின கொண்டாட்டம்.!

உலகம் முழுவதும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரோஜா பூ கொடுத்து வாழ்த்துச் சொல்வதை வழக்கமாக நடத்தி வருகின்றனர்.புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் குணமாகும் என்கிற நம்பிக்கையில் வாழவேண்டும் என்ற எண்ணத்துடன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்ச்சி தேனாம்பேட்டையில் உள்ள அப்பல்லோ கேன்சர் மையத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகரும் இயக்குனருமான எஸ்.ஜே.சூர்யா., நடிகர் சதீஷ், நடிகர் தர்ஷன்., நடிகை வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர். இந்தப் புற்றுநோய் மையத்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ரோஜா பூவைக் கொடுத்து பரிபூரணமாகக் குணமாகி வீடு திரும்ப வேண்டுமென்று கேட்டுக் கொண்டனர்.குறிப்பாக கனடா நாட்டைச் சேர்ந்த மெலிண்டா ரோஸ் என்கிற 14 வயது பெண் குழந்தையிடம் நடிகர் எஸ்.ஜே.சூர்யா, நடிகர் சதீஷ், நடிகர் தர்ஷன்,நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் ஆகியோர் பேசினார்கள். அப்பல்லோ கேன்சர் மையம் சார்பாக ரோஸ் தினம் நிகழ்ச்சிகொண்டாடப்பட்டது.புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் நோய் குணமாகும் என்கிற நம்பிக்கையிலும் வாழவேண்டும் என்ற எண்ணத்துடனும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்ச்சி தேனாம்பேட்டையில்…
Read More
நைட்-ஷிப்ட் வேலை பாக்குறீங்களா?  அபாயகரமான நோய் வர வாய்ப்பிருக்கு..!!

நைட்-ஷிப்ட் வேலை பாக்குறீங்களா? அபாயகரமான நோய் வர வாய்ப்பிருக்கு..!!

தற்போது பல துறைகளில் நைட்-ஷிப்ட் பொதுவான ஒன்றாக உள்ளது. சொல்லப்போனால் பலரது வாழ்க்கையே நை-ஷிப்ட்டில் தான் போகிறது. ஆனால் சில ஊழியர்கள் டே-ஷிப்ட், நைட்-ஷிப்ட் என்று மாறி மாறி வேலை செய்வதால், பல ஆரோக்கிய பிரச்சனைகளால் அவஸ்தைப்படுகிறார்கள். அனைவரும் தூங்கும் இரவு நேரத்தில் வேலை செய்வதால், இயற்கைக்கு எதிராக உடலின் செயல்பாடுகள் இருப்பதால், அதன் விளைவாக பல அபாயகரமான நோய்களால் பாதிக்கப்பட நேரிடுகிறது. நைட் ஷிப்ட் வேலைகள் உடலின் இயற்கை கடிகாரத்தின் செயல்பாட்டை சீர்குலைப்பதால், நாம் நினைத்திராத பல ஆரோக்கிய பிரச்சனைகளால் அவஸ்தைப்பட வைக்கிறது. நீங்கள் நைட்-ஷிப்ட்டில் வேலை செய்பவரா? அப்படியானால் உங்களுக்கும் இப்பிரச்சனையெல்லாம் வர வாய்ப்புள்ளது. சரி, இப்போது நைட்-ஷிப்ட்டில் வேலை செய்வோரைத் தாக்கும் அபாயகரமான பிரச்சனைகள் எவையென்று காண்போம். சர்க்கரை நோய் ஜப்பானிய ஆய்வு ஒன்றில் நைட்-ஷிட் வேலை பார்ப்போரில் 50 சதவீதத்தினருக்கு சர்க்கரை நோயின் அபாயம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக 16 மணிநேரத்திற்கும் அதிகமாக வேலை செய்வோருக்கு…
Read More

வெள்ளை சர்க்கரை ஆரோக்கியக் கேடு ! நாட்டு சர்க்கரை நல்ல சர்க்கரை !!

‘‘கரும்புச்சாறு பல்வேறு அவதாரங்களை எடுக்கிறது. நன்கு காய்ச்சி, உருக்கி, வடிகட்டி, உருண்டையாக்கினால் அது உருண்டைவெல்லம். அச்சாக்கினால் அச்சு  வெல்லம். பொடியாக்கினால் சர்க்கரை. இதைத்தான், நாட்டுச் சர்க்கரை என்கிறோம். இந்த சர்க்கரையில் ரசாயனம் கலந்தால்தான் அதனை வெள்ளை  சர்க்கரை(White sugar) என்கிறோம். வெள்ளை சர்க்கரை பார்க்க கவர்ச்சியாக இருப்பதைத் தவிர அதில் எந்தவித நன்மையும் இல்லை. கடந்த 2  ஆண்டுகளில் மட்டும் வெள்ளை சர்க்கரை பயன்பாட்டால் உடல் பருமன் மற்றும் அதிக எடை கொண்டவர்கள் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளனர் என ஒரு  புள்ளி விவரம் கூறுகிறது. இந்தியர்களில் நான்கில் ஒருவர் Non communicable disease என்கிற தொற்றா நோயால் அவதிக்குள்ளாவதற்கும் வெள்ளை சர்க்கரை காரணமாக  இருக்கிறது. அதில் குறிப்பாக சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், இதய நோய் அல்லது புற்றுநோய் என கண்டறியப்பட்டுள்ளது. 18 வயது, அதற்கு மேற்பட்ட  வயதுடையவர்களில் 10-ல் ஒருவர் சர்க்கரை நோயை எதிர்கொள்ள வேண்டி உள்ளது எனவும் தரவுகள்…
Read More