28
Feb
சினிமாவில் கலை இயக்குநராக விரும்பும் அகத்தியன் (ஜீவா) பாண்டிச்சேரியில் தனது முதல் பட வாய்ப்புக்காகக் கடன் வாங்கி ஒரு பங்களாவை ரெடி செய்கிறார். ஷூட்டிங் வேலை நடந்து கொண்டிருக்கும் வேளையிலேயே ஒரு பியானோ அவர்களிடம் கிடைக்கிறது. அதை வாசிக்கத் தொடங்க, சில அமானுஷ்ய நிகழ்வுகளால் படப்பிடிப்பு நின்று போகிறது. இதனால் உடைந்த அகத்தியன், சொந்த ஊரான திருவண்ணாமலைக்குச் செல்கிறார். அங்கே பங்களாவை ஸ்கேரி ஹவுஸாக மாற்றி, காசு சம்பாதிக்கலாம் என்ற ஐடியாவை நாயகி (ராஷி கண்ணா) கொடுக்க, மீண்டும் பாண்டிச்சேரிக்கு ரீ-என்ட்ரி கொடுக்கிறார்கள். இம்முறை அந்த பங்களாவில் ஒரு பழைய பிலிம் ரோல் ஒன்று கிடைக்கிறது. அதில் சித்தார்த்தன் (அர்ஜுன்) என்கிற சித்த மருத்துவர், 1940-ல் நடந்த கதையைச் சொல்லத் தொடங்குகிறார். அந்த கதையில் நடந்தது என்ன, நிகழ்காலத்தில் நடக்கும் அமானுஷ்யங்களுக்கும் அதற்கும் என்ன சம்பந்தம் என்பதைக் கலந்து கட்டிக் கொடுத்திருப்பதே ‘அகத்தியா’ படத்தின் கதை. பாடலாசிரியர் பா விஜயின் எழுத்தில்…
