25
May
நீண்ட நாள்களுக்குப் பிறகு தமிழ்சினிமா உலகில் கிராமிய மணம் கமழும் வகையில் ஒரு காதல் கதை படமாக வந்துள்ளது.எழுத்தாளர் ஜெயமோகன் கதை, திரைக்கதை, வசனத்தில் ஏபிஜி ஏழுமலை இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் மையல்.ஊரில் உள்ள ஆடுகளை திருடுபவர் நம் நாயகன் சேது. ஒரு இரவில் ஆட்டை திருடி செல்லும் போது ஊர் மக்களில் சிலர் சேதுவை துரத்துகிறார்கள். உடனே சேது ஊரில் ஒதுக்கு புறமாக உள்ள ஒரு மந்திரவாதி வீட்டில் அடைக்கலம் புகுகிறார்.அங்கே மந்திரவாதி கிழவியின் பேத்தியான நம் நாயகி சம்ரிதா சேதுவுக்கு அடைக்கலம் தருகிறார். இந்த அடைக்கலம் அன்பாக மாறி காதலாக உருவெடுக்கிறது. தான் ஊருக்கு சென்று பணம் ஏற்பாடு செய்து விட்டு மீண்டும் வந்து கரம் பிடிப்பதாக சேது சம்ரிதாவுக்கு வாக்கு தருகிறார் .மைனா படத்தில் நடித்த சேது தான் இந்தப் படத்தின் கதாநாயகன். ஹீரோயினாக சம்ரிதி தாரா நடித்துள்ளார். இவர்களுடன் பிஎல்.தேனப்பன், சமீபத்தில் மறைந்த சூப்பர் குட்…
