*’யாத்திசை’ இயக்குநர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில், சசிகுமார் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவு!*

ஜே.கே. ஃபிலிம் இன்டர்நேஷனலின் பிரம்மாண்டமான பீரியட் டிராமாவாக உருவாகி இருக்கும் இந்தப் படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வரவேற்பு பெற்ற ‘யாத்திசை’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இயக்குநர் தரணி ராசேந்திரன் தனது அடுத்த திரைப்படத்தின் படப்பிடிப்பை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளார். ஜே.கே. ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் ஜே. கமலகண்ணன் தயாரித்திருக்கும் இன்னும் பெயரிடப்படாத  இந்தப் படத்தின் மீது எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

இந்தப் படத்தில் இயக்குநரும் நடிகருமான சசிகுமார், இந்திய தேசிய இராணுவ (INA) அதிகாரியாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படக்குழுவின் ஒட்டுமொத்த அர்ப்பணிப்பும், கடின உழைப்பும் இப்படத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் பிரதிபலித்துள்ளது. இயக்குநரின் பிரம்மாண்டமான கதையை திரையில் உயிர்ப்பிக்க, அனைத்து துறைகளும் இணைந்து கடினமாக பணியாற்றியுள்ளன.

சசிகுமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்தப் படத்தில் சமுத்திரக்கனி, கிஷோர், சேயோன், பவானி ஸ்ரீ, ஷிவதா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும், நடிகர் அசோக் செல்வன் சிறப்பு தோற்றத்தில் நடித்திருப்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.

படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. திரைப்படத்தின் காட்சித் தரத்தை உயர்த்தவும், கதையை மேலும் செழுமைப்படுத்தவும் பிரம்மாண்டமான VFX பணிகள் இடம்பெறவுள்ளதால், பின்னணிப் பணிகள் மிகுந்த கவனத்துடனும் துல்லியத்துடனும் மேற்கொள்ளப்படுகின்றன.

படம் திரையரங்குகளில் வெளியாகும் போது, பார்வையாளர்களுக்கு இதுவரை இல்லாத பிரமாண்டமான திரை அனுபவத்தை வழங்குவதே குழுவின் நோக்கமாகும். உணர்ச்சிப்பூர்வமான கதை சொல்லலுடனும், காட்சியழகுடனும் இப்படம் ரசிகர்களை வெகுவாக கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சேது முருகவேல் ஒளிப்பதிவு செய்திருக்க, சார்தக் கல்யாணி இசையமைத்துள்ளார்.  மகேந்திரன் கணேசன் படத்தொகுப்பை கவனித்துள்ளார்.

ஜே.கே. ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஜே. கமலகண்ணன் தயாரிக்கும் இந்தப் படம், பிரிட்டிஷ் ஆட்சி காலத்தை பின்னணியாகக் கொண்டு உருவாகியுள்ளது. இதில் சசிகுமார் மிகவும் வலிமையான மற்றும் தனித்துவமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அது திரைப்படத்தின் முக்கிய சிறப்பம்சங்களில் ஒன்றாக இருக்கும் என கூறப்படுகிறது. திரைப்படத்தின் தலைப்பு, ஃபர்ஸ்ட் லுக், டீசர் மற்றும் இதர முக்கிய அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்.

 
 

Related posts:

"அதிரடியான மற்றும் பொழுதுபோக்கு அம்சம் கொண்ட அட்வென்ச்சர் " என பிரிடேட்டர்: பேட்லேட்ண்ஸ் திரைப்படத்தை விமர்சகர்கள் பாராட்டி வருகின்றனர்!

ஆர் கே இன்டர்நேஷனல் கே எஸ் ராமகிருஷ்ணா தயாரிப்பில் ஷாலின் ஜோயா தமிழில் இயக்குநராக அறிமுகம்!

தமிழ்நாட்டில் கருவுறாமை நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது !

சாலா விமர்சனம்!

இந்தியன் வங்கியின் உலகளாவிய வணிகம், முந்தைய ஆண்டைவிட 12% உயர்ந்து ₹12.22 லட்சம் கோடி என்ற அளவை எட்டியிருக்கிறது !

'புஜ்ஜி @ அனுப்பட்டி ' -- விமர்சனம் !

’என்.டி.ஆர்.நீல்’ படத்தின் படப்பிடிப்பில் ஏப்ரல் 22 ஆம் தேதி இணைகிறார் என்.டி.ஆர்.!*

’கள்வன்’ படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜாவுக்கு தங்க சங்கிலி வழங்கிய தயாரிப்பாளர் ஜி. டில்லி பாபு!