தமிழ்நாட்டில் நவோதயா பள்ளிகள்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

தமிழ்நாட்டில் நவோதயா பள்ளிகள்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் திறப்பு குறித்த வழக்கு விசாரணை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் நடைபெற்றது.

 

தமிழ்நாட்டில் நவோதயா பள்ளிகள் திறக்க அனுமதிக்க உத்தரவிடக்கோரி தொடரப்பட்ட வழக்கில், மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில், நவோதயா வித்யாலயா பள்ளிகள் திட்டத்தை ஏற்கவும், அதற்கான வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிடக்கோரி மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் முகம்மது ரஸ்வி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுதாக்கல் செய்தார்.

இது தொடர்பாக அவர் தாக்கல் செய்த மனுவில், “இந்தியாவில் தமிழகம் தவிர்த்து பிற மாநிலங்களில் மத்திய அரசின் நவோதயா பள்ளிகள் இயங்கி வருகின்றன. இப்பள்ளிகளில் ஆண்டுக்கு ரூ.200 மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தமிழகத்தில் அரசுகளின் கொள்கை முடிவு என்று கூறி நவோதயா பள்ளிகளைத் திறக்க மாநில அரசுகள் மறுத்து வருகின்றன.

1 முதல் 8 வரை பள்ளிகள் திறப்பு: பின்வாங்குகிறதா அரசு, காரணம் என்ன?

நவோதயா பள்ளிகள் தொடங்க மாநில அரசு இடம் வழங்கினால் போதும். அந்த இடத்தில் மத்திய அரசு ரூ.20 கோடியில் நவோதயா பள்ளிகளைத் தொடங்கும். தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் இல்லாததால் ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள், தனியார் பள்ளிகளில் அதிகக் கட்டணம் செலுத்தி, கல்வி கற்கும் நிலை உள்ளது.

எனவே, தமிழகத்தில் மத்திய அரசின் நவோதயா பள்ளிகளைத் தொடங்கவும், அதற்குத் தேவையான அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளைத் தமிழக அரசு ஏற்படுத்தவும் உத்தரவிட வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மனு மீதான விசாரணை, நீதிபதிகள் துரை சுவாமி, முரளிசங்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, நவோதயா வித்யாலயா பள்ளிகள் தொடர்பான முடிவு அரசின் கொள்கை முடிவு என்றும், அரசே இது குறித்து முடிவு செய்ய வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும், மனுதாரர் விளம்பர நோக்கில் இந்த வழக்கை பதிவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. நவோதயா பள்ளிகள் தமிழ்நாட்டில் கொண்டு வரப்பட வேண்டும் என்றும், அப்படி கொண்டுவரப்பட்டால் பள்ளிக்கட்டணம் செலுத்த சிரமத்திற்குள்ளாகும் பலரும் பயனடைவார்கள் என்றும் மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து மத்திய, மாநில அரசுகள் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை எட்டு வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.

Related posts:

 வேலம்மாள் மாணவர் தமிழக அரசின் குறளோவியம்-ஓவியப் போட்டியில் ரொக்கப் பரிசு வென்றார்.
ஐரோப்பாவிலுள்ள லாட்வியா நாட்டு ரிகா தொழில்நுட்பப் பல்கலைக்கழக தகவல் மற்றும் கல்வி மையம் ! சென்னையில் தொடக்கம் !
குறைந்த கட்டணத்தில் வெளிநாட்டில் மருத்துவம் படிக்கமுடியும்!
தொலைநிலைக் கல்வி வழங்கும் ஐ.சி.எம்.ஏ.ஐ !
நீட் தேர்வும் தமிழ்நாட்டின் பள்ளிக்கல்வியும்- உண்மை நிலை என்ன??-
என்.ஐ.ஓ.எஸ். கல்வி முறை பற்றி தெரியுமா?
பள்ளிக் கல்வியில் மாற்றம் வருமா? மத்திய அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு மாநில அரசுகள் ஒத்துழைப்பு தருமா?
பி.எஸ்.அப்துர்ரஹ்மான்கிரசெண்ட்இன்ஸ்டிடியூட்ஆப்சைன்ஸ்அண்ட்டெக்னாலஜிஇன்னோவேஷன், என்டர்ப்ரனர்ஷிப்அண்ட்வென்சர்டெவலெப்மெண்ட் (MBA IEV)  என்றMBA பாடத்திட்டத...