போக்ஸ்வேகன் – ஸ்கோடா நிறுவனங்கள் இணைப்பு !

பிரபல வாகன தயாரிப்பு நிறுவனமான, போக்ஸ்வேகன் குழுமம், அதன் மூன்று நிறுவனங்களையும் ஒன்றாக இணைத்து, ஒரே நிறுவனமாக மாற்றப் போவதாகவும், புதிய நிறுவனம், ‘ஸ்கோடா ஆட்டோ போக்ஸ்வேகன் இந்தியா’ என, அழைக்கப்படும் எனவும் அறிவித்துள்ளது.

மேலும், இந்த இணைப்பு மற்றும் புதிய நிறுவனம் சம்பந்தமான அனைத்து அனுமதிகளையும், ஒழுங்குமுறை அமைப்புகளிடமிருந்து பெற்றுவிட்டதாகவும் தெரிவித்துள்ளது.‘போக்ஸ்வேகன் இந்தியா, போக்ஸ்வேகன் குழுமம் விற்பனை இந்தியா, ஸ்கோடா ஆட்டோ இந்தியா’ ஆகிய மூன்று நிறுவனங்களும் ஒன்றிணைகின்றன.தற்போது உள்நாட்டு சந்தையில் மிகக்குறைந்த பங்களிப்புடன் இருக்கும் போக்ஸ்வேகன் நிறுவனம், தன்னை மேலும் வலுப்படுத்திக் கொள்ளும் வகையில், இந்த மூன்று கார் நிறுவனங்களையும் ஒன்றிணைக்கும் முடிவை எடுத்துள்ளது.

இணைக்கப்பட்ட நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக குர்பிரதாப் போபராய் இருப்பார். போபராய், தற்போது போக்ஸ்வேகன் இந்தியா நிறுவனத்தில் நிர்வாக இயக்குனராக இருக்கிறார்.’இந்தியா 2.0’ எனும், 8 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டத்தின்படி, இந்த இணைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன. இதன் மூலம், 2025ல் சந்தையில், 5 சதவீத பங்கை கைப்பற்ற, இந்நிறுவனம் இலக்கு வைத்துள்ளது. தற்போது இது, 2 சதவீதமாக உள்ளது.

Related posts:

சென்னையில் நடிகர் மோகன்–ரசிகர்கள் சந்திப்பு!

கே ஆர் ஜி மூவிஸ் கண்ணன் ரவி தயாரிப்பில் எட்செட்ரா என்டர்டெயின்மென்ட் வி. மதியழகன் இணை தயாரிப்பில் போஸ் வெங்கட் இயக்கும் பிரம்மாண்ட திரைப்படம்!

'தணல்' திரைப்படம் தற்போது திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது!

CTMAவின் பிரமாண்டமான ஆவணிப்பூவரங் 2025 கொண்டாட்டத்திற்கு (அக்டோபர் 4 & 5) சென்னை தயாராகிறது!

லெஜெண்ட் சரவணன் நடிப்பில் தி லெஜெண்ட் நியூ சரவணா ஸ்டோர்ஸ் புரொடக்ஷன்ஸ் பிரம்மாண்ட தயாரிப்பில் புதிய திரைப்படம் !

“சென்னை பைல்ஸ் முதல் பக்கம்” -- விமர்சனம் !

மாஸ் மஹாராஜா ரவி தேஜா, வம்சி, அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் இணைந்து வழங்கும் பான் இந்திய பிரமாண்ட படைப்பு “டைகர் நாகேஸ்வர ராவ்” அக்டோபர் 20 ஆம் தேதி வெள...

திமுக அரசின் முதல் பட்ஜெட்.. இடம் பெற வாய்ப்புள்ள 5 சூப்பர் விஷயங்கள்