28
Oct
இந்தப் படத்தை பத்தோடு பதினொன்றாவது மருது பாண்டியர்கள் படமாக பார்க்காமல் கூர்ந்து கவனித்து பாருங்கள். மாமன்னர் மருது பாண்டியர்கள் அவர்கள் வாழ்வில் அனுபவித்த பல துயரங்களும், அவர்களுக்கு நடந்த துரோகங்களும் முடிந்த வரை இந்தப் படத்தில் கூறப்பட்டுள்ளது..! படத்தில் ஒரு மாமன்னர்கள் குற்றவாளி போல சங்கிலி பூட்டி நிற்கிறார்களே... இவர்கள் நினைத்து இருந்தால், இவர்களை நம்பி வந்த கட்டபொம்மன் தம்பி ஊமைத்துரையை வெள்ளையனிடம் காட்டி கொடுத்துவிட்டு தனது நாட்டை பாதுகாத்துக் கொண்டு நிம்மதியாக வாழ்ந்து இருக்க முடியும்.ஆனால், அவர்கள் தன்னை நம்பி வந்த நண்பனுக்காக தனது ஒட்டு மொத்த வம்சத்தையுமே இழந்தனர்..! தாய் நாட்டின் விடுதலைக்காக இங்கு பலர் உயிர் நீத்து இருந்தாலும் மருது பாண்டியர்களின் வீர மரணம் மிகவும் மாறுபட்டது. உலகில் வேறு எந்த மன்னருக்கும் நடக்காத கொடூரம் மருது பாண்டியர்களுக்கு நடந்தது அவர்கள் வெள்ளையனை எதிர்த்தனர். ஆனால், வெள்ளையன் சிறிதும் மனசாட்சியின்றி மருது பாண்டியர்கள் குடும்பத்தில் உள்ள சிறு…
