செய்திகள்

A wonderful serenity has taken possession of my entire soul, like these sweet mornings of spring which I enjoy with my whole heart.

பிரேசிலுக்கு வரும் இந்தியா மற்றும் சீனத் தொழிலதிபர்களுக்கு விசா தேவையில்லை !

பிரேசிலுக்கு வரும் இந்தியா மற்றும் சீனத் தொழிலதிபர்களுக்கு விசா தேவையில்லை !

பிரேசிலில் ஜனாதிபதியாக இந்த ஆண்டு பதவியேற்றவர் ஜாய்ர் போல்சோனாரா. இவர் பதவியேற்ற சில மாதங்களிலேயே விசா நடைமுறையில் அதிரடி மாற்றங்களை கொண்டு வந்து உள்ளார். அதாவது வளர்ந்து வரும் நாடுகளை சேர்ந்தவர்களுக்கு விசா நடைமுறை எளிதாக்கி உள்ளார். அதன்படி அமெரிக்கா , ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியாவை சார்ந்த தொழில் அதிபர்கள் , சுற்றுலா பயணிகளுக்கு பிரேசில் வர விசா தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது பிரேசிலுக்கு வரும் இந்தியா மற்றும் சீனா தொழிலதிபர்களுக்கும் , சுற்றுலா பயணிகளுக்கு விசா தேவை இல்லை என அறிவித்தார். பல்வேறு நாடுகளுக்கு விசா சலுகை அழிப்பதன் மூலம் தங்கள் நாட்டின் சுற்றுலாத் துறை மேம்படும் முடியும் என்ற நோக்கத்தில் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறியுள்ளார்.கடந்த ஆண்டு 6 மில்லியன் சுற்றுலா பயணிகள் பிரேசிலுக்கு சென்றுள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.
Read More
தாய் நாட்டின் விடுதலைக்காக மருது பாண்டியர்களின் வீர மரணம் !

தாய் நாட்டின் விடுதலைக்காக மருது பாண்டியர்களின் வீர மரணம் !

இந்தப் படத்தை பத்தோடு பதினொன்றாவது மருது பாண்டியர்கள் படமாக பார்க்காமல் கூர்ந்து கவனித்து பாருங்கள். மாமன்னர் மருது பாண்டியர்கள் அவர்கள் வாழ்வில் அனுபவித்த பல துயரங்களும், அவர்களுக்கு நடந்த துரோகங்களும் முடிந்த வரை இந்தப் படத்தில் கூறப்பட்டுள்ளது..! படத்தில் ஒரு மாமன்னர்கள் குற்றவாளி போல சங்கிலி பூட்டி நிற்கிறார்களே... இவர்கள் நினைத்து இருந்தால், இவர்களை நம்பி வந்த கட்டபொம்மன் தம்பி ஊமைத்துரையை வெள்ளையனிடம் காட்டி கொடுத்துவிட்டு தனது நாட்டை பாதுகாத்துக் கொண்டு நிம்மதியாக வாழ்ந்து இருக்க முடியும்.ஆனால், அவர்கள் தன்னை நம்பி வந்த நண்பனுக்காக தனது ஒட்டு மொத்த வம்சத்தையுமே இழந்தனர்..! தாய் நாட்டின் விடுதலைக்காக இங்கு பலர் உயிர் நீத்து இருந்தாலும் மருது பாண்டியர்களின் வீர மரணம் மிகவும் மாறுபட்டது. உலகில் வேறு எந்த மன்னருக்கும் நடக்காத கொடூரம் மருது பாண்டியர்களுக்கு நடந்தது அவர்கள் வெள்ளையனை எதிர்த்தனர். ஆனால், வெள்ளையன் சிறிதும் மனசாட்சியின்றி மருது பாண்டியர்கள் குடும்பத்தில் உள்ள சிறு…
Read More
மூன்று மாதங்களில் இந்தியாவில் 4.9 கோடி ஸ்மார்ட்போன்கள் விற்பனை !

மூன்று மாதங்களில் இந்தியாவில் 4.9 கோடி ஸ்மார்ட்போன்கள் விற்பனை !

க்ஷியோமி நிறுவனத்தின் சந்தைப் பங்கு 26 சதவீதமாக உயர்ந்துள்ளது.பீச்சர் போன்களின் விற்பனை 37 சதவீதம் சரிவைச் சந்தித்துள்ளது.ஜூலை - செப்டம்பர் காலாண்டில் இந்தியாவில் ஸ்மார்ட்போன் விற்பனை 10 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. ஸ்மார்ட்போன் இல்லாத ஆளே இல்லை என்ற அளவுக்கு நம் மக்களிடையே ஸ்மார்ட்போன்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல்வேறு சிறப்புச் சலுகைகளுடன் குறைந்த விலைக்கு விற்பனை செய்து ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் தங்களது விற்பனையை இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.இந்தியாவில் மிக வேகமாக வளரும் ஸ்மார்ட்போன் சந்தையில் சீனா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள் பல தங்களது தயாரிப்புகளை அறிமுகப்படுத்தி வாடிக்கையாளர்களை ஈர்த்து வருகின்றன. இதனால் உள்நாட்டு நிறுவனங்களுக்கும் சாம்சங், ஆப்பிள் உள்ளிட்ட பிரபல நிறுவனங்களுக்கும் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. ஸ்மார்ட்போன் விற்பனை குறித்த விவரங்களை கவுண்ட்டர் பாயிண்ட் ஆய்வு நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி, ஜூலை - செப்டம்பர் காலாண்டில் மொத்தம் 4.9 கோடி ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில்…
Read More
சுஜித்தை மீட்க மணிகண்டன் குழு நடத்திய முயற்சியில் பின்னடைவு..?

சுஜித்தை மீட்க மணிகண்டன் குழு நடத்திய முயற்சியில் பின்னடைவு..?

அம்மா இருக்கிறேன் கவலைப்படாதே என்ற தாய்.. உம் என்று சொன்ன சுஜித்.. மீட்பு குழு உற்சாகம். ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த 2 வயது சிறுவன் சுஜித்திடம் அவரது தாய் மேரி பேசினார். அதற்கு சிறுவனும் பதில் சொல்லியுள்ளார். திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுபட்டி என்ற கிராமத்தில் உள்ள சுமார் 30 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில், சுஜித் என்ற 2 வயது சிறுவன் இன்று மாலை 5.40 மணி அளவில் எதிர்பாராதவிதமாக விழுந்துவிட்டார்.இதையடுத்து மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இரவு 12.50 மணியளவில் கிடைத்த தகவல்படி, குழந்தை 7 மணி நேரத்துக்கும் மேலாக உணவு ஏதும் உட்கொள்ளாமல் இருப்பதால் சோர்வடைந்து இருக்கிறது என்று தெரியவந்தது. எனவே சுஜித்திற்கு உற்சாகமூட்டும் வகையில், சுஜித்தின் தாய் மற்றும் தந்தை ஆகியோரை வைத்து பேச வைத்துக் கொண்டிருக்கின்றனர் அதிகாரிகள். சுஜித் தாய் மேரி, "அம்மா இருக்கிறேன் கவலைப்படாதே" என்று கூறியதற்கு "உம்"…
Read More
`ஃபேஸ் ஆப் சென்னை 2019′ ! நிஃப்ட் (NIFT) கல்லூரி மாணவி நிர்ஜா முதலிடம் !!

`ஃபேஸ் ஆப் சென்னை 2019′ ! நிஃப்ட் (NIFT) கல்லூரி மாணவி நிர்ஜா முதலிடம் !!

நேச்சுரல்ஸ் - ஐரிஸ் கிளாம் இணைந்து நடத்திய `ஃபேஸ் ஆப் சென்னை 2019' இறுதிச்சுற்றில் பெண்களுக்கான பிரிவில் நிஃப்ட் (NIFT) கல்லூரியைச் சேர்ந்த மாணவி நிர்ஜா முதலிடம் பிடித்தார். ஆண்களுக்கான பிரிவில் தொழிலதிபர் முகமது யிஹியா, முதலிடம் பிடித்தார். `ஃபேஸ் ஆப் சென்னை 2019' நிகழ்ச்சி சென்னை ஜிஆர்டி கிராண்ட் ஓட்டலில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நந்திதா பாண்டே, வைஷாலி கோலா, ஹரித் தாரங் ஆகியோர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சிக்கு ஏஆர்கே இந்தியா சேவை சங்கம் ஆதரவு அளித்தது. நேச்சுரல்ஸ் - ஐரிஸ் கிளாம் இணைந்து `ஃபேஸ் ஆப் சென்னை 2019' நிகழ்ச்சியை 8வது ஆண்டாக நடத்தின. இதன் மூலம் `போட்டோஜெனிக்' முகத்திற்கான தேடல் முடிவுக்கு வந்தது. இதன் இறுதிச்சுற்று பிரமாண்டமாக நடைபெற்றது. `ஃபேஸ் ஆப் சென்னை 2019' என்பது இளைஞர்கள், இளம் பெண்களின் முழுமையான அழகு, ஆளுமை மற்றும் நேர்மறையான அணுகு முறையை அடையாளம் காணும் `திறமை வேட்டை' என்னும் நிகழ்ச்சியாகும்.…
Read More
செவிலியர் கவுன்சிலில் திருநங்கை ரக்‌ஷிகா பெயர் பதிவு செய்ய நீதிபதி உத்தரவு..!

செவிலியர் கவுன்சிலில் திருநங்கை ரக்‌ஷிகா பெயர் பதிவு செய்ய நீதிபதி உத்தரவு..!

திருநங்கை ராக்ஷிகா செவிலியர் படிப்பை முடித்துவிட்டு தமிழ்நாடு செவிலியர் கவுன்சிலில் பதிவு செய்ய விண்ணப்பித்த போது மூன்றாம் பாலின பெண் என தன்னை பதிவு செய்த விண்ணப்பத்தை நிராகரித்ததாக கூறி திருநங்கை ராக்ஷிகா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி ஜெயச்சந்திரன் முன் வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், வாதிடும்போது மூன்றாம் பாலினத்தவர் பதிவு குறித்த கவுன்ஸில் விதிகளில் திருத்தம் செய்ய இருப்பதாகவும் , ராக்ஷிகா பெயரை மூன்றாம் பாலினத்தவர் என பதிவு செய்ய இடைக்கால ஏற்பாடு செய்ய உள்ளதாகவும் கூறினார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி தமிழ்நாடு கவுன்சில் சட்ட விதிகளில் திருத்தம் கொண்டு வர வரை திருநங்கை ராக்ஷிகா பெயரை தற்காலிகமாக செவிலியர் கவுன்சிலில் பதிவு செய்ய உத்தரவிட்டார்.
Read More
அடுத்த தலைமுறை நுகர்வோர் எலக்ட்ரானிக்ஸ் பிராண்டான Amstrad , தமிழ்நாட்டில் அறிமுகம்  !

அடுத்த தலைமுறை நுகர்வோர் எலக்ட்ரானிக்ஸ் பிராண்டான Amstrad , தமிழ்நாட்டில் அறிமுகம் !

அடுத்த தலைமுறை நுகர்வோர் எலக்ட்ரானிக்ஸ் பிராண்டான Amstrad , தமிழ்நாட்டில் அறிமுகமாகிறது ! முதல் ஆண்டிலேயே ரூ . 150 கோடி விற்பனை வருவாயை இலக்காக இது நிர்ணயித்திருக்கிறது ! ! ! சென்னை : இந்தியாவின் முதல் அடுத்த தலைமுறை நுகர்வோர் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் வீட்டு பயன்பாட்டு சாதனங்கள் பிராண்டான Amstrad , தமிழ்நாட்டில் அதன் தயாரிப்புகளை அறிமுகம் செய்திருக்கிறது . Amstrad , புனே நகரில் தலைமையகத்தைக் கொண்டுள்ள OVOTPvt . Ltd - க்கு சொந்தமான பிராண்டாகும் . மகிழ்ச்சியும் , உற்சாகமும் கரைபுரண்டோடும் சுப வேளையான தீபாவளி திருநாளையொட்டி தமிழ்நாட்டில் தனது பயணத்தை தொடங்கும் Amstrad , முதல் ஆண்டிலேயே ரூ . 150 கோடி விற்பனை வருவாயை அடைவதை இலக்காகக் கொண்டிருக்கிறது . கட்டுபடியாகக்கூடிய மிதமான விலைகளில் இந்திய நுகர்வோர்களுக்கு உயர் தரத்திலான அடுத்த தொழில்நுட்ப சாதனங்களை வழங்க வேண்டும் என்பதே Amstrad -…
Read More
பஞ்சமி நிலத்தை உரியவர்களிடம் ஒப்படைக்காவிட்டால் போராட்டம் ?பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி!

பஞ்சமி நிலத்தை உரியவர்களிடம் ஒப்படைக்காவிட்டால் போராட்டம் ?பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி!

பஞ்சமி நிலத்தை உரியவர்களிடம் ஒப்படைக்காவிட்டால் மிகப்பெரிய அளவில் போராட்டம் வெடிக்கும் என்று பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் இருப்பதாக வைகோ ஏற்கனவே ஆதாரத்தை காட்டியுள்ளார். அலுவலகம் இருக்குமிடம் பஞ்சமி நிலம் என்றால் அதை உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டியது அவர்களுடைய கடமை. ரஜினி கட்சி ஆரம்பித்தாலும் சரி, ஆரம்பிக்காவிட்டாலும் சரி, காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில் மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியாவிலும் எதிர்காலம் இருக்காது என்று பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
Read More
நாடு முழுவதும் 3 லட்சம் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் !

நாடு முழுவதும் 3 லட்சம் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் !

பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் முடிவை கைவிடக்கோரி, அகில இந்திய அளவில் இன்று(அக்.,22) வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். தமிழகத்தில் 35 ஆயிரம் பேர் உட்பட, இந்திய அளவில் 3 லட்சம் ஊழியர்கள் கலந்து கொள்கின்றனர். இதனால் வங்கி சேவைகள் முற்றிலும் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளை இணைக்க வேண்டும் என்ற முயற்சியை, மத்திய அரசு மேற்கொண்டு, அதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 10 பொதுத்துறை வங்கிகளை இணைத்து 4 வங்கிகளாக மாற்ற மத்திய அரசு தீர்மானித்துள்ளது. இதற்கு வங்கி ஊழியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனையடுத்து இன்று(அக்.,22) ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக வங்கி ஊழியர்கள் சங்கம் அறிவித்தது. இப்போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கில், மத்திய அரசு நடத்திய பேச்சுவார்த்தை, தோல்வி அடைந்தது. இதனையடுத்து, இன்று திட்டமிட்டபடி வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர். தமிழகத்தில் 35,000 பேர்…
Read More
ஆதாரில் முகவரியை மாற்ற வாடகை ஒப்பந்த பத்திரம் போதும்…..!

ஆதாரில் முகவரியை மாற்ற வாடகை ஒப்பந்த பத்திரம் போதும்…..!

ஆதார் அட்டை, தற்போதைய நிலையில் அனைவருக்கும் இன்றியமையாததாக மாறியுள்ளது. பல்வேறு இடங்களில், ஆதார் அட்டையில் உள்ள முகவரியே, முகவரி சான்று ஆக பயன்படுத்தப்பட்டு வருகிறது. சொந்த வீட்டில் வசிப்பவர்கள் எனில், அவர்கள் முகவரி மாற்றம் அடிக்கடி செய்ய வேண்டிய அவசியமில்லை. ஆனால், வாடகை வீட்டில் வசிப்பவர்களுக்கோ, ஒவ்வொரு வீடும் மாறும் போதும், ஆதார் அட்டையில் எவ்வாறு முகவரியை மாற்றுவது என்று விழிபிதுங்கிக்கொண்டிருந்தனர். அவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் செய்தியாக இந்த தகவல் அமையும் என்பதில் யாருக்கும் எவ்வித சந்தேகமுமில்லை… வாடகை வீட்டில் வசிப்பவர்கள், ஒரு வீட்டில் இருந்து மற்றொரு வீட்டுக்கு மாறும்போது, அவர்களது முகவரி மாற்றம் பெறும். ஆதார் அட்டை, பல்வேறு இடங்களில் முகவரி சான்று ஆகவும் பயன்படுத்தப்பட்டு வருவதால், தற்போது வசிக்கும் இடத்தின் முகவரியை, ஆதார் அட்டையில் மாற்றவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. UIDAI அமைப்பு, முகவரி மாற்றத்திற்கு 44 வகையான ஆவணங்களை அங்கீகரித்துள்ளது. வீட்டு வாடகை ஒப்பந்த பத்திரமும் இதில் அடக்கம்…
Read More