செய்திகள்

A wonderful serenity has taken possession of my entire soul, like these sweet mornings of spring which I enjoy with my whole heart.

ஆன்லைன் மளிகை வியாபாரம் ரூ.74,000 கோடிக்கு அதிகரிக்கும்.

ஆன்லைன் மளிகை வியாபாரம் ரூ.74,000 கோடிக்கு அதிகரிக்கும்.

ஆன்லைன் மளிகை வியாபாரம் வரும் 2023ம் ஆண்டில் 55 சதவிகிதம் அதிகரித்து 74,000 கோடி ரூபாயாக அதிகரிக்கும் என்று ஆய்வு நிறுவனமான ரெட்சீர் அறிக்கையில் கூறியுள்ளது.சர்வதேச அளவில் சில்லறை விற்பனை 10 சதவிகிதம் என்றும், இதில் ஒழுங்கமைக்கப்பட்ட சில்லறை விற்பனை 3.5 சதவிகிதம் ஆகும். இதே ஆன்லைன் மளிகை 0.2 சதவிகிதம் என்றும் கூறப்படுகிறது.எவ்வாறயினும் அனைத்து கண்களும் தற்போது ஆன்லைன் விற்பனையின் பக்கம் திரும்பியுள்ளது உண்மையே. இந்த நிலையில் இது குறித்து ரெட் சீர் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, 2023ம் ஆண்டில் ஒட்டுமொத்த சந்தையில் 1.2 சதவிகிதத்தை எட்டும் என்றும், இது 55 சதவிகித வளர்ச்சி கண்டு, 74,000 கோடி ரூபாயாக பெருகும் என்றும் கூறியுள்ளது. இந்த நிலையில் ஆன்லைன் விற்பனையை ஊக்கப்படுத்தவும், தங்களது விற்பனையை மேம்படுத்தவும் அமேசான், பிளிப்கார்ட், க்ரோஃபர்ஸ் மற்றும் பிக்பாஸ்கெட் உள்ளிட்ட நிறுவனங்கள் தங்களது திட்டங்களை வெளீயிட்டு வருகின்றன. இந்த நிறுவனங்களின் திட்டத்தில் பிக் பாஸ்கெட்…
Read More
குழந்தை தத்தெடுப்பு விழிப்புணர்வு திட்டம்!சென்னையில் நடைபெற்றது!

குழந்தை தத்தெடுப்பு விழிப்புணர்வு திட்டம்!சென்னையில் நடைபெற்றது!

குழந்தை தத்தெடுப்பு விழிப்புணர்வு திட்டம் நகரத்தில் நடைபெறுகிறது மெட்ராஸின் இன்னர் வீல் கிளப் மற்றும் சென்னை கேலக்ஸியின் இன்னர் வீல் கிளப் மற்றும் சமூக பாதுகாப்பு இயக்குநரகம்,தமிழ்நாடு அரசு.'இந்தியாவில் குழந்தை தத்தெடுப்பு எப்படி, என்ற விழிப்புணர்வு திட்டத்தை கூட்டாக ஏற்பாடு செய்து வருகிறது. தத்தெடுப்பு மக்களுக்கு ஒரு குழந்தையை குடும்பத்தில் சேர்ப்பதில் மகிழ்ச்சியை அளிக்கிறது, ஆனால் பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல்கள் மற்றும் நடைமுறைகள் உள்ளன பயணத்தைத் தொடங்க விரும்புவோர். தத்தெடுப்பு செயல்முறையின் பல்வேறு அம்சங்களை வெளிச்சம் போடுவதை இந்த திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. பின்வரும் புகழ்பெற்ற நபர்கள் கூட்டத்தில் உரையாற்றினார்கள்.சமூக பாதுகாப்பு இயக்குநரகம் ஆணையர் ஸ்ரீ லால்வேனா ஐ.ஏ.எஸ்., அரசு. இந்திய குழந்தைகள் நல கவுன்சில் (ஐ.சி.சி.டபிள்யூ) தலைவர் மற்றும் மத்திய தத்தெடுப்பு வள முகமை (காரா) முன்னாள் தலைவர் - ஐ.சி.சி.டபிள்யூ துணைத் தலைவரும், "இந்தியாவில் குழந்தை தத்தெடுப்பு பற்றிய கையேடு" ஆசிரியருமான சந்திரதேவி தனிகாச்சலம், செல்வி.நள்ளினி ஒலிவண்ணன், மாவட்டத்…
Read More
கூடுதல் லாபத்தை பெற 18000 பேரின் வேலையை காலி செய்யப் போகும் கார்ப்பரேட் !

கூடுதல் லாபத்தை பெற 18000 பேரின் வேலையை காலி செய்யப் போகும் கார்ப்பரேட் !

அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டாட காக்னிசன்ட் என்ற நிறுவனம் தனது ஊழியர்கள் 18000 பேரை நீக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்த நிறுவனத்தில் சுமார் 3 லட்சம் பேர் வேலை செய்கின்றனர் இதில் 70% பேர் இந்தியர்கள். இதற்கு காரணமாய் பார்க்கப்படுவது காக்னிசன்ட் நிறுவனத்தில் கடந்த ஜூன் மாதம் கீத் உட்லி (42) என்ற ஊழியர் மன அழுத்தத்தின் காரணமாக உயிரிழந்தார். இதனால் பேஸ்புக் நிறுவனம் நிறுவனம் அவர்களுடான ஒப்பந்தத்தை ரத்து செய்தது . இதனை கருத்தில் கொண்டு 18,000 பேரை வேலையிலிருந்து நீக்க முடிவுசெய்துள்ளது .இதற்கு மற்றொரு முக்கிய காரணம் அந்த நிறுவனம் அடுத்த நிதியாண்டில் கூடுதல் லாபத்தை பெற வேண்டும் என்பதற்காக பார்க்கப்படுகிறது .இது குறித்து அந்த நிறுவனம் எந்தவித மறுப்பும் தெரிவிக்கவில்லை.என்னதான் காக்னிசன்ட் பெரிய நிறுவனமாக இருந்தாலும் தனது லாபம் தான் முக்கியம் ஊழியர்கள் குடும்பம் அவர்களின் உழைப்பு முக்கியம் என்று நினைக்காத எந்த நிறுவனமும் இறுதியில் தொழிலாளர்கள் போராட்டத்தை…
Read More
பெட்ரோல் நிலையங்களின் எண்ணிக்கை இனி அதிகரிக்கும்..! மத்திய அரசின் அதிரடி முடிவு !!

பெட்ரோல் நிலையங்களின் எண்ணிக்கை இனி அதிகரிக்கும்..! மத்திய அரசின் அதிரடி முடிவு !!

பெட்ரோல், டீசல் சில்லறை விற்பனையை ஊக்குவிக்கும் வகையிலும், முதலீடுகளை அதிகரிக்கும் விதமாகவும் மத்திய அரசு கடந்த புதன்கிழமை ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் இனி எரிபொருள் சந்தையில் ஆயில் நிறுவனங்கள் தவிர புதியவர்களும் ஈடுபட இந்த அறிக்கை வழி வகுக்கும் என்றும், பெட்ரோல், டீசல் துறையில் வர்த்தகத்தில் ஈடுபட ஒரு நிறுவனம் 2,000 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட வேண்டும் என்று கட்டாயப்படுத்திய ஒரு விதியை ரத்து செய்துள்ளதாகவும் கூறியுள்ளது. இதன் மூலம் இனி எரிபொருள் சந்தையில் சில்லறை விற்பனை நிலையங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது. இனி ரூ.250 கோடி போதும் இனி புதிதாக அங்கீகாரம் பெற விரும்பும் நிறுவனங்கள் 250 கோடி ரூபாய் வைத்திருந்தால் போதும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதன் படி இனி அதானி, சவுதி அராம்கோ மற்றும் சூப்பர் மார்கெட்களில் கூட ஆட்டோமொபைல் எரிபொருள் விற்பனை செய்வதற்கான விற்பனை நிலையங்களைத் திறக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சில்லறை…
Read More
ரசீது இல்லாமல் வைத்திருக்கும் தங்கத்திற்கு  அபராத வரி வசூலிக்க மத்திய அரசு திட்டம்..!

ரசீது இல்லாமல் வைத்திருக்கும் தங்கத்திற்கு அபராத வரி வசூலிக்க மத்திய அரசு திட்டம்..!

கருப்பு பணத்தை ஒழிக்க பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு பல்வேறு கட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கடந்த 2016 ஆம் ஆண்டு 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்து பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டது. இந்நிலையில், கறுப்புப் பணத்தைத் தடுப்பதற்கான மற்றொரு கட்டமாக, மையத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கம் தங்கத்திற்கான பொது மன்னிப்பு திட்டத்தை அறிவிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை விரைவில் ஒப்புதல் அளிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால், தங்கத்திற்கான பொது மன்னிப்பு திட்டம் 2016 ஆம் ஆண்டில் பணமாக்குதலுக்குப் பிறகு கறுப்புப் பணத்தைத் தடுப்பதில் பிரதமர் மோடி எடுத்த இரண்டாவது பெரிய நடவடிக்கையாகும். இந்த திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை விரைவில் ஒப்புதல் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திட்டத்தின் படி, ரசீது இல்லாமல் வைத்திருக்கும் தங்கத்திற்கு அதிகபட்ச அபராத வரியை வசூலிக்க மத்திய…
Read More
சென்னை உயர்நீதிமன்ற புதிய நீதிபதியாக சாஹி நியமனம் !

சென்னை உயர்நீதிமன்ற புதிய நீதிபதியாக சாஹி நியமனம் !

சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய நீதிபதியாக சாஹி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.அமரேஷ்வர் பிரதாப் சாஹி (Amreshwar Pratap Sahi) என்பவர் பாட்னாவின் தலைமை நீதிபதியாக இருந்தவர் ஆவார். இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய நீதிபதியாக சாஹி நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள, அமரேஷ்வர் பிரதாப் சாஹி, நவம்பர் 13-ஆம் தேதிக்குள் பதவியேற்க குடியரசு தலைவர் உத்தரவு பிறப்பித்துள்ளார்
Read More
ஆணழகன் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு நடிகர் சரத்குமார் பரிசுகள் வழங்கினார்.

ஆணழகன் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு நடிகர் சரத்குமார் பரிசுகள் வழங்கினார்.

பால்சன் பியூட்டி அண்ட் ஃபேஷன் (பி) லிமிடெட்டின் ஸ்லாம் லைஃப்ஸ்டைல் அண்ட் ஃபிட்னஸ் ஸ்டுடியோ கடந்த 26ந் தேதி ஸ்லாம் கிளாசிக் 1.0 என்கிற ஆணழகன் போட்டியை நடத்தியது. சென்னை அண்ணாசாலையில் உள்ள ஹயாத் ஓட்டலில் Dr ஜமுனாபாயி. ஸ்கின் லேப்இந்த போட்டியை நடத்தியது. இந்த ஆணழகன் போட்டியில் பல்வேறு பகுதிகளில் இருந்து 80 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். இந்தப் போட்டியில் கலந்துகொண்டவர்களில் வெற்றியாளர்களைத் தேர்ந்தெடுக்க ஹைதராபாத்தைச் சேர்ந்த குமார் மானவா, மும்பையைச் சேர்ந்த தேஜல்கடம், சென்னையைச் சேர்ந்த திமோதி செல்வோரும் நடுவர்களாக பங்கேற்று வீர்களைத் தேர்வு செய்தனர். இந்நிகழ்ச்சி குறித்து பால்சன் குரூப் இயக்குனர் Dr.எஸ்ஆர் சாம் பால், பேசும்போது:இதுபோன்ற நிகழ்ச்சிகளில் நாங்கள் முன்னணியில் இருக்கிறோம். ஸ்லாம் கிளாசிக் என்ற நிகழ்ச்சி மூலம் ஆணழகன்களைத் தேர்ந்தெடுத்திருப்பது எங்களுக்குப் பெருமையே! இந்த ஆணழகன் போட்டி எங்களின் முதல் நிகழ்ச்சியாகும். இந்த போட்டியில் வெற்றிபெற்றவர்கள் தேசிய அளவில் வெற்றி பெற வேண்டுமென்பதே எங்கள் நோக்கமாகும்…
Read More
டிஜிட்டலுக்கு தனிநிறுவனம்! ‘ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்’ திட்டம் !!

டிஜிட்டலுக்கு தனிநிறுவனம்! ‘ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்’ திட்டம் !!

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்’ நிறுவனம், டிஜிட்டல் பிரிவில் எடுக்கப்படும் முன் முயற்சிகள் அனைத்தையும் ஒருங்கிணைக்கும் வகையில், அதற்கென தனியாக ஒரு துணை நிறுவனத்தை அமைக்க இருக்கிறது. செயலிகள் உட்பட அனைத்து விதமான டிஜிட்டல் முன் முயற்சிகளுக்கான, தனியான ஒரு துணை நிறுவனமாக இது செயல்படும்.இந்நிறுவனம், 1.08 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை கொண்ட நிறுவனமாக இருக்கும் வகையில், இதில் ரிலையன்ஸ் முதலீட்டை மேற்கொள்கிறது.இது குறித்து, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:இந்த புதிய நிறுவனத்தின் கட்டமைப்பு, உலகளவில் பெரும் தொழில்நுட்ப நிறுவனங்களால் ஒப்புக் கொள்ளப்பட்டதை போன்றதாக இருக்கும். இது, இந்தியாவில் மிகப்பெரிய டிஜிட்டல் சேவைகளுக்கான இயங்குதள நிறுவனத்தை உருவாக்கும்.இந்த புதிய நிறுவனம், உடல்நலம் மற்றும் கல்வி போன்ற துறைகளுக்கான தொழில்நுட்பம் குறித்த பணிகளை மேற்கொள்ள உள்ளது. அத்துடன் செயற்கை நுண்ணறிவு, பிளாக்செயின் மெய்நிகர் தொழில்நுட்பம் உள்ளிட்ட உயர் தொழில்நுட்ப பிரிவுகளிலும் ஈடுபடும்.மேலும், ‘மை ஜியோ, ஜியோ டிவி, ஜியோ சினிமா,…
Read More
தமிழக நீர் நிலைகள் இன்றைக்கு 39,202 ஆக குறைந்து விட்டது. !

தமிழக நீர் நிலைகள் இன்றைக்கு 39,202 ஆக குறைந்து விட்டது. !

நதிகள், ஆறுகள், ஏரிகள், குளங்கள், சிறு ஊரணிகள், குட்டைகள் என பல வகையான நீர் நிலைகள் பண்டைய மன்னராட்சி காலத்தில் நிர்மாணிக்கப்பட்டு, அவை கவனமாக மேலாண்மை செய்து பாதுகாக்கப்பட்டது. சோழர்கள் கட்டிய வீர நாராயணன் ஏரி, கல்லணை என்பவற்றையெல்லாம் அக்காலத்தில் எப்படி அமைத்தார்கள் என்று நமக்கு தெரியவில்லை. மதுரையிலுள்ள வண்டியூர் தெப்பக்குளம், மீனாட்சி அம்மன் கோவிலிலுள்ள பொற்றாமரை குளம் என தமிழகத்தின் பல்வேறு கோவில்களில் குளங்கள், தெப்பங்கள் போன்றவை எப்பொழுதும் நீர் நிறைந்து இருப்பது, அறிவியல் சார்ந்த தொழில் நுட்பத்தை கடந்த பல நூற்றாண்டுகளுக்கு முன்பே தமிழினம் அறிந்திருக்கிறது என்பதையே காட்டுகிறது. இலட்சத்திற்கும் மேலாக இருந்த ஏரி, குளம் போன்ற நீர் நிலைகள் இன்றைக்கு 39,202ஆக குறைந்து விட்டது. ஏரி மாவட்டமான ஒன்றுபட்ட செங்கல்பட்டு மாவட்டத்தில் பழவேற்காடு, பொன்னேரி, உத்திரமேரூர், மதுராந்தகம் ஏரி, செலவப்பன் ஏரி போன்ற பல ஏரிகள் தனது இயற்கை தன்மைகளை இழந்துவிட்டன. இந்தியாவிலேயே குளங்கள், ஏரிப் பாசனம்…
Read More
பிரேசிலுக்கு வரும் இந்தியா மற்றும் சீனத் தொழிலதிபர்களுக்கு விசா தேவையில்லை !

பிரேசிலுக்கு வரும் இந்தியா மற்றும் சீனத் தொழிலதிபர்களுக்கு விசா தேவையில்லை !

பிரேசிலில் ஜனாதிபதியாக இந்த ஆண்டு பதவியேற்றவர் ஜாய்ர் போல்சோனாரா. இவர் பதவியேற்ற சில மாதங்களிலேயே விசா நடைமுறையில் அதிரடி மாற்றங்களை கொண்டு வந்து உள்ளார். அதாவது வளர்ந்து வரும் நாடுகளை சேர்ந்தவர்களுக்கு விசா நடைமுறை எளிதாக்கி உள்ளார். அதன்படி அமெரிக்கா , ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியாவை சார்ந்த தொழில் அதிபர்கள் , சுற்றுலா பயணிகளுக்கு பிரேசில் வர விசா தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது பிரேசிலுக்கு வரும் இந்தியா மற்றும் சீனா தொழிலதிபர்களுக்கும் , சுற்றுலா பயணிகளுக்கு விசா தேவை இல்லை என அறிவித்தார். பல்வேறு நாடுகளுக்கு விசா சலுகை அழிப்பதன் மூலம் தங்கள் நாட்டின் சுற்றுலாத் துறை மேம்படும் முடியும் என்ற நோக்கத்தில் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறியுள்ளார்.கடந்த ஆண்டு 6 மில்லியன் சுற்றுலா பயணிகள் பிரேசிலுக்கு சென்றுள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.
Read More