03
Nov
ஆன்லைன் மளிகை வியாபாரம் வரும் 2023ம் ஆண்டில் 55 சதவிகிதம் அதிகரித்து 74,000 கோடி ரூபாயாக அதிகரிக்கும் என்று ஆய்வு நிறுவனமான ரெட்சீர் அறிக்கையில் கூறியுள்ளது.சர்வதேச அளவில் சில்லறை விற்பனை 10 சதவிகிதம் என்றும், இதில் ஒழுங்கமைக்கப்பட்ட சில்லறை விற்பனை 3.5 சதவிகிதம் ஆகும். இதே ஆன்லைன் மளிகை 0.2 சதவிகிதம் என்றும் கூறப்படுகிறது.எவ்வாறயினும் அனைத்து கண்களும் தற்போது ஆன்லைன் விற்பனையின் பக்கம் திரும்பியுள்ளது உண்மையே. இந்த நிலையில் இது குறித்து ரெட் சீர் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, 2023ம் ஆண்டில் ஒட்டுமொத்த சந்தையில் 1.2 சதவிகிதத்தை எட்டும் என்றும், இது 55 சதவிகித வளர்ச்சி கண்டு, 74,000 கோடி ரூபாயாக பெருகும் என்றும் கூறியுள்ளது. இந்த நிலையில் ஆன்லைன் விற்பனையை ஊக்கப்படுத்தவும், தங்களது விற்பனையை மேம்படுத்தவும் அமேசான், பிளிப்கார்ட், க்ரோஃபர்ஸ் மற்றும் பிக்பாஸ்கெட் உள்ளிட்ட நிறுவனங்கள் தங்களது திட்டங்களை வெளீயிட்டு வருகின்றன. இந்த நிறுவனங்களின் திட்டத்தில் பிக் பாஸ்கெட்…
