செய்திகள்

A wonderful serenity has taken possession of my entire soul, like these sweet mornings of spring which I enjoy with my whole heart.

இந்தியாவில் மீண்டும் சாம்சாங் டிவி !.

இந்தியாவில் மீண்டும் சாம்சாங் டிவி !.

சாம்சங் இந்தியா ஒரு வருடத்திற்குப் பிறகு தொலைக்காட்சி உற்பத்தியை இந்தியாவில் மீண்டும் ஆரம்பிக்கிறது. எல்இடி டிவிக்களை தயாரிக்கும் செல் பேனல் மீதான இறக்குமதி வரியை ரத்து இந்திய அரசு அண்மையில் ரத்து செய்தது. இதன் காரணமாக மீண்டும் உற்பத்தியை ஆரம்பிக்க சாம்சாங் இந்தியா திட்டமிட்டிருப்பதாக அந்த துறை சார்ந்தவர்கள் தெரிவிக்கிறார்கள். தென் கொரிய எலக்ட்ரானிக்ஸ் நிறுவனமான சாம்சாங் இந்தியா, உள்நாட்டு டிவி தயாரிப்பு ஒப்பந்த உற்பத்தியாளரான டிக்சன் டெக்னாலஜிஸுடன் 55 அங்குலங்கள் வரை திரை அளவுகளில் தொலைக்காட்சி பெட்டிகளை தயாரிப்பதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட உள்ளது.இவை இந்திய சந்தையில் 85% க்கும் அதிகமானவையாகும். இந்தியாவில் உள்ளூர் தொலைக்காட்சி உற்பத்தியை மேலும் விரிவுபடுத்துவதற்காக மற்ற ஒப்பந்த உற்பத்தியாளர்களுடள் ஒப்பந்தங்கள் செய்ய அந்த நிறுவனம் மதிப்பீடு செய்து வருகிறது. இந்தியாவின் மிகப்பெரிய தொலைக்காட்சி பிராண்டான சாம்சங், தொலைக்காட்சி தயாரிப்பதற்கான செல் பேனல்களுக்கு அரசாங்கம் வரிவிதித்தன் காரணமாக கடந்த ஆண்டு அக்டோபரில் சென்னை ஆலையை மூடியிருந்தது. இப்போது…
Read More
பொருளாதார மந்த நிலை காரணமாக, தனியார் மயமாகிறது பாரத் பெட்ரோலியம் ?

பொருளாதார மந்த நிலை காரணமாக, தனியார் மயமாகிறது பாரத் பெட்ரோலியம் ?

பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் (பி.பி.சி.எல்.,), இந்திய கப்பல் போக்குவரத்து (எஸ்.சி.ஐ.,) மற்றும் இந்திய சரக்கு பெட்டக கழகம் (கான்கார்) உள்ளிட்ட 5 நிறுவனத்தில், அரசின் வசமுள்ள பங்குகளை விற்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. டில்லியில் நடந்த பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை கூட்டத்தில், பி.பி.சி.எல்., எஸ்.சி.ஐ., மற்றும் கான்கார் நிறுவனத்தில் அரசின் வசமுள்ள பங்குளை விற்பனை செய்ய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பொருளாதார மந்த நிலை காரணமாக, நாட்டின் வருவாய் குறைந்துள்ளதால், வருவாயை அதிகரிக்கும் நோக்கத்தில் மத்திய அரசு முடிவு செய்துள்ளது. பிரதமர் மோடி தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவுகள் எடுக்கப்பட்டதாக, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். இதன்படி, நாட்டின் இரண்டாவது பொதுத்துறை எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனமாக பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷனில், மத்திய அரசின் வசமுள்ள 53.29 சதவீத பங்குகளை விற்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பி.பி.சி.எல்., முற்றிலும் தனியார் மயமாகும். மேலும் எஸ்.சி.ஐ.,…
Read More
மாற்றுத்திறனாளிகளின் பிரச்சனைகளை விவாதிக்க தென்னகரயில்வே குழுக்கள் !

மாற்றுத்திறனாளிகளின் பிரச்சனைகளை விவாதிக்க தென்னகரயில்வே குழுக்கள் !

நவம்பர் 6ஆம் தேதி அறிவிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் போராட்டத்தையடுத்து, தமிழக காவல்துறையின் முயற்சியுடன் ,தென்னக ரயில்வேயுடன் நடந்த பேச்சுவார்த்தையின் விளைவாக, தென்னக ரயில்வேயின் ஜோனல் அளவிலும் , சென்னை, திருச்சி, மதுரை, சேலம், பாலக்காடு மற்றும் திருவனந்தபுரம் கோட்ட அளவிலும் முதல் முறையாக மாற்றுத்திறனாளிகளின் பிரச்சனைகளை விவாதிக்க ,முதுநிலை(SAG - Senior Administrative Grade)மற்றும் இளநிலை(JAG- Junior Administrative Grade) மேலாளர்கள் அளவிலான பல்வேறு குழுக்களை உருவாக்க தென்னக ரயில்வேயின் பொது மேலாளர் திரு ஜான் தாமஸ் அவர்கள் முறைப்படி உத்தரவு பிறப்பித்துள்ளார்கள் இது டிசம்பர் 3 இயக்கத்தின் மாவட்ட ,மாநில தலைவர்கள் மற்றும் தமிழக காவல்துறை மற்றும் பத்திரிக்கையாளர்களின் பெரிய வெற்றி. இந்தியாவிலேயே, மாற்றுத்திறனாளிகளுக்காக பிரத்யேகமாக உருவாக்கப்படுவது இந்திய ரயில்வே வரலாற்றில் முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
Read More
“தமிழகத்தில் சொத்து வரி உயர்வு ரத்து ! உள்ளாட்சி தேர்தல் பயமா?

“தமிழகத்தில் சொத்து வரி உயர்வு ரத்து ! உள்ளாட்சி தேர்தல் பயமா?

"தமிழகத்தில் சொத்து வரி உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாகவும், உரிமையாளர்கள் பழைய வரியை செலுத்தினால் போதும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.சென்னை உள்பட அனைத்து நகரங்களுக்கும் சொத்து வரி கடந்த வருடம் உயர்த்தப்பட்டது. மாநகராட்சி, நகராட்சி உள்ளிட்ட அனைத்து பகுதியிலும் உள்ள சொத்துக்களின் வரி 50 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை உயர்த்தப்பட்டது. சொத்து வரி உயர்த்தப்பட்டதில் பல்வேறு முரண்பாடுகள் இருப்பதாக புகார்கள் வந்தன. இதையடுத்து, உயர்த்தப்பட்ட சொத்து வரி குறித்து மறு ஆய்வு செய்ய வேண்டும் என பலரும் வலியுறுத்தி வருகின்றனர். இதுபற்றி உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நிருபர்களிடம் கூறியதாவது:- உள்ளாட்சிகளில் சொத்து வரி உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சொத்து வரி உயர்வை மறுபரிசீலனை செய்வதற்காக குழு அமைக்கப்பட்டுள்ளது. நிதித்துறை முதன்மை செயலாளர் தலைமையிலான இந்த குழுவில், நகராட்சி நிர்வாக ஆணையர், பேருராட்சி இயக்குநர் மற்றும் மாநகராட்சி ஆணையர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்த குழு மறுபரிசீலனை செய்து அறிக்கை அளிக்கும்…
Read More
வோடபோன் ஐடியா சேவைகளுக்கான கட்டணங்கள் டிசம்பர் முதல்  உயர்வு ?

வோடபோன் ஐடியா சேவைகளுக்கான கட்டணங்கள் டிசம்பர் முதல் உயர்வு ?

கடனில் சிக்கித் தவித்துக்கொண்டிருக்கும் வோடபோன் ஐடியா நிறுவனம், நிதி நெருக்கடியை சமாளிக்கும் வகையில், அதன் மொபைல் சேவைகளுக்கான கட்டணங்களை, டிசம்பர் முதல் தேதியிலிருந்து அதிகரிக்க உள்ளதாக தெரிவித்துள்ளது. வோடபோன் ஐடியா நிறுவனத்தின் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:உலகத்தரம் வாய்ந்த டிஜிட்டல் அனுபவங்களை அனுபவிப்பதை உறுதி செய்வதற்காக, சேவைகளுக்கான கட்டணங்கள், டிசம்பர் ஒன்றாம் தேதி முதல் அதிகரிக்கப்பட உள்ளது.இவ்வாறு அதன் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், எந்தெந்த சேவைகளுக்கு, எவ்வளவு கட்டண உயர்வு என்பது குறித்த எந்த விபரங்களையும் வோடபோன் ஐடியா வெளியிடவில்லை. செப்டம்பருடன் முடிவடைந்த இரண்டாவது காலாண்டில், வோடபோன் ஐடியா நிறுவனம், இதுவரை இந்திய சரித்திரத்தில் எந்த நிறுவனமும் கண்டிராத அளவுக்கு, 50 ஆயிரத்து, 921 கோடி ரூபாய் நிகர இழப்பை சந்தித்துள்ளது. சரிசெய்த மொத்த வருமானம் குறித்த வழக்கில், கடந்த மாதம், உச்ச நீதிமன்றம், வோடபோன் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு எதிராக, வழக்கு தொடர்ந்த மத்திய அரசுக்கு சாதகமான தீர்ப்பை வழங்கியது.இதன் காரணமாக, பாக்கி…
Read More

22 கிராமங்களில் 20 லட்சம் மரங்களை நட்ட பெண்மணியை கௌரவித்த யுனெஸ்கோ!

22 கிராமங்களில் 20 லட்சம் மரங்களை நட்டு பராமரித்து வரும் தெலங்கானா பெண்மணியை யுனெஸ்கோ கௌரவித்துள்ளது. ஒருபுறம், பூகோள வெப்பமயமாதலால் முழு நாடும், உலகமும் கலக்கமடைந்து தொடர்ந்து கூட்டங்களை நடத்துகின்றன, மறுபுறம் இந்தியாவின் தெலுங்கானாவின் சங்கரெட்டி மாவட்டத்தில் உள்ள பாஸ்தாபூர் கிராமத்தில் வசிக்கும் சில்கப்பள்ளி அனுசயம்மா 22 கிராமங்களில் 20 லட்சம் மரங்களை நட்டு நல்வழி காண்பித்துள்ளார். அவற்றை நடவு செய்வதோடு, அதை பராமரித்து வருவதையும் தனது வழக்கமாக கொண்டு வந்துள்ளார். அவரது இந்த பணிக்காக யுனெஸ்கோ அவரை கௌரவித்துள்ளது. தனது வாழ்க்கையை கவனித்துக்கொள்வது மட்டுமல்லாமல், நிலத்தின் ஆரோக்கியத்தைப் பற்றியும் கவலைப்பட்ட ஒரு பெண்ணுக்கு அளிக்கப்பட்ட அங்கிகாரமாக இது பார்க்கப்படுகிறது. மேலும் அவரது கதை மிகவும் போராட்டம் மற்றும் ஊக்கமளிக்கும் ஒன்றாக பார்க்கப்படுகிறது. இதுகுறித்து அவர் குறிப்பிடுகையில்., "இது எனக்கு ஒரு கற்பனை போன்று உள்ளது. இந்த மதிப்புமிக்க விருதை என்னால் பெற முடியும் என்று நான் கனவிலும் நினைத்ததில்லை" என…
Read More
கோனே நிறுவனம் 450 கோடி முதலீட்டில் சென்னையில் தனது மின்தூக்கி உற்பத்தி தொழிற்சாலையை தொடங்கியுள்ளது!

கோனே நிறுவனம் 450 கோடி முதலீட்டில் சென்னையில் தனது மின்தூக்கி உற்பத்தி தொழிற்சாலையை தொடங்கியுள்ளது!

மின்தூக்கிகள் மற்றும் நகரும் படிக்கட்டுகள் தயாரிப்பில் உலகில் முன்னணியில் உள்ள, கோனே கார்பரேஷனின் முழு உரிமம் உள்ள துணை நிறுவனமான, ’கோனே எலிவேட்டர் இந்தியா நிறுவனம்’ தனது உலகத் தரத்திலான மின்தூக்கிகளுக்கான தொழிற்சாலையை சென்னைக்கு அருகே ஸ்ரீபெரும்புதூர் பிள்ளைப்பாக்கத்தில் உள்ள சிப்காட் தொழில் பூங்காவில் கட்டமைத்து, அதைத் திறந்து செயல்படுத்தத் தொடங்கியுள்ளது. இந்த அதிநவீன உற்பத்தித் தொழிற்சாலையை மேதகு தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஃபின்லாந்து நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹெச்.இ.பெக்காஹாவிஸ்டா, தமிழ்நாடு அரசின் தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், கோனே நிறுவனத்தின் தலைவர் ஆண்ட்டிஹெர்லின்,கோனே நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி ஹென்ரிக்எர்னூர்த்,கோனே கார்பொரேஷன் நிறுவனத்தின் ஆசிய பசிபிக் மற்றும் ஆஸ்திரேலியா செயல் துணைத்தலைவர் ஆக்செல்பெர்க்லிங், கோனே இந்தியா நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் அமித்கோஸ்ஸெயின் உள்ளிட்ட பலர் இந்தநிகழ்ச்சியில் பங்கேற்று முன்னிலை வகித்தனர். தேவைக்கு ஏற்ற அளவிலான உற்பத்தித்திறனுடன், 450 கோடி ரூபாய் முதலீட்டில்…
Read More
இந்தியர்கள் ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டிய மத்திய அரசின் 7 ஆப் பயன்பாடுகள்.!

இந்தியர்கள் ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டிய மத்திய அரசின் 7 ஆப் பயன்பாடுகள்.!

இந்தியாவை டிஜிட்டல் ஆக்குவதற்கும், இந்திய அரசின் முன்முயற்சியான 'டிஜிட்டல் இந்தியா'வின் பார்வைக்கு ஏற்பவும், இந்திய குடிமக்கள் வாழ்க்கையை சிறப்பாக மாற்றுவதற்காக இந்திய அரசு ஒவ்வொரு முறையும் பல்வேறு மொபைல் ஆப் பயன்பாடுகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இப்போது இந்திய அரசு அறிமுகப்படுத்திய மிகவும் பயனுள்ள 7 மொபைல் ஆப் பயன்பாடுகளைப் பார்ப்போம். BHIM-பிஎச்ஐஎம் : மொபைல் போன் வழியாக வேகமாக, பாதுகாப்பான, நம்பகமான, பணமில்லா பரிவர்த்தனை செய்ய பாரத் இண்டர்ஃபேஸ் பார் மணி(BHIM) உதவுகின்றது. யூபிஐ போன்ற ஒரு செயலியே பிஎச்ஐஎம். பிஎச்ஐஎம் செயலி இந்திய தேசிய கொடுப்பனவு கார்ப்பரேஷன் (NPCI) உருவாக்கியுள்ளது. முழுக்க முழுக்க இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட இந்த செயலி இந்திய மக்களுக்கான ஒரு வரப்பிரசாதம் என்றே கூரலாம். பண பரிமாற்றத்திற்கான முகவரி அல்லது மொபைல் எண்ணைப் பயன்படுத்தி உங்களது நண்பர்கள், குடும்பம் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு பணத்தை அனுப்பலாம் பெறலாம். யூபிஐ சேவையை ஏற்காத வங்கிகளுக்கும் ஐஎப்எஸ்சி(IFSC) மற்றும் எம்எம்ஐடி(MMID) பயன்படுத்து பணத்தை…
Read More
தமிழக மின்வாரியத்தில் 7,000 கோடி ரூபாய் நஷ்டம்?: மின் கட்டணம் உயருமா?

தமிழக மின்வாரியத்தில் 7,000 கோடி ரூபாய் நஷ்டம்?: மின் கட்டணம் உயருமா?

தமிழக மின்சாரவாரியத்தில் ரூ7 ஆயிரம் கோடிக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக, தற்போது தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. ஆனால், காரணங்களைக்காட்டித்தான் புதிய இணைப்புக்கான கட்டணங்கள் உயர்த்தப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் பல வகைகளில் கட்டணத்தை உயர்த்த திட்டமிட்டுள்ளதாகவும், இதற்கான ஆலோசனைகள் நடந்து வருவதாக கூறப்படுவதால், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்த முறைகேடுகள் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளன.தமிழகத்தில் 2 கோடி வீட்டு மின் இணைப்புகள் உள்ளன. மேலும், கடைகள்(வணிகம்)-35 லட்சம், தொழிற்சாலைகள் 7 லட்சம்; விவசாயம் 21 லட்சம், குடிசைகள்-11 லட்சம் என 2.90 கோடிக்கும் மேலான இணைப்புகள் உள்ளன. இவ்வாறு மின்சாரத்தை பயன்படுத்தும் பயன்பாட்டாளர்கள் செலுத்தும் கட்டணம், மானியம் போன்றவற்றின் வாயிலாக ரூ.50 ஆயிரம் கோடிக்கு மேல், வாரியத்திற்கு ஆண்டுதோறும் வருவாய் கிடைக்கிறது.மற்றொருபுறம் ஊழியர்களுக்கு சம்பளம், எரிபொருள், கடனுக்கான வட்டி உள்ளிட்டவைக்கு செலவு செய்யப்படுகிறது. அதேநேரத்தில், தனியார் நிறுவனங்களிடமிருந்து சந்தையை விட அதிக விலைக்கு மின்சாரம்…
Read More
வாராக் கடன் சிக்கலில் வங்கிகள்..? கடனை கட்ட முடியாமல் தவிக்கும் மின்சார நிறுவனங்கள்?

வாராக் கடன் சிக்கலில் வங்கிகள்..? கடனை கட்ட முடியாமல் தவிக்கும் மின்சார நிறுவனங்கள்?

இந்தியாவில் ஆற்றல் சாரா மின்சார நிறுவனங்கள் கொடுக்க வேண்டிய கடன் தொகையினை ஒழுங்காக கொடுக்காததால், மீண்டும் இந்திய வங்கிகளில், வாராக் கடன் பிரச்னை தலை எடுக்கத் தொடங்கி இருக்கிறது.கடந்த நான்கு ஆண்டுகளில் இந்த ஆற்றல் சாரா மின்சார தயாரிப்பு நிறுவனத் துறைக்கு 3.22 பில்லியன் அமெரிக்க டாலர் அந்நிய நேரடி முதலீடுகளாக வந்திருக்கிறது. அதோடு வங்கிக் கடன்கள் மூலம், உள்நாட்டு முதலீடுகளும் செய்யப்பட்டிருக்கிறது.கடந்த ஐந்து ஆண்டுகளில் சுமாராக 40 ஜிகா வாட் மின்சாரத்தை தயாரிக்கக் கூடிய ஆற்றல் சாரா மின்சார தயாரிப்பு நிறுவனங்கள் தொடங்கப்பட்டு இருக்கின்றன. இந்த நிறுவனங்கள் பெரும்பாலும் 70% கடன் மூலமே தொடங்கப்பட்டு இருக்கின்றன. அதாவது 100 கோடி ரூபாய் முதல் போட்டு தொடங்க வேண்டிய தொழிலில் 70 கோடி ரூபாயை கடன் வாங்கி முதலீடு செய்து இருக்கிறார்கள். சரி இவ்வளவு கடன் வாங்கி தொடங்கிய கம்பெனி நன்றாக இயங்குகிறதா..? என்றால் பதில் நோ என்று தான் வருகிறது.…
Read More