24
Nov
பாபநாசம் தலையணை, தாமிரபரணி படித்துறை பகுதிகளை பார்வையிட்ட பசுமைத் தீர்ப்பாய நீதிபதி ஜோதிமணி, எண்ணிலடங்கா மாசுகளால் தாமிரபரணி தண்ணீர் விஷமாக மாறும் அபாயம் நிலவுவதாக வேதனையுடன் தெரிவித்தார். நெல்லை மாவட்டம், பாபநாசம் தலையணை, பாபநாசம் தாமிரபரணி படித்துறை பகுதிகளை பசுமைத் தீர்ப்பாய நீதிபதி ஜோதிமதி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் கூறுகையில், '' தாமிரபரணி நதியில் குளிக்க வருகைதரும் மக்கள் மேற்கொள்ளும் விழிப்புணர்வற்ற நடவடிக்கைகளால் நதி மாசுபட்டு வருகிறது. குறிப்பாக சோப்பு போட்டு குளித்தல், துவைத்தல், பரிகாரம் முடித்த பிறகு துணிகளை ஆற்றிலேயே விட்டுச்செல்லுதல் போன்ற எண்ணிலடங்கா மாசுகளால் தாமிரபரணி தண்ணீர் விஷமாக மாறும் அபாயம் நிலவுகிறது. மேலும் வற்றாத ஜீவநதியான தாமிரபரணி துவங்கும் இடத்திலேயே காணப்படும் இது போன்ற மாசுகளால் 1600 இக்கோலிய பாக்டீரியக்கள் உருவாகியுள்ளன. இதனால் மாசுபட்ட இந்த தண்ணீரை குடிநீராக பயன்படுத்தும் நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்ட மக்களுக்கு, இந்த பாக்டீரியாக்கள் தான் தண்ணீர் விஷமாக…
