செய்திகள்

A wonderful serenity has taken possession of my entire soul, like these sweet mornings of spring which I enjoy with my whole heart.

கிரகணம் என்றால் என்ன?

கிரகணம் என்றால் என்ன?

சூரியனை எப்படிச் நிலவு மறைக்கும்? ஏன் 28 நாட்களுக்கு ஒருமுறை சூரிய கிரகணம் ஏற்படுவதில்லை? சூரியன், நிலவு, பூமி மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் வரும்போது ஏற்படும் நிழல் விளையாட்டுதான் கிரகணங்கள். சூரிய, சந்திர கிரகணங்கள் அடிக்கடி நிகழ்கின்றன.ஆனால், டிசம்பர் 26 அன்று நிகழ இருப்பது வளைய சூரிய கிரகணம். (Annular Eclipse) இதுபோல் இன்னொரு வளைய சூரிய கிரகணத்தைப் பார்க்க வேண்டும் என்றால் இன்னும் 21 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் என்பதால், இந்த கிரகணம் சிறப்பு வாய்ந்ததாக இருக்கிறது. தமிழ்நாட்டில் இந்த அரிய நிழல் விளையாட்டைக் கண்டுகளிக்க முடியும் என்பது கூடுதல் சிறப்பு. கிரகணம் என்றால் என்ன? சூரியனைப் பூமி சுற்றி வருகிறது. பூமியை நிலவு சுற்றி வருகிறது. அப்படிச் சுற்றி வரும்போது சில நேரத்தில் சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் நிலவு வரும்போது மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் வருகின்றன. அப்போது சூரியனின் ஒளித்தட்டைச் நிலவு மறைத்துவிடுகிறது. இதனைத்தான் சூரிய கிரகணம் என்கிறோம்.சூரியனை…
Read More
ஆதார் கார்ட் வைத்திருப்பவர்கள் கவனத்துக்கு..!

ஆதார் கார்ட் வைத்திருப்பவர்கள் கவனத்துக்கு..!

ஆதார் அட்டையை வைத்து பல சர்ச்சைகளும் கிளம்பிக் கொண்டே தான் இருக்கின்றன. கடந்த செப்டம்பர் 2018-ல் உச்ச நீதிமன்றம், ஆதார் பயன்பாடு தொடர்பாக தீர்ப்பு வழங்கிய பிறகும் கூட இந்த சர்ச்சைகளும் அங்கும் இங்குமாக கிளம்பிக் கொண்டு தான் இருக்கின்றன. அரசு தன்னால் முடிந்த வரை ஆதாரை பாதுகாப்பானதாக வைத்துக் கொள்ளவும், ஆதார் தரவுகளை பயனுள்ளதாக பயன்படுத்தி பொது மக்களுக்கு சேவை செய்யவும் முயற்சித்துக் கொண்டு தான் இருக்கிறது. அந்த முயற்சியில் ஒரு நல்ல விஷயமாக, தற்போது ஆதாரை வங்கிக் கணக்கு தொடங்க பயன்படுத்தலாம் எனச் சொல்லி இருக்கிறது ஆதார் வங்கி கணக்கு இதெல்லாம் பழைய விஷயம் தானே. வங்கிக் கணக்கைத் தொடங்க, பல மாதங்களாக ஆதார் அட்டையை பயன்படுத்திக் கொண்டு தானே இருக்கிறோம். எனக் கேட்கிறீர்களா..? ஆதார் அட்டையில் உங்களின் தற்போதைய விலாசம் இருந்தால் பிரச்னை இல்லை. அப்படி தற்போது வசிக்கும் முகவரி, ஆதார் அட்டையில் இல்லை என்றால்..? சில…
Read More
சூரிய மின்சக்தி நடமாடும் ஆட்டோ வீடு !

சூரிய மின்சக்தி நடமாடும் ஆட்டோ வீடு !

நாமக்கலை சேர்ந்த பொறியியல் பட்டதாரி ஒருவர், வீடு இல்லாதவர்கள் குறைந்த செலவில் வசிப்பதற்கு நடமாடும் வீட்டை வடிவமைத்துள்ளார்.இந்த ஆட்டோ வீடு ரூ.1,00,000 மதிப்பில், பல சிறப்பம்சங்கள் நிறைந்த சூரிய மின்சக்தி மூலமாக தயாரிக்கப்பட்டுள்ளது.புத்தகத்தில் படித்து பயின்றதை நடைமுறைக்கு ஏற்றவாறு புதிய கண்டுபிடிப்புகளை மாற்றுவதை கல்வியின் சிறப்பாக அமைகிறது. பின்னர் தற்போது உள்ள இளைஞர்கள் நடைமுறைக்கு ஏற்றவாறு புது புது கண்டுபிடிப்புகளை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த பொறியியல் பட்டதாரியான அருண் பிரபு என்பவர் ஆட்டோ ஒன்றை நடமாடும் வீடாக வடிவமைத்துள்ளார். அவர் கட்டடக் கலையில் பட்டம் பெற்றவர், அதனால் நவீன வசதிகளுடன் கூடிய ஆட்டோவை வீடாக மாற்றியிருக்கிறார். இந்நிலையில், குறைந்த இடத்தில் தேவைப்படும் வசதிகளுடன் இருக்கும் இந்த ஆட்டோ வீடு ரூ.1,00,000 மதிப்பில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஆட்டோ வீட்டில் சமையல் செய்யும் இடம், படுக்கை அறை, கழிப்பிடம், துணிகளை காயவைக்கும் இடம் உள்ளிட்டவை இடம்பெறுகிறது. மேலும், ஆட்டோவின்…
Read More
மோடி அறிவித்த BHIM செயலி சேவைக்கு இப்படியொரு நிலையா..?

மோடி அறிவித்த BHIM செயலி சேவைக்கு இப்படியொரு நிலையா..?

பணமதிப்பிழப்புக்குப் பின் இந்தியாவில் மின்னணு பணப் பரிமாற்றங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்கு ஏற்ப பேடிஎம், கூகிள், போன்பே ஆகிய நிறுவனங்கள் சமானியர்களும் பயன்படுத்தும் எளிய வகையான பணப் பரிமாற்ற தளத்தை உருவாக்கியுள்ளது. UPI மூலம் செய்யப்படும் பணப் பரிமாற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடி அறிமுகம் செய்து வைத்த BHIM செயலி வாயிலான பரிமாற்றங்கள் குறைந்துள்ளது. NPCI அமைப்பு NPCI அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் ஜனவரி மாதம் மட்டும் யூபிஐ தளத்தின் வாயிலாகப் பேடிஎம் நிறுவனம் சுமார் 221 மில்லியன் பணப் பரிமாற்றங்களைப் பெற்றுள்ளது, இதைத் தொடர்ந்து கூகிள் பே மற்றும் போன் பே ஆகிய நிறுவனங்கள் தலா 220 மில்லியன் பணப் பரிமாற்றங்களைப் பெற்றுள்ளது. போன்பே இதுகுறித்துப் போன்பே கூறுகையில் ஜனவரி மாதம் சுமார் 225 மில்லியன் பேமெண்ட்களின் வாயிலாகச் சுமார் 30,000 கோடி ரூபாய் மதிப்பிலான பணப் பரிமாற்றங்களைச் செய்துள்ளோம்…
Read More
சென்னை வர்த்தக மையத்தில் தேசிய அளவிலான சோப் மற்றும் டிடர்ஜெண்ட்  தொழில் கண்காட்சி !

சென்னை வர்த்தக மையத்தில் தேசிய அளவிலான சோப் மற்றும் டிடர்ஜெண்ட் தொழில் கண்காட்சி !

தேசிய அளவிலான சோப் மற்றும் டிடர்ஜெண்ட் குறித்து கருத்தரங்கம் மற்றும் தொழில் கண்காட்சி. டிசம்பர் 28 29 நந்தம்பாக்கம் , சென்னை வர்த்தக மையம் தமிழ்நாடு சிறுதொழில் சோப் மற்றும் டிடர்ஜென்ட் உற்பத்தியாளர்கள் சங்கம் 1964 - ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதாகும் . இதில் சுமார் 600 உறுப்பினர்கள் உள்ளனர் . தமிழகத்தில் சோப் மற்றும் டிடர்ஜென்ட் தொழில் வளர்ச்சிக்கும் , நவீன தொழில் நுட்பங்களை கண்டறிந்து தொழில் முனைவோர்களுக்கு எடுத்து கூறவும். இத்தொழிலில் ஏற்படும் பிரச்சனைகளை ஆராய்ந்து உரிய முறையில் அரசுக்கு எடுத்து கூறி தீர்வு காண்பதே இந்த சங்கத்தின் நோக்கமாகும். தற்போது சங்கத் தலைவராக இருக்கும் பவர் சோப் உரிமையாளர் கி.தனபால் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த போது கூறியதாவது. கடந்த 1995ம் ஆண்டு சங்கத்திற்கென சொந்த கட்டிடம் கட்டப்பட்டு சீரிய முறையில் அலுவலகம் இயங்கி வருகிறது . இந்த சங்கம் ஆரம்பிக்கப்பட்டு 55 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது . வருகின்ற 2019ம்…
Read More
கோயில் நிலங்களில் வசிக்கும் 20 ஆயிரம் பேருக்கு பட்டா.?

கோயில் நிலங்களில் வசிக்கும் 20 ஆயிரம் பேருக்கு பட்டா.?

தமிழகத்தில் உள்ள 4.78 லட்சம் ஏக்கர் கோவில் நிலங்களில் 600 ஏக்கர் நிலங்கள் மட்டும் 20 ஆயிரம் ஏழை குடும்பத்தினருக்கு பட்டா வழங்க பயன்படுத்தப்படும் என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.அரசு புறம்போக்கு மற்றும் கோவில் நிலங்களில் 5 ஆண்டுகளுக்கு மேல் வசித்தவர்களுக்கு பட்டா வழங்கப்படும் என கடந்த ஆகஸ்ட் 30ம் தேதி தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது.சட்டவிரோதமாக நிலங்களை ஆக்கிரமிப்பவர்களுக்கு உதவும் வகையில் பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த அரசாணையை ரத்து செய்ய கோரி ராதா கிருஷ்ணன், சத்தியநாராயணன் ஆகியோர் வழக்கு தொடர்ந்திருந்தனர்.இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கும் அரசாணைக்கு இடைக்கால தடை விதித்தது. இந்த தடையை நீக்க கோரி, தமிழக வருவாய் துறை தரப்பில் கூடுதல் பதில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில்,பல ஆண்டுகளாக கோவில் நிலங்களில் வசித்தவர்கள் விடுத்த கோரிக்கைகளை ஏற்று அவர்களுக்கு பட்டா வழங்க அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழகம் முழுவதும் கோவில் நிலங்களில்,…
Read More
15ம் ஆண்டு ‘சென்னையில் திருவையாறு’ இசைவிழா இனிதே துவங்கியது !

15ம் ஆண்டு ‘சென்னையில் திருவையாறு’ இசைவிழா இனிதே துவங்கியது !

வெற்றிகரமான 15 வது ஆண்டாக தொடர்ந்து நடைபெற்று வரும் ‘சென்னையில் திருவையாறு’ இசை நிகழ்ச்சி, இந்த ஆண்டும் வெகுசிறப்பாக துவங்கியது. சென்னை காமராஜர் அரங்கில் நடைபெற்ற துவக்க விழா நிகழ்ச்சியில், முன்னாள் மத்திய இணை அமைச்சர் திரு. எஸ். ஜெகத்ரட்சகன் எம் பி. அவர்கள் குத்து விளக்கேற்ற, தமது எழுத்தால் திரையுலகை வென்ற கவியரசு கண்ணதாசன் அவர்களின் தத்ரூபமான மெழுகு சிலையை பின்னணி பாடகி இசையரசி பத்மபூஷன் திருமதி பி சுசீலா அவர்கள் திறந்து வைக்க, சிறப்பு விருந்தினர்களாக கவியரசரின் புதல்வர் திரு. காந்தி கண்ணதாசன், திரு. ஆர். ராம் விக்னேஷ், டிரீம் சொல்லுஷன்ஸ், திரு. ஆர். பிரதாப் குமார், ஆணையர், தகவல் அறியும் உரிமை சட்டம், திரு. ஜோதி முருகன், வேல்ஸ் பல்கலைகழகம், இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழக தலைவர் திரு. தேவநாதன் யாதவ், திரு. ராமமூர்த்தி, அருள்முருகன் குழுமம், திரு. சுப்பையா பாரதி, இயக்குனர், எஸ் ஆர்…
Read More
மத்திய குடிசைத் தொழில் நிறுவனத்தின் சிறப்பு மாநில கைத்தறி கண்காட்சி !

மத்திய குடிசைத் தொழில் நிறுவனத்தின் சிறப்பு மாநில கைத்தறி கண்காட்சி !

சிறப்பு மாநிலம் கைத்தறி எக்ஸ்போ - ஒரு பிரத்யேக கண்காட்சி - மற்றும் - நெசவாளர்களால் நேரடியாக கைத்தறி பொருட்கள் விற்பனை.இந்த கண்காட்சி ஸ்ரீ ஆர்.டி.நஷீம், ஐ.ஏ.எஸ், இந்திய உணவுக் கழகத்தின் நிர்வாக இயக்குநர் (தெற்கு ) சென்னை, அவர்களால் துவங்கி வைக்கப்பட்டது . கைத்தறி எக்ஸ்போ டிசம்பர் 18 2019 முதல் டிசம்பர் 31 2019 வரை காலை 10:30 மணி முதல் இரவு 8:30 மணி வரை லட்சுமி ஹால், எண் -40, 100 அடி சாலை, 1 வது அவென்யூ, அசோக் நகர், ராகவா ரெட்டி காலனி, செக்டர் -10, சென்னை -600083. மத்திய குடிசைத் தொழில் நிறுவனம்(Cottage Industries Emporium India Ltd) சிறப்பு மாநில கைத்தறி கண்காட்சியை நடத்துகிறது - சென்னை அசோக் நகர் லட்சுமி ஹாலில் இந்த பதினான்கு நாள் கண்காட்சி டிசம்பர் 18 2019 முதல் டிசம்பர் 31 2019 வரை…
Read More
ஆசுஸ் பிரத்தியேக ஸ்டோர் சென்னையில் அறிமுகம் !

ஆசுஸ் பிரத்தியேக ஸ்டோர் சென்னையில் அறிமுகம் !

தொழில்நுட்ப நிறுவனமான ஆசுஸ் இந்தியா தனது அதிநவீன புதிய ஸ்டோரை சென்னையில் தொடங்குவதாக அறிவித்தது. ஆசுஸ் இந்தியாவின் விநியோக மற்றும் வணிக மேலாளர் பியூஷ் சேத் மற்றும் ஸ்டோரின் உரிமையாளர் குஷால் பஜாஜ் ஆகியோர் ஆசுஸ் பிரத்தியேக கடையை திறந்து வைத்தனர். புதிய ஆசுஸ் பிரத்தியேக ஸ்டோரானது, பிராண்டின் முதன்மை தயாரிப்புகளான விவோபுக், ஜென்ப்புக், ஜென்புக்-ஃபிளிப், மற்றும் ரிப்பப்ளிக் ஆஃப் கேமெர்ஸ் (ஆர்.ஓ.ஜி) மடிக்கணினிகள் உள்ளிட்ட விரிவான எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கணினி வன்பொருள்களை வழங்குவதற்காக அமைக்கப்பட்டுள்ளது, பிராண்டின் புதிய ஆசுஸ் பிரத்தியேக ஸ்டோரானது டாட் காம், புதிய எண்- ஏஜி 63, பழைய எண்- ஏஜி 31, சாந்தி காலனி, மெயின் ரோடு, 4 வது அவென்யூ, அண்ணா நகர், சென்னை. என்ற இடத்தில அமைந்துள்ளது.இந்த ஸ்டோரின் துவக்கம் 2020 க்குள் 200 கடைகளைத் திறந்து பயனர்களுடன் அதன் கடைசி மைல் இணைப்பை வலுப்படுத்தும் ஆசுஸ் முயற்சியின் ஒரு பகுதியாக அமைத்துள்ளது.வலுவான…
Read More
சென்னையில் ரூ.100 கோடி மதிப்பிலான லித்தியம் அயன் பேட்டரி உற்பத்தி ஆலை !

சென்னையில் ரூ.100 கோடி மதிப்பிலான லித்தியம் அயன் பேட்டரி உற்பத்தி ஆலை !

ரூ .100 கோடி மதிப்பிலான லித்தியம் அயன் பேட்டரி உற்பத்தி ஆலைக்கு சென்னையில், அரசு அடிக்கல் நாட்ட உள்ளது என்று, மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார். டெல்லியில் தனியார் டிவி சேனல் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியொன்றில் ஹர்ஷ்வர்தன் பேசுகையில் இவ்வாறு தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் (சி.எஸ்.ஐ.ஆர்) சார்பில், சென்னையில் ரூ.100 கோடி மதிப்பில் லித்தியம் அயன் பேட்டரி உற்பத்தி ஆலை அமைய உள்ளது. இதை துவக்கி வைக்க, அடுத்த சில வாரங்களில் சென்னை செல்ல உள்ளேன். மக்களுக்கு சேவை செய்வதற்காக அர்ப்பணிக்கப்பட்ட 1,289 அரசு ஆதரவு நிறுவனங்களில் சி.எஸ்.ஐ.ஆர் 15 வது இடத்தில் உள்ளது. வாகனத் துறையின் பங்களிப்புகளை நான் பாராட்ட கடமைப்பட்டுள்ளேன். இந்திய விஞ்ஞானிகள் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வுகள் வைத்துக் கொண்டு உள்ளனர்.வாஜ்பாய் மற்றும் நரேந்திர மோடி ஆகியோர் ஆட்சிகாலத்தில்,அறிவியல் தொழில்நுட்பத்திற்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. மோடி…
Read More