செய்திகள்

A wonderful serenity has taken possession of my entire soul, like these sweet mornings of spring which I enjoy with my whole heart.

15ம் ஆண்டு ‘சென்னையில் திருவையாறு’ இசைவிழா இனிதே துவங்கியது !

15ம் ஆண்டு ‘சென்னையில் திருவையாறு’ இசைவிழா இனிதே துவங்கியது !

வெற்றிகரமான 15 வது ஆண்டாக தொடர்ந்து நடைபெற்று வரும் ‘சென்னையில் திருவையாறு’ இசை நிகழ்ச்சி, இந்த ஆண்டும் வெகுசிறப்பாக துவங்கியது. சென்னை காமராஜர் அரங்கில் நடைபெற்ற துவக்க விழா நிகழ்ச்சியில், முன்னாள் மத்திய இணை அமைச்சர் திரு. எஸ். ஜெகத்ரட்சகன் எம் பி. அவர்கள் குத்து விளக்கேற்ற, தமது எழுத்தால் திரையுலகை வென்ற கவியரசு கண்ணதாசன் அவர்களின் தத்ரூபமான மெழுகு சிலையை பின்னணி பாடகி இசையரசி பத்மபூஷன் திருமதி பி சுசீலா அவர்கள் திறந்து வைக்க, சிறப்பு விருந்தினர்களாக கவியரசரின் புதல்வர் திரு. காந்தி கண்ணதாசன், திரு. ஆர். ராம் விக்னேஷ், டிரீம் சொல்லுஷன்ஸ், திரு. ஆர். பிரதாப் குமார், ஆணையர், தகவல் அறியும் உரிமை சட்டம், திரு. ஜோதி முருகன், வேல்ஸ் பல்கலைகழகம், இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழக தலைவர் திரு. தேவநாதன் யாதவ், திரு. ராமமூர்த்தி, அருள்முருகன் குழுமம், திரு. சுப்பையா பாரதி, இயக்குனர், எஸ் ஆர்…
Read More
மத்திய குடிசைத் தொழில் நிறுவனத்தின் சிறப்பு மாநில கைத்தறி கண்காட்சி !

மத்திய குடிசைத் தொழில் நிறுவனத்தின் சிறப்பு மாநில கைத்தறி கண்காட்சி !

சிறப்பு மாநிலம் கைத்தறி எக்ஸ்போ - ஒரு பிரத்யேக கண்காட்சி - மற்றும் - நெசவாளர்களால் நேரடியாக கைத்தறி பொருட்கள் விற்பனை.இந்த கண்காட்சி ஸ்ரீ ஆர்.டி.நஷீம், ஐ.ஏ.எஸ், இந்திய உணவுக் கழகத்தின் நிர்வாக இயக்குநர் (தெற்கு ) சென்னை, அவர்களால் துவங்கி வைக்கப்பட்டது . கைத்தறி எக்ஸ்போ டிசம்பர் 18 2019 முதல் டிசம்பர் 31 2019 வரை காலை 10:30 மணி முதல் இரவு 8:30 மணி வரை லட்சுமி ஹால், எண் -40, 100 அடி சாலை, 1 வது அவென்யூ, அசோக் நகர், ராகவா ரெட்டி காலனி, செக்டர் -10, சென்னை -600083. மத்திய குடிசைத் தொழில் நிறுவனம்(Cottage Industries Emporium India Ltd) சிறப்பு மாநில கைத்தறி கண்காட்சியை நடத்துகிறது - சென்னை அசோக் நகர் லட்சுமி ஹாலில் இந்த பதினான்கு நாள் கண்காட்சி டிசம்பர் 18 2019 முதல் டிசம்பர் 31 2019 வரை…
Read More
ஆசுஸ் பிரத்தியேக ஸ்டோர் சென்னையில் அறிமுகம் !

ஆசுஸ் பிரத்தியேக ஸ்டோர் சென்னையில் அறிமுகம் !

தொழில்நுட்ப நிறுவனமான ஆசுஸ் இந்தியா தனது அதிநவீன புதிய ஸ்டோரை சென்னையில் தொடங்குவதாக அறிவித்தது. ஆசுஸ் இந்தியாவின் விநியோக மற்றும் வணிக மேலாளர் பியூஷ் சேத் மற்றும் ஸ்டோரின் உரிமையாளர் குஷால் பஜாஜ் ஆகியோர் ஆசுஸ் பிரத்தியேக கடையை திறந்து வைத்தனர். புதிய ஆசுஸ் பிரத்தியேக ஸ்டோரானது, பிராண்டின் முதன்மை தயாரிப்புகளான விவோபுக், ஜென்ப்புக், ஜென்புக்-ஃபிளிப், மற்றும் ரிப்பப்ளிக் ஆஃப் கேமெர்ஸ் (ஆர்.ஓ.ஜி) மடிக்கணினிகள் உள்ளிட்ட விரிவான எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கணினி வன்பொருள்களை வழங்குவதற்காக அமைக்கப்பட்டுள்ளது, பிராண்டின் புதிய ஆசுஸ் பிரத்தியேக ஸ்டோரானது டாட் காம், புதிய எண்- ஏஜி 63, பழைய எண்- ஏஜி 31, சாந்தி காலனி, மெயின் ரோடு, 4 வது அவென்யூ, அண்ணா நகர், சென்னை. என்ற இடத்தில அமைந்துள்ளது.இந்த ஸ்டோரின் துவக்கம் 2020 க்குள் 200 கடைகளைத் திறந்து பயனர்களுடன் அதன் கடைசி மைல் இணைப்பை வலுப்படுத்தும் ஆசுஸ் முயற்சியின் ஒரு பகுதியாக அமைத்துள்ளது.வலுவான…
Read More
சென்னையில் ரூ.100 கோடி மதிப்பிலான லித்தியம் அயன் பேட்டரி உற்பத்தி ஆலை !

சென்னையில் ரூ.100 கோடி மதிப்பிலான லித்தியம் அயன் பேட்டரி உற்பத்தி ஆலை !

ரூ .100 கோடி மதிப்பிலான லித்தியம் அயன் பேட்டரி உற்பத்தி ஆலைக்கு சென்னையில், அரசு அடிக்கல் நாட்ட உள்ளது என்று, மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார். டெல்லியில் தனியார் டிவி சேனல் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியொன்றில் ஹர்ஷ்வர்தன் பேசுகையில் இவ்வாறு தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் (சி.எஸ்.ஐ.ஆர்) சார்பில், சென்னையில் ரூ.100 கோடி மதிப்பில் லித்தியம் அயன் பேட்டரி உற்பத்தி ஆலை அமைய உள்ளது. இதை துவக்கி வைக்க, அடுத்த சில வாரங்களில் சென்னை செல்ல உள்ளேன். மக்களுக்கு சேவை செய்வதற்காக அர்ப்பணிக்கப்பட்ட 1,289 அரசு ஆதரவு நிறுவனங்களில் சி.எஸ்.ஐ.ஆர் 15 வது இடத்தில் உள்ளது. வாகனத் துறையின் பங்களிப்புகளை நான் பாராட்ட கடமைப்பட்டுள்ளேன். இந்திய விஞ்ஞானிகள் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வுகள் வைத்துக் கொண்டு உள்ளனர்.வாஜ்பாய் மற்றும் நரேந்திர மோடி ஆகியோர் ஆட்சிகாலத்தில்,அறிவியல் தொழில்நுட்பத்திற்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. மோடி…
Read More
யோகாவில் உலக சாதனை படைத்த விருதுநகர் சிறுமி !

யோகாவில் உலக சாதனை படைத்த விருதுநகர் சிறுமி !

விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த சிறுமி முஜிதா, கண்டபேருண்ட ஆசனத்தைச் செய்து யோகாவில் உலக சாதனை படைத்துள்ளார்.விருதுநகர் சூலக்கரையைச் சேர்ந்த கோவிந்தராஜ்-பார்வதி தம்பதியின் 9 வயது மகள் முஜிதா. செவல்பட்டியிலுள்ள தனியார் பள்ளியில் 4-ம் வகுப்பு பயின்று வருகிறார்.சிறு வயது முதல் யோகா கற்று வரும் மாணவி முஜிதா, அதைச் சிறப்பாகச் செய்து பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு பாராட்டு பெற்றுள்ளார். இந்தநிலையில் 'நோபல் வேர்ல்ட் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் இடம்பெரும் வகையில் யோகா செய்து, அசத்தியிருக்கிறார் முஜிதா. பள்ளி வளாகத்தில் நடந்த இந்நிகழ்வில் ஒரு அடி அகலமும், 21 இன்ச் அளவுள்ள சிறிய மீன் தொட்டியில் கண்டபேருண்ட ஆசனத்தை 8 நிமிடம் செய்து உலக சாதனை படைத்தார். மிகவும் கஷ்டமான இந்த ஆசனத்தை அநாயசமாகச் செய்து சாதனை படைத்த முஜிதாவை அனைவரும் பாராட்டினார்கள். இதற்கு முன் 2012-ல் வெளிநாட்டில் ஒருவர் 3 நிமிடம் இதுபோன்ற யோகா செய்ததே சாதனையாகவே இருந்தது. அந்தச் சாதனையை…
Read More
தங்க நகைகளுக்கு2021-ம் ஆண்டு ஜனவரி 15 ஆம் தேதி முதல் ‘ஹால்மார்க்’ முத்திரை கட்டாயம் ?

தங்க நகைகளுக்கு2021-ம் ஆண்டு ஜனவரி 15 ஆம் தேதி முதல் ‘ஹால்மார்க்’ முத்திரை கட்டாயம் ?

தங்க நகைகளுக்கு வரும் 2021-ம் ஆண்டு ஜனவரி 15 ஆம் தேதி முதல் 'ஹால்மார்க்' முத்திரை கட்டாயம் என மத்திய அரசு அறிவித்துள்ளது!! தங்க நகைகள் மற்றும் தங்கத்தில் செய்யப்படும் கலைப்பொருள்களுக்கு வரும் 2021 ஜனவரி 15 ஆம் தேதி முதல் ஹால்மாா்க் முத்திரை பெறுவது கட்டாயம் என்று மத்திய நுகா்வோா் விவகாரத்துறை அமைச்சா் ராம்விலாஸ் பாஸ்வான் கூறியுள்ளாா். இது தொடா்பான முறைப்படியான அறிவிக்கை வரும் 2020 ஜனவரி 15 ஆம் தேதி வெளியிடப்படும் என்று அவா் தெரிவித்தாா். தங்கத்தின் தரத்தை உறுதி செய்து ஹால்மாா்க் முத்திரை அளிக்கப்படுகிறது. கடந்த 2000 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் தங்க நகைகளுக்கு ஹால்மாா்க் தரச்சான்று அளிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் இப்போது புழக்கத்தில் உள்ள தங்க நகைகளில் 40 சதவீதம் ஹால்மாா்க் தரச்சான்று முத்திரை கொண்டதாகும். இப்போது 14 கேரட், 18 கேரட், 22 கேரட் என மூன்று பிரிவுகளில் தங்க நகைகளுக்கு ஹால்மாா்க்…
Read More
ஆதார் பதிவு மையங்களில் ஏடிஎம் அட்டை வடிவில் பிளாஸ்டிக் ஆதார்அட்டை!

ஆதார் பதிவு மையங்களில் ஏடிஎம் அட்டை வடிவில் பிளாஸ்டிக் ஆதார்அட்டை!

தமிழகத்தில் ஆதார் பதிவு மற்றும் திருத்தங்களை மேற்கொள்ளும் வசதி, 308 அரசு இ-சேவை மையங்கள், 1,400 வங்கிக் கிளைகள், 1,500 அஞ்சலகங்கள் ஆகியவற்றில் ஏற்படுத்தப்பட்டுள்ளன.மேலும் பிஎஸ்என்எல் சேவை மையங்களிலும் ஆதார் பதிவு மற்றும் திருத்தங்களை மேற்கொள்ளும் வசதிகள் கொண்டு வரப்பட உள்ளன. சமூகநலத் துறையின் குழந்தைகள் நல மையங்கள் மூலமாக, 5 வயதுக்கு உட்பட்ட குழந்தை களுக்கான ஆதார் பதிவு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பல ஆண்டுகளுக்கு முன்பு வழங்கப்பட்ட ஆதார் அட்டைகள் அழுக்காகியும், சேதமடைந்தும் உள்ளன. பலர் அட்டையை தொலைத்தும் விடுகின்றனர். அவர்களின் தேவையை பூர்த்தி செய்யும் விதமாக ஆதார் பதிவு மையங்களில் ஏடிஎம் அட்டை வடிவில் பிளாஸ்டிக் ஆதார் அட்டை வழங்கும் சேவை தொடங்கப்பட்டது.அதில் பெறப்படும் அட்டையில் உள்ள கியூஆர் கோடுகளை, குடும்ப அட்டை பதிவு இயந்திரங்கள் உள்ளிட்டவற்றால் படிக்க முடியவில்லை. அதனால் அந்த அட்டையை முழுமையாக பயன் படுத்துவதில் சிரமம் ஏற்பட்டது. இந்நிலையில், பிளாஸ்டிக் அட்டை வடிவில்…
Read More
வாரா கடன் பிரச்னையால் தவிக்கும் தனியார் நிதி நிறுவனங்கள் ?

வாரா கடன் பிரச்னையால் தவிக்கும் தனியார் நிதி நிறுவனங்கள் ?

இந்திய வங்கி துறை சார்ந்த கவலைகளும், சந்தேகங்களும் தொடர்ந்து பங்கு சந்தையில் ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன. குறிப்பாக, பொதுத் துறை வங்கிகள் சார்ந்த கவலைகள், சந்தையை கடந்த சில ஆண்டுகளாக பெரிதும் பாதித்ததை பார்த்தோம்.ஆனால், 2019ம் ஆண்டில் பொதுத் துறை வங்கிகளின் நிலைமை ஒரளவு சரியாகி, அவர்களின் கவலைகள் ஒவ்வொன்றாக நீங்க ஆரம்பித்து விட்டன.மாறாக, பல முன்னணி தனியார் வங்கிகள் தங்கள் நிதி நிலையில் பெரும் சரிவையும், வாரா கடன் பெருக்கத்தையும் சந்தித்தன.ஆட்டம் கண்டுவிட்டன இதே காலகட்டத்தில், தனியார் நிதி நிறுவனங்களும் பல சவால்களுக்கு ஆளாகி, நலிந்த நிலைக்கு தள்ளப்பட்டன. பல தனியார் வீட்டு கடன் நிறுவனங்களும் வாங்கிய பணத்தை திரும்ப செலுத்த முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு, பெரிதும் ஆட்டம் கண்டுவிட்டன. அவர்கள் தொடர்ந்து இயங்குவதே கேள்விக்குறி ஆகியிருப்பதை நாம் கண்டோம்.பங்கு சந்தையில் பல தனியார் வங்கிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் வீட்டு கடன் நிறுவன பங்குகள் பெரும் சரிவைக்…
Read More
திருநங்கைகள் என்ற பெயர் மாற்றம் ? கொதித்தெழுந்துள்ள மூன்றாம் பாலினத்தவர்!!

திருநங்கைகள் என்ற பெயர் மாற்றம் ? கொதித்தெழுந்துள்ள மூன்றாம் பாலினத்தவர்!!

அரசு ஆவணங்களில் இருந்து 'திருநங்கை' என்ற வார்த்தை நீக்கம்?தமிழக அரசின் ஆவணங்களிலிருந்து "திருநங்கை" என்ற வார்த்தை நீக்கப்பட்டதாக கூறும் மூன்றாம் பாலினத்தவர்கள், அரசின் இந்த நடவடிக்கையை வன்மையாக கண்டிப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.அரசு ஆவணங்களிலிருந்து திருநங்கை என்ற வார்த்தை நீக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ள மூன்றாம் பாலினத்தவர், அரசின் இந்த நடவடிக்கைக்கு வன்மையான கண்டனத்தையும் தெரிவித்துள்ளனர். தமிழக அரசின் சார்பில். அடுத்த ஆண்டு ஏப்ரல் 15 -ஆம் தேதி (15-04-2020) திருநங்கைகள் தினம் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, சமூக நலத் துறை அண்மையில் அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அரசாணையில், "திருநங்கைகள் தினத்தையொட்டி, அன்றைய நாளில் நடைபெறும் விழாவில் சிறந்த திருநங்கைகளுக்கு விருது வழங்கி கௌரவிக்கப்படும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த அரசாணையை மேற்கோள்காட்டி, தஞ்சை மாவட்ட ஆட்சியர் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். அதில், "தமிழக அரசின் சார்பில் நடத்தப்படும் விழாவில், விருதுகளை பெற மாவட்ட அளவில் தகுதியான நபர்களிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்களை, வரும் டிசம்பர் 31- ஆம் தேதிக்குள்…
Read More
தாமிரபரணி தண்ணீர் விஷமாக மாறும் அபாயம்? பசுமை தீர்ப்பாய நீதிபதி ஜோதிமணி வேதனை !

தாமிரபரணி தண்ணீர் விஷமாக மாறும் அபாயம்? பசுமை தீர்ப்பாய நீதிபதி ஜோதிமணி வேதனை !

பாபநாசம் தலையணை, தாமிரபரணி படித்துறை பகுதிகளை பார்வையிட்ட பசுமைத் தீர்ப்பாய நீதிபதி ஜோதிமணி, எண்ணிலடங்கா மாசுகளால் தாமிரபரணி தண்ணீர் விஷமாக மாறும் அபாயம் நிலவுவதாக வேதனையுடன் தெரிவித்தார். நெல்லை மாவட்டம், பாபநாசம் தலையணை, பாபநாசம் தாமிரபரணி படித்துறை பகுதிகளை பசுமைத் தீர்ப்பாய நீதிபதி ஜோதிமதி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் கூறுகையில், '' தாமிரபரணி நதியில் குளிக்க வருகைதரும் மக்கள் மேற்கொள்ளும் விழிப்புணர்வற்ற நடவடிக்கைகளால் நதி மாசுபட்டு வருகிறது. குறிப்பாக சோப்பு போட்டு குளித்தல், துவைத்தல், பரிகாரம் முடித்த பிறகு துணிகளை ஆற்றிலேயே விட்டுச்செல்லுதல் போன்ற எண்ணிலடங்கா மாசுகளால் தாமிரபரணி தண்ணீர் விஷமாக மாறும் அபாயம் நிலவுகிறது. மேலும் வற்றாத ஜீவநதியான தாமிரபரணி துவங்கும் இடத்திலேயே காணப்படும் இது போன்ற மாசுகளால் 1600 இக்கோலிய பாக்டீரியக்கள் உருவாகியுள்ளன. இதனால் மாசுபட்ட இந்த தண்ணீரை குடிநீராக பயன்படுத்தும் நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்ட மக்களுக்கு, இந்த பாக்டீரியாக்கள் தான் தண்ணீர் விஷமாக…
Read More