07
Jan
சிங்கப்பூர் பயணத்துறை வாரியம் (சிங்கப்பூர் சுற்றுலா வாரியம்-எஸ்.டி.பி) இந்த ஆண்டுக்கான தனது பயண வர்த்தகத்தை சென்னையில் தொடங்கியுள்ளது. “வளர்ந்து வரும் இணைப்புகள், ஒன்றிணைந்து இலக்கை அடைதல்” (Growing Connections, Achieving Together) என்ற கருப்பொருளின் அடிப்படையில், வர்த்தக செயல்பாட்டு விழிப்புணர்வுப் பரப்புரை நிகழ்ச்சி (ரோட்ஷோ – road show) சென்னையில் நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியானது சிங்கப்பூர் பயணத்துறை வாரியம் (எஸ்.டி.பி.)மற்றும் அதன் சுற்றுலா கூட்டு பங்குதாரர்களின் தற்போதைய கூட்டு செயல்பாடுகளை ஆழமாக்குவதையும், உள்ளூரில் செயல்படும் பயண வர்த்தக நிறுவனங்களுடன் மேலும் நல்லிணக்கத்தை வளர்ப்பதையும் நோக்கமாகக் கொண்டு நடத்தப்பட்டது. சிங்கப்பூரை இந்திய பயணிகள் மிகவும் விரும்பித் தேர்வு செய்யும் சுற்றுலாத் தலமாக்குவதற்கான எஸ்.டி.பி.யின் முயற்சிகள் குறித்து பேசிய ஜி.பி.ஸ்ரீதர், சிங்கப்பூருக்கு வரும் பயணிகள் எண்ணிக்கை மற்றும் சிங்கப்பூர் சுற்றுலாச் சந்தையில் மூன்றாவது மிக முக்கிய நாடாக இந்தியா உள்ளது, மேலும் பயண வர்த்தக மேம்பாட்டு நடவடிக்கைகள், ஊடக கூட்டாண்மை மற்றும் பல்வேறு சந்தைப்படுத்தல் முயற்சிகள்…
