செய்திகள்

A wonderful serenity has taken possession of my entire soul, like these sweet mornings of spring which I enjoy with my whole heart.

சிங்கப்பூர் பயணத்துறை வாரியம்  தனது பயணவர்த்தக செயல்பாடுகளை சென்னையில் தொடங்கியுள்ளது.!

சிங்கப்பூர் பயணத்துறை வாரியம் தனது பயணவர்த்தக செயல்பாடுகளை சென்னையில் தொடங்கியுள்ளது.!

சிங்கப்பூர் பயணத்துறை வாரியம் (சிங்கப்பூர் சுற்றுலா வாரியம்-எஸ்.டி.பி) இந்த ஆண்டுக்கான தனது பயண வர்த்தகத்தை சென்னையில் தொடங்கியுள்ளது. “வளர்ந்து வரும் இணைப்புகள், ஒன்றிணைந்து இலக்கை அடைதல்” (Growing Connections, Achieving Together) என்ற கருப்பொருளின் அடிப்படையில், வர்த்தக செயல்பாட்டு விழிப்புணர்வுப் பரப்புரை நிகழ்ச்சி (ரோட்ஷோ – road show) சென்னையில் நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியானது சிங்கப்பூர் பயணத்துறை வாரியம் (எஸ்.டி.பி.)மற்றும் அதன் சுற்றுலா கூட்டு பங்குதாரர்களின் தற்போதைய கூட்டு செயல்பாடுகளை ஆழமாக்குவதையும், உள்ளூரில் செயல்படும் பயண வர்த்தக நிறுவனங்களுடன் மேலும் நல்லிணக்கத்தை வளர்ப்பதையும் நோக்கமாகக் கொண்டு நடத்தப்பட்டது. சிங்கப்பூரை இந்திய பயணிகள் மிகவும் விரும்பித் தேர்வு செய்யும் சுற்றுலாத் தலமாக்குவதற்கான எஸ்.டி.பி.யின் முயற்சிகள் குறித்து பேசிய ஜி.பி.ஸ்ரீதர், சிங்கப்பூருக்கு வரும் பயணிகள் எண்ணிக்கை மற்றும் சிங்கப்பூர் சுற்றுலாச் சந்தையில் மூன்றாவது மிக முக்கிய நாடாக இந்தியா உள்ளது, மேலும் பயண வர்த்தக மேம்பாட்டு நடவடிக்கைகள், ஊடக கூட்டாண்மை மற்றும் பல்வேறு சந்தைப்படுத்தல் முயற்சிகள்…
Read More
சென்னையின் நிலத்தடி நீர் குறையத் தொடங்கியது.! 2020-ல் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுமா?

சென்னையின் நிலத்தடி நீர் குறையத் தொடங்கியது.! 2020-ல் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுமா?

வடகிழக்கு பருவமழை நிறைவடைந்துள்ள நிலையில் சென்னையின் பல இடங்களில் கடந்த நவம்பர் மாதத்தை விட டிசம்பர் மாதத்தில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்துள்ளது மெட்ரோ குடிநீர் வாரியம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.கடந்த ஆண்டு கோடைக் காலத்தில் சென்னை சந்தித்த தண்ணீர் பஞ்சத்திற்கு பிறகு, மழைநீர் சேமிப்பில் தீவிர நடவடிக்கைகள் எடுத்தது அரசு. இதன் விளைவாக கடந்த சில மாதங்களாக சென்னையில் நிலத்தடி நீர் மட்டம் படிப்படியாக உயர்ந்தது, ஒருபுறம் மகிழ்ச்சி அளித்த நிலையில், தற்போது சென்னையின் பல முக்கிய பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மெட்ரோ குடிநீர் வாரியம் இம்மாதம் நடத்திய ஆய்வில், திருவெற்றியூர், மாதவரம், அம்பத்தூர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம் ஆகிய பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்துள்ளதாக கண்டறியப்பட்டு உள்ளது. மேலும், சோழிங்கநல்லூர், அடையாறு, தண்டையார்பேட்டை ஆகிய பகுதிகளில் 1 மீட்டர் வரை நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து இருப்பதாகவும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.வடகிழக்கு பருவமழை…
Read More
சோலார் மின்உற்பத்தி ! சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் இலக்கு !!

சோலார் மின்உற்பத்தி ! சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் இலக்கு !!

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை மெட்ரோ ரயில் நிலையங்கள், பணிமனைகள், அலுவலக இடங்கள் என வாய்ப்புள்ள இடங்களில் சோலார் தகடுகள் அமைத்து மின்உற்பத்தி செய்தல் உள்ளிட்ட புதிய திட்டங்களையும் படிப்படியாக மெட்ரோ ரயில் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இதுவரை மொத்தம் 5.2 மெகாவாட் அளவுக்கு சோலார் மின்உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.இதற்கிடையே, அசோக்நகர் மெட்ரோ ரயில் நிலையத்தின் மேற்கூரையில் 260 கிலோவாட், மண்ணடி மெட்ரோ ரயில் நிலையத்தில் மேற்கூரையில் 20 கிலோவாட் திறனுக்கு சோலார் கருவிகள் நிறுவி மின்உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி, இதுவரை மொத்தம் 5.5 மெகாவாட் அளவுக்கு சோலார் மின்உற்பத்தி திறன் செய்துள்ளது. இதற்கிடையே, அடுத்த ஆண்டில் 8 மெகாவாட் அளவுக்கு சோலார் மின்உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ஆண்டுதோறும் ரூ.2.54 கோடி சேமிக்க முடியும் என திட்டமிட்டுள்ளோம். மேலும், கரியமில வாயுவின் வெளியீடு அளவு ஆண்டுக்கு 11,587 டன் ஆக குறையும் என…
Read More
பிளாஸ்டிக் குப்பையிலிருந்து எரிபொருள்!

பிளாஸ்டிக் குப்பையிலிருந்து எரிபொருள்!

சிங்கப்பூரிலுள்ள நான்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழக விஞ்ஞானிகள், வீணாகும் பிளாஸ்டிக் கழிவிலிருந்து, எரிபொருளை தயாரிக்கும் தொழில் நுட்பத்தை உருவாக்கியுள்ளனர்.நுகர்வோர் பயன்படுத்தி வீசும் பிளாஸ்டிக் குப்பையிலிருந்து, ஒரு வேதியியல் கரைசலை உருவாக்கி, அந்தக் கரைசலை, சூரிய ஒளியை படச் செய்வதன் மூலம், ஹைட்ரஜன் எரிபொருள் செல்களில் பயன்படுத்தப்படும் வேதிப் பொருட்களை பிரித்தெடுத்து உள்ளனர், விஞ்ஞானிகள். பிளாஸ்டிக் குப்பை கழிவுகள் விலையின்றி கிடைப்பவை. இவற்றை மின்சாரம் தயாரிக்க உதவும் ஹைட்ரஜன் செல்லுக்குத் தேவையான வேதிப் பொருளை உருவாக்குவது, மிகவும் அருமையான யோசனை. இருந்தாலும், அதை தயாரிக்கும் வேதிவினைக்கு, சூரிய ஒளியையே பயன்படுத்த முடியும் என்பது, சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு இரட்டை போனஸ் கிடைத்தது போல என்கிறது, 'சயின்ஸ் அட்வான்சஸ்' என்ற ஆராய்ச்சி இதழ்.
Read More
கிரகணம் என்றால் என்ன?

கிரகணம் என்றால் என்ன?

சூரியனை எப்படிச் நிலவு மறைக்கும்? ஏன் 28 நாட்களுக்கு ஒருமுறை சூரிய கிரகணம் ஏற்படுவதில்லை? சூரியன், நிலவு, பூமி மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் வரும்போது ஏற்படும் நிழல் விளையாட்டுதான் கிரகணங்கள். சூரிய, சந்திர கிரகணங்கள் அடிக்கடி நிகழ்கின்றன.ஆனால், டிசம்பர் 26 அன்று நிகழ இருப்பது வளைய சூரிய கிரகணம். (Annular Eclipse) இதுபோல் இன்னொரு வளைய சூரிய கிரகணத்தைப் பார்க்க வேண்டும் என்றால் இன்னும் 21 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் என்பதால், இந்த கிரகணம் சிறப்பு வாய்ந்ததாக இருக்கிறது. தமிழ்நாட்டில் இந்த அரிய நிழல் விளையாட்டைக் கண்டுகளிக்க முடியும் என்பது கூடுதல் சிறப்பு. கிரகணம் என்றால் என்ன? சூரியனைப் பூமி சுற்றி வருகிறது. பூமியை நிலவு சுற்றி வருகிறது. அப்படிச் சுற்றி வரும்போது சில நேரத்தில் சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் நிலவு வரும்போது மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் வருகின்றன. அப்போது சூரியனின் ஒளித்தட்டைச் நிலவு மறைத்துவிடுகிறது. இதனைத்தான் சூரிய கிரகணம் என்கிறோம்.சூரியனை…
Read More
ஆதார் கார்ட் வைத்திருப்பவர்கள் கவனத்துக்கு..!

ஆதார் கார்ட் வைத்திருப்பவர்கள் கவனத்துக்கு..!

ஆதார் அட்டையை வைத்து பல சர்ச்சைகளும் கிளம்பிக் கொண்டே தான் இருக்கின்றன. கடந்த செப்டம்பர் 2018-ல் உச்ச நீதிமன்றம், ஆதார் பயன்பாடு தொடர்பாக தீர்ப்பு வழங்கிய பிறகும் கூட இந்த சர்ச்சைகளும் அங்கும் இங்குமாக கிளம்பிக் கொண்டு தான் இருக்கின்றன. அரசு தன்னால் முடிந்த வரை ஆதாரை பாதுகாப்பானதாக வைத்துக் கொள்ளவும், ஆதார் தரவுகளை பயனுள்ளதாக பயன்படுத்தி பொது மக்களுக்கு சேவை செய்யவும் முயற்சித்துக் கொண்டு தான் இருக்கிறது. அந்த முயற்சியில் ஒரு நல்ல விஷயமாக, தற்போது ஆதாரை வங்கிக் கணக்கு தொடங்க பயன்படுத்தலாம் எனச் சொல்லி இருக்கிறது ஆதார் வங்கி கணக்கு இதெல்லாம் பழைய விஷயம் தானே. வங்கிக் கணக்கைத் தொடங்க, பல மாதங்களாக ஆதார் அட்டையை பயன்படுத்திக் கொண்டு தானே இருக்கிறோம். எனக் கேட்கிறீர்களா..? ஆதார் அட்டையில் உங்களின் தற்போதைய விலாசம் இருந்தால் பிரச்னை இல்லை. அப்படி தற்போது வசிக்கும் முகவரி, ஆதார் அட்டையில் இல்லை என்றால்..? சில…
Read More
சூரிய மின்சக்தி நடமாடும் ஆட்டோ வீடு !

சூரிய மின்சக்தி நடமாடும் ஆட்டோ வீடு !

நாமக்கலை சேர்ந்த பொறியியல் பட்டதாரி ஒருவர், வீடு இல்லாதவர்கள் குறைந்த செலவில் வசிப்பதற்கு நடமாடும் வீட்டை வடிவமைத்துள்ளார்.இந்த ஆட்டோ வீடு ரூ.1,00,000 மதிப்பில், பல சிறப்பம்சங்கள் நிறைந்த சூரிய மின்சக்தி மூலமாக தயாரிக்கப்பட்டுள்ளது.புத்தகத்தில் படித்து பயின்றதை நடைமுறைக்கு ஏற்றவாறு புதிய கண்டுபிடிப்புகளை மாற்றுவதை கல்வியின் சிறப்பாக அமைகிறது. பின்னர் தற்போது உள்ள இளைஞர்கள் நடைமுறைக்கு ஏற்றவாறு புது புது கண்டுபிடிப்புகளை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த பொறியியல் பட்டதாரியான அருண் பிரபு என்பவர் ஆட்டோ ஒன்றை நடமாடும் வீடாக வடிவமைத்துள்ளார். அவர் கட்டடக் கலையில் பட்டம் பெற்றவர், அதனால் நவீன வசதிகளுடன் கூடிய ஆட்டோவை வீடாக மாற்றியிருக்கிறார். இந்நிலையில், குறைந்த இடத்தில் தேவைப்படும் வசதிகளுடன் இருக்கும் இந்த ஆட்டோ வீடு ரூ.1,00,000 மதிப்பில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஆட்டோ வீட்டில் சமையல் செய்யும் இடம், படுக்கை அறை, கழிப்பிடம், துணிகளை காயவைக்கும் இடம் உள்ளிட்டவை இடம்பெறுகிறது. மேலும், ஆட்டோவின்…
Read More
மோடி அறிவித்த BHIM செயலி சேவைக்கு இப்படியொரு நிலையா..?

மோடி அறிவித்த BHIM செயலி சேவைக்கு இப்படியொரு நிலையா..?

பணமதிப்பிழப்புக்குப் பின் இந்தியாவில் மின்னணு பணப் பரிமாற்றங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்கு ஏற்ப பேடிஎம், கூகிள், போன்பே ஆகிய நிறுவனங்கள் சமானியர்களும் பயன்படுத்தும் எளிய வகையான பணப் பரிமாற்ற தளத்தை உருவாக்கியுள்ளது. UPI மூலம் செய்யப்படும் பணப் பரிமாற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடி அறிமுகம் செய்து வைத்த BHIM செயலி வாயிலான பரிமாற்றங்கள் குறைந்துள்ளது. NPCI அமைப்பு NPCI அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் ஜனவரி மாதம் மட்டும் யூபிஐ தளத்தின் வாயிலாகப் பேடிஎம் நிறுவனம் சுமார் 221 மில்லியன் பணப் பரிமாற்றங்களைப் பெற்றுள்ளது, இதைத் தொடர்ந்து கூகிள் பே மற்றும் போன் பே ஆகிய நிறுவனங்கள் தலா 220 மில்லியன் பணப் பரிமாற்றங்களைப் பெற்றுள்ளது. போன்பே இதுகுறித்துப் போன்பே கூறுகையில் ஜனவரி மாதம் சுமார் 225 மில்லியன் பேமெண்ட்களின் வாயிலாகச் சுமார் 30,000 கோடி ரூபாய் மதிப்பிலான பணப் பரிமாற்றங்களைச் செய்துள்ளோம்…
Read More
சென்னை வர்த்தக மையத்தில் தேசிய அளவிலான சோப் மற்றும் டிடர்ஜெண்ட்  தொழில் கண்காட்சி !

சென்னை வர்த்தக மையத்தில் தேசிய அளவிலான சோப் மற்றும் டிடர்ஜெண்ட் தொழில் கண்காட்சி !

தேசிய அளவிலான சோப் மற்றும் டிடர்ஜெண்ட் குறித்து கருத்தரங்கம் மற்றும் தொழில் கண்காட்சி. டிசம்பர் 28 29 நந்தம்பாக்கம் , சென்னை வர்த்தக மையம் தமிழ்நாடு சிறுதொழில் சோப் மற்றும் டிடர்ஜென்ட் உற்பத்தியாளர்கள் சங்கம் 1964 - ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதாகும் . இதில் சுமார் 600 உறுப்பினர்கள் உள்ளனர் . தமிழகத்தில் சோப் மற்றும் டிடர்ஜென்ட் தொழில் வளர்ச்சிக்கும் , நவீன தொழில் நுட்பங்களை கண்டறிந்து தொழில் முனைவோர்களுக்கு எடுத்து கூறவும். இத்தொழிலில் ஏற்படும் பிரச்சனைகளை ஆராய்ந்து உரிய முறையில் அரசுக்கு எடுத்து கூறி தீர்வு காண்பதே இந்த சங்கத்தின் நோக்கமாகும். தற்போது சங்கத் தலைவராக இருக்கும் பவர் சோப் உரிமையாளர் கி.தனபால் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த போது கூறியதாவது. கடந்த 1995ம் ஆண்டு சங்கத்திற்கென சொந்த கட்டிடம் கட்டப்பட்டு சீரிய முறையில் அலுவலகம் இயங்கி வருகிறது . இந்த சங்கம் ஆரம்பிக்கப்பட்டு 55 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது . வருகின்ற 2019ம்…
Read More
கோயில் நிலங்களில் வசிக்கும் 20 ஆயிரம் பேருக்கு பட்டா.?

கோயில் நிலங்களில் வசிக்கும் 20 ஆயிரம் பேருக்கு பட்டா.?

தமிழகத்தில் உள்ள 4.78 லட்சம் ஏக்கர் கோவில் நிலங்களில் 600 ஏக்கர் நிலங்கள் மட்டும் 20 ஆயிரம் ஏழை குடும்பத்தினருக்கு பட்டா வழங்க பயன்படுத்தப்படும் என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.அரசு புறம்போக்கு மற்றும் கோவில் நிலங்களில் 5 ஆண்டுகளுக்கு மேல் வசித்தவர்களுக்கு பட்டா வழங்கப்படும் என கடந்த ஆகஸ்ட் 30ம் தேதி தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது.சட்டவிரோதமாக நிலங்களை ஆக்கிரமிப்பவர்களுக்கு உதவும் வகையில் பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த அரசாணையை ரத்து செய்ய கோரி ராதா கிருஷ்ணன், சத்தியநாராயணன் ஆகியோர் வழக்கு தொடர்ந்திருந்தனர்.இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கும் அரசாணைக்கு இடைக்கால தடை விதித்தது. இந்த தடையை நீக்க கோரி, தமிழக வருவாய் துறை தரப்பில் கூடுதல் பதில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில்,பல ஆண்டுகளாக கோவில் நிலங்களில் வசித்தவர்கள் விடுத்த கோரிக்கைகளை ஏற்று அவர்களுக்கு பட்டா வழங்க அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழகம் முழுவதும் கோவில் நிலங்களில்,…
Read More