17
Jan
உத்தர பிரதேச காவல்துறை வன்முறை குறித்து நீதிமன்ற விசாரணை கோரி அலகாபாத் உயர்நீதி மன்றத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் பொது நல மனு தாக்கல்! உத்தர பிரதேச மாநிலத்தில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டங்களில் தொடர்புடைய காவல்துறை வன்முறை குறித்து ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற அல்லது உயர் நீதிமன்ற நீதிபதியை கொண்டு நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் விசாரணை கோரி அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ளது. இயக்கத்தின் உத்தர பிரதேச மாநில தற்காலிக கமிட்டி உறுப்பினர் முகம்மது ஷெஹ்ஷாத் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். CAA-NRC-NPRக்கு எதிரான போராட்டங்கள் மற்ற மாநிலங்களில் பெரும்பாலும் அமைதியாக இருந்த போதும் சட்டவிரோத கைதுகள், கஸ்டடி சித்திரவதைகள் என அனைத்து விதமான அடக்குமுறைகளை உத்தர பிரதேச காவல்துறை மேற்கொண்டது. பெண்கள் மற்றும் குழந்தைகளும் கூட குறிவைக்கப்பட்டனர். மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்ட காவல்துறை துப்பாக்கி சூட்டில் பல அப்பாவி உயிர்கள் இழக்கப்பட்டன.…
