08
Feb
வரும் பிப்ரவரி 14ல் திரைக்கு வர இருக்கும் ‘ஓ மை கடவுளே’ படத்தில், விஜய் சேதுபதி சிறப்பு தோற்றத்தில் வருகிறார். அசோக் செல்வன்–ரித்திகா சிங் ஆகிய இருவரும் ஜோடியாக நடித்து உள்ளனர். ஜி.டில்லிபாபு தயாரிக்க அஷ்வத் மாரிமுத்து எழுதி இயக்கியிருக்கிறார். படத்தை பற்றி டில்லி பாபு “காதல் கதைகள் என்றும் அழியா தன்மை கொண்டது. எத்தனை காலம் கடந்தாலும் காதல் கதைகள் ஜெயித்துக் கொண்டே இருக்கும். மனிதன் உள்ளவரை காதலும் அழியாது. ‘ஓ மை கடவுளே’ படம் இன்றைய நாகரிக உலக இளைஞர்களின் காதலை புதிய வடிவில் சொல்கிறது. இதில் டைரக்டர் கவுதம் வாசுதேவ் மேனனும் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். எம்.எஸ்.பாஸ் கர், வாணி போஜன் ஆகிய இருவரும் முக்கிய வேடங்களில் நடித்து இருக்கிறார்கள். படத்துக்கு தணிக்கை குழுவினர், ‘யு ஏ’ சான்றிதழ் கொடுத்து இருக்கிறார்கள். படம், காதலர் தினத்தன்று வெளியாக இருக்கிறது.. சிம்பிளாக சொல்வதானால் எல்லோருடமும் இளமை மாறாத ஒரே…
