செய்திகள்

A wonderful serenity has taken possession of my entire soul, like these sweet mornings of spring which I enjoy with my whole heart.

தைப்பூசத் திருநாளை பொது விடுமுறையாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும் – சீமான் வலியுறுத்தல் !

தைப்பூசத் திருநாளை பொது விடுமுறையாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும் – சீமான் வலியுறுத்தல் !

தமிழர் பண்பாட்டு அசைவுகளைத் தனது கதைகளோடு தாங்கி, தமிழரின் திணையொழுக்கமாகிய குறிஞ்சி, முல்லை, மருதம் நெய்தல் மற்றும் பாலை ஆகிய கூறுகளில் வாழ்ந்த தமிழர் நிலம் முழுமையும் விரவியிருக்கும் இறைவனாக முப்பாட்டன் முருகன் திகழ்கிறார். ஐவகை நிலங்களில் தலைநிலமான குறிஞ்சி நிலத்தின் மலைகளில் இருந்துதான் உலகின் முதல் உயிரினம் தோன்றியது என்பதும், அந்த முதல் உயிரியின் பரிணாம வளர்ச்சியில் தோன்றிய மனித இனத்தில் முதல் இனம் தமிழினம் என்பதும் உயிர்களின் பரிணம அறிவியலில் இருந்து அறிகிறோம். இத்தகையச் சிறப்புடைய நிலமாகி குறிஞ்சி நில முதல்வனாக முருகக்கடவுள் தமிழர்களால் வழிபடப்படுகிறார். பத்தாம் நூற்றாண்டு வாக்கில் படையெடுத்த ஆரியர்களும் அவர்களின் வழித்தோன்றல்களும் ஏற்கனவே இங்குள்ள முருகனை ஆரியமயப்படுத்தினாலும் முருகவழிபாட்டை தமிழ்நாட்டை விட்டு நகர்த்தவில்லை. இருப்பினும், எங்கெல்லாம் தமிழர்கள் குவிந்து வாழ்கிறார்களோ அங்கெல்லாம் தமிழர்களால் முருகன் கோயில் நிறுவப்பட்டு வழிபடப்பட்டு வருகிறார். சிங்கப்பூர், மலேசியா, ஈழம், கனடா, லண்டன், சுவிஸ், பிரான்ஸ், மொருசியசு என எல்லா…
Read More
மீண்டும் டப்பிங் யூனியன் தலைவரானார் நடிகர் ராதாரவி!

மீண்டும் டப்பிங் யூனியன் தலைவரானார் நடிகர் ராதாரவி!

சின்மயி டப்பிங் யூனியனிலிருந்து நீக்கப்பட்டது ராதாரவி - சின்மயி மோதலுக்கு வழி வகுத்தது.இதனால் படவாய்ப்புகள் இல்லாமல் இருந்தார் சின்மயி. இதையடுத்து டப்பிங் சங்கத்தின் தேர்தல் வரும் 15ம் தேதி நடைபெற உள்ளது.இந்த தேர்தலில் தலைவர் பதவிக்கு மீண்டும் ராதாரவி போட்டியிட அவரை எதிர்த்து ராமராஜ்யம் அணியின் சார்பில் தலைவர் பதவிக்கு சின்மயி போட்டியிடுவதாக அறிவித்து சமீபத்தில் சென்னை வடபழனியில் உள்ள டப்பிங் யூனியன் அலுவலகத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்நிலையில் பாடகி சின்மயி தாக்கல் செய்த வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டது. சங்கத்தின் விதிமுறைக்குட்பட்டு வேட்புமனு தள்ளுபடி செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நடிகர் ராதாரவி டப்பிங் யூனியன் தலைவர் பதவிக்கு போட்டியின்றி தேர்வாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Read More
நந்தினி கார்க்கியின் ‘சூரிய விதைகள்’ – கவிதைத் தொகுதி !

நந்தினி கார்க்கியின் ‘சூரிய விதைகள்’ – கவிதைத் தொகுதி !

தர்பார், சர்க்கார், என்னை அறிந்தால், ஐ, சர்வம் தாளமயம், தங்க மீன்கள் போன்ற தமிழ்ப்படங்களுக்கு சப்டைட்டில் செய்த நந்தினி கார்க்கி சன் சீட்ஸ்(சூரிய விதைகள்) என்ற பெயரில் ஒரு ஆங்கிலக் கவிதைத் தொகுப்பை வெளியிட்டுள்ளார். கவிஞர் வைரமுத்துவும் அவரது மனைவி பொன்மணி வைரமுத்து மகன்கள் மதன்கார்க்கி, கபிலன் வைரமுத்து என்ற கவிதைக் குடும்பத்தில் இப்போது அவரது மருமகள் மற்றும் மதன் கார்க்கியின் மனைவி நந்தினி கார்க்கி ஒரு ஆங்கிலக் கவிஞராய் உதயமாகியுள்ளார். இருட்டில் இருந்து விடியலுக்கு என்ற இரு வழிப் பயணத்தை மேற்கொள்கிறது இந்த நூல். இயற்கையின் அழகை, மாற்றங்களை ஒரு வழியில் கண்டு களித்து மனதின் மேடு பள்ளங்களில் இன்னொரு வழியில் பயணம் செய்கின்றன நந்தினி கார்க்கியின் கவிதைகள்.அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் பயின்று, அமெரிக்காவில் பணி புரிந்து, ஏழு கண்டங்களுக்கும் பயணம் செய்த தன் அனுபவங்களின் சாறு இந்த நூல் என்று நூற்குறிப்பில் நந்தினி கார்க்கி எழுதியுள்ளார். இவர் கடந்த…
Read More
சென்னை எல்.ஐ.சி யின் பங்குகளில் ஒரு பகுதி விற்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிப்பு !

சென்னை எல்.ஐ.சி யின் பங்குகளில் ஒரு பகுதி விற்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிப்பு !

இந்தியாவின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி யின் பங்குகள் விற்கப்படும் என்ற அறிவிப்பு நாடெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் உள்ள பொது துறை நிறுவனங்களில் 'பொன் முட்டையிடும் வாத்தாக' திகழ்கிறது எல்.ஐ.சி நிறுவனம். இக்கட்டான தருணங்களில் அரசின் நிதி தேவைகளை பூர்த்தி செய்து, மிக சிறந்த நிறுவனமாகவும் எல்.ஐ.சி திகழ்ந்து வருகிறது. பி.எஸ்.என்.எல், ஏர் இந்தியா போன்ற அரசின் நிர்வாகத்தில் உள்ள பெரும்பாலான பொதுத் துறை நிறுவனங்கள் நஷ்டத்தில் தத்தளித்து கொண்டிருக்க, இதற்கு விதிவிலக்காக தனியார்த்துறை போட்டியை முறியடித்து தலைநிமிர்ந்து நிற்கிறது எல்.ஐ.சி.நிறுவனம். இந்நிலையில் எல்.ஐ.சி யின் பங்குகள் விற்கப்படும் என்ற அறிவிப்பு, அதன் எதிர்காலம் குறித்த சந்தேகங்களை, நிறுவன பணியாளர்கள் மற்றும் பாலிசிதாரர்களிடையே ஏற்படுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து, சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். இச்சூழலில் கோடிக்கணக்கான பாலிசிதாரர்களின் நம்பிக்கையை அரசு காப்பாற்ற வேண்டுமெனவும் ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மத்திய அரசு தீட்டும் பல்வேறு திட்டங்களுக்கு எல்.ஐ.சி நிறுவனம்…
Read More
ஆண் குழந்தை பெற்றெடுத்த ஆண்? இலங்கையில் அதிர்ச்சி !

ஆண் குழந்தை பெற்றெடுத்த ஆண்? இலங்கையில் அதிர்ச்சி !

இலங்கையில், ஒரு மருத்துவமனையில் தாடி, மீசையுடன் வந்து, ஆண் குழந்தை பெற்றெடுத்தவரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.இலங்கையின் மாத்தறை பகுதியைச் சேர்ந்த, 29 வயதுள்ள ஒருவருக்கு வயிற்று வலி ஏற்பட்டது. அவர், தெற்கு மாத்தறையில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு சென்றார். அதிர்ச்சி: தாடியுடன் வந்த அவரை, மருத்துவமனை பணியாளர்கள், ஆண்கள் வார்டுக்கு அனுப்பினர். அங்கு, டாக்டர்களின் பரிசோதனையில், அவரது வயிற்றில் குழந்தை இருப்பதற்கான அறிகுறிகள் இருந்ததால் அதிர்ச்சி அடைந்து சோதனை செய்தனர். சோதனையில், அவருக்கு எப்போது வேண்டுமானாலும் குழந்தை பிறக்கலாம் என்ற நிலையில், மருத்துவமனையில் உள்ள பிரசவ வார்டுக்கு அவர் அனுப்பி வைக்கப்பட்டார். தாடி, மீசையுடன் ஒரு ஆண், பிரசவ வார்டுக்கு வலியால் துடித்தபடி வருவதை பார்த்த, அங்கிருந்த பெண்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனால், அவர் தனி வார்டுக்கு மாற்றப்பட்டார். அங்கு, அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது.இது குறித்து, டாக்டர்கள் கூறியதாவது: பெண்ணாக பிறந்த அந்த நபர், 'ஹார்மோன்' சுரப்பு காரணமாக ஆணைப்…
Read More
பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றான பயோ டீகிரேடபிள் பிளாஸ்டிக் மக்காது- ஐநா எச்சரிக்கை

பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றான பயோ டீகிரேடபிள் பிளாஸ்டிக் மக்காது- ஐநா எச்சரிக்கை

பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ள பயோடீகிரேடபிள் பிளாஸ்டிக் இயற்கையாக மக்காது- ஐநா சுற்றுச்சூழல் மன்றம் எச்சரிக்கை ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக தமிழக அரசு அனுமதித்துள்ள பயோடீகிரேடபிள் பிளாஸ்டிக் பைகள் இயற்கையாக மக்காது என ஐநா சுற்றுச்சூழல் மன்றம் எச்சரித்துள்ளது.ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. கடந்த ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல் அமலில் உள்ளது. பிளாஸ்டிக் தடை தொடர்பான அரசாணையில், பெட்ரோலிய பொருட்கள் அல்லாத மக்கும் தன்மையுள்ள, மக்கும்போது காற்று, நீர், கனிமமாக மாறும் தன்மையுள்ள பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படும் (பயோடீகிரேடபிள்) பிளாஸ்டிக் பைகளுக்கு, தடையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதனால் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், உள்ளாட்சி அமைப்புகள், பயோடீகிரேடபிள் பிளாஸ்டிக் பைகள் பயன்பாட்டை அனுமதித்துள்ளது. அதில் போலிகளையும் கண்டறிய முடியவில்லை. இதற்கிடையில் இந்த வகையான பிளாஸ்டிக்கும் எளிதில் மக்காது என ஐநா சுற்றுச்சூழல்…
Read More
There’s a new obstacle to landing a job after college

There’s a new obstacle to landing a job after college

Here are lives at the intersection of fun and scary. One of my companions summed the whole experience up perfectly. He leaned back in his chair at dinner that night, shrimp taco in hand, “These are the kinds of experiences that give something back to you. They show you who you are in a whole new way.” These eight shots crystallize the hard work moms put into keeping their kids alive, happy, and healthy. They might give you the inspiration you need for filling out that card—or stand-alone for your mom’s interpretation.Bob Dyalon At the bottom of the mountain, my legs shaky,…
Read More
இந்தியாவுக்கு பினாங்கு ரோட்ஷோ 2020 !

இந்தியாவுக்கு பினாங்கு ரோட்ஷோ 2020 !

மலேசியாவின் பினாங்கு மாநாடு மற்றும் கண்காட்சி பணியகம் இந்தியாவுக்கு 15 பேரின் பிரதிநிதிகளை வழிநடத்துகிறது , இந்தியா சந்தைக்கு புதிய சலுகைகள் மற்றும் ஆதரவை அறிமுகம் செய்கிறது . சென்னை , இந்தியா - பினாங்கு கன்வென்ஷன் அண்ட் எக்ஸிபிஷன் பீரோ ( பிசிஇபி ) தனது வருடாந்திர ரோட்ஷோவை இந்தியாவுக்கு பினாங்கு ரோட்ஷோ 2020 இன் ஒரு பகுதியாக அறிமுகப்படுத்தியது . கார்ப்பரேட் மற்றும் அசோசியேஷன் படங்கள் , மாநாடுகள் மற்றும் சலுகைகள் மற்றும் ஓய்வு பயணங்களுக்கு பினாங்கை விருப்பமாக இடமாக ஊக்குவிக்கும் நோக்கத்துடன் பினாங்கு தூதுக்குழு இதனை ஜனவரி 20 ஆம் தேதி கொச்சியில் தொடரும் . பினாங்கு என்பது உலகத் தரம் வாய்ந்த பயண இடமாகும் , இது நவீன சர்வதேச தீவு நகரம் , யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளம் , பசுமையான மழைக்காடுகள் , அழகான மலைவாசஸ்தலம் , ஷாப்பிங் பெருக்கம் மற்றும் அற்புதமான…
Read More
விவாகரத்துகள் குறைய மிக தேவையான ஒன்று திருமணத்துக்கு முந்தைய கவுன்செலிங் !

விவாகரத்துகள் குறைய மிக தேவையான ஒன்று திருமணத்துக்கு முந்தைய கவுன்செலிங் !

வணக்கம் !வாழ்வின் மிக உன்னதமான விஷயம் உறவு .உறவு என்பது அடிப்படை மட்டுமல்லாது நம்மை ஒவ்வொரு கட்டத்திற்கும் நகர்த்தி செல்லும் ஒரு உந்துதல் தரும் கருவி கூட . அந்த உறவின் அருமை மற்றும் முக்கியத்துவம் புரியாமல் இன்று நம் மக்கள் அதை எவ்வளவு பாழாக்க முடியுமோ அவ்வளவு பாழாக்கி கொண்டு வருகிறார்கள் .இதற்க்கு யாரும் விதி விலக்கல்ல.படிப்போ பதவியோ அந்தஸ்தோ உறவுகளை பாதுகாத்துக்கொள்ள உதவுமா என்றால் இல்லை. ஆனால் புரிதல் என்கிற ஒரு காரணி முக்கியத்துவம் வகிக்கிறது .புரிதலுடன் இன்னும் சில முக்கியமான வாழ்க்கை திறன்களையும் நாம் கவனமாக கடைபிடிக்கும்போது உறவுகள் காப்பாற்ற படுகின்றன.உறவுகளை மேலாண்மை செய்வது எப்படி என்கிற இந்தபகுதியில் இந்த வாரம் கணவன் மனைவி உறவு சிறக்க என்ன செய்யலாம் என்பதை காண்போம் சமீபத்தில் ஒரு இள வயது தம்பதியினரான சுஜித் (வயது27)-தீபா(19) வை சந்திக்க நேர்ந்தது,திருமணமாகி மூன்றே மாதங்களான நிலையில் பெண் தனக்கு இந்த பந்தத்தில்…
Read More
உத்தர பிரதேச காவல்துறை வன்முறை ! அலகாபாத் உயர்நீதி மன்றத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் பொது நல மனு தாக்கல்!

உத்தர பிரதேச காவல்துறை வன்முறை ! அலகாபாத் உயர்நீதி மன்றத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் பொது நல மனு தாக்கல்!

உத்தர பிரதேச காவல்துறை வன்முறை குறித்து நீதிமன்ற விசாரணை கோரி அலகாபாத் உயர்நீதி மன்றத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் பொது நல மனு தாக்கல்! உத்தர பிரதேச மாநிலத்தில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டங்களில் தொடர்புடைய காவல்துறை வன்முறை குறித்து ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற அல்லது உயர் நீதிமன்ற நீதிபதியை கொண்டு நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் விசாரணை கோரி அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ளது. இயக்கத்தின் உத்தர பிரதேச மாநில தற்காலிக கமிட்டி உறுப்பினர் முகம்மது ஷெஹ்ஷாத் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். CAA-NRC-NPRக்கு எதிரான போராட்டங்கள் மற்ற மாநிலங்களில் பெரும்பாலும் அமைதியாக இருந்த போதும் சட்டவிரோத கைதுகள், கஸ்டடி சித்திரவதைகள் என அனைத்து விதமான அடக்குமுறைகளை உத்தர பிரதேச காவல்துறை மேற்கொண்டது. பெண்கள் மற்றும் குழந்தைகளும் கூட குறிவைக்கப்பட்டனர். மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்ட காவல்துறை துப்பாக்கி சூட்டில் பல அப்பாவி உயிர்கள் இழக்கப்பட்டன.…
Read More