27
Mar
சட்டம், ஒழுங்கு மற்றும் அமைதியை நிலைநாட்டும் காலங்களில் தேவைக்கு ஏற்ப ஊரடங்கு உத்தரவை இந்திய குற்றவியல் நடைமுறை சட்டத்தின்படி அரசு காவல்துறை மூலம் அமல்படுத்தும். 144 தடை உத்தரவின் நீடித்த நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவை குறிப்பிடலாம். இந்த இரண்டும் ஒன்றுக்கு ஒன்று தொடர்புடையவை என்றாலும், சூழ்நிலை, நேரம், காலத்துக்கு தக்கவாறு நடவடிக்கையின் தன்மை அமையும். ஊரடங்கு உத்தரவு என்றால் என்ன? இந்திய குற்றவியல் நடைமுறை சட்டப்பிரிவு 144-இன் விரிவாக்கம் அல்லது விரிவான நடவடிக்கையே ஊரடங்கு உத்தரவாகும்.அசாதாரணமான சூழ்நிலைகளில் பதற்றத்தை தணிக்க முடியாத நிலை எழும்போது, மாநில அரசு அல்லது மத்திய அரசு ஒன்றுக்கும் மேற்பட்ட பகுதி அல்லது மாவட்டம் அல்லது மாநிலங்கள் அல்லது நாடு முழுவதும் என்ற அளவில் மக்களின் நடமாட்டத்துக்கு கட்டுப்பாடு விதிக்கும். மாவட்ட நிர்வாகம், காவல்துறை மூலம் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படும்.இனம் அல்லது சமுதாயம், ஜாதி கலவரங்கள், வன்முறை, சட்ட எதிர்ப்பு, நோய் பரவல், முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கான தேவையின்போது…
