செய்திகள்

A wonderful serenity has taken possession of my entire soul, like these sweet mornings of spring which I enjoy with my whole heart.

மொபைல் போன் மற்றும் கம்ப்யூட்டர்களை, ஆன்லைனில் விற்பனை செய்ய அனுமதிக்க வேண்டும் ?

மொபைல் போன் மற்றும் கம்ப்யூட்டர்களை, ஆன்லைனில் விற்பனை செய்ய அனுமதிக்க வேண்டும் ?

மொபைல் போன் மற்றும் கம்ப்யூட்டர்களை, ஆன்லைனில் விற்பனை செய்வதற்கு அனுமதிக்க வேண்டும் என, இந்திய செல்லுலார் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது. இது குறித்து, இந்த சங்கத்தின் தலைவர், பங்கஜ் மொகிந்ரூ கூறியதாவது:நாடு முடக்கப்பட்டிருக்கும் நிலையில், ‘மொபைல் போன், லேப்டாப், கம்ப்யூட்டர்’ ஆகியவற்றை, ‘ஆன்லைன்’ மூலம் விற்பனை செய்யவும், பழுது நீக்கி தரவும் அரசு அனுமதிக்க வேண்டும். வீட்டிலிருந்து பணிகளை தொடர்ந்து மேற்கொள்வது உள்ளிட்டவற்றுக்கு, இவற்றின் தேவை மிகவும் அத்தியாவசியமாகும். நாடு முடக்கப்பட்டிருப்பதை நாங்கள் வரவேற்கிறோம். அதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், சில்லரை விற்பனை ஸ்டோர்களை திறக்க விரும்பவில்லை.ஆனால், ஆன்லைன் மூலமாக, போன்களை விற்பனை செய்ய அனுமதிக்க கோருகிறோம். தொற்று நோய்க்கு ஆளானவர்களை, மொபைல் போன் மூலமாக அரசு கண்காணித்து வருகிறது. இந்நிலையில், அவர்கள் போனில் பழுது ஏற்பட்டால், புதிய போனை வாங்கவோ அல்லது பழுதை நீக்கவோ தேவையான வாய்ப்புகளை வழங்க வேண்டும். எனவே, ஆன்லைன் மூலம், மொபைல் போன்…
Read More
“உலக மரணத்திற்கு நானே காரணம் “? கொரோனா கண்டுபிடித்த சீன டாக்டர் மாயம் ?

“உலக மரணத்திற்கு நானே காரணம் “? கொரோனா கண்டுபிடித்த சீன டாக்டர் மாயம் ?

வூஹான்: இது கொரோனா தான் என கண்டுபிடித்த சீன டாக்டர் ஏய் பென் என்பவர் திடீரென மாயமாகி உள்ளார். அவர் எங்கு இருக்கிறார் என்ற தகவல் யாருக்கும் தெரியவில்லை.சீனாவில் தான் கொரோனா பரவியது என கூறப்படுவது தற்போது முழு அளவில் நிரூபணமாகி இருக்கிறது.சீனாவின் வூஹான் மருத்துவமனையில் ஒரு நோயாளி இருமல் காய்ச்சலுடன் டிசம்பர் மாதம் 30 ம் தேதி வருகிறார். இவருக்கு இந்த மருத்துவமனையின் தலைமை பெண் மருத்துவர் ஏய் பென் இந்த நோயாளிக்கு ரத்த பரிசோதனை முடிவை பார்க்கிறார். முதலில் சார்ஸ் , புளூ காய்ச்சல் என சந்தேகிக்கப்பட்டது. ஆனால் இந்த டாக்டர் தனது மருத்துவ குழுவினருக்கு இந்த ரத்த பரிசோதனையை அனுப்பி வைக்கிறார். இது ஒரு புதிய வைரஸ் எனவே மேல் தரப்பு உத்தரவு இல்லாமல் வெளியே கூற முடியாது என சக மருத்துவர்கள் தெரிவித்து விட்டனர். இதனை ஏய்பென் வெளியே தெரிவிக்க விரும்பி உள்ளார். ஆனால் மருத்துவ…
Read More
30 – 45 வயதுடையோருக்கு சிறந்த ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசி எது..!

30 – 45 வயதுடையோருக்கு சிறந்த ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசி எது..!

இன்றைய காலகட்டத்தில் இன்சூரன்ஸ் என்பது மிக அவசியமாகி விட்டது. ஏனெனில் எந்த சமயத்தில் என்ன நடக்குமோ? என்ற நிலையில் அனைவரும் ஹெல்த் இன்சூரன்ஸ் எடுத்துக் கொள்வது மிக நல்ல விஷயமே. அதிலும் ஹெல்த் இன்சூரன்ஸ் என்பது அவசர காலங்களில், பாலிசிதாரர்களுக்கு ஏற்படும் பல விதமான மருத்துவ செலவுகளுக்கும் பணத்தை, திரும்ப செலுத்த இன்சூரன்ஸ் நிறுவனம் உத்தரவாதம் அளிக்கிறது. குறிப்பாக எதிர்பாராத, அதிக மருத்துவச் செலவுகளிலிருந்து உங்களை பாதுகாப்பதன் மூலம் உங்களுடைய உடல்நலம், நோய் மற்றும் விபத்து செலவுகளுக்கும் இந்த ஹெல்த் இன்சூரன்ஸ் உதவுகிறது. க்ளைம் எப்படி? நீங்கள் ஒரு மருத்துவ இன்சூரன்ஸ் பாலிசியினை எடுக்கும் போது, பிரீமியத்தின் வருடாந்திர பண செலுத்தலின் போது நீங்கள் தேர்ந்தெடுத்துள்ள உறுதி செய்யப்பட்ட தொகைக்கு ஏற்ப, உங்களது மருத்துவ செலவில் ஏற்படக் கூடிய உங்கள் மருத்துவ சிகிச்சைக்கான செலவுகள், மற்றும் பாதிப்புக்கு ஏற்ப உங்களது இன்சூரன்ஸ் நிறுவனத்தால் க்ளைம் செய்யப்படும். வரி விலக்கும் உண்டு நீங்கள்…
Read More
இரு சக்கர வாகன காப்பீடு ! அறிந்து கொள்ள வேண்டிய சில விஷயங்கள்..!

இரு சக்கர வாகன காப்பீடு ! அறிந்து கொள்ள வேண்டிய சில விஷயங்கள்..!

இரு சக்கர வாகனங்களில் பாலிசி எடுப்பவர்களில் பலரும் அதனை தொடர்ந்து புதுப்பிப்பதே கிடையாதாம். இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமானால் இந்தியாவில் 75% பேர் இருசக்கர வாகனத்திற்கு பாலிசி இல்லாமல் தான் உள்ளனர் என்று ஒரு அறிக்கை கூறுகிறது. இதில் குறிப்பாக நகர்ப்புறங்களை விட மக்கள், கிராமப்புறங்களில் இதனை பற்றிய விழிப்புணர்வு என்பது இல்லாமல் தான் இருக்கிறார்களாம். இவர்கள் இதற்கு கூறும் முக்கிய காரணமே இதனை பற்றி விழிப்புணர்வு இல்லாமை மற்றும் நேரமின்மை என்பது தான். பொதுவாக இரு சக்கர வாகன பாலிசியில் இரு வகை உள்ளது. ஓன் டேமேஜ் பாலிசி (Own Damage policy) மூன்றாம் நபர் பாலிசி (Third party insurance) ஓன் டேமேஜ் பாலிசி இந்த ஓன் டேமேஜ் பாலிசியில் விபத்து என்று மட்டுமில்லாமல் மழை - வெள்ளம், தீ, திருட்டு என்று எந்த வடிவத்தில் வாகனத்துக்குச் சேதம் நிகழ்ந்தாலும், அந்தப் பாதிப்புக்கு இழப்பீடு கிடைக்க வழி செய்வதுதான்…
Read More
மீண்டும் ஒரு இலவசத்தை அறிவித்த ஏர்டெல்.!

மீண்டும் ஒரு இலவசத்தை அறிவித்த ஏர்டெல்.!

ஏர்டெல் நிறுவனம் தொடர்ந்து தனது வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான சலுகைகளை அறிவித்த வண்ணம் உள்ளது. அதன்படி ஏர்டெல் நிறுவனம் இப்போது தனது டிஜிட்டல் டிவி பயனர்கள் முதல் முறையாக கியூரியாசிட்டி ஸ்ட்ரீமில் இருந்து பிரீமியம் கன்டென்டை பெறுவதாக அறிவித்துள்ளது. கியூரியாசிட்டிஸ்ட்ரீம் அதாவது கியூரியாசிட்டிஸ்ட்ரீம் என்பது ஆவணப்படங்கள் மற்றும் தொடர்கள் நிறைந்த ஒரு தளமாகும். இந்த அறிவிப்பு கண்டிப்பாக பல்வேறு மக்களுக்கு பயனுள்ள வகையில் இருக்கும் என்றுதான் கூறவேண்டும். மேலும் இந்த அறிவிபபு கடந்த ஆண்டு நவம்பரில் தொடங்கிய ஏர்டெல் மற்றும் கியூரியாசிட்டிஸ்ட்ரீம் இடையேயான கூட்டாண்மையை ஒரு படி மேலே கொண்டு செல்கிறது என்றுதான் கூறவேண்டும். வெளிவந்த தகவலின் அடிப்படையில் கியூரியாசிட்டிஸ்ட்ரீம் டிவி சேனல் ஏர்டெல்லுக்கு பிரத்யேகமாக இருக்கும், குறிப்பாக ஏர்டெல் டிஜிட்டல் டிவி சந்தாதாரர்களுக்கு எந்தவிதமான கூடுதல செலவும் இல்லாமல் இலவசமாக கிடைடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கியூரியாசிட்டிஸ்ட்ரீம் பொறுத்தவரை பார்வையாளர்கள் தங்கள் ஆர்வங்களை ஆராய்ந்து, ஆயிரக்கணக்கான திரைப்படங்கள் மற்றும் தொடர், கலை,…
Read More
அமெரிக்காவில் ஒரு வாரத்திற்கு முன்பே முன்பதிவு செய்யப்படும் கல்லறைகள் ?

அமெரிக்காவில் ஒரு வாரத்திற்கு முன்பே முன்பதிவு செய்யப்படும் கல்லறைகள் ?

வல்லரசு நாடான அமெரிக்காவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்கள் அதிகமாகி கொண்டே இருப்பதால், இறுதிச்சடங்கு நடத்தும் கூடங்கள் பிணங்களால் நிரம்பி வழிகின்றன. சீனாவில் வுஹான் மாகாணத்தில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் உலகமெங்கும் பரவி கொண்டு இருக்கிறது. நாளுக்கு நாள் அதிகமாகிகொண்டே இருப்பதால் கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகள் பலதும் திணறி கொண்டு வருகின்றன. இதில் தற்போதும் பெரிதும் பாதிக்கப்பட்டு வரும் நாடுகளான, இத்தாலி, ஸ்பெயின் நாட்டிற்கு அடுத்து அமெரிக்கா தான் விபரீதத்துக்குள்ளாகியுள்ளது . அமெரிக்காவில் கொரோனா வைரஸால் 2 லட்சத்து 45 ஆயிரம் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் 6098 பேர் உயிரிழந்தும் 10,441 பேர் குணமடைந்துள்ளனர். இதில் நியூயார்க்கில் மட்டும் 1500 பேர் பலியாகியுள்ளனர். இதனால் அங்குள்ள கல்லறைகள், தகனக்கூடங்கள் ஆகியவை ஒரு வாரம் அல்லது சில நேரங்களில் 2 வாரங்களுக்கு முன்பே கூட முன்பதிவு செய்யப்படுவதாக, ப்ரூக்கிளின் கல்லறை உரிமையாளரான பேட் மோர்மா கூறியுள்ளார் . அதிலும் தற்போது…
Read More
விஜய் தொலைக்காட்சியில் மீண்டும் லொள்ளு சபா !

விஜய் தொலைக்காட்சியில் மீண்டும் லொள்ளு சபா !

2004ல் விஜய் தொலைகாட்சி ஆரம்பித்த நிகழ்ச்சி தான் லொள்ளு சபா. ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு படத்தின் கதையை மையமாக எடுத்து கொண்டு அதில் லொள்ளு சபா செய்யும் காமெடிக்கு தமிழ் சினிமா ரசிகர்கள் அனைவரும் அடிமை . சினிமாவை தொடர்ந்து பார்த்து அலுத்து போன ரசிகர்களுக்கு புதுவித ட்ரீட்மெண்ட் தான் இந்த லொள்ளு சபா. லொள்ளு சபாவை பொருத்த வரையில் வெற்றி படங்களை தான் கலாய்ப்பார்கள் தோல்வி படங்களை கலாய்க்க மாட்டார்கள் என்றெல்லாம் கிடையாது. இவர்கள் எந்த படத்தை எடுத்து கிண்டல் செய்தாலும் ரசிகர்கள் அந்த படத்தை நினைவு கூறி லொள்ளு சபாவின் கிண்டல்களை ரசிப்பதே வழக்கம். கிட்டதட்ட மூன்று வருடங்கள் லொள்ளு சபா ரசிகர்களை மகிழ்வித்தது. இந்த நிகழ்ச்சியில் இருந்து தான் தமிழ் சினிமாவின் மிக முக்கிய பிரபலங்கள் என்று சொல்ல கூடிய பல முன்னணி நட்சத்திரங்கள் தங்களின் ஓட்டத்தை துவங்கினார்கள். இதில் சந்தானம் ,யோகிபாபு, சுவாமிநாதன், ஜீவா, மனோகர்,…
Read More
கட்டி முடிக்­கப்­பட்ட வீடு­களை வாங்­கு­வது சிறந்­ததா?

கட்டி முடிக்­கப்­பட்ட வீடு­களை வாங்­கு­வது சிறந்­ததா?

சொந்த வீடு வாங்க விரும்­பு­கி­ற­வர்­கள், வீட்­டின் அமை­வி­டம், வீட்­டுக்­க­டன் வசதி உள்­ளிட்ட பல்­வேறு அம்­சங்­களை பரி­சீ­லிக்க வேண்­டும். இவற்­றோடு, புதி­தாக கட்­டப்­பட்டு வரும் குடி­யி­ருப்பு திட்­டங்­களை நாடு­வதா அல்­லது உட­ன­டி­யாக பயன்­ப­டுத்­தக்­கூ­டிய, கட்டி முடிக்­கப்­பட்ட வீடு­களை நாடு­வதா எனும் கேள்­வி­யும் முக்­கி­ய­மாக எழ­லாம். தற்­போ­தைய சூழ­லில், கட்டி முடிக்­கப்­பட்ட வீடு­களை நாடு­வ­தில் உள்ள சாத­க­மான அம்­சங்­கள்: கட்டி முடிக்­கப்­பட்ட வீடு­களை வாங்­கும் போது, குடி­யி­ருப்பு திட்­டம் தாம­த­மா­கும் அபா­யம் இருப்­ப­தில்லை.திட்­டம் முடி­ய­வும், குடி­யி­ருப்பு வச­தி­கள் பூர்த்தி செய்­யப்­ப­ட­வும் காத்­தி­ருக்க வேண்­டி­யி­ருக்­காது. பல்­வேறு கார­ணங்­க­ளால், ரியல் எஸ்­டேட் திட்­டங்­கள் தாம­த­மாக வாய்ப்­புள்ள சூழ­லில் இதுமுக்­கிய சாத­கம். கட்டி முடிக்­கப்­பட்ட வீடு எனில்,பய­னா­ளிக்கு எல்லா அம்­சங்­களும் தெளி­வாக இருக்­கும். வீடு, அறை­க­ளின் அளவு, பார்­க்கிங், வச­தி­கள் உள்­ளிட்ட அனைத்துஅம்­சங்­க­ளை­யும் முன்­கூட்­டியே அறிந்து கொள்­­லாம்.இது, வாங்­கும் முடிவை எளி­தாக்­கும் என்­ப­தால்எந்த குழப்­ப­மும் இருக்­காது.வீட்­டுக்­க­டன் வசதி பெறும் போது, கட­னுக்­கான மாதத்­ த­வ­ணையை செலுத்த வேண்­டும். கட்­டப்­பட்டு…
Read More
தமிழக  சிறைகளில் 30,000 முகக் கவசங்களை தயாரிக்கும் பணி !

தமிழக சிறைகளில் 30,000 முகக் கவசங்களை தயாரிக்கும் பணி !

தமிழகத்தில் உள்ள சிறைகளில் ஒரே நாளில் 30,000 முகக் கவசங்களை தயாரிக்கும் பணியில் சிறைக் கைதிகள் ஈடுபட்டுள்ளனர்.கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் விதமாக அனைவரும் தற்போது பாதுகாப்பாக முகக்கவசம் அணிந்து பல்வேறு பணிகளில் ஈடுபடுகின்றனர். இதனால் முகக்கவசங்களின் தேவையும், தட்டுப்பாடும் அதிகரித்துள்ளது. இதனையடுத்து தையல் பயிற்சி பெற்ற தமிழக சிறையில் உள்ள சுமார் 200 தண்டனை கைதிகள் மூலம் முகக்கவசங்களை தயாரிக்கும் பணியில் சிறைத்துறையினர் தீவிரமாக ஈடுபடுகின்றனர்.ஒரே நாளில் 30,000 முகக்கவசங்களை சிறைக் கைதிகள் மூலம் தயாரிக்கத் தொடங்கி உள்ளனர். இதுவரை ஒரு லட்சத்து 80 ஆயிரம் முகக் கவசங்களைத் தயாரித்து, தமிழக சிறையில் உள்ள காவலர்கள் , தமிழக காவல்துறையில் உள்ள காவலர்கள், சிறை கைதிகள் அனைவரும் சிறையில் தயாரிக்கும் முகக் கவசங்களை பயன்படுத்துகின்றனர்.
Read More
ஊழல் குறித்து புகார் செய்யும் விதம் !

ஊழல் குறித்து புகார் செய்யும் விதம் !

ஊழல் செய்யும் அரசு ஊழியர்கள் மற்றும் அலுவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வெள்ளைய ஆங்கில அரசின் இந்திய தண்டனைச் சட்டத்தில் போதிய வழி இல்லாதபடியால், விடுதலை அடைந்த இந்திய அரசு 1947ல் ஊழல் தடுப்புச் சட்டம் இயற்றியது. பின் இதே சட்டத்தை பல்வேறு திருத்தங்களுடன் தற்போது நடைமுறையில் உள்ள ஊழல் தடுப்புச் சட்டம் 1988ஆம் ஆண்டு முதல் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது. இச்சட்டத்தின்படி, கையூட்டு மற்றும் ஊழல் புரிந்த மாநில, மத்திய அமைச்சர்கள், சட்டம் இயற்றும் அதிகாரம் உள்ள மக்கள்மன்ற பிரதிநிதிகளான சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சிமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்கள், அரசிடம் ஊதியம் பெறும் ஊழியர்கள் மற்றும் அலுவலர்கள், அரசிடம் நிதிஉதவி பெறும் அரசு சாரா நிறுவனங்கள் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும். ஊழலுக்காக இந்திய பொது ஊழியர்கள் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள சட்டங்களின் படி அபராதம் விதிக்கப்படும்: இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம், 1860 வருமான…
Read More