15
Apr
தமிழக மின்வாரியம் வளர்ச்சிப்பாதையில், பயணித்து வருகிறது. கடந்த முன்று ஆண்டுகளில், பல்வேறு திட்டங்களால், 2,788 மெகாவாட் மின் உற்பத்தி அதிகரிக்கப்பட்டுள்ளது.தமிழக மின்வாரியம், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் மற்றும் தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகம் என, மறு சீரமைக்கப்பட்டு, நுகர்வோருக்கு மின் சேவை வழங்கி வருகிறது. மாநிலத்தில், மொத்தம், மூன்று கோடியே மூன்று லட்சம் மின் நுகர்வோர் உள்ளனர். மாநில மின் தேவையை பூர்த்தி செய்ய, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், 18 ஆயிரத்து 500 மெகாவாட் மின் நிறுவு திறனை பெற்றுள்ளது. இது தவிர, மரபு சாரா எரிசக்தி ஆதாரங்களான காற்றாலை, சூரிய சக்தி, தாவரக்கழிவு மற்றும் இணை மின் உற்பத்தி திட்டங்கள் வாயிலாக, 13 ஆயிரத்து 395 மெகாவாட் மின் நிறுவுத் திறன் பெற்றுள்ளது. இந்த மின் பகிர்மான கட்டமைப்பு, 1,770 துணை மின்நிலையங்கள், 3.23 லட்சம் பகிர்மான மின்மாற்றிகள், 34 ஆயிரத்து…
