13
Apr
ஊரடங்கின்போது வழக்கில் சிக்கியயோர் தடையில்லா சான்று பெறுவதில் சிக்கல் ஏற்படும் என்பதால் எதிர்காலத்தை நினைத்து இளைஞர்கள் தேவையின்றி வெளியில் வருவதைத் தவிர்க்க வேண்டும் என காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க, ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த ஊரடங்கை அமல்படுத்துவதில் மதுரையில் போலீஸார் இரவு, பகல் பாராமல் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.சாலைகள் வெறிச்சோடியதால் இளைஞர்கள் பலர் ஜாலியாக சுற்றுகின்றனர். வேறு வழியின்றி அத்தியவாசியப் பொருட் கள் வாங்குவோர் தவிர, தேவையின்றி வாகனங்களில் சுற்றும் இளைஞர்கள் மீது பொது ஊடரங்கை மீறுதல் (சட்டப் பிரிவு 188), கொள்ளை நோயைப் பரப்புதல் வகையில் கவனக்குறைவுடன் நடப்பது (ச-பி 269), நோயைப் பரப்பும் நோக்கில் அலட்சியம் செய்தல் (ச-பி 270) பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கின்றனர். இந்நிலையில் தென்மண்டலத்தில் மதுரை புறநகர், திண்டுக்கல், தேனி, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, நெல்லை புறநகர், நாகர்கோவில், தென்காசி மாவட்டங்களில் நேற்று…
