செய்திகள்

A wonderful serenity has taken possession of my entire soul, like these sweet mornings of spring which I enjoy with my whole heart.

ஊரடங்கு நடவடிக்கை சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் மீள ஓராண்டாகும் ?

ஊரடங்கு நடவடிக்கை சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் மீள ஓராண்டாகும் ?

கரோனா வைரஸ் : அரச சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் தற்போதைய ஊரடங்கு நடவடிக்கையால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. இதிலிருந்து நிறுவனங்கள் மீள்வதற்கு மூன்று ஆண்டுகள் வரை ஆகும் என்று சிப்காட், இருங்காட்டுக் கோட்டை உற்பத்தியாளர் சங்கத்தின் செயலாளர் கே.பாலசுப்ரமணியன் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் கூறியதாவது: ''எதிர்பாராத வகையில் இந்த ஊரடங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுவிட்டது. இதனால் மார்ச் மாதத்தில் 50 சதவீத அளவுக்குக் கூட வர்த்தகம் நடைபெறவில்லை. இதேபோல ஏப்ரல் 14 வரை கதவடைப்பு நீடித்துள்ளதால் ஏப்ரல் மாத விற்பனை, விநியோகம் எதுவும் நடைபெறாது.விவசாயத்துக்கு அடுத்தபடியாக அதிக எண்ணிக்கையில் வேலை வாய்ப்பை அளிப்பது சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் தான். இத்தொழிலில் தமிழகம் தவிர பிற மாநிலங்களிலிருந்து பணியில் ஈடுபட்டிருப்போர் அதிகம். குறிப்பாக சென்னையைச் சேர்ந்தவர்கள் 25 சதவீதம் எனில் பிற மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் 25 சதவீதம், அதேசமயம் பிற மாநிலங்களிலிருந்து புலம் பெயர்ந்தவர்கள் 50…
Read More
கொரோனா என் உடலைத் தின்கிறது ? கண்ணீரை வரவழைக்கும் ஃபிரான்ஸ் தமிழரின் பதிவு ?

கொரோனா என் உடலைத் தின்கிறது ? கண்ணீரை வரவழைக்கும் ஃபிரான்ஸ் தமிழரின் பதிவு ?

ஃப்ரான்சில் வசிக்கும் இரயாகரன் ஒரு ஈழத் தமிழர். 'புதிய ஜனநாயக மக்கள் முன்னணி" எனும் பெயரில் அரசியல் சிந்த்aனைகளைக் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாகப் பரப்பி வருகிறார். அவர் தற்போது கொரோனா தாக்குதல் உறுதி செய்யப்பட்டு ஃப்ரான்சில் வீட்டிலேயே மருத்துவக் கண்காணிப்பில் உள்ளார். அவர் மனைவியும் பாதிக்கப்பட்டுள்ளார். 2 குழந்தைகளும் பாதிக்கப்ட்டுள்ளனர். யாரேனும் ஒருவர் மரணமடைந்து மருத்துவமனையில் இடம் காலியானால்தான் இன்னொருவர் 'அட்மிட்' ஆகலாம் என்பதுதான் இந்த "வளர்ச்சி" அடைந்த நாடுகளின் இன்றைய நிலையும். இந்த இக்கட்டான நேரத்திலும் அவர் கீழ்கண்டவாறு சமூக உணர்வுடன் பேசுவது நம்மைக் கண்கலங்க வைக்கிறது : "எனது நோய் எதிர்ப்புச் சக்தி, என் உயிருக்காக போராடுகின்றது. அந்தப் போராட்டம் உடல் வேதனையைத் தருகின்றது. எது வெற்றி பெறும் என்பதை, காலம் தீர்மானிக்கும். எனக்காக போராடும் நோய் எதிர்ப்பு சக்திக்கு உதவ இந்த நாட்டில் மருந்தில்லை.என் வீட்டுக்குள்ளும் வரும், மரணம் என்னைச் சுற்றியும் நிகழும் என்பது கற்பனையல்ல…
Read More
இன்னொரு பயங்கரத்தை நோக்கி அமெரிக்கா ? எகிறும் வேலையிழப்புகள் ?

இன்னொரு பயங்கரத்தை நோக்கி அமெரிக்கா ? எகிறும் வேலையிழப்புகள் ?

ஒரு புறம் அமெரிக்காவில் கரோனா பலி எண்ணிக்கை 1 லட்சம் முதல் 2, 40,000 வரை இருக்கலாம் என்ற அச்சுறுத்தல் இருந்து வரும் நிலையில் பொருளாதாரம் பெரும் பின்னடைவை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.அமெரிக்க தொழிலாளர் துறை சுமார் 1 கோடியே 30 லட்சம் பேர் இதுவரை வேலையிழந்துள்ளனர், இது பலதுறைகளையும் சேர்த்து என்றும் இப்படியே போனால் 2 மாதங்களில் 4 கோடி பேர் வேலையிழக்கலாம் என்றும் 2009 பொருளாதார நெருக்கடியை விட மோசமாக உள்ளது என்றும் தெரிவித்துள்ளனர்,வியாழக்கிழமை தரவுகளின் படி பல லட்சம் பேர் வேலையிழந்துள்ளனர். பாந்தியன் மேக்ரோ இகனாமிக்ஸ் ஆலோசனை நிறுவனம் கூறும்போது, “இப்படிப்பட்ட பயங்கரத்தைத் தவிர வேறு எதையும் பார்க்க முடியவில்லை” என்று வேதனை தெரிவித்துள்ளது. மேலும் 50 லட்சம் பேர் வேலையின்மையினால் ஏற்படும் பாதிப்புகளுக்கு இழப்பீடுகள் கோரியுள்ளனர். இந்த எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கும் என்றே தெரிகிறது.கடந்த வாரம் வெளியான அறிக்கைகளின்படி 66 லட்சம் பேருக்கு வேலையிழப்பு…
Read More
‘கொரோனா’ பரிசோதனை இலவசம்’ ! உச்ச நீதிமன்றம் உத்தரவு !!

‘கொரோனா’ பரிசோதனை இலவசம்’ ! உச்ச நீதிமன்றம் உத்தரவு !!

'நாட்டில் உள்ள அனைவருக்கும், 'கொரோனா' பரிசோதனை இலவசமாக செய்யப்படுவதை, மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும்' என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.கொரோனா தொற்றுக்கான பரிசோதனைகள், அரசு மருத்துவமனைகளில் இலவசமாக செய்யப்பட்டு வந்தன. தொற்று அதிகரிக்க துவங்கியதை அடுத்து, தனியார் பரிசோதனை கூடங்களும் பரிசோதனை மேற்கொள்ள, மத்திய அரசு அனுமதி அளித்தது. இதற்கு, 4,500 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. இந்நிலையில், வழக்கறிஞர் சஷாங் தியோ சுதி என்பவர், உச்ச நீதிமன்றத்தில், மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதன் விபரம்:கொரோனா பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைகளின் எண்ணிக்கை போதுமானதாக இல்லாததால், தனியார் பரிசோதனை மையங்களுக்கு செல்ல வேண்டிய நிலைக்கு, சாமானிய மக்கள் தள்ளப்பட்டு உள்ளனர்.ஆனால், தனியார் பரிசோதனை மையங்களில் வசூலிக்கப்படும், 4,500 ரூபாய் கட்டணத்தை, அனைவராலும் செலுத்த முடியாத நிலை உள்ளது. முழு அடைப்பால், கடும் பொருளாதார நெருக்கடியில் உள்ள சாமானிய மக்களுக்கு, இத்தொகை கடும் சுமையாக உள்ளது.இவ்வாறு, மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மனுவை,…
Read More
வங்கிகளில் ரூ.2,000 கோடி கடன் வாங்க மின்வாரியம் முடிவு ?

வங்கிகளில் ரூ.2,000 கோடி கடன் வாங்க மின்வாரியம் முடிவு ?

மின் கட்டணம் வசூலிக்காததால் ஏற்பட்டுள்ள நெருக்கடியை சமாளிக்க, மின் வாரியம், மத்திய அரசின் நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கிகளிடம் இருந்து, 2,000 கோடி ரூபாய் கடன் வாங்க முடிவு செய்துள்ளது. தமிழக மின் வாரியத்திற்கு, மின் கட்டணம் வாயிலாக, மாதம் 3,000 கோடி ரூபாய்க்கு வருவாய் கிடைக்கிறது. மின் கொள்முதல், ஊழியர்கள் சம்பளம், மின் நிலையங்களுக்கான எரிபொருள், பழுது மற்றும் பராமரிப்பு பணி போன்றவற்றுக்காக செலவு செய்யப்படுகிறது. வரவை விட, செலவு அதிகமாக இருப்பதால், மத்திய அரசின், 'ரூரல் எலக்ட்ரிபிகேஷன், பவர் பைனான்ஸ்' ஆகிய நிதி நிறுவனங்களிடம் இருந்தும், பொது மற்றும் தனியார் துறை வங்கிகளிடம் இருந்தும், மின் வாரியம் கடன் வாங்குகிறது. தமிழகத்தில், கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க, மார்ச், 24 நள்ளிரவு முதல், ஏப். 14ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால், மக்கள் வீடுகளை விட்டு வெளியே வராமல், வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர். இதையடுத்து, மார்ச், 25…
Read More
இந்தியாவில் 40 கோடி முறைசாரா தொழிலாளர்கள் வறுமையில் மூழ்கும் அபாயம்? ஐ.நா எச்சரிக்கை ?

இந்தியாவில் 40 கோடி முறைசாரா தொழிலாளர்கள் வறுமையில் மூழ்கும் அபாயம்? ஐ.நா எச்சரிக்கை ?

உலகை அச்சத்தின் பிடியில் வைத்திருக்கும் கரோனா வைரஸால் இந்தியாவில் பொருளாதார ரீதியாக பெரும் பாதிப்பு ஏற்பட உள்ளது. அமைப்பு சாரா தொழிலில் உள்ள 40 கோடி தொழிலாளர்கள் மேலும் மோசமான வறுமையில் வீழ்வார்கள் என்று ஐநாவின் சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ஐஎல்ஓ) கவலை தெரிவித்துள்ளது.அதுமட்டுமல்லாமல் உலகம் முழுவதும் நடப்பு ஆண்டின் 2-வது காலாண்டில் 19.50 கோடி பேரின் முழுநேர வேலையை கரோனா வைரஸ் பறிக்கும் என எதிர்பார்ப்பதாக அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.’சர்வதேச தொழிலாளர் அமைப்பின் 2-வது கட்டக் கண்காணிப்பு: கரோனாவும் உலக வேலைவாய்ப்பும்’ என்ற தலைப்பில் சர்வதேச தொழிலாளர் அமைப்பு தனது அறிக்கையை வெளியிட்டுள்ளது.சர்வதேச தொழிலாளர் அமைப்பின் இயக்குநர் கெய் ரைடர்: இதுகுறித்து அந்த அமைப்பின் இயக்குநர் கெய் ரைடர் நிருபர்களிடம் கூறியதாவது: 'கரோனா வைரஸ் உலக அளவில் ஏற்படுத்தி வரும் மனிதப் பேரிழப்பும், பொருளதாரச் சீரழிவும் 2-ம் உலகப்போருக்குப் பின் உலக நாடுகள் எதிர்கொள்ளும் தீவிரமான பிரச்சினையாகும்.வளர்ந்த நாடுகள், வளர்ந்து…
Read More
விற்பனையாகாத தனியார் அடுக்குமாடி குடியிருப்புகள், ‘கொரோனா’ முகாம்களாக மாற்றம்?

விற்பனையாகாத தனியார் அடுக்குமாடி குடியிருப்புகள், ‘கொரோனா’ முகாம்களாக மாற்றம்?

விற்பனையாகாத தனியார் அடுக்குமாடி குடியிருப்புகளை கொரோனா தனிமை முகாம்களாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளை, சுகாதார துறை துவங்கி உள்ளது. தமிழகத்தில், தற்போதைய நிலவரப்படி, 92 ஆயிரம் பேர் தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர். சுகாதாரத் துறைஇவர்களில், தொற்றுக்கான அறிகுறி உள்ளவர்களை, தனிமை முகாம்களில் வைக்க வேண்டியது அவசியம். அடுத்து வரும் வாரங்களில், தனிமை முகாம்கள், சிறப்பு வார்டுகள் தேவை அதிகரிக்கும் என, கணக்கிடப்பட்டு உள்ளது. இதற்கான வசதிகளை ஏற்படுத்தும் பணிகளை, அரசு முடுக்கி விட்டுள்ளது. இதற்காக, கட்டி முடிக்கப்பட்ட, அரசு கட்டிடங்களை, சுகாதார துறை ஆய்வு செய்து வருகிறது. இந்நிலையில், கட்டி முடிக்கப்பட்டு, விற்கப்படாமல் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளை, தனிமை முகாம்கள், சிறப்பு வார்டுகளாக மாற்றுவது குறித்து, அரசு ஆராய்ந்து வருகிறது. இதற்காக, இந்திய கட்டுனர் வல்லுனர் சங்கம், இந்திய ரியல் எஸ்டேட் மேம்பாட்டாளர் சங்கங்களின் கூட்டமைப்பான, 'கிரெடாய்' உடன், சுகாதார துறை அதிகாரிகள் பேச்சு நடத்தி வருகின்றனர். இதில், 100 சதவீத வீடுகளும் விற்காமல்…
Read More
கொரோனா வைரஸ் எப்போது முடிவுக்கு வரும் ? அபிக்யா ஆனந்த் கணிப்பு.!

கொரோனா வைரஸ் எப்போது முடிவுக்கு வரும் ? அபிக்யா ஆனந்த் கணிப்பு.!

கொரோனா வைரஸ் தாக்குதல் குறித்து, எட்டு மாதங்களுக்கு முன்பே கணித்த, 14 வயது இந்திய சிறுவன், கொரோனா தொற்று, மே, 29ல் முடிவுக்கு வரும் என தெரிவித்துள்ளான்.இந்தியாவை சேர்ந்த, 14 வயது சிறுவன், அபிக்யா ஆனந்த். சிறு வயதிலேயே ஜோதிடத்தில், வானவியல் சாஸ்திரத்தில், நிபுணத்துவம் பெற்றான். தன் ஜோதிட அறிவுக்காக, பல்வேறு பதக்கங்களையும், விருதுகளையும் பெற்றுள்ளான். கடந்த, 2019 ஆகஸ்ட் மாதம், ஒரு வீடியோவை வெளியிட்டான். அதில், 2019 ஆகஸ்ட் முதல், 2020 ஏப்ரல் வரை, உலகை மிகப்பெரிய நோய் அச்சுறுத்தும் என்பதை, கணித்து கூறினான்.'மிகவும் அரிதாக, செவ்வாய், குரு, சனி, ராகு, சந்திரன் ஆகியவை, சூரிய குடும்பத்தின் வெளி வளையத்தில், ஒரே நேர்கோட்டில் வருகின்றன. இம்மூன்று கிரகங்களும் மிகவும் சக்தி வாய்ந்தவையாக கருதப்படுகின்றன. இவை இணைவதால், அதிகமான கதிர்வீச்சு, பூமியை தாக்கும். அதே நேரம் சந்திரனும், ராகுவும் இணைவதும், சக்தி வாய்ந்ததாகும். ராகு, உலகில் நோய்களை பரப்பும்' என, ஆனந்த்…
Read More
இத்தாலியிடம் ஈவு இரக்கமே இல்லாமல் நடந்து கொண்ட சீனா.? வெளியான ரகசியம்!

இத்தாலியிடம் ஈவு இரக்கமே இல்லாமல் நடந்து கொண்ட சீனா.? வெளியான ரகசியம்!

கொரோனா வைரஸால் சீனா முதன்முதலில் பாதிக்கப்பட்டது. அப்போது சீனா மீது உலக நாடுகள் இரக்கப்பட்டன. உதவி செய்வது போல நாடகம்... பல நாடுகள் சீனாவுக்கு உதவி செய்தன. இத்தாலி மருத்துவ பாதுகாப்பு கவசங்களை டன் கணக்கில் இலவசமாக கொடுத்து உதவியது. இத்தாலியிடம் இலவசமாக பெற்ற அதே பாதுகாப்பு கவசங்களை இப்போது பணம் பெற்றுக் கொண்டு அதே இத்தாலிக்கு அனுப்பி உள்ளது சீனா. ஆனால், வெளி உலகுக்கு தாங்கள் இலவசமாக அளித்து உதவி செய்வது போல நாடகம் போட்டுள்ளது. இந்த ரகசியம் இப்போது அம்பலம் ஆகி உள்ளது. சீனாவில் பரவிய வைரஸ் 2019 இறுதியில் சீனாவில் கொரோனா வைரஸ் பரவியது. ஆனால், அந்த தகவலை நீண்ட நாட்கள் மூடி மறைத்தது சீனா, அதற்குள் அந்த வைரஸ் சீனாவின் வுஹான் மாகாணத்தில் வெகுவாக பரவியது. அங்கிருந்து உலகம் முழுவதும் பரவத் துவங்கியது. உலக நாடுகள் இரக்கம் இந்த தகவல் வெளியான சில நாட்களில் சீனாவில்…
Read More
பி.எஃப்-இல் பிறந்த தேதியை மாற்ற ஆதார் போதும்!

பி.எஃப்-இல் பிறந்த தேதியை மாற்ற ஆதார் போதும்!

பி.எப் உறுப்பினர்களின் பிறந்த தேதி ஆவணங்களில் தவறாக இருந்தால்,அதை சரிசெய்ய, ஆதார் அட்டை போதுமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது. திருத்தப்பட்ட வழிகாட்டிக் குறிப்புகளை கள அலுவலகங்களுக்கு பிஎப் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில், பிஎப் ஆவணத்தில் பிறந்த தேதியை மாற்றம் செய்வதற்கு செல்லத் தகுந்த ஆவணமாக ஆதார் ஏற்றுக் கொள்ளப்படும் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆதார் மற்றும் பிஎப் ஆவணங்களில்உள்ள பிறந்த தேதிகளுக்கு இடையில் உள்ள வித்தியாசம் 3 ஆண்டுக்கும் குறைவாக இருக்க வேண்டும் என்றும், திருத்தம் செய்ய பிஎப் சந்தாதாரர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அப்படி விண்ணப்பிக்கப்பட்டால் உடனே பரிசீலித்து நிறைவேற்ற வேண்டும் என கள அலுவலகங்களுக்கு பிஎப் நிறுவனம் அறிவுறுத்தி உள்ளது. கொரோனா தொற்று பரவிவரும் நிலையில், பிஎப் நிதியில் இருந்து 75 சதவீத தொகையை சந்தாதாரர்கள் எடுத்துக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த தருணத்தில், பிஎப் சந்தாதாரர்கள் விண்ணப்பிக்க வசதியாக இணையத்தில் புதிய வழிகாட்டி குறிப்பு இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
Read More