11
Apr
கரோனா வைரஸ் : அரச சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் தற்போதைய ஊரடங்கு நடவடிக்கையால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. இதிலிருந்து நிறுவனங்கள் மீள்வதற்கு மூன்று ஆண்டுகள் வரை ஆகும் என்று சிப்காட், இருங்காட்டுக் கோட்டை உற்பத்தியாளர் சங்கத்தின் செயலாளர் கே.பாலசுப்ரமணியன் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் கூறியதாவது: ''எதிர்பாராத வகையில் இந்த ஊரடங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுவிட்டது. இதனால் மார்ச் மாதத்தில் 50 சதவீத அளவுக்குக் கூட வர்த்தகம் நடைபெறவில்லை. இதேபோல ஏப்ரல் 14 வரை கதவடைப்பு நீடித்துள்ளதால் ஏப்ரல் மாத விற்பனை, விநியோகம் எதுவும் நடைபெறாது.விவசாயத்துக்கு அடுத்தபடியாக அதிக எண்ணிக்கையில் வேலை வாய்ப்பை அளிப்பது சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் தான். இத்தொழிலில் தமிழகம் தவிர பிற மாநிலங்களிலிருந்து பணியில் ஈடுபட்டிருப்போர் அதிகம். குறிப்பாக சென்னையைச் சேர்ந்தவர்கள் 25 சதவீதம் எனில் பிற மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் 25 சதவீதம், அதேசமயம் பிற மாநிலங்களிலிருந்து புலம் பெயர்ந்தவர்கள் 50…
