ஆரோக்யம்

நீரிழிவு நோயாளிகளை கொரோனா வைரஸ் அதிகம் தாக்குவது ஏன்?

நீரிழிவு நோயாளிகளை கொரோனா வைரஸ் அதிகம் தாக்குவது ஏன்?

மனிதன் தோன்றிய காலத்தில் இருந்து அவன் சந்தித்துவரும் முக்கியமான சவால்களில் ஒன்று வைரஸ்கள் மூலம் பரவும் உயிர்கொல்லி நோய்கள். தற்போது மக்களை மிரட்டும் கொரோனா வைரஸ் நம்மைத் தாக்கிவிடாமல் தடுக்க ஒரு நாளில் பலமுறை கை கழுவுவதுதான் மிகச்சிறந்த வழி என்கிறது மருத்துவ உலகம்.இருப்பினும் நீரிழிவு நோய் பாதிப்பு கொண்டவர்கள், ரத்தக்கொதிப்பு, இதய நோய்கள், நுரையீரல் சார்ந்த நோய்கள் கொண்டவர்கள் மற்றும் நாள்பட்ட நோய்கள் உள்ள முதியவர்கள் போன்றவர்களை இந்த வைரஸ் அதிகம் தாக்கும் ஆபத்துஉள்ளது என்கிறார்கள் மருத்துவர்கள். இவர்களில் டைப் 1 மற்றும் டைப் 2 நீரிழிவு நோய் உள்ள நோயாளிகளை கொரோனா வைரஸ் தாக்கும் வாய்ப்பு மிகவும் அதிகம் என்று கூறப்பட்டு வந்தது. ஆனால் அதற்கு என்ன காரணம் என்பது குறித்த தெளிவான புரிதல் இதுவரை இல்லாமல் இருந்தது. கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு பாதிக்கப்பட்டு இறந்துபோன மற்றும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகள் மீதான ஒரு சமீபத்திய ஒரு…
Read More
கொரோனா வைரசால் பாதிக்கப்படுபவர்களின் நுரையீரலுக்கு என்ன ஆகிறது…?

கொரோனா வைரசால் பாதிக்கப்படுபவர்களின் நுரையீரலுக்கு என்ன ஆகிறது…?

மனிதன் உயிர் வாழ்வதற்கு காற்று எவ்வளவு அவசியமோ, அவ்வளவு அவசியமானது காற்றை பிரித்து உடல் இயக்க செயலுக்கு முக்கிய பங்கு வகிக்கும் நுரையீரல். நாம் சுவாசிக்கும் காற்றில் இருக்கும் ஆக்சிஜன், கார்பன் டை ஆக்சைடு சுவாசக் குழாயின் வழியே நுரையீரலுக்குள் செல்கிறது. அங்கு காற்றிலிருந்து ஆக்சிஜனை மட்டும் பிரித்து எடுத்து, ரத்த அணுக்களுடன் சேர்த்து நல்ல ரத்தமாக மாற்றும் முக்கியமான பணியை நுரையீரல் செய்கிறது.இதயத்திலிருந்து தொடங்கி உடல் முழுவதுக்கும் பயணம் செய்துவிட்டு வரும் கெட்ட ரத்தத்தை ஆஜ்சிஜன் துணை கொண்டு சுத்திகரித்து நல்ல ரத்தமாக மாற்றி மீண்டும் இதயம் வழியாக உடல் முழுவதற்கும் அனுப்பும் முக்கியமான பணியை மேற்கொள்கிறது. இப்போதே உடல் உறுப்புகளில் நுரையீரல் எவ்வளவு முக்கியமானது என்பதை நீங்கள் உணர்ந்து கொள்ள முடியும். இத்தகைய பணியை செய்யும் நுரையீரலைதான் கொரோனா வைரஸ் தன்னுடைய இலக்காக கொண்டிருக்கிறது. மூக்கு, வாய் வழியாக மனித உடலுக்குள் நுழையும் கொரோனா வைரஸ் செல்கள் வழியாக…
Read More
வியக்க வைக்கும் ஓமம்!

வியக்க வைக்கும் ஓமம்!

நம் வாழ்வியல் முறையை சற்று திரும்பிப் பார்த்தால் ஓமம் பல வழியிலும் நம்முடன் இணைந்திருப்பது தெரியும். அதற்காக பண்டைய காலத்துக்குப் போய் ஆராய்ச்சி செய்ய வேண்டியதில்லை. சராசரியாக 20 ஆண்டுகளுக்கு முன்னால் இருந்தே சில சம்பவங்களை நினைவு கூறலாம். அப்போது சிறு நகரங்களிலும் ஏன் கிராமங்களில் கூட சைக்கிளில் ஒரு பையை வைத்துக் கொண்டு அதில் கருப்பு நிற கண்ணாடி பாட்டில்களில் தண்ணீரை வைத்துக் கொண்டு வீதிவீதியாக விற்பதை நாம் பார்த்திருக்க முடியும். வீட்டில் இருப்பவர்கள் உடனடியாக தங்கள் வீட்டில் இருக்கிற ஒரு பாத்திரத்தை எடுத்துக்கொண்டு வந்து அவரிடம் ஓமக் குடிநீரை வாங்கி வைத்துக்கொள்வார்கள். குழந்தைகளுக்கு செரியாமை, பேதி ஏற்பட்டால் உடனடியாக பெற்றோர்கள் செய்வது இட்லி வேக வைக்கும்போது ஓமத்தை பொடி செய்து அதனை இந்த மாவின் மேல் தூவி வேக வைத்து அதனுடன் சிறிது நெய் சேர்த்துக் கொடுப்பார்கள். குழந்தைகளுக்கு செரிமானம் குறைவினால் ஏற்படுகின்ற பேதியை இது உடனடியாக கட்டுப்படுத்தும்.…
Read More
நார்த்த‌ங்காயில் உள்ள மருத்துவ நன்மைகள் !

நார்த்த‌ங்காயில் உள்ள மருத்துவ நன்மைகள் !

நார்த்தம்பழம் உடல்சூடு தணிக்கும். நார்த்தம் பழம் எலுமிச்சை வகையைச் சார்ந்தது. நார்த்தம் பழத்தில் நன்கு கனிந்த பழமே சாப்பிட உகந்தது. இந்தப் பழம் எல்லாக் காலங்களிலும் கிடைக்கும். நன்கு பழத்த பழம் மஞ்சள், பச்சை கலந்து காணப்படும். பழத்தின் தோல்பகுதி கனமானதாக இருக்கும். இவற்றில் நீர் நிரம்பியிருக்கும். நார‌த்த‌ங்கனிகளில் அமினோ அமிலங்கள், வைட்டமின்கள், கொழுப்பு அமிலங்கள் உள்ளன. அஸ்கார்பிக் அமிலம், அலனைன், நியசின், வைட்டமின் பி, அஸ்பார்டிக் அமிலம், இனிசைன், குளுடாமிக் அமிலம், பெர்கமோட்டின், நாரிங்கின், சிட்ரல்,லிமோனின், நார்டென்டாடின், வெலென்சிக் அமிலம் மலர்கள் தசை இறுக்கி, செயல்ஊக்கி, வேர் வாந்திக்கும் வயிற்றுப் புழுக்களுக்கும் எதிரானது. மலச்சிக்கல் மற்றும் சிறுநீரகக்கல் நோய்களுக்கு மருந்தாகிறது. நார‌த்த‌ங்காயை அ‌ல்லது பழ‌த்தை எ‌ந்த வடிவ‌த்‌திலாவது உண‌வி‌ல் சே‌ர்‌த்து வர ர‌த்த‌ம் சு‌த்தமடையு‌ம். வாத‌ம், கு‌ன்ம‌ம் (வ‌யி‌ற்று‌ப் பு‌ண்), வ‌யி‌ற்று‌ப் புழு இவை ‌நீ‌ங்கு‌ம். ப‌சியை அ‌திக‌ரி‌க்கு‌ம்.கனிந்த கனிகள் வலுவேற்றி, ஊக்குவி, இதன் சாறு வாந்தி நிறுத்தும். பசி…
Read More
முளைக்கட்டிய தானியங்களை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்…!!

முளைக்கட்டிய தானியங்களை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்…!!

முளைக்கட்டிய தானியங்கள் நல்ல ஆரோக்கிய பலன்களைத் தருகின்றன எனவும் மனித உடலுக்கு தேவையான ஊட்டச் சத்துக்களையும் ஆண்டி ஆக்ஸிடெண்டுகளையும் கொண்டுள்ளது. தானியங்கள் பயறு வகைகளை நாம் பெரும்பாலும் சமைத்தே சாப்பிடுகிறோம். அப்படிச் சாப்பிடாமல் முளைகட்டியச் சாப்பிட்டால் நிறைய சத்துகளைப் பெறலாம். முளைகட்டிய வெந்தயத்தில் வைட்டமின் சி, புரோட்டீன், நியாசின், பொட்டாசியம், இரும்புச்சத்து போன்றவை இருக்கின்றன. வெந்தயத்தில் உள்ள மூலக்கூறுகளால் உடலில் இன்சுலின் சுரப்பு அதிகரிக்கும். அதனால் இது, சர்க்கரை நோயாளிகளுக்கு வரப்பிரசாதம், கொலஸ்ட்ரால் சேராமல் பார்த்துகொள்ளும். தொப்பை, உடல் எடை குறைக்க விரும்புபவர்கள் முளைகட்டிய வெந்தயத்தைச் சாப்பிடுவது நல்லது. கொள்ளுப்பயறை முளைகட்டிச் சாப்பிட்டால் வைட்டமின் ஏ, பி, சி போன்ற சத்துகள் கிடைக்கும். இது கொலஸ்ட்ரால், தொப்பை, உடல் பருமன் போன்றவற்றைச் சரிசெய்ய உதவும். நரம்பு, எலும்புக்கு ஊட்டமளிக்கும். மூட்டுவலியால் அவதிப்படுவர்கள் முளைகட்டிய கொள்ளுப்பயறைச் சாப்பிடுவது நல்லது. முளைகட்டிய பச்சைப் பயறைச் சாப்பிட்டால், அதிகப் புரதம், கால்சியம் சத்து கிடைக்கும். இது…
Read More
கரோனா மருத்துவத்தில் பாரம்பரிய அறிவின் அவசியம்! Dr SIVARAMAN.

கரோனா மருத்துவத்தில் பாரம்பரிய அறிவின் அவசியம்! Dr SIVARAMAN.

இக்கட்டான காலகட்டத்தில் நுழைந்திருக்கிறோம். இன்னும் கரோனாவின் சமூகப் பரவல் மூன்றாம் கட்டத்துக்கு நுழையவில்லை என்று அரசும் அதிகாரமும் சொல்கின்றன. ஆய்வாளர்களோ ஏற்கெனவே “சமூகப் பரவல் தொடங்கியாயிற்று” என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்கின்றனர். இந்திய மக்கள்தொகையில் சுமார் 50%-55% பேர் இந்தத் தொற்றுக்கு உள்ளாவார்கள் என்பது மருத்துவப் புள்ளியியலாளர்கள் மற்றும் நோய்ப் பரவலைக் கணிக்கும் மருத்துவர்களின் அனுமானம். மிகக் குறைந்த அளவு நபருக்கே மருத்துவ உதவி தேவைப்படும் என்றாலும், நம் நாட்டு மக்கள்தொகையில் அந்தக் குறைந்த சதவீதமும்கூட திக்கமுக்காட வைக்கும் எண்ணாக இருக்கும் என்பதுதான் நம்மை உறைய வைக்கும் செய்தியாக இருக்கிறது. நம் போன்ற மருத்துவ வசதி குறைந்த நாடுகளுக்குப் பிற நாடுகளைவிடச் சிக்கல்கள் அதிகம். பொதுவாக மருத்துவத் துறையில் தவிர்க்கக்கூடிய மரணங்கள், தவிர்க்க இயலாத மரணங்கள் என்று மரணத்தை இரு வகைகளாகப் பிரிப்பதுண்டு. தவிர்க்கக்கூடிய மரணங்கள் என்பது வென்டிலேட்டர், மருந்துகள், மருத்துவர்கள் போன்ற உரிய மருத்துவக் கட்டமைப்பு இல்லாமையால் ஏற்படுவது; தவிர்க்க…
Read More
செல்களுக்குள் நடக்கும் உயிர் போராட்டம்!  உடலின் எதிர்ப்பு சக்தியை ஏமாற்றி வெல்லும் கொரோனா வைரஸ்  ?

செல்களுக்குள் நடக்கும் உயிர் போராட்டம்! உடலின் எதிர்ப்பு சக்தியை ஏமாற்றி வெல்லும் கொரோனா வைரஸ் ?

கடந்த டிசம்பர் 2019ல் தனது நாட்டின் ஊஹான் நகரில் கொரோனா வைரஸ் என்ற புதிய வகை வைரஸ் தாக்கி வருவதாக சீனா வெளியுலகுக்கு முதன் முதலாக தெரிவித்தது. இந்த வைரஸ் Severe acute respiratory syndrome (SARS-2) என்ற வகையை சேர்ந்தது. இந்த வைரஸ் உருவாக்கும் நோய்க்குப் பெயர் தான் கோவிட் -19 வைரஸ் என்றால்?... முழுமையான உயிர் பெறாத ஒரு அரைகுறை உயிரி தான் வைரஸ். ஒரு ஆர்என்ஏ(நமது செல்களில் ஜீன் எனப்படும் டிஎன்ஏ இருப்பது மாதிரி வைரஸ்களில் இருப்பது டிஎன்ஏவின் அரைகுறை வடிவமான RNA) அதைச் சுற்றி ஒரு புரதம் (Protein) மற்றும் கொழுப்பு சேர்ந்த ஒரு உறை (ஆல்கஹால் கொண்ட சானிடைசர்கள், சோப்பு நுரை பட்டால் இந்த உறை கறைந்து வைரஸ் அவுட்). அந்த உறையின் மீது ஆங்காங்கே முட்கள். இது தான் கொரோனா வைரஸ். இந்த முட்களின் வேலை எளிதாக எதிலும் ஒட்டிக் கொள்ளவதே. இந்த…
Read More
கொரோனா வைரஸ் விவரங்கள் !வாட்ஸ்அப் அக்கவுண்ட் துவங்கிய மத்திய அரசு !!

கொரோனா வைரஸ் விவரங்கள் !வாட்ஸ்அப் அக்கவுண்ட் துவங்கிய மத்திய அரசு !!

இந்திய குடிமக்களுக்கு கொரோனா வைரஸ் பற்றிய விவரங்களை வழங்க மத்திய அரசு வாட்ஸ்அப் அக்கவுண்ட் ஒன்றை துவங்கி இருக்கிறது.கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றி மக்களிடையே நிலவும் அச்சத்தை போக்கும் நோக்கில் மத்திய அரசு வாட்ஸ்அப் செயலியில் அக்கவுண்ட் ஒன்றை துவங்கியிருக்கிறது. சாட்பாட் மூலம் இயங்கும் இந்த அக்கவுண்ட்டிற்கு MyGov Corona Helpdesk என பெயரிடப்பட்டுள்ளது. அனைத்து வாட்ஸ்அப் பயனர்களுக்கும் கிடைக்கும் இந்த சேவையை பயன்படுத்த பொதுமக்கள் - 9013151515 என்ற எண்ணை தங்களது மொபைலில் சேமித்துக் கொண்டு MyGov Corona Helpdesk-க்கு குறுந்தகவல் அனுப்ப வேண்டும். புதிய சாட்பாட் சேவையானது கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றி மக்களிடையே பரவும் போலி தகவல்களை குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இது கொரோனா வைரஸ் பற்றிய விழிப்புணர்வு தகவல்களை மக்களுக்கு வழங்கும். இந்தியாவில் இதுவரை சுமார் 251 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. உலகளவில் கொரோனா வைரஸ் பாதிப்பு மூலம் உயிரிழந்தோர்…
Read More
கொரோனா வைரஸ்: பிரதமர் மோடி வெளியிட்ட விழிப்புணர்வு வீடியோ..!

கொரோனா வைரஸ்: பிரதமர் மோடி வெளியிட்ட விழிப்புணர்வு வீடியோ..!

மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு, கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு வீடியோவை பிரதமர் மோடி வெளியிட்டுள்ளார்!! உலகெங்கிலும் COVID-19 வைரஸ் தொற்றின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதால், பிரதமர் நரேந்திர மோடியைப் போலவே ஏராளமானோர் சமூக ஊடகங்களில் தகவல் தரும் வீடியோக்களைப் பகிர்கின்றனர். கொரோனா வைரஸ் நாவலை ஒருவர் எவ்வளவு எளிதில் பரப்ப முடியும் என்பது குறித்த விழிப்புணர்வு வீடியோவைப் பிரதமர் மோடி சனிக்கிழமை தனது அதிகார்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிந்துள்ளார். நாவல் கொரோனா வைரஸ் பற்றி மக்களுக்கு எளிதில் கற்பிக்கக்கூடிய இதுபோன்ற வீடியோக்களை மேலும் பகிருமாறு அவர் மக்களை கேட்டுக்கொண்டார். "நிமிட முன்னெச்சரிக்கைகள் நினைவுச்சின்ன தாக்கங்களை ஏற்படுத்தும் மற்றும் பல உயிர்களைக் காப்பாற்றும்." என்ற சுவாரஸ்யமான வீடியோவை சமூக ஊடகங்களில் பார்த்தேன். COVID-19 உடன் போரிடுவது குறித்து மக்களைப் பயிற்றுவிக்கும் விழிப்புணர்வைப் பரப்பக்கூடிய இதுபோன்ற வீடியோக்கள் உங்களிடம் இருந்தால், தயவுசெய்து #IndiaFightsCorona-யை பயன்படுத்தி அவ்வாறு செய்யுங்கள்" என அவர் குறிப்பிட்டுள்ளார்.ஒரு மனிதன்…
Read More