சினிமா

A LEGEND __ விமர்சனம்.!

A LEGEND __ விமர்சனம்.!

உலகெங்கும் பெரும் ரசிகர் பட்டாளத்தை பெற்றிருப்பவர் ஜாக்கி சான். இந்தியாவும் இதற்கு விதிவிலக்கல்ல. அவரது சமீபத்திய 'எ லெஜன்ட்' ('தி மித் 2') திரைப்படத்தை இந்தியாவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் விஸ்வாஸ் ஃபிலிம்ஸ் விரைவில் வெளியிடுகிறது. 90ஸ் கிட்ஸ்களின் நாயகனாக திகழ்பவர் நடிகர் ஜாக்கி சான். இவர் 'தி லெஜெண்ட் ஆப் டிரங்கன் மாஸ்டர், போலீஸ் ஸ்டோரி' உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்து பிரபலமானவர். அவரின் அசாத்திய சண்டை காட்சிகளுக்கென்றே தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. ஸ்டான்லி டாங் இயக்கியிருக்கும் இத்திரைப்படம், 'தி மித்' சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகம் ஆகும். பரபர சண்டைகள், விறு விறு சாகசங்கள், உள்ளத்தை தொடும் உணர்வுகள், கற்பனைக்கு எட்டாத காட்சிகள் என கண்களுக்கு விருந்து படைக்கும் வகையில் இப்படம் உருவாகியுள்ளது. ஜாக்கி சான், லே சாங், நா ஜா, ஆரிஃப் லீ, லி சென், பெங் சியோவ்ரான் மற்றும்…
Read More
நடிகர் உதயா: அஜ்மல், யோகி பாபு உடன் இணைந்து நடிக்கும் 3 நாயகர்களின் பிரம்மாண்ட கேங்க்ஸ்டர் திரைப்படம் ‘அக்யூஸ்ட்’!

நடிகர் உதயா: அஜ்மல், யோகி பாபு உடன் இணைந்து நடிக்கும் 3 நாயகர்களின் பிரம்மாண்ட கேங்க்ஸ்டர் திரைப்படம் ‘அக்யூஸ்ட்’!

திரையுலகில் 25வது ஆண்டில் நடிகர் உதயா: அஜ்மல், யோகி பாபு உடன் இணைந்து நடிக்கும் 3 நாயகர்களின் பிரம்மாண்ட கேங்க்ஸ்டர் திரைப்படம் 'அக்யூஸ்ட்'* 'திருநெல்வேலி' திரைப்படம் மூலம் 2000ம் ஆண்டில் திரையுலகில் அடியெடுத்து வைத்த நடிகர் உதயா, கலைப்பயணத்தில் தனது வெள்ளி விழா வருடத்தை குறிக்கும் விதமாக 'அக்யூஸ்ட்' என்ற பிரம்மாண்ட திரைப்படத்தில் அஜ்மல் மற்றும் யோகி பாபுவுடன் இணைந்து நடிக்கிறார். ஜேஷன் ஸ்டுடியோஸ், ஸ்ரீ தயாகாரன் சினி புரொடக்ஷன் மற்றும் MIY ஸ்டுடியோஸ் பேனர்களில் ஏ.எல். உதயா, தயா என். பன்னீர்செல்வம், எம். தங்கவேல் ஆகியோர் தயாரிக்கும் இப்படத்தை கன்னட திரையுலகில் வெற்றி படங்களை இயக்கிய பிரபு ஶ்ரீநிவாஸ் இயக்குகிறார். பிரபல கன்னட நடிகை ஜான்விகா நாயகியாக நடிக்கிறார். குற்றம் சாட்டப்பட்ட அனைவருமே குற்றவாளிகள் அல்ல, சிஸ்டத்தில் ஏற்படும் பிழைகளால் நல்லவர்கள் கூட எப்படி பாதிப்படைகிறார்கள், தாதாவக உருவாகிறார்கள் என்பதை விறுவிறுப்பாக சொல்லும் 'அக்யூஸ்ட்' திரைப்படத்தில் இதுவரை ஏற்றிராத முற்றிலும்…
Read More
’பயாஸ்கோப்’– விமர்சனம்.!

’பயாஸ்கோப்’– விமர்சனம்.!

                          சங்ககிரி ராஜ்குமார் இயக்கத்தில் சங்ககிரி ராஜ்குமார், வெள்ளையம்மாள், முத்தாயி, முத்துசாமி, குப்புசாமி, எஸ் எம் மாணிக்கம், இந்திராணி, எஸ் எம் செந்தில்குமார், சிவாரத்தினம், பெரியசாமி, மோகனப் பிரியா உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தான் இந்த பயாஸ்கோப். படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார் முரளி கணேஷ், இசையமைத்திருக்கிறார் தாஜ்நூர். சந்திர சூரியன், பிரபு , பெரியசாமி மூவரும் இணைந்து இப்படத்தை தயாரித்திருக்கிறார்கள். படத்தின் ட்ரெய்லர் ஏற்கனவே வெளியாகி அனைவரிடத்திலும் நல்லதொரு எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில், படம் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா இல்லையா என்பதை பார்க்கலாம். ஒரு கிராமத்தில் தனது சித்தப்பா, தாத்தா, பாட்டி உட்பட உறவுகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார் நாயகன் ராஜ்குமார். சிறு வயதிலிருந்தே தனதுசித்தப்பா மீது அளவு கடந்த அன்பை வைத்திருக்கிறார் ராஜ்குமார். சினிமா எடுக்க வேண்டும் என்ற தனது…
Read More
கருணாஸ்-நிமிஷா சஜயன் நடிக்கும் ’என்ன விலை’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது!

கருணாஸ்-நிமிஷா சஜயன் நடிக்கும் ’என்ன விலை’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது!

இயக்குநர் சஜீவ் பழூர் இயக்கத்தில் கருணாஸ் மற்றும் நிமிஷா சஜயன் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள சோஷியல்- பொலிட்டிகல்- திரில்லர் படமான ‘என்ன விலை’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. ராமேஸ்வரம், சென்னை, பாண்டிச்சேரி மற்றும் கொச்சி உள்ளிட்ட 56 இடங்களில் மூன்று ஷெட்யூல்களில் படமாக்கப்பட்டுள்ளது. கலாமயா பிலிம்ஸ் தயாரிப்பாளர் ஜிதேஷ் வி கூறும்போது, ”திறமையான இந்த அணியுடன் இணைந்து பணிபுரிந்ததில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். தான் எடுத்து நடித்திருக்கும் கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்த்திருக்கிறார் நடிகர் கருணாஸ். அவரது அர்ப்பணிப்பு பரவலான பாராட்டுகளையும், ஏராளமான விருதுகளையும் பெற்றுத் தரும் என்பதில் உறுதியாக உள்ளேன். நடிகை நிமிஷா சஜயனும் இந்த கதாபாத்திரத்திற்காக கடுமையான அர்ப்பணிப்புடன் கூடிய நடிப்பைக் கொடுத்திருக்கிறார். இயக்குநர் சஜீவ் பழூருக்கு தமிழ் திரைப்படங்கள் மீது பெரும் காதல் உள்ளது. இந்தப் படத்தில் நிச்சயம் பார்வையாளர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்வார். ஒளிப்பதிவாளர் ஆல்பி ஆண்டனி சிறப்பான ஒளிப்பதிவைக் கொடுத்துள்ளார். ஒட்டுமொத்த தொழில்நுட்பக்குழுவினரும் நடிகர்களும்…
Read More
ஹாரிஸ் ஜெயராஜ் மகன் சாமுவேல் நிக்கோலஸ் ஆல்பம் மூலம் அசத்தலான அறிமுகம்!

ஹாரிஸ் ஜெயராஜ் மகன் சாமுவேல் நிக்கோலஸ் ஆல்பம் மூலம் அசத்தலான அறிமுகம்!

இளமைத் துள்ளும் 'ஐயையோ' பாடலை இசையமைத்து, பாடி, நாயகனாக நடித்துள்ளார் சாமுவேல் நிக்கோலஸ் பிரபல இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜை பின்பற்றி அவரது மகன் சாமுவேல் நிக்கோலசும் இசை உலகத்தில் அடியெடுத்து வைத்துள்ளார். சாமுவேல் நிக்கோலஸ் இசையமைத்து, பாடி, நாயகனாக நடித்துள்ள இளமைத் துள்ளும் 'ஐயையோ' பாடலை முன்னணி இசை நிறுவனமான திங்க் மியூசிக் வெளியிட்டுள்ளது. இப்பாடல் பல்வேறு தரப்பினரின் பாராட்டுகளை பெற்று வருகிறது. இக்கால இளைஞர்களின் கொண்டாட்டத்தை உற்சாகம் மற்றும் குதூகலம் குன்றாமல் பதிவு செய்யும் பாடலான 'ஐயையோ' மாறுபட்ட குணாம்சங்கள் கொண்ட பெண்களை பற்றியதாகும். ஒரு புதுமுகம் போன்று இல்லாமல் இசையிலும், பாடுவதிலும், நடிப்பிலும் தனது முத்திரையை பதித்துள்ளார் சாமுவேல் நிக்கோலஸ். பாடலைப் பற்றி பேசிய சாமுவேல் நிக்கோலஸ், "ஏழாம் அறிவு படத்தில் கோரஸ் பாடகராக இசைப் பயணத்தை தொடங்கிய நான், எனது தந்தையாரின் இசை நிகழ்ச்சிகளில் கித்தார் கலைஞராகவும் பாடகராகவும் பங்காற்றி இருக்கிறேன். 'தேவ்' திரைப்படத்தின் பின்னணி இசையில்…
Read More
‘35 சின்ன விஷயம் இல்ல’ — விமர்சனம்!

‘35 சின்ன விஷயம் இல்ல’ — விமர்சனம்!

விஷ்வதேவ் - நிவேதா தாமஸ் தம்பதிக்கு இரண்டு ஆண் குழந்தைகள். அனைத்து பெற்றோர்கள் போல் இவர்களும் தங்களது இரண்டு மகன்களையும் நன்றாக படிக்க வைக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். இவர்களது மூத்த மகனான சிறுவன் அருண்தேவுக்கு, ”மதிப்பற்ற பூஜ்ஜியம் அருகே 1 சேர்த்தால் வரும் 10 எப்படி 9-ஐ விட அதிகம் மதிப்பு பெற முடியும்?” என்ற கேள்வி எழுகிறது. கணிதத்தின் மீது அவருக்கு ஏற்பட்ட இந்த சந்தேகத்தை எந்த ஆசிரியராலும் தீர்த்து வைக்க முடியாததால், நாம் படிக்கும் கணிதமே தவறு என்று சொல்லும் சிறுவன், தனக்கு புரியாத கணிதத்தை படிக்க மாட்டேன் என்று கூறி, அனைத்து வகுப்புகளிலும் கணிதத்தில் மட்டும் பூஜ்ஜியம் மதிப்பெண் பெறுகிறார். இதற்கிடையே புதிதாக வரும் ஆசிரியர் பிரியதர்ஷி புலிகொண்டாவும் மாணவன் அருண் தேவின் சந்தேகத்தை தீர்த்து வைக்காமல், அவரது பூஜ்ஜியம் மதிப்பெண்ணை வைத்து அவரை நிராகரிப்பதோடு, அவரது பள்ளி படிப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முயற்சிகளை மேற்கொள்கிறார்.மகனின்…
Read More
ஷாருக்கான், மகேஷ் பாபு மற்றும் அர்ஜுன் தாஸ் குரல்களில் ‘முஃபாசா: தி லயன் கிங்’ திரைப்படம் ரசிகர்களின் இதயங்களை திருடி பாக்ஸ் ஆபிஸில் ஆட்சி செய்கிறது!

ஷாருக்கான், மகேஷ் பாபு மற்றும் அர்ஜுன் தாஸ் குரல்களில் ‘முஃபாசா: தி லயன் கிங்’ திரைப்படம் ரசிகர்களின் இதயங்களை திருடி பாக்ஸ் ஆபிஸில் ஆட்சி செய்கிறது!

கிறிஸ்துமஸ் 2024 பண்டிகைக்கு குடும்பங்களை மகிழ்விக்கும் விதமாக முஃபாஸாவுக்காக ஷாருக்கான், மகேஷ் பாபு மற்றும் அர்ஜுன் தாஸ் குரல்களில் 'முஃபாசா: தி லயன் கிங்' திரைப்படம் ரசிகர்களின் இதயங்களை திருடி பாக்ஸ் ஆபிஸில் ஆட்சி செய்கிறது! தமிழில் 'முஃபாஸா: தி லயன் கிங்' படத்திற்காக அர்ஜுன் தாஸின் தனித்துவமான குரல், பார்வையாளர்களிடமிருந்து பெரும் பாராட்டைப் பெற்று வருகிறது. அவரது குரல் முஃபாசா கதாபாத்திரத்தை மறக்கமுடியாததாகவும் பார்வையாளர்களுக்கு இன்னும் நெருக்கமானதாகவும் மாற்றியுள்ளது. ஷாருக்கான் மற்றும் மகேஷ் பாபு முறையே இந்தி மற்றும் தெலுங்கு பதிப்புகளில் தங்கள் குரல் மூலம் பலம் சேர்த்தாலும் அர்ஜுன் தாஸின் குரல் தனித்து தெரிவதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர். அர்ஜுன் தாஸின் ஆழமான மற்றும் கட்டளையிடும் குரல் நடிப்பு முஃபாசா கதாபாத்திரத்திற்கு முற்றிலும் பொருத்தமானதாகவும் அதனை வேறொரு தளத்திற்கும் கொண்டு சென்றுள்ளது. கிறிஸ்மஸ் நெருங்கும் இந்த வேளையில், 'முஃபாசா: தி லயன் கிங்' பிவிஆர் ஐநாக்ஸ், சினிபாலிஸ் போன்ற…
Read More
சங்ககிரி ராஜ்குமார் இயக்கத்தில் சத்யராஜ், சேரன் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் ‘பயாஸ்கோப்’ !

சங்ககிரி ராஜ்குமார் இயக்கத்தில் சத்யராஜ், சேரன் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் ‘பயாஸ்கோப்’ !

சினிமா குறித்து எந்த அறிமுகமும் இல்லாத கிராமத்து மக்கள் எப்படி ஒரு திரைப்படத்தை உருவாக்கினார்கள் என்பதை கலகலப்பாக சொல்லும் உண்மைக் கதை ஜனவரி 3 அன்று 'பயாஸ்கோப்' வெளியாகிறது டீசரை ஆர்யா, சசிகுமார் வெளியிட்டனர்.பெரிதும் பாராட்டப்பட்ட 'வெங்காயம்' திரைப்படத்தின் மூலம் கவனத்தை ஈர்த்த இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் தனது அடுத்த படைப்பாக உருவாக்கியுள்ள படம் 'பயாஸ்கோப்'. 25 டாட்ஸ் கிரியேஷன்ஸ் சார்பில் சந்திர சூரியன், பிரபு சுப்பிரமணி, பெரியசாமி தயாரித்துள்ள இப்படம் ஜனவரி 3 அன்று வெளியாகிறது. டீசரை நடிகர்கள் ஆர்யா மற்றும் சசிகுமார் வெளியிட்டனர். சினிமா குறித்து எதுவும் தெரியாத கிராமத்து மக்கள் திரைப்படம் எடுக்கும் கலகலப்பான உண்மைக் கதையை திரையில் சொல்லும் 'பயாஸ்கோப்' திரைப்படத்தில் சத்யராஜ் மற்றும் சேரன் சிறப்பு தோற்றத்தில் நடிக்க, சங்ககிரி ராஜ்குமார், சங்ககிரி மாணிக்கம் முக்கிய பாத்திரங்களில் தோன்றுகின்றனர். மேலும், இந்த உண்மைக் கதையில் அசலான கதை மாந்தர்களே அவரவர் வேடங்களை ஏற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.…
Read More
‘கூரன் ‘திரைப்படத்திற்கு அரசு வரிவிலக்கு வழங்க வேண்டும்: மேனகா காந்தி வேண்டுகோள்!

‘கூரன் ‘திரைப்படத்திற்கு அரசு வரிவிலக்கு வழங்க வேண்டும்: மேனகா காந்தி வேண்டுகோள்!

மனிதர்களை விலங்குகள் அறியும்;விலங்குகளை மனிதர்கள் அறிய மாட்டார்கள்: 'கூரன் 'திரைப்பட விழாவில் மேனகா காந்தி பேச்சு! ஒரு நாயை மையமாக வைத்து உருவாகி இருக்கும் திரைப்படம் 'கூரன்'. இத் திரைப்படத்தில் எஸ்.ஏ. சந்திரசேகரன் ஒய். ஜி. மகேந்திரன்,சத்யன் ,பாலாஜி சக்திவேல், ஜார்ஜ் மரியான், இந்திரஜா ரோபோ சங்கர் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தை அறிமுக இயக்குநர் நிதின் வேமுபதி இயக்கியுள்ளார். மார்டின் தன்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். சித்தார்த் விபின் இசை அமைத்துள்ளார். பீ. லெனின் மேற்பார்வையில் மாருதி எடிட்டிங் செய்துள்ளார்.கனா புரொடக்சன்ஸ் சார்பில் விபி கம்பைன்ஸ் உடன் இணைந்து இயக்குநர் விக்கி தயாரித்துள்ளார். டிசம்பர் 27ஆம் தேதி வெளியாகிற இப்படத்தை ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது. 'கூரன்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் ஒரு நட்சத்திர ஓட்டலில் நடந்தது. ஒரு நாய்க்கான சட்ட உரிமைப் போராட்டமே படத்தின் கதை என்பதால் இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில்,சிறப்பு விருந்தினராக முன்னாள் மத்திய அமைச்சரும்,…
Read More
வெள்ளத்தால் பிரிந்து, பிரிந்த குடும்பங்கள், அந்நியர்களிடையே தொலைந்து போன ஹீரோ, வெளியாட்களுக்கு மத்தியில் காணப்படும் சகோதரர், டீன் ஏஜ் காதல், உடன்பிறந்தவர்களுக்கிடையிலான போட்டிகள் - முஃபாசா: தி லயன் கிங் இந்திய பார்வையாளர்களுக்கு சலீம்-ஜாவேத் திரைப்படமாக உணரப்படும். இதனுடன் தாராளமான செயல், பல சதி திருப்பங்கள் மற்றும் நிச்சயமாக, பாடல் மற்றும் நடனக் காட்சிகளைச் சேர்க்கவும், மேலும் இது பாலிவுட் தயாரிப்பின் சுவையைப் பெறுகிறது. இந்த திரைப்படம் காலனித்துவ எதிர்ப்புக்கு அடிகோலுவதாகவும் தெரிகிறது. வெள்ளை சிங்கங்கள் பழுப்பு சிங்கங்களின் பிரதேசத்தை ஆக்கிரமித்து ஆதிக்கம் செலுத்தும் சித்தரிப்பு ஐரோப்பியர்களால் ஆப்பிரிக்காவின் வரலாற்று காலனித்துவத்தை எதிரொலிக்கிறது. அடிப்படையான செய்தி தெளிவாக உள்ளது: பூர்வீக மக்களிடையே ஒற்றுமை வரலாற்றின் போக்கை மாற்றியிருக்கலாம். மேலும், இந்தத் திரைப்படம் ஸ்கேரின் பின்னணிக் கதையை ஆராய்கிறது, அவரது பெயர் மற்றும் உந்துதல்கள் பற்றிய நுண்ணறிவை வழங்குகிறது, பார்வையாளர்கள் அவரது அவலநிலைக்கு ஓரளவு அனுதாபம் காட்டுகிறார்கள். பார்வைக்கு படம் ஒரு வெற்றி.…
Read More