மைய்யல்– விமர்சனம்!

நீண்ட நாள்களுக்குப் பிறகு தமிழ்சினிமா உலகில் கிராமிய மணம் கமழும் வகையில் ஒரு காதல் கதை படமாக வந்துள்ளது.எழுத்தாளர் ஜெயமோகன் கதை, திரைக்கதை, வசனத்தில் ஏபிஜி ஏழுமலை இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் மையல்.ஊரில் உள்ள ஆடுகளை திருடுபவர் நம் நாயகன் சேது. ஒரு இரவில் ஆட்டை திருடி செல்லும் போது ஊர் மக்களில் சிலர் சேதுவை துரத்துகிறார்கள். உடனே சேது ஊரில் ஒதுக்கு புறமாக உள்ள ஒரு மந்திரவாதி வீட்டில் அடைக்கலம் புகுகிறார்.அங்கே மந்திரவாதி கிழவியின் பேத்தியான நம் நாயகி சம்ரிதா சேதுவுக்கு அடைக்கலம் தருகிறார். இந்த அடைக்கலம் அன்பாக மாறி காதலாக உருவெடுக்கிறது. தான் ஊருக்கு சென்று பணம் ஏற்பாடு செய்து விட்டு மீண்டும் வந்து கரம் பிடிப்பதாக சேது சம்ரிதாவுக்கு வாக்கு தருகிறார் .மைனா படத்தில் நடித்த சேது தான் இந்தப் படத்தின் கதாநாயகன். ஹீரோயினாக சம்ரிதி தாரா நடித்துள்ளார். இவர்களுடன் பிஎல்.தேனப்பன், சமீபத்தில் மறைந்த சூப்பர் குட் சுப்ரமணி, ரத்னகலா உள்பட பலர் நடித்துள்ளனர். கிராமிய கதையை அம்சமாக இயக்கியுள்ளார் ஏபிஜி ஏழுமலை. படத்திற்கு பால பழனியப்பன் ஒளிப்பதிவு செய்துள்ளார். அமர்கீத் இசை அமைத்துள்ளார். பாடல்கள் மனதுக்கு இதமாக இருக்கிறது.

‘மந்திரவாதி பெண்ணிற்கும், திருடனுக்கும் காதல்’ என்ற ஒன் லைன் கதை கேட்பதற்கு நன்றாக இருக்கிறது. ஆனால் கதையை நகர்த்தி செல்லும் திரைக்கதை very weak. படம் நகரும் விதமும், காட்சியமைப்பிலும் ஒரு யதார்த்தமோ, உண்மைதன்மையோ இல்லை.நாயகனும் நாயகியும் காதலிக்கும் காட்சிகள் மட்டும் ஒகே ரகம். “என்னை விட்டு போய்டமாட்டியே” என்று நாயகி சம்ரிதா தாரா கெஞ்சும் போது  காதலிக்காக உருகும் காட்சியில் ஹீரோ சேது நம் மனதை உருக்கி விடுகிறார்.

இன்ஸ்பெக்டராக நடித்தவர், மற்றும் மறைந்த சூப்பர் குட் சுப்பிரமணி என ஒரு சில கதாபத்திரங்கள் மட்டும் மனதில் நிற்கிறது.ஒளிப்பதிவு, எடிட்டிங் போன்ற அம்சங்களும் மிக சாதாரணமாக இருக்கின்றன. இருந்தாலும் அமரகீத்தின் பின்னணி இசை காதல் காட்சிகளில் நன்றாக இருக்கிறது.பாட்டி கூட ஊருக்கு ஒதுக்குப்புறமா ஒற்றைக் குடிசையில் கதாநாயகி சம்ரிதி இருக்கிறாள். அந்த இடம் அவ்ளோ அழகு. படத்தின் ஒரே மைனஸ் என்னன்னா எளிதில் அடுத்தடுத்த காட்சிகளை யூகிக்க முடிவதுதான். கிளைமாக்ஸைக் கூட இப்படித்தான் இருக்கும்னு சொல்லிடலாம். சாதாரணமாக இப்போதெல்லாம் ரௌடி, திருடன், கொலைகாரன் மேல தான் பெண்களுக்குக் காதல் வருகிறது. அதுதான் இங்கும் காட்டப்படுகிறது. அதனால லாஜிக்கை எல்லாம் ஓரமா வச்சிட்டு படம் பார்க்கலாம். லொகேஷன் அருமை. மலை அழகு கண்களைக் குளிர்விக்கிறது.மையல் என்பது காதல் சார்ந்த அழகிய உணர்வு கொண்ட படம். அதனால் குடும்பத்துடன் சென்று பார்க்கலாம்.

 

Related posts:

*வடிவேல் பைரோடெக்ஸ் அறிமுகப்படுத்தும் சீட்ஸ்டார் - மரங்களை நடும் உலகின் முதல் பட்டாசு!*

*நடிகர் சனந்த் நடிக்கும் 'ஹார்ட்டின் ' படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா*!

*முழு படப்பிடிப்பையும் நிறைவு செய்துள்ள ‘டிமாண்டி காலனி3’ திரைப்படம் கோடை காலத்தில் பிரம்மாண்டமாக வெளியாகிறது!*

ஏ ஸ்டுடியோஸ் எல்எல்பி, நீலாத்ரி புரொடக்ஷன்ஸ் மற்றும் ஹவ்விஷ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், இயக்குநர் ரமேஷ் வர்மா இயக்கத்தில் நடிகர் ராகவா லாரன்ஸின் 25ஆவது...

*சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸின் முதல் சுயாதீன ஆன்மீக இசைப் பாடல் 'வேலும் மயிலும்'!*

சென்னையில் நடிகர் மோகன்–ரசிகர்கள் சந்திப்பு!

மாஸ் நாயகன் என்டிஆரின் 'தேவரா' திரைப்படத்தில் இருந்து அனிருத் ரவிச்சந்தர் இசையில் முதல் சிங்கிள் 'ஃபியர் சாங்' (fear song) தற்போது வெளியாகியுள்ளது!

கண்ணதாசனின் ஆளுமை என் பாதையாக, வாலியின் இளமை எனக்கு தெம்பாக எனது கலைப்பயணம் தொடர்கிறது: கவிஞர் கருணாகரன் பெருமிதம்!