நீரிழிவு நோயாளிகளுக்கான புதிய ரக அரிசி !

நீரிழிவு நோயாளிகளுக்கான புதிய ரக அரிசி… அரிசி சாதம் அதிகம் எடுத்துக் கொள்வதால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரித்து அவதிப்படும் நீரிழிவு நோயாளிகளுக்கு இனிப்பான செய்தி ஒன்று உள்ளது.

கம்பு, கேழ்வரகு போன்ற சிறுவகை தானியங்களை விடவும் மாவுச் சத்து குறைவான தெலங்கானா சோனா என்ற அரிசி ரகத்தை ஐதராபாத் தெலங்கானா வேளாண் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் ஜெய்சங்கர் என்பவர் உருவாக்கி இருக்கிறார்.

இந்த அரிசியில் 51 சதவிகிதம் மட்டுமே மாவுச் சத்து இருப்பதுடன், இருதயம் சம்பந்தமான நோய்கள் வராமல் தடுக்கவும் உதவும் என்று புகழ் பெற்ற American Journal of Food Nutrition இதழ் தெரிவித்துள்ளது.

Type Two டயாபெட்டிஸ் எனப்படும் பொதுவான சர்க்கரை நோய் கட்டுப்பாட்டுக்கு இந்த அரிசி பெரிதும் உதவிகரமாக இருக்கும் என கூறப்படுகிறது. 120 ல் இருந்து 130 நாட்களுக்குள் விளைச்சல் தரும் ரகமாக இருப்பதால், விவசாயிகளுக்கும் இந்த அரிசி ரகம் பயனுள்ளதாக இருக்கும்.

Related posts:

கொரோனா வைரசால் பாதிக்கப்படுபவர்களின் நுரையீரலுக்கு என்ன ஆகிறது...?

தொலைதூரத்தில் உள்ள பழங்குடியின மக்களுக்குத் தொடர்ச்சியான மருத்துவ சேவையை வழங்க 'பியாண்ட் ஃப்ரான்டியர்ஸ் டிரஸ்ட்' அதிகாரப்பூர்வமாகத் தொடக்கம்!

”செங்கல்பட்டு தடுப்பூசி மையத்தை,மாநில அரசிடம் அதை ஒப்படைக்க வேண்டும்.!

ஃபிராண்டியர் லைஃப்லைன் மருத்துவமனை நுரையீரல் உயர் இரத்த அழுத்த சிகிச்சையில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியிருக்கிறது!

பி.சி.ஜி தடுப்பூசி ! கொரோனா தாக்கம் குறைவாக காணப்பட்டுள்ளது.!!

இஞ்சி--இய‌ற்கை வைத்தியம்!

நீரிழிவைக் கட்டுப்படுத்தும் இன்சுலின் சுரக்க வெந்தயம் போதும்.!

மலச்சிக்கல் ஏற்படுவதற்கான முக்கிய காரணங்கள் என்ன....?