அண்ணாமலை பதவி காலி ? ஆப்பு வைக்கும் நிர்வாகிகள் ! பாஜக தேசிய தலைமை அதிரடி ப்ளானோடு களம் இறங்கி உள்ளதால் அண்ணாமலை பதவிக்கு சிக்கல் ஏற்படலாம்னு எதிர்பார்க்கப்படுது.
தமிழ்நாடு பாஜக தலைவராக இருப்பவர் அண்ணாமலை. கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த அண்ணாமலை கர்நாடகா மாநிலகாவல்துறையில் எஸ் .பி ஆக பணியாற்றி வந்தார்.
அப்போது அந்த மாநிலத்தில் குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் மீது அண்ணாமலை எடுத்த நடவடிக்கை பொதுமக்கள் மத்தியில் குறுகிய காலத்தில் பிரபலம் அடைய செய்தது.
இதன் காரணமாக, ஐ.பி.எஸ் அதிகாரியான அண்ணாமலையை ஏறக்குறைய கர்நாடகாவின் சிங்கம் என மக்கள் அழைக்கத்தொடங்குனதுனால மக்கள் மத்தியில அண்ணாமலைக்கு ஆதரவு பெருகுச்சு .இந்த நிலையில் யாருமே எதிர்பாராத வகையில் அண்ணாமலை தனது ஐபிஎஸ் பதவியை ராஜினாமா செஞ்சிட்டு சொந்த ஊர் திரும்பினார். அப்போ பாஜகவில் அண்ணாமலை சேரப்போவதாக பேசப்பட்டது.
இதனை மெய்ப்பிக்கும் விதமாக அண்ணாமலை பாஜகவில் இணைந்து ஒட்டுமொத்த தமிழகத்துக்கும் ஷாக் கொடுத்தார். கட்சியில் சேர்ந்த அண்ணாமலைக்கு எடுத்ததுமே மாநில துணை தலைவர் பதவி வழங்கப்பட்டதுனால மூத்த நிர்வாகிகள் அதிருப்தி அடைஞ்சாங்க.
இதுக்கிடையே அப்போது பாஜக தலைவராக இருந்த எல்.முருகன் மத்திய இணை அமைச்சராக பொறுப்பேற்றதால் கட்சியின் மாநிலத்தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்டார்.
இந்த நியமனம் பாஜக வட்டாரத்தில் பரபரப்பை. ஏற்படுத்துச்சு மூத்த நிர்வாகிகளான எச்.ராஜா, வானதி சீனிவாசன் மத்தியில் சலசலப்பையும் ஏற்படுத்துச்சு .
ஆனாலும், இது தேசிய தலைமையின் உத்தரவுங்கிறதால நாளடைவில் மாநில தலைவர் அண்ணாமலைக்கு பாஜக மூத்த நிர்வாகிகள் மத்தியில் ஒத்துழைப்பு கிடைக்க தொடங்குச்சு.
இதுக்குப்பிறகு பாஜக வட்டாரத்தில் அண்ணாமலை கதாநாயகனாக கொண்டாடப்பட்டார். இதை தனக்கு சாதகமாக்கிய அண்ணாமலை ஆளும் திமுக அரசாங்கத்தை வம்புக்கு இழுக்க ஆரம்பிச்சாரு.அண்ணாமலையின் குற்றச்சாட்டுகளுக்கும் விமர்சனங்களுக்கும் உடனுக்குடன் தமிழக அமைச்சர்கள் பதிலளிச்சதால பாஜக தான் எதிர்க்கட்சிங்கிற மாதிரியான தோற்றம் தமிழக அரசியலில் ஏற்பட்டுச்சு.
இந்த நிலையில் கே.டி.ராகவன் பூஜை அறையில் இருந்த பலான வீடியோ ஒண்ணு வெளியாகி, பாஜகவின் ஒட்டுமொத்த இமேஜையும் சுக்குநூறாக நொறுக்கியது. இந்த விவகாரத்தில் அண்ணாமலை பின்னணியில் இருந்ததாக பாஜகவை சேர்ந்த மதன் ரவிச்சந்திரனே போட்டு உடைத்தார்.
இது, மாநில தலைவர் அண்ணாமலைக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தும் என பெரிதும் பாஜக தொண்டர்களும் முக்கிய நிர்வாகிகளும் எதிர்பார்த்தனர். ஆனாலும் அண்ணாமலை மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படலை.
இதனால் மிகுந்த உற்சாகம் அடைந்த அண்ணாமலை வழக்கம் போல் தனக்கே உரிய ஸ்டைலில் குற்றச்சாட்டுகளை அடுக்கிக்கொண்டு தமிழக அரசியலை தெறிக்க விட்டுகிட்டிருந்தார்.
தன்னுடைய அதிரடி பேச்சு, நடவடிக்கைகளால் பாஜக வட்டாரமே பொறாமைப்படும் அளவுக்கு அசுர வளர்ச்சியை நோக்கி அண்ணாமலை நகர்ந்தார். இந்த நிலையில் சமீபத்தில் மதுரை வந்த அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது பாஜககாரங்க செருப்பு வீசுனாங்கல்லா
இந்த செருப்பு வீச்சு சம்பவம் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய நிலைல இதில் தொடர்புள்ளவர்கள் யாராக இருந்தாலும் சட்ட ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கலாம்னு அண்ணாமலை அறிவிச்சது தொண்டர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்துச்சு.
செருப்பு வீசியவர்கள் பாஜகவினர்னு தெரிஞ்சும்கூட சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கணும்னு, தமிழக போலீசாருக்கு அண்ணாமலை கோரிக்கை விடுத்தது, கட்சிக்குள் கொந்தளிப்பையே ஏற்படுத்திடுச்சி.
இந்நிலையில் யாருமே எதிர்பாராத வகையில் அமைச்சர் பிடிஆர் கார் மீது செருப்பு வீசப்பட்ட விவகாரம் தொடர்பான ஒரு ஆடியோ வெளியாகி அண்ணாமலையின் முகத்திரையை கிழிச்சி தொங்கப்போட்டுள்ளது.
அந்த ஆடியோவில்,‘இதை எப்படி அரசியல் செய்யலாம்னு பார்க்கிறேன்’னு அண்ணாமலை பேசுறது மாதிரி பதிவாகி இருந்தது. இதன் மூலம் அமைச்சர் கார் மீது திட்டமிட்டு செருப்பு வீசியது உறுதி செய்யப்பட்டுள்ளது.இந்த விவகாரத்தால் தமிழக அரசியலில் பாஜகவுக்குன்னு
இருந்த கொஞ்ச செல்வாக்கையும் அண்ணாமலை சீர்குலைச்சிட்டாருன்னு மூத்த நிர்வாகிகள்லாம் போர்க்கொடி தூக்கி வர்றதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகுச்சி.
இதன் தொடர்ச்சியா பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை கண்காணிக்க ஒரு குழுவை தேசிய தலைமை அமைத்துள்ளதாகவும், இதற்கு பின்னால் முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணனனும் தற்போதைய அமைச்சர் எல்.முருகனும் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் விரைவில் அண்ணாமலை பதவி காலி ஆகலாம்ன்னு பாஜக வட்டாரத்திலேயே பேச்சு அடிபடுது.பொறுத்திருந்து பார்ப்போம் டெல்லி என்ன நடவடிக்கை போறதுங்கிறத.