ரயில்வே

தட்கல் ரயில் முன்பதிவில் புதிய மாற்றங்களை கொண்டு வந்துள்ளது ஐ.ஆர்.சி.டி.சி.!

தட்கல் ரயில் முன்பதிவில் புதிய மாற்றங்களை கொண்டு வந்துள்ளது ஐ.ஆர்.சி.டி.சி.!

மத்திய ரயில்வே துறையின் உணவு மற்றும் சுற்றுலா கழகம் எனப்படும் ஐ.ஆர்.சி.டி.சி., பொதுமக்களின் வசதிக்காக, ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு வசதியை வழங்கி வருகிறது. இந்நிலையில், தீபாவளி, ஹோலி போன்ற பண்டிகை காலங்களில் பெருமளவு மக்கள் ரயிலில் பயணிப்பதால், ஜெனரல் கோட்டாவில் டிக்கெட் கிடைக்காமல் பலரும் அவதிக்குள்ளாகின்றனர். இதற்கு தீர்வு காணும் வகையில், தட்கல் ரயில் முன்பதிவில் புதிய மாற்றங்களை கொண்டு வந்துள்ளது ஐ.ஆர்.சி.டி.சி., 1. பொதுவாக தட்கல் ரயிலுக்கான டிக்கெட்டுகள் ஆன்லைனில் இரண்டு நாட்களுக்கு முன்னர் ஓபன் செய்யப்படும் நிலையில், தற்போது அதற்கான நாட்களை குறைத்து ஒரு நாளுக்கு முன்னர் முன்பதிவுகள் தொடங்கப்படும் என்ற புதிய விதிமுறையை அறிவித்துள்ளது ஐ.ஆர்.சி.டி.சி., 2. ஒரு நாளுக்கு முன்னர் தொடங்கப்படும் தட்கல் ரயிலுக்கான முன்பதிவுகள், ஏசி வகுப்புகளுக்கு காலை 10 மணி அளவிலும், நான்-ஏசி வகுப்புகளுக்கு காலை 11 மணி அளவிலும் தொடங்கப்படும். 3. தட்கல் ரயில்களில் முன்பதிவு செய்பவர்கள், ஓரோரு வகுப்புகளுக்கும் ஓர்…
Read More
வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் அக்டோபர் 3 முதல் ஓடும் !

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் அக்டோபர் 3 முதல் ஓடும் !

புது டெல்லியில் இருந்து ஸ்ரீ வைஷ்ணோ தேவி கத்ரா (SVDK) வரை இயங்கும் 'ரயில் 18' என்று அழைக்கப்படும் புதிய எஞ்சின்-குறைவான மற்றும் அரை அதிவேக ரயில், வெற்றிகரமான சோதனைக்குப் பிறகு அக்டோபர் 3-ஆம் தேதி அதன் தொடக்க ஓட்டத்தை துவங்கவுள்ளது.இதன் மூலம், தற்போது புதுடெல்லியில் இருந்து SVDK செல்லும் பயணிகள் 12 அல்லது அதற்கு மேற்பட்ட மேற்பட்ட மணி நேரத்தில் பயணிப்பதற்கு பதிலாக எட்டு மணி நேரத்தில் கத்ராவை அடையலாம். நகரத்துக்கும் புதுடெல்லிக்கும் இடையில் பயணிக்கும் மக்கள் கூட மூன்று மணி நேரத்தில் தலைநகரை அடைய முடியும் என கூறப்படுகிறது.சோதனை ஓட்டத்தை வெற்றிகரமாக முடித்த இந்த ரயில், கால அட்டவணையின்படி, காலை 9.19 மணிக்கு டெல்லி ரயில் நிலையத்தை அடைந்து, இரண்டு நிமிடங்கள் நிறுத்தப்பட்ட பின்னர் காலை 9.21 மணிக்கு கத்ரா நோக்கி புறப்பட்டது. இதுகுறித்து டெல்லி பிரிவின் உதவி பிரிவு இயந்திர பொறியாளர் சுதிர் ஜெயின் கூறுகையில், 'வந்தே…
Read More
நீண்டகால குத்தகைக்கு 84 ஏக்கரை ஏலம் விடுகிறது தமிழக ரயில்வே !

நீண்டகால குத்தகைக்கு 84 ஏக்கரை ஏலம் விடுகிறது தமிழக ரயில்வே !

தமிழகத்தில் 14 இடங்களில் உள்ள 84 ஏக்கர் நிலங்களை வணிக ரீதியாக பயன்படுத்த நீண்ட கால குத்தகைக்கு விடுவதற்கான நடவடிக்கைகளை ரயில்வே நில மேம்பாட்டு ஆணையம் துவக்கி உள்ளது. நாடு முழுவதும் ரயில்வே துறையின் எதிர்கால பயன்பாட்டுக்காக நிலங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளன. விபரம் சேகரிப்பு - இந்த நிலங்களை முறையாக பயன்படுத்த ரயில்வே துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இத்தகைய நிலங்கள் குடியிருப்பு வணிகம் நிலைய பயன்பாடு என மூன்று பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில் குடியிருப்பு பயன்பாட்டுக்கான நிலங்களில் ரயில்வே ஊழியர்களுக்கான குடியிருப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. இந்நிலையில் வணிக பயன்பாட்டுக்காக ஒதுக்கப்பட்ட நிலங்களின் தற்போதைய நிலவரம் குறித்து ஆராய்ந்த ரயில்வே வாரியம் இந்த நிலங்களை வணிக வளாகங்கள் கட்டுவதற்காக நீண்டகால குத்தகையில் வழங்க முடிவு செய்துள்ளது. இதற்கான பணிகளை ரயில்வே நில மேம்பாட்டு ஆணையம் துவக்கி உள்ளது. மாநில வாரியாக நிலங்கள் குறித்த விபரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. இது குறித்து…
Read More
நோயாளிகளுக்கு ரயில்வே டிக்கெட்டில் 75% தள்ளுபடி? எப்படி பெறுவது?

நோயாளிகளுக்கு ரயில்வே டிக்கெட்டில் 75% தள்ளுபடி? எப்படி பெறுவது?

இந்திய ரயில்வே செப்டம்பர் 1 முதல் தனது சேவை கட்டணத்தை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, ஐ.ஆர்.சி.டி.சி மூலம் ஆன்லைன் டிக்கெட் எடுக்கும் பயணிகள் அதிக கட்டணம் செலுத்த நேரிடும். ஆனால், சொல்லப்போனால் நீங்கள் ரயிலில் பயணம் செய்து கட்டணத்தில் தள்ளுபடி விரும்பினால், இந்த செய்தி உங்களுக்கானது. உண்மையில், இந்திய ரயில்வே மாணவர்கள், விவசாயிகள், ஏழைகள், நோயாளிகள், மருத்துவர்கள், விளையாட்டு வீரர்கள், ஊடகவியலாளர்கள், வேலையற்றோர், அரசு வேலை தயாரிப்பாளர்கள், ஊனமுற்றோர், முதியவர்கள் மற்றும் பிறருக்கு ரயில் கட்டணத்தில் 25 சதவீதம் முதல் 75 சதவீதம் வரை தள்ளுபடி அளிக்கிறது. இது தவிர, நோயாளிகள் மற்றும் ஊனமுற்றோருடன் பயணம் செய்பவர்களும் கட்டணத்தில் இந்த தள்ளுபடியைப் பெறுகிறார்கள். ஜெனரல் டிக்கெட் முதல் ஸ்லீப்பர், ஏசி முதல் வகுப்பு, ஏசி சேர் கார் மற்றும் ஏசி இரண்டாம் வகுப்பு வரையிலான டிக்கெட்டுகளில் இந்த சலுகையை ரயில்வே அளிக்கிறது. இந்த விலக்கையும் நீங்கள் பயன்படுத்திக் கொள்ள விரும்பினால், இதற்கான…
Read More
தட்கல் திட்டதால் ரயில்வேக்கு, 25 ஆயிரம் கோடி வருவாய் !

தட்கல் திட்டதால் ரயில்வேக்கு, 25 ஆயிரம் கோடி வருவாய் !

'தட்கல்' முறையில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்பவர்களால், ரயில்வே துறைக்கு, நான்கு ஆண்டுகளில், 25 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.ரயில்களில் நீண்ட துார பயணம் செய்பவர்கள், கடைசி நேரத்தில் டிக்கெட் முன்பதிவு செய்வதற்காக, 1997ல், தட்கல் கட்டண திட்டம் அறிமுகப் படுத்தப்பட்டது. குறிப்பிட்ட சில ரயில்களில் மட்டுமே நடைமுறைப் படுத்தப்பட்ட இந்த திட்டம், 2004ல், நீண்ட துார ரயில்கள் அனைத்திலும், அமல் படுத்தப்பட்டது. வழக்கமான முன்பதிவு டிக்கெட்டுக்கான கட்டணத்தை விட, தட்கல் டிக்கெட்டுக்கு கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும். ரயில் புறப்படும் நேரத்தை அடிப்படையாக வைத்து, முன்பதிவு செய்யும் நேரத்துக்கு ஏற்ப, கட்டணத்தை படிப்படியாக அதிகரிக்கும், 'பிரிமியம்' தட்கல் திட்டம், 2014ல் நடைமுறைக்கு வந்தது. இந்நிலையில், மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த, சந்திரசேகர் கவுர் என்பவர், தட்கல் திட்டத்தால், ரயில்வேக்கு கிடைத்த வருவாய் குறித்து, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மனு தாக்கல் செய்திருந்தார்.…
Read More

தேஜா ரயில்கள் தாமதமானால் பயணிகளுக்கு இழப்பீடு ?

தனியார் இயக்கும் ரயில் (Private train) தாமதமானால் பயணிகளுக்கு இழப்பீடு வழங்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது!! இரண்டு தேஜா ரயில்களை இயக்குவதற்கான உரிமையைப் பெற்றுள்ள அரசு நடத்தும் IRCTC, டெல்லியில் இருந்து லக்னோவுக்கு முதல் முதல் அக்டோபர் முதல் தொடங்குவதற்கான திட்டங்களை இறுதி செய்து வருகிறது. ரயில் பயணத்தில் இருந்து விமானப் பயணத்துக்கு மாறியவர்களை ஈர்க்கும் பொருட்டு இயக்கப்படவுள்ளதாகக் கூறப்படும் இந்த ரயில், சதாப்தி போன்ற ரயிலுக்கு இணையான கட்டணத்துடன் சேவைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. பயணிகள் எப்போது வேண்டுமானாலும், டீ, காபி அருந்த விநியோக இயந்திரம் ஒவ்வொரு பெட்டியிலும் வைக்கப்படும். வழக்கமான ரயில் பெட்டிகளில் 4 கழிப்பறைகள் இருக்கும் நிலையில், இந்த ரயிலில் 72 இருக்கைகள் மட்டுமே கொண்ட ஒரு பெட்டியில் 2 கழிப்பறைகள் மட்டும் இடம்பெற்றிருக்கும். காலை உணவு வழங்கப்பட்ட பின் மதிய வேளையில் லக்னோவை அடையும் பயணிகளுக்கு நொறுக்குத் தீனி ஏதேனும் வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. முன்பை விட ரயில்…
Read More
சென்ட்ரல் மெட்ரோ நிலையம், பூமிக்கு அடியில் கட்டப்பட்டுள்ள நிலையங்களில், ஆசியாவிலேயே மிகப்பெரிய நிலையம் !

சென்ட்ரல் மெட்ரோ நிலையம், பூமிக்கு அடியில் கட்டப்பட்டுள்ள நிலையங்களில், ஆசியாவிலேயே மிகப்பெரிய நிலையம் !

சென்னை மெட்ரோ ரயில் முதல் திட்டத்தில், சென்ட்ரல் ரயில் நிலையம், ஆசியாவிலேயே பெரிய நிலையமாகவும், இந்தியாவுக்கே பெருமை சேர்க்கும் நிலையமாகவும் கட்டப்பட்டுள்ளது. இந்நிலையம், பூமிக்கு அடியில், 400 மீட்டர் நீளம், 30.5 மீட்டர்ஆழத்திலும் கட்டடப்பட்டுள்ளது. நிலைய பிளாட்பார ஏரியா, 32 மீட்டர் அகலத்திலும், பயணியர் நடமாடும் முகப்பு பகுதிகளில், 40 மீட்டர் அகலத்திலும் நிலையம் வடிவமைக்கப்பட்டுள்ளது. பூமிக்கு அடியில், முதல் தளத்தில் டிக்கெட் கவுன்டர்கள் உள்ளன. அடுத்த இரண்டு தளங்களில், எட்டு நடைமேடைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 1, 2, 3 மற்றும் 4வது நடைமேடைகளில் இருந்து, பரங்கிமலைக்கும், 5வது நடை மேடையில் இருந்து, விமான நிலையத்துக்கும், 6 மற்றும் 8வது நடைமேடைகளில் இருந்து, வண்ணாரப்பேட்டைக்கும் ரயில்கள் இயக்கப்படுகின்றன. 7வது நடைமேடை, அவசரத்துக்கு ரயில் நிறத்தி வைக்கவும், இயக்கவும் பயன்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில், சென்ட்ரலும், ஆலந்துார் நிலையமும், ரயில்கள் இருவழிகளில் கடந்து செல்லும் நிலையங்களாக உள்ளன. இந்நிலையங்களில், பயணியருக்கு பாதுகாப்பு மற்றும் வழிகாட்டுவதற்கு, கூடுதல்…
Read More
24 வழித்தடங்களில் தனியார் ரயில் சேவை ?

24 வழித்தடங்களில் தனியார் ரயில் சேவை ?

இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கார்ப்பரேஷன் (IRCTC), தனியார் நிறுவனத்தால் இயக்கப்படும் நாட்டின் முதல் தேஜாஸ் எக்ஸ்பிரஸ் ரயிலை டெல்லி-லக்னோ பாதையில் அக்டோபர் முதல் வாரத்தில் தொடங்க உள்ளது. இது இந்திய ரயில்வேயில் ஒரு புதிய அத்தியாயத்தின் தொடக்கமாக இருக்கும், ஏனெனில் தனியார் நிறுவனத்தால் இயக்கப்படும் ரயில்கள் நாட்டில் 24 வழித்தடங்களில் தொடங்கப்படும். ரயில்வே அமைச்சின் 100 நாள் செயல் திட்டத்தின் ஒரு பகுதியாக இது திட்டமிடப்பட்டுள்ளது. அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த நடவடிக்கையால், இந்திய ரயில்வே தனது பயணிகளுக்கு 'உலகத்தரம் வாய்ந்த சேவைகளை' வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது."தனியார் ஆபரேட்டர்கள் நவீன பயணிகள் ரயில்களைத் தூண்டுவதோடு, அவர்களுக்கு கட்டணம் வசூலிப்பதில் ஒதுக்கப்பட்ட பாதைகளில் அவற்றை இயக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. இந்த நோக்கத்திற்காக உருவாக்கப்படும் சலுகை ஒப்பந்தத்தின் அடிப்படையில் கட்டணங்களை நிர்ணயிக்கவும் வசூலிக்கவும் அவர்களுக்கு உரிமை உண்டு' என்று அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தனியார் நகரங்கள் முக்கியமான நகரங்களை…
Read More
15 ஆண்டுகளுக்கு பின்னர் ரெயில் நிலையங்களில் மீண்டும் மண் குவளைகள் !

15 ஆண்டுகளுக்கு பின்னர் ரெயில் நிலையங்களில் மீண்டும் மண் குவளைகள் !

15 ஆண்டுகளுக்கு முன்னர் ரெயில்வே மந்திரியாக இருந்தபோது லாலு பிரசாத், ரெயில் நிலையங்களில் மண் குவளைகளை அறிமுகம் செய்தார். நீடிக்கவில்லை, படிப்படியாக பிளாஸ்டிக் மற்றும் காகித ‘கப்’ பயன்பாட்டுக்கு வந்தது. இப்போது பிளாஸ்டிக் கப் மற்றும் தட்டுகள் பயன்படுத்துவது உடல் ஆரோக்கியத்துக்கு மட்டுமல்லாது சுற்றுச்சூழலுக்கும் உகந்தது இல்லை என்ற எண்ணமும், விழிப்புணர்வும் மக்களிடம் ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி, ரேபரேலி ரெயில் நிலையங்களில் டீ, காபி, உணவுப்பொருட்கள் தயாரித்து அளிக்கிறவர்களிடம் மண் குவளை, தம்ளர்கள், தட்டுகளை பயன்படுத்துமாறு ரெயில்வே மந்திரி பியூஸ் கோயல் அறிவுறுத்தி உள்ளார். இதுதொடர்பாக ரெயில்வே வாரியம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், சுற்றுச்சூழலுக்கு கேடுவிளைவிக்காத, உள்ளூரில் தயாரிக்கப்பட்ட மண்ணால் செய்யப்பட்ட குவளைகள், தட்டுகளை பயணிகளுக்கு உணவுப் பொருட்கள், தேநீர், பால் ஆகியவற்றை வழங்க பயன்படுத்த வேண்டும் என்று மண்டல ரெயில் நிலையங்கள், ஆர்சிடிசியை கேட்டுக்கொள்கிறோம். இதன் மூலம் மண்பாண்ட உற்பத்தியாளர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.…
Read More