ரயில்வே

தமிழகத்தில்  24 ரயில்களை தனியார்கள் இயக்க போகிறார்கள்..?

தமிழகத்தில் 24 ரயில்களை தனியார்கள் இயக்க போகிறார்கள்..?

151 ரயில்களை தனியார்கள் இயக்க ரயில்வே அமைச்சகம் அனுமதிஅளித்துள்ளது இதில் தமிழகத்தின் பல்வேறு வழித்தடங்களில் 24 ரயில்களை தனியார்கள் இயக்க அனுமதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால கட்டணங்கள் பல மடங்கு உயர வாய்ப்பு உள்ளது. நாட்டில் உள்ள 109 வழித்தடங்களில் 151 நவீன ரயில்களை இயக்க தனியார் நிறுவனங்களை அனுமதிக்கும் திட்டத்தில் தகுதியான நிறுவனங்கள் விண்ணப்பங்களை ரயில்வே அமைச்சகம் வரவேற்று உள்ளது. 35 கோடி மதிப்புள்ள இத்திட்டம் நிறைவேற்றப்பபட்டு 2023ம் ஆண்டு ஏப்ரலில் நாடு முழுவதும் தனியார் ரயில்கள் ஓடும் என ரயில்வே துறை அறிவித்துள்ளது. இதற்காக மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட உள்ளது என்றும் மணிக்கு 160 கி.மீ வேகத்தில் ரயில்கள் இயக்கப்படும் என்றும் ரயில்வே துறை அறிவித்துள்ளது. இந்த ரயில்களுக்கான கட்டணம் விமானம் போக்குவரத்துக்கு இணையாக இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழத்தில் பல்வேறு வழித்தடங்களில் 24 தனியார் ரயில்கள் இயக்கப்பட உள்ளன. அவற்றின்…
Read More
ஊரடங்கு விலக்கிக் கொள்ளப்பட்டாலும், ரயில்களில் பயணம் செய்வது அவ்வளவு எளிதாக இருக்காது !

ஊரடங்கு விலக்கிக் கொள்ளப்பட்டாலும், ரயில்களில் பயணம் செய்வது அவ்வளவு எளிதாக இருக்காது !

வரும் ஏப்ரல் 14ஆம் தேதி ஊரடங்கு விலக்கிக் கொள்ளப்பட்டாலும், ரயில்களில் பயணம் செய்வது அவ்வளவு எளிதாக இருக்காது எனத் தெரிகிறது. ஊரடங்கிற்குப் பிறகு ரயில்கள் ஓடும் நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக ரயில் பயணிகள் பல முக்கிய நடைமுறைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இது தொடர்பான ஒரு பட்டியலை வெளியிட்டுள்ளது மத்திய ரயில்வே அமைச்சகம். பொதுவாக, விமான நிலையங்களில் உள்ள பாதுகாப்பு நடைமுறைகளைவிட, ரயில் நிலையங்களில் மேற்கொள்ளப்படவுள்ள நடவடிக்கைகள் மேலும் சிக்கலாகவே இருக்கும். இதோ அந்தப் புதிய விதிமுறைகள்... 1) பயண நேரத்திற்கு 4 மணி நேரத்திற்கு முன்பாகவே பயணிகள் ரயில் நிலையத்திற்கு வந்துவிட வேண்டும். 2) ரயில் நிலையங்களில் ஒவ்வொரு பயணிக்கும் தெர்மல் ஸ்கேனிங் செய்யப்படும். 3) முன்பதிவு செய்த பயணிகள் மட்டுமே ரயில்களில் பயணிக்க முடியும். 4) 'வெயிட்டிங் லிஸ்ட்' பயணிகளுக்கு ரயில்களில் பயணிக்க அனுமதி கிடையாது. 5) ஸ்லீப்பர் கிளாஸ் (2ஆவது வகுப்பு) பெட்டிகள் மட்டுமே ரயில்களில் இணைக்கப்பட்டிருக்கும்;…
Read More
லாக் டவுன் முடிந்ததும் 15 ந் தேதி முதல் ரயில்கள் இயக்கப்படுமா? ரயில்வே பதில் !

லாக் டவுன் முடிந்ததும் 15 ந் தேதி முதல் ரயில்கள் இயக்கப்படுமா? ரயில்வே பதில் !

கரோனா வைரஸ் பெருந்தொற்று நோய் பரவலைத் தடுக்கும் வகையில் 21 நாட்கள் லாக் டவுன் வரும் 14-ம் தேதி முடிந்தபின், ரயில் சேவை தொடங்கப்படுமா என்ற கேள்விக்கு ரயில்வே துறை பதில் அளித்துள்ளது. கரோனா வைரஸைத் தடுக்கும் நோக்கில் நாட்டில் 21 நாட்கள் லாக் டவுன் திட்டத்தை பிரதமர் மோடி கடந்த 25-ம் தேதி கொண்டு வந்தரர். இதனால் அனைத்து தொழிற்சாலைகள், நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள், சிறு, குறுந்தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டன. மக்களும் வேலையிழந்து வீட்டுக்குள்ளே இருந்து சமூக விலகலைக் கடைப்பிடித்து வருகின்றனர். கடந்த 25-ம் தேதி முதல் சரக்கு ரயிலைத் தவிர அனைத்துப் பயணிகள் ரயில்களும் நிறுத்தப்பட்டுள்ளன. வரும் 14-ம் தேதி லாக் டவுன் முடிவதால், அதன்பின் எப்படி ரயில்கள் இயக்கப்படும், முக்கியமான வழித்தடங்களுக்கு முன்னுரிமை அளித்து இயக்கப்படலாம், ஒவ்வொரு கட்டமாக இயக்கப்படலாம் என்று ஊடங்களில் பல்வேறு செய்திகள் தொடர்ந்து வந்தன. இந்த ஊகச் செய்திகள் அனைத்துக்கும் விளக்கம் அளித்து…
Read More
இந்திய ரயில்கள் அனைத்தும் மின்மயமாக்கப்படும் !பியூஷ் கோயல் நம்பிக்கை ?

இந்திய ரயில்கள் அனைத்தும் மின்மயமாக்கப்படும் !பியூஷ் கோயல் நம்பிக்கை ?

2024 ம் ஆண்டில் நாட்டில் உள்ள இந்திய ரயில்கள் அனைத்தும் நுாறு சதவீதம் மின்மயமாக்கப்படும் என மத்திய ரயில்வேதுறை, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் நம்பிக்கை தெரிவித்தார். இந்திய-பிரேசில் தொழில்துறை கூட்டத்தில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கூறியதாவது: வரும் 2024 ம் ஆண்டில் இந்திய ரயில்கள் முழுவதும் மின்மயமாக்க திட்டமிட்டுள்ளோம். ரயில்வே துறை நுாறு சதவீத மின்சாரத்தில் இயங்கும் என எதிர்பார்க்கிறோம். அவ்வாறு நாங்கள் செய்துவிட்டால் உலகிலேயே முழுவதும் மின்சாரத்தில் இயக்கப்படும் முதல் ரயில்வேதுறையாக இந்திய ரயில்கள் இருக்கும். மேலும் 2030ல் முழு ரயில்வே நெட்வொர்க்கும் பூஜ்ஜிய-உமிழ்வு வலையமைப்பாக மாற்ற திட்டமிட்டுள்ளோம். அது துாய்மையான சக்தியாக இயங்கும் . இவ்வாறு அவர் கூறினார்.
Read More
IRCTC பயனர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு.! மெயில் செக் பண்ணுங்க! அலர்ட் ஆகிக்கோங்க. !

IRCTC பயனர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு.! மெயில் செக் பண்ணுங்க! அலர்ட் ஆகிக்கோங்க. !

🚃🚋🚃🚋🚃=========== தற்சமயம்IRCTC இணையதளம் சார்பில் ஒரு முக்கிய அறிவிப்பு வெளிவந்துள்ளது. அது என்னவென்றால், irctctour என்ற இணையதளம், ஐஆர்சிடிசி பெயரை தவறாக பயன்படுத்தி முறைகேட்டில் ஈடுபட்டுவருகிறது. ஐஆர்சிடிசி எனவே ஐஆர்சிடிசி பயனாளர்கள், இதுபோன்ற தவறான இணையதளங்களிடம் இருந்து எச்சரிக்கையாக இருக்க வலியுறுத்தி தனது பயனாளர்களுக்கு இப்போது இமெயில் அணுப்பியுள்ளது. irctctour இணையதளம் மேலும் இதுதொடர்பாக ஐஆர்சிடிசி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்னவென்றால், irctctour என்று செயல்படும் இணையதளம் IRCTC இணையதளம் போன்றே வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த தளத்தில் பல்வேறு கேஷ்பேக் திட்டங்கள் உள்ளன, மக்களை ஏமாற்றுவதற்காக இதுபோன்ற திட்டங்கள் இந்தத இணையதளத்தில் இடம்பெற்றுள்ளன. ஐஆர்சிடிசி ரயில் டிக்கெட் குறிப்பாக ஐஆர்சிடிசி ரயில் டிக்கெட் விற்பனை மற்றும் சில சேவைகளை மட்டுமே வழங்குகிறது. மற்றபடி கேன்சல் செய்யப்பட்ட பயனாளர்களுக்கு போன் செய்து அவர்களது தகவல்களை கேட்டபதில்லை. பின்பு வங்கிக்கணக்கு எண், ஏடிஎம் கார்டு விபரங்கள், பின் நம்பர், டிக்கெட் புக் செய்யும்போது வரும்…
Read More
100 வழித்தடங்களில் 150 தனியார் ரயில்கள் ! மத்திய அரசு முடிவு !!

100 வழித்தடங்களில் 150 தனியார் ரயில்கள் ! மத்திய அரசு முடிவு !!

நாடு முழுவதும் 100 வழித்தடங்களில், 150 தனியார் ரயில்களை இயக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக தனியார் நிறுவனங்களுக்கு 'நிடி ஆயோக்' அழைப்பு விடுத்துள்ளது. தனியார் ரயில்கள் இயக்கப்படுவது குறித்த கலந்துரையாடலுக்கான வரைவு ஆவணத்தை, 'நிடி ஆயோக்' வெளியிட்டுள்ளது. ஜன.,17ம் தேதிக்குள் இதுதொடர்பான எழுத்துப்பூர்வமான கருத்தையும் கேட்டுள்ளது. அதில், அடுத்த 5 ஆண்டுகளில், நாடு முழுவதும் 100 வழித்தடங்களில், 150 தனியார் ரயில்களை இயக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கட்டணம், வழித்தடம் குறித்து தனியார் நிறுவனங்களே முடிவு செய்து கொள்ளலாம் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தனியார் நிறுவனங்களை தேர்வு செய்ய ஏலம் நடத்தப்படும். இதில் கலந்து கொள்ள தனியார் நிறுவனங்கள் குறைந்தபட்சம் ரூ.450 கோடி சொத்து வைத்திருக்க வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. 15 நிமிடங்கள் தாமதமானால் பயணிகளுக்கு இழப்பீடு வழங்குவது குறித்தும் பரிசீலனை செய்யப்பட்டுள்ளது. மேலும், சில வழித் தடங்களில் 160 கி.மீ.,…
Read More
ரயில்களின் முன்பதிவு கட்டுப்பாடுகள் தளர்வு …! மக்கள் மகிழ்ச்சி !!!

ரயில்களின் முன்பதிவு கட்டுப்பாடுகள் தளர்வு …! மக்கள் மகிழ்ச்சி !!!

ரயிலில் பயணிக்க குழு டிக்கெட் (கல்வி, சுற்றுலா, திருமணம் போன்ற நிகழ்ச்சிகளுக்கு செல்ல) வேண்டும் என்பவருக்கு தெற்கு ரயில்வே புதிய விதிமுறையை அறிவித்துள்ளது. எக்ஸ்பிரஸ் ரயில்களில் கல்வி, சுற்றுலா, திருமணம் போன்ற நிகழ்ச்சிகளுக்கு குழுக்களாக பயணம் செய்வதற்கு, டிக்கெட் முன்பதிவு செய்ய பல விதிமுறைகளும், கட்டுப்பாடுகளையும் தெற்கு ரயில்வே விதித்திருந்தது. இதனால் சுற்றுலா, திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள குழுக்களாக செல்வோர் மொத்தமாக டிக்கெட் முன்பதிவு செய்ய சிரமத்துக்கு உள்ளாகினர். இதற்காக முன்பதிவு மைய கண்காணிப்பாளர், நிலைய அதிகாரியிடம் அனுமதி பெற வேண்டும். அதிலும் அவர்களும் குறிப்பிட்ட அளவு டிக்கெட்டுகள் மட்டுமே முன்பதிவு செய்ய அனுமதி வழங்குவார்கள். இந்நிலையில் தெற்கு ரயில்வே அந்த கட்டுப்பாடுகளை தற்போது தளர்த்தி உள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டிருப்பதாவது:- கல்வி, சுற்றுலா, திருமணம் போன்ற நிகழ்ச்சிகளுக்கு செல்ல மொத்தமாக டிக்கெட்களை முன்பதிவு செய்ய பல கட்டுப்பாடுகள் இருந்தது. இந்த நிலையில் அந்த கட்டுப்பாடுகள்…
Read More
தேஜஸ் ரயிலில் பயணிக்கும் போது வீட்டில் திருட்டு போனால் ஐ.ஆர்.சி.டி.சி ரூ 1,00,000 இழப்பீடு !

தேஜஸ் ரயிலில் பயணிக்கும் போது வீட்டில் திருட்டு போனால் ஐ.ஆர்.சி.டி.சி ரூ 1,00,000 இழப்பீடு !

தேஜஸ் ரயிலில் பயணிக்கும் போது வீட்டில் திருட்டு போனால் அதற்கு ஐ.ஆர்.சி.டி.சி. சார்பில் 1 லட்சம் ரூபாய் காப்பீடு வழங்கப்படுகிறது.நாட்டில் தனியார் மூலம் முதல் முறையாக டெல்லி - லக்னோ இடையே 'தேஜஸ்' ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயிலை ரயில்வேயின் ஐ.ஆர்.சி.டி.சி. எனப்படும் இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழக நிறுவனம் இயக்கி வருகிறது. இந்த ரயிலில் பயணியருக்கு அதி நவீன வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் ஐ.ஆர்.சி.டி.சி.யின் இயக்குனர் ரஜ்னி ஹசீஜா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தேஜஸ் ரயிலில் பயணம் செய்யும் போது வீட்டின் பாதுகாப்பு பற்றி பயணியர் கவலைப்படாமல் பயணம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார். தேஜஸ் ரயிலில் பயணிக்கும் போது வீட்டில் திருட்டு போனால் அதற்கு 1 லட்சம் ரூபாய் காப்பீடு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார். இதற்காக பயணிகள் எந்த கட்டணமும் செலுத்த தேவையில்லை என்ற அவர், இந்த திட்டத்தின்படி திருட்டு போனது பற்றி…
Read More
ரெயில் டிக்கெட் கட்டணத்தை திரும்பப்பெற ஓ.டி.பி. முறை அறிமுகம்- ரெயில்வே அமைச்சகம் அறிவிப்பு !

ரெயில் டிக்கெட் கட்டணத்தை திரும்பப்பெற ஓ.டி.பி. முறை அறிமுகம்- ரெயில்வே அமைச்சகம் அறிவிப்பு !

ரெயில் டிக்கெட் முன்பதிவு ரெயில்வே கவுண்ட்டர்கள், இந்தியன் ரெயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழக (ஐ.ஆர்.சி.டி.சி.) வலைத்தளம் ஆகியவை மூலம் மட்டுமின்றி ஐ.ஆர்.சி.டி.சி.யால் அங்கீகரிக்கப்பட்ட ஏஜெண்டுகள் மூலமும் செய்யப்படுகிறது. இதில் அங்கீகரிக்கப்பட்ட ஏஜெண்டுகள் மூலம் ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்பவர்கள் அந்த டிக்கெட்டை ரத்துசெய்தாலோ அல்லது காத்திருப்போர் பட்டியலில் இருந்த டிக்கெட் உறுதியாகவில்லை என்றாலோ அந்த டிக்கெட்டுக்குரிய கட்டணம் சம்பந்தப்பட்ட ஏஜெண்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டு, அதன்பின்னரே வாடிக்கையாளர் அல்லது அந்த பயணியின் கைகளுக்கு சென்றடையும். இதில் பிடித்தம் செய்யப்பட்டது எவ்வளவு? திரும்ப கிடைத்த தொகை எவ்வளவு? என்பது போன்ற விவரங்கள் அந்த பயணிக்கு நேரடியாக தெரிய வாய்ப்பில்லை. எனவே டிக்கெட் கட்டணத்தை திரும்ப ஒப்படைப்பதில் வெளிப்படைத்தன்மை வேண்டும் என்பதற்காகவும், வாடிக்கையாளர் நலன் கருதியும் இதில் 'ஒருமுறை பயன்படும் கடவுச்சொல்' (ஓ.டி.பி.) முறையை ரெயில்வே அமைச்சகம் அறிமுகப்படுத்துகிறது.
Read More
ரயில் பயணிகளின் வருவாயில் ரூ.155 கோடியும், சரக்கு போக்குவரத்து வருவாயில் ரூ.3,901 கோடியும் குறைந்துள்ளது.?

ரயில் பயணிகளின் வருவாயில் ரூ.155 கோடியும், சரக்கு போக்குவரத்து வருவாயில் ரூ.3,901 கோடியும் குறைந்துள்ளது.?

நாட்டில் நடந்து வரும் பொருளாதார மந்தநிலையின் தாக்கம் தற்போது ரயில்வே துறையில் எதிரொலிக்க துவங்கியுள்ளது. இந்த நிதியாண்டின் முதல் காலாண்டோடு ஒப்பிடும்போது இரண்டாவது காலாண்டில் பயணிகளின் வருவாயில் ரூ.155 கோடியும், சரக்கு போக்குவரத்து வருவாயில் ரூ.3,901 கோடியும் குறைந்துள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. ஊடக அறிக்கையின்படி, மத்திய பிரதேசத்தில் உள்ள நீமுச்சில் வசிக்கும் சந்திரசேகர் கவுரின் தகவல் அறியும் பதிலுக்கு கிடைத்த தகவல்களின்படி, ரயில்வே துறை 2019-20 முதல் காலாண்டில் (ஏப்ரல்-ஜூன்) பயணிகள் கட்டணத்திலிருந்து ரூ.13,398.92 கோடியை ஈட்டியுள்ளது. அதே வேளையில் இரண்டாவது நிதியாண்டில் (ஜூலை-செப்டம்பர்) இது 155 கோடி குறைந்து 13,243.81-ஆக இருந்தது. மறுபுறம், சரக்கு போக்குவரத்து முதல் காலாண்டில் ரூ.29,066.92 ஈட்டியுள்ளது, இது இரண்டாவது காலாண்டில் 3,901 கோடி குறைந்து 25,165.13 கோடியாக உள்ளது. சமீபத்தில் வெளிப்படுத்தப்பட்ட புள்ளிவிவரங்கள் படி கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது (ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை), இந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் டிக்கெட் முன்பதிவும் 1.27…
Read More