2024 ம் ஆண்டில் நாட்டில் உள்ள இந்திய ரயில்கள் அனைத்தும் நுாறு சதவீதம் மின்மயமாக்கப்படும் என மத்திய ரயில்வேதுறை, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் நம்பிக்கை தெரிவித்தார்.
இந்திய-பிரேசில் தொழில்துறை கூட்டத்தில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கூறியதாவது: வரும் 2024 ம் ஆண்டில் இந்திய ரயில்கள் முழுவதும் மின்மயமாக்க திட்டமிட்டுள்ளோம். ரயில்வே துறை நுாறு சதவீத மின்சாரத்தில் இயங்கும் என எதிர்பார்க்கிறோம். அவ்வாறு நாங்கள் செய்துவிட்டால் உலகிலேயே முழுவதும் மின்சாரத்தில் இயக்கப்படும் முதல் ரயில்வேதுறையாக இந்திய ரயில்கள் இருக்கும். மேலும் 2030ல் முழு ரயில்வே நெட்வொர்க்கும் பூஜ்ஜிய-உமிழ்வு வலையமைப்பாக மாற்ற திட்டமிட்டுள்ளோம். அது துாய்மையான சக்தியாக இயங்கும் . இவ்வாறு அவர் கூறினார்.
