5 ஆயிரம் கோடி லாபம் ஈட்டும் நீட் பயிற்சி மையங்கள்? சூர்யா ஆதங்கம் !

 

சூர்யா பற்ற வைத்த நெருப்பு !

 

நடிகர் சிவக்குமார் மாணவர் அறக்கட்டளை சார்பில் நடபெற்ற விழாவில் நடிகர் சூர்யா நீட்டுக்கு எதிராகவும், புதிய கல்வி கொள்கைக்காகவும் தனது அதிருப்தி கருத்துக்களை தெரிவித்தார். மேடையேறிய சூர்யா மத்திய அரசு கொண்டு வரும் கல்விக்கான புதிய வரைவுக் கொள்கை பற்றி பல கேள்விகளை முன் வைத்து இதையெல்லாம் நாம் ஏன் பேசுவதில்லை. இதை மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், சமூக ஆர்வலர்கள் அனைவரும் ஒன்று சேர வேண்டும். இல்லையெனில் மொத்தமாக அரசுப் பள்ளி மாண்வர்களின் எதிர்காலம் இருண்டு போகும் என பொங்கி எழுந்தார்.

சூர்யாவின் இந்தப்பேச்சு இணையமெங்கும் விவாதத்தை துவக்கியுள்ளது. அனைவரும் சூர்யாவிற்கு ஆதரவு தெரிவித்து சூர்யா அரசுக்கெதிராக கேட்ட கேள்விகளை இணையம் வழியாக பரப்பி வருகிறார்கள்.

சூர்யா பேச்சில் முக்கியமாக் கேட்ட கேள்விகள்
1.இந்தியா முழுமைக்கும் முப்பது கோடி மாணவர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் புதிய கல்வி கொள்கையை நிறைவேற்ற ஏன் இத்தனை அவசரம்?

2.மூன்று வயது குழந்தையால் மூன்று மொழி படிக்க முடியுமா? மும்மொழிக்கொள்கை அத்தனை அவசியமா?

3.நாட்டில் 1848 பள்ளிகள் மூடப்படப்போகிறதே இதற்கு பதில் என்ன? ஓர் ஆசிரியர் 10 மாணவர்கள் பள்ளியை மூடிவிட்டால் அம்மாணவர்கள் படிக்க எங்கே போவார்கள்?

4.கல்வியில் சிறந்த நாடுகளில் 8ம் வகுப்பு வரை எந்த தேர்வும் இல்லை என்கிற நிலையில் 3, 5, 8ம் வகுப்புகளுக்கு பொது தேர்வு என்பது எப்படிச் சிறந்த கல்வியாகும்? எல்லோரையும் கழித்துக்கட்டிவிடுவது எப்படி சிறந்த கல்வியாகும்?

5.நுழைவு தேர்வு, பொதுத் தேர்வு, தகுதி தேர்வு, நீட் தேர்வு என்று மாணவர்கள் தொடர்ந்து தேர்வை எழுதிக் கொண்டிருந்தால் அவர்கள் வாழ்க்கையை படிப்பது எப்போது? இது கோச்சிங் செண்டர்களை உருவாக்குமே தவிர படிப்பை தரம் உயர்த்தாதே ?

6.ஒரு லட்சத்து 80 ஆயிரம் அரசு பள்ளி மாணவர்கள் நீட் தேர்வு எழுதியதில் ஒருவர் மட்டுமே பாஸ் என்றால் இதை எப்படி பார்ப்பது?

7.ஐம்பது ஆயிரம் கல்லூரிகள் 12 ஆயிரமாக குறைக்கப்படுவதும், கோச்சிங் சென்டர்கள் அதிகரிப்பதும் தான் புதிய கல்வி கொள்கையா?

8.சுமார் 80 லட்சம் ஆசிரியர்களை கொண்ட இந்தியாவில் புதிய கல்வி கொள்கையை ஒரேயொரு ஆசிரியர் அமைப்பும், ஒரேயொரு மாணவர் அமைப்பும் சேர்ந்து தீர்மானிப்பது எந்த விதத்தில் நியாயம்?

9.விதவிதமான கல்வி முறைகளை வைத்துக் கொண்டு தேர்வு மட்டும் பொதுவானது என்பது எப்படிச் சரியாகும்?

10.எதிர்கால தலைமுறையின் தலையெழுத்து எழுதப்படும் நேரத்தில் நாம் இன்னும் விழிப்படையாமல் இருக்கிறோமே ஏன்?

இந்தக் கேள்விகளை நாம் அனைவரும் கேட்க வேண்டியது. நம்மை ஆளும் மாநில அரசு கேட்க வேண்டியது ஆனால் ஏன் கேட்கவில்லை என பலரும் கேட்டு வருகிறார்கள். புள்ளி விவரங்களை சுட்டிக்காட்டி நீட் தேர்வு, நுழைவுத் தேர்வு, புதிய கல்விக் கொள்கை உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து பேசியது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளது.

சூர்யா 10 வருடங்களுக்கும் மேலாக அரசுப்பள்ளி மாணவர்களின் மேற்கல்விக்கு உதவும் அகரம் அமைப்பை நடத்தி வருகிறார் எனபது குறிப்பிடத்தக்கது.

Related posts:

பிரேகேட் நிறுவனத்துடன் கிரசென்ட் இன்னோவேஷன் அண்ட் இன்குபேஷன் கவுன்சில் நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம்.

இணையதளம் மூலம் கற்பிக்கும் இதர ஐ.ஐ.டி களின் பட்டியலில் சென்னை ஐ.ஐ.டி இணைகிறது .!

ஹிந்துஸ்தான் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி & சயின்ஸ் (HITS) நிலையான வளர்ச்சி இலக்குகளுடன் (ICITS 2024) ஒருங்கிணைப்பு மற்றும் மாற்றம் குறித்த இரண்டு நாள்...

மத்திய அரசுப் பணிகளுக்கு 12 மொழிகளில் தேர்வு ! அமைச்சர் ஜிதேந்திர சிங்

தொலைநிலைக் கல்வி வழங்கும் ஐ.சி.எம்.ஏ.ஐ !

நீட் தேர்வுக்கான சில முக்கிய டிப்ஸ் !

இந்தியன் பார்மசூட்டிக்கல்ஸ் காங்கிரஸின் 71 வது பதிப்பு டிசம்பர் 20-22 வரை நடைபெற உள்ளது !

எப்படி நடைபெறுகின்றன ஆன்லைன் வகுப்புகள்?